TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை! - தமிழருவி மணியன்

Go down

மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை! - தமிழருவி மணியன் Empty மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை! - தமிழருவி மணியன்

Post by மாலதி Thu Jul 04, 2013 7:28 am

[You must be registered and logged in to see this image.]

மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை!
- தமிழருவி மணியன்

ஜூனியர் விகடன் 07 07 2013

சந்தர்ப்பவாத சாகசங்களும், திகைக்கவைக்கும் திடீர் திருப்பங்களும், எளிதில் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளும் நிறைந்த ஒரு நவீன அரசியல் நாடகம் மாநிலங்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் அரங்கேறியது. கொண்ட கொள்கைக்குக் குந்தகம் இல்லாமல், கூட்டணி தர்மம் குலைந்துவிடாமல், லட்சியப் பயணத்தில் வழுக்கி விழாமல், மானவுணர்வு மழுங்கிவிடாமல், சிந்தனை - சொல் - செயல் ஆகியவற்றில் சிறிதளவும் பேதமில்லாமல் (!) நம் அரசியல் கட்சிகள் ஆறு அறிஞர்களைத் தேர்ந்தெடுக்க வாக்குப் பிச்சைக்கு வலம் வந்த நேர்த்தியை நினைத்தால், நெஞ்சம் சிலிர்க்கிறது.

ஆளும் அ.இ.அ.தி.மு.க.-விடம் 151 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இரண்டு இடதுசாரிகளிடம் 18 உறுப்பினர்களும், ஃபார்வர்டு பிளாக் சார்பில் ஒருவரும் உள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய கட்சியில் இருந்து நால்வரை நியமித்து முதலிலேயே இடதுசாரிகளில் ஒருவரை ஆதரித்திருந்தால்... கம்யூனிஸ்ட்களின் கௌரவம் காப்பாற்றப்பட்டிருக்கும், கூட்டணிக் கட்சிகளை அவமானப்படுத்துவதும் அலைக்கழிப்பதும் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான அரசியல் விளையாட்டு என்பதால், அவரது கட்சியிலிருந்தே ஐவர் பெயர்களை அறிவித்து இடதுசாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். நம் காம்ரேடுகள் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் வடிவேலுகளாகி, நீண்ட காலமாகிறது. அதனால், அவர்களுக்கு வலிக்கவே இல்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இந்நாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியும், முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதனும் சென்னைக்கு வந்து நம் முதல்வரைச் சந்தித்து ராஜா அவர்களுக்கு ஆதரவு கேட்க இரண்டு நாள் காத்திருந்தனர். பாவம்... அவர்களால் முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற வள்ளுவரின் வாசகத்தை அறிந்த அவர்கள் அதோடு முடங்கிவிடவில்லை. திட்டக் கமிஷனைச் சந்திக்க தில்லி வந்த ஜெயலலிதாவை இருவரும் தமிழ்நாடு விடுதியில் சந்தித்தனர். 'ஆறாவது இடத்தில் ஆளைப் போடுங்கள்’ என்று இலவச ஆலோசனையை முதல்வர் முன்மொழிந்தபோது இருவருக்கும் விழி பிதுங்கியது. இந்தியாவின் முதுபெரும் கட்சியின், 1952 முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் ஒரே சின்னத்தில் நிற்கும் ஒரே இயக்கத்தின் அறிவார்ந்த இரண்டு அகில இந்தியத் தலைவர்கள் ஒரு ராஜ்ய சபா உறுப்பினராக டி.ராஜாவுக்கு மறுவாய்ப்பை உருவாக்கித்தருவதற்குத் தங்கள் சுயமரியாதையை இந்த அளவு இழந்திருக்கக் கூடாது. பதவி யாரைத்தான் பாடாய்ப்படுத்தவில்லை!

காம்ரேடுகளின் ஆதரவின்றித் தன் கட்சியின் சார்பில் ஐந்தாவது நபரை நிறுத்தினால் தோல்வியைத் தழுவ நேரிடும் என்ற நிலையில், ஜெயலலிதா தங்கமுத்துவைப் போட்டியிலிருந்து விலகச் செய்தார். ஆனால், கீழே விழுந்தாலும் முகத்தில் மண்படவில்லை என்று பாவனை செய்வதுபோன்று, 'இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியும், ஏ.பி.பரதனும், தா.பா-வும் வேண்டிக்கொண்டதற்கிணங்க அ.இ.அ.தி.மு.க. நிர்வாகக் குழு ராஜாவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளது’ என்று முதல்வர் அறிவித்தார். அடுத்த கணம் காம்ரேடுகளின் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம். இவர்களைப் பற்றி யோசிக்கையில், கவலையாய் இருக்கிறது.

டி.ராஜா சென்ற முறை கலைஞர் கருணாநிதியின் ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினரானார். அப்போது சி.பி.ஐ. சட்டமன்ற உறுப்பினர்கள் வெறும் ஆறு பேர் மட்டும் இருந்த நிலையில் கலைஞரின் தயவு தேவைப்பட்டது. அவர் மீண்டும் மாநிலங்களவைக்குச் செல்வதற்கு இன்று ஜெயலலிதாவிடம் போய் நிற்க வேண்டி நேர்ந்தது. நெஞ்சில் வழிந்த நன்றிப் பெருக்கில் அன்று கலைஞருக்குப் புகழாரம்; இன்று ஜெயலலிதாவுக்குப் பல்லாண்டு. இதற்குப் பெயர்தான் மாற்று அரசியலா? ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறுவதுதான் அரசியல் மாற்றத்துக்கான அடித்தளம் அமைக்கும் ராஜதந்திரமா? பிரகாஷ் காரத்தும், பரதனும் முன்வைக்கும் மாற்று அரசியலின் முகலட்சணம் இதுதானா? உ.பி-யில் மாயாவதி, முலாயம்சிங்கோடும், தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதாவோடும் அணி மாறி நிற்பதுதான் சிவப்புச் சிந்தனையாளர்களின் சித்தாந்த அரசியலா?


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை! - தமிழருவி மணியன் Empty Re: மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை! - தமிழருவி மணியன்

Post by மாலதி Thu Jul 04, 2013 7:28 am

உலகிலேயே ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து புதிய சரித்திரத்தை மே.வங்கத்தில் சமைத்த இடதுசாரிகளை மம்தா பானர்ஜியால் வீழ்த்த முடிந்ததென்றால், தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து மக்களை முற்றாக விடுவிக்க முடியாதா? எம்.என்.கோவிந்த நாயரும், ஈ.எம்.எஸ்.நம்பூதிரியாரும் கேரளாவில் ஆட்சிமாற்றத்தை நிகழ்த்த முடியுமெனில், தமிழகத்தில் இடதுசாரிகளால் இதைச் சாதிக்க இயலாதா? இந்திரஜித் குப்தா இறக்கும் வரை 37 ஆண்டுகள், ஹிரேன் முகர்ஜி 25 ஆண்டுகள் மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் புதிய வரலாறு படைத்தனர். புபேஷ் குப்தா மாநிலங்களவை தொடங்கப்பட்ட நாளிலிருந்து இறக்கும் வரை, 30 ஆண்டுகள் புகழ்பூத்த மனிதராய், வாதம் வல்ல மேதையாய் அவையை அலங்கரித்தார். இந்தக் கம்யூனிஸ்ட்களின் பாரம்பரியம் இன்று எங்கே போனது? இவர்கள் அனைவரும் அடுத்தவர் தோள்களில் அமர்ந்தா வலம் வந்தனர்?

ராஜா மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதற்கு முழுத் தகுதி பெற்றவர். ஆனால் இரண்டு முறையும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் கம்யூனிஸ்ட்களுக்குப் பெருமை தருவதாக இல்லை. அடுத்த ஆண்டு காலியாகும் இடத்துக்கு இப்போதே ஜெயலலிதாவிடம் மார்க்சிஸ்ட்கள் மனுப்போட்டுவிட்டனர். ஒரு தலைமுறை என்பது 15 ஆண்டுகள். நம் காம்ரேடுகள் போயஸ் தோட்டத்திலும், கோபாலபுரத்திலும் ஒரு 15 ஆண்டுகள் பிச்சைப் பாத்திரத்துடன் பரிதாபமாக நிற்காமல், பதவி மேனகையிடம் மனதைப் பறிகொடுக்காமல், மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலை வளர்த்தெடுக்க, புனிதம் செறிந்த ஒரு தியாக வேள்வியை நடத்த ஏன் தீர்மானிக்கக் கூடாது? கேரளாவின் முதலமைச்சராக இருந்த பி.கே.வாசுதேவன் நாயர், 22 ஆண்டுகள் (1982-2004) தேர்தல் அரசியலில் இருந்து விடுபட்டு விலகி நின்று கட்சிப் பணியாற்றக் களம் அமைத்ததுபோல், தமிழகத்தில் ஏன் வாசுதேவன் நாயர்கள் வளரவில்லை? மக்களின் முதலமைச்சராக சிவப்புச் சிந்தனையும், சீலம் மிகுந்த வாழ்க்கையும் பழுதுபடாமல் கேரளாவில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்து சாதனை படைத்த அச்சுதமேனன் இந்த மண்ணில் எப்போது முகம் காட்டுவார்? கம்யூனிஸ்ட்கள் சிந்திக்கட்டும். போகும் பாதையே சுகமானது என்று இவர்கள் முடிவெடுத்தால் இன்னொரு யுகம் பிறந்தாலும் 3 விழுக்காடுக்கு மேல் வாக்கு வங்கி வளர்வதற்கு வழி இல்லை. வேண்டுமானால், தேய்வதற்கு வாய்ப்பு உண்டு.

மாநிலங்களவை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா இரண்டு தவறுகளைச் செய்திருக்கிறார். விஜயகாந்த் உணர்ந்தோ உணராமலோ, உருப்படியாக ஒரு சேவையைச் செய்திருக்கிறார். ஜெயலலிதா எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்தபோது, அவருடைய சோதனைக் காலத்தில் சுமையைப் பகிர்ந்துகொண்டு, முதல்வராவதற்கு முன்பும், முதல்வரான பின்பும் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்குக் கைம்மாறாக அவரே முன்வந்து ஓர் இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். இதைச் செய்திருந்தால், அவருடைய பெருந்தன்மை பாராட்டப்பட்டிருக்கும். அரசியலில் கூட்டணிக் கட்சிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பக்குவம் இன்று வரை அவருக்கு வாய்க்கவில்லை. இந்தப் பக்குவமும் பணிவும் வாய்க்காத வரை அவர் பிரதமராகும் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது.

மேலும், கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுகமாக உதவியது அவர் இழைத்த பெரும் பிழை. ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சித்து வாக்கு சேகரித்த ஜெயலலிதா, அந்த ஊழலில் முக்கியப் பங்கு வகித்ததாக மத்திய புலனாய்வுத் துறையால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட கனிமொழியைத் தோற்கடிக்க முயன்றிருக்க வேண்டும். தே.மு.தி.க-வில் இருந்த 29 உறுப்பினர்களின் வாக்குகளோடு ஜெயலலிதாவிடம் எஞ்சியிருந்த 5 வாக்குகளையும் வழங்கியிருந்தால், இளங்கோவனின் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருக்கும். இளங்கோவனுக்கு 34 வாக்குகளும், கனிமொழிக்கு 32 வாக்குகளும் கிடைத்திருக்கும். ஜெயலலிதாவின் வலிய பகை தி.மு.க-வே தவிர தே.மு.தி.க. அன்று. எம்.ஜி.ஆரின் வாரிசு, கருணாநிதியின் வாரிசு வெற்றிபெற வழிவகுத்தது அரசியல் முரண்; ராஜதந்திரக் குறை.

கலைஞர் மீண்டும் காங்கிரஸுடன் கைகோத்து நின்றதன் மூலம் அவருடைய போலி ஈழ ஆதரவு முகமூடி கழன்று, சுயநலச் சாயம் படிந்த நிஜ முகம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இனி அவர் எவ்வளவு அடர்த்தியாக இன அரிதாரம் பூசினாலும் உண்மை முகத்தில் சிறிதும் ஒட்டாது. கலைஞரைப் பொறுத்தவரை பொது வாழ்வில் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த படிநிலைகள் உண்டு. இதை இன்று வரை தமிழினம் பூரணமாகப் புரிந்துகொள்ளாததுதான் பேரவலம்.

முதலில் கலைஞருக்கு முக்கியமானது, அவரது சொந்த நலன்; அடுத்தது, குடும்ப நலம்; அதற்கடுத்தது, கழக நலன். இந்த மூன்றும் எந்த வகையிலும் பாதிக்கப்படாத நிலையில் மட்டுமே, கொஞ்சம் சமூக நலன். ஈழம் எரிந்தபோது, இனம் கரிந்து அழிந்தபோது முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்த கலைஞர், காங்கிரஸ் அரவணைப்பில் அகமகிழ்ந்திருந்தார். பதவி பறிபோனதும், கழகத்தின் கட்டுமானம் தகர்ந்து தரைமட்டமானதும் ஈழ உறையில் துருப்பிடித்துக்கிடந்த இனவுணர்வு வாளை உருவி எடுத்தார். காங்கிரஸ் உறவை வெட்டி முறித்தார். தமிழினத்துக்கு எதிராகக் காங்கிரஸ் செயற்படுவதைப் புதிதாகக் கண்டுபிடித்தார். இனத்தைக் காக்கும் புனிதப் பணியிலிருந்து இனி ஓயப்போவதில்லை என்று சூளுரைத்தார். உடன்பிறப்புகள் அறிவாலயத்தில் கூடி விவாகரத்துக்கு வாணவேடிக்கை நடத்தி, விழா எடுத்தனர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை! - தமிழருவி மணியன் Empty Re: மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை! - தமிழருவி மணியன்

Post by மாலதி Thu Jul 04, 2013 7:28 am

மாநிலங்களவைத் தேர்தல் வந்தது. மார்க்சிஸ்ட்கள் இணங்கியிருந்தால், விஜயகாந்த் வணங்கியிருந்தால், கலைஞரின் காங்கிரஸ் எதிர்ப்பு முழக்கம் தொடர்ந்து முரசொலித்திருக்கும். மாறாக, மார்க்சிஸ்ட்கள் மயங்கவில்லை; விஜயகாந்த் விரும்பவில்லை. கனிமொழியின் வெற்றிக்கு வழிவகுக்கும் வரை கலைஞரின் கண்களில் உறக்கம் இல்லை. 'சபதங்களின் காரணமாக மதுக் கோப்பைகளை உடைத்தேன். மதுக் கோப்பைகள் காரணமாக சபதங்களை உடைக்கிறேன்’ என்பது மதுமொழி. 'கழகத்தின் எதிர்கால நன்மைக்காக காங்கிரஸ் உறவை முறித்தேன். மகள் கனிமொழியின் வருங்கால நன்மைக்காக மீண்டும் காங்கிரஸின் உறவை வரித்தேன்’ என்பது கலைஞரின் புதுமொழி. 'சமத்துவமின்மையே! உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்றார் அண்ணல் அம்பேத்கர். 'குடும்ப நலனே! உனக்குப் பெயர்தான் தி.மு.கழகமா?’ என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது. மூன்றே மாதங்களில் கலைஞர் காங்கிரஸிடம் சரணாகதி அடைந்ததற்கும், அவருடைய டெசோ நாடகம் பாதியில் முடிந்ததற்கும் வழிவகுத்தது விஜயகாந்த்தேயன்றி ஜெயலலிதா இல்லை.

நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தல் ஓர் உண்மையைத் தெளிவாகப் புலப்படுத்திவிட்டது. இரண்டு கழகங்களின் செயல்முறைகளும் மாறப்போவதில்லை. இடதுசாரி இயக்கங்கள் கழகங்களின் உறவைக் கைவிடப்போவதில்லை. விஜயகாந்த்துக்கு உண்மையான நெறிசார்ந்த அரசியல் புரியப்போவதில்லை. கழகங்களைவிட்டு விலகி நின்றது வரவேற்புக்குரியது என்றாலும் பா.ம.க. சாதி அரசியலைக் கைவிடப்போவதில்லை. வைகோவின் தனிமைப் பயணம் முடியப்போவதில்லை. ஒரு நாளும் தமிழகத்தில் உண்மையும், ஒழுக்கமும் சார்ந்த மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை.

'உயர்ந்தவர்கள் இல்லாத அவை, அவையே இல்லை. நேர்மை வழி நடக்காதவர்கள், உயர்ந்தவர்களே இல்லை. உண்மை இல்லாத இடத்தில், நேர்மையே இல்லை. போலித்தனத்தில் போய் முடிந்தால், அது உண்மையே இல்லை’ என்கிறது மகாபாரதம், இந்த மண்ணில் இன்று நடப்பதற்குப் பெயர் அரசியலே இல்லை என்கிறது நம் அனுபவ ஞானம்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை! - தமிழருவி மணியன் Empty Re: மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை! - தமிழருவி மணியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழருவி மணியன் ....ப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல்.........
» தமிழக உறவுகளே ஜூன் 26 அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.
» அது, வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள்: தமிழருவி மணியன்
» பெருந்தலைவர் காமராஜ் அவர்களை பற்றிய தமிழருவி மணியன் அவர்களின் உரை.
» தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறாதது ஏன்?- தமிழருவி மணியன் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum