TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வீரப்பன்வாழ்கை ஒரு வீர வரலாறு !!!!!!!

2 posters

Go down

வீரப்பன்வாழ்கை ஒரு வீர வரலாறு !!!!!!!  Empty வீரப்பன்வாழ்கை ஒரு வீர வரலாறு !!!!!!!

Post by மாலதி Wed Jun 12, 2013 9:30 am









[You must be registered and logged in to see this image.]





இன்றோடு
எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன்
என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆண்டுகள்
ஆகின்றன.

வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில்
சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ்
போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு
கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய்யப் பட்ட
பெண்களும், இட்லரின் நாஜிப் படையை விட மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளான
ஆண்களும், பெண்களும், இன்றும் மவுன சாட்சிகளாக வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர். இந்தச் சித்திரவதைகளை செய்தவர்களும், செய்யத்
தூண்டியவர்களும், இன்று பதவி மெத்தைகளிலும், அதிகார அரியணைகளிலும்,
அமர்ந்திருக்கிறார்கள்.

வீரப்பனால் பெயரைக் கூறி பத்திரிக்கை விற்பனையை பெருக்கியும்,
வீரப்பனுக்கு தருகிறேன் என்று கூறி, கோடிக்கணக்கான ரூபாய்களை
கொள்ளையடித்தவர்களும், அன்று ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு, நெருக்கமாக,
கும்மியடித்துக் கொண்டு, ஆட்சியாளர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு ஒத்து
ஊதிக் கொண்டு உள்ளார்கள்.

வீரப்பனை கொன்று விட்டோம் என்ற மார்தட்டிக் கொண்டு, ஆறு ஆண்டுகள் கழித்து,
இன்றைய நிலைமை என்ன என்று பார்த்தால், வருத்தமும், ஏமாற்றமும், வீரப்பன்
இல்லையே என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.

வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை
சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ? தமிழகத்தில் கால் வைக்க
வாட்டாள் நாகராஜுக்கு தைரியம் இருக்குமா ?

வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான்
என்றெல்லாம் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், வீரப்பன் என்ற ஒரு
நபர் இல்லாத இந்தியாவின் பல்வேறு இடங்களில் சந்தனமும் ரோஸ்வுட் மரமும்,
தேக்கும் மற்றும் பல்வேறு உயர்வகை மரங்களும் மிக மிக மோசமாக கொள்ளையடிக்கப்
பட்டுத்தானே வருகின்றன ? இந்தியாவில் வனங்கள் இருக்கும் பகுதிகளில்,
மரக்கொள்ளையர்கள் இன்று வரை மரங்களையும் இயற்கை வளங்களையும்
கொள்ளையடித்துத் தானே வருகின்றனர் ?

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, விரப்பன் யானைகளை கொல்வதை நிறுத்தி
விட்டார் என்பதுதான் உண்மை. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில்,
மலைவாழ் மக்களை, கர்நாடக காவல்துறையும், தமிழக காவல்துறையும் படுத்திய
பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சோளகர் தொட்டி படித்துப் பாருங்கள்… !

வீரப்பன் இருந்த காலத்தில், காட்டுக்குள் வந்து வேட்டையாட பயந்த மரக்
கொள்ளையர்கள் வீரப்பன் இருந்த பக்கமே வரமாட்டார்கள் என்றும்,
வனத்துறையினர் மீது துளியும் பயம் இல்லை என்றும், வீரப்பன் என்றால்
அவ்வளவு அச்சம் என்றும், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர்
தெரிவிக்கிறார்.

வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி
டிவியில் வந்ததும் அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த என்கவுண்டரில்
முக்கியப் பங்கு வகித்த ஒரு ஆய்வாளர் யார் தெரியுமா ? என்கவுண்டர்
ஸ்பெஷலிஸ்ட் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் வெள்ளைத் துரை. ஆறு
ஆண்டுகளுக்கு முன், என்கவுண்டர் நடந்ததாக சொல்லப் படும் 18.10.2004ம்
ஆண்டு, வெள்ளைத் துரை சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் உதவி
ஆய்வாளர்கள் குடியிருப்பில் குடியிருக்கிறார். 17.10.2004 அன்று இரவு,
தன்னுடைய குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளோடு, தரைத் தளத்தில் வண்டி
நிறுத்தும் இடம் அருகே வெள்ளைத் துரை கிரிக்கெட் விளையாடிக்
கொண்டிருந்தது, அந்த குடியிருப்புக்கே தெரியும். மறுநாள் டிவியைப்
பார்த்தால், வெள்ளைத் துரை போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

வீரம் என்பது என்ன தெரியுமா ? மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு,
பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போஸ்
கொடுப்பதல்ல. .. 34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய
ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின்
கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம். கடற்கரையின் இருட்டில்
உட்கார்ந்திருந்தவனை பேசப் போவது போல் சென்று, கொன்று விட்டு அயோத்திக்
குப்பம் வீரமணியை நான்தான் கொன்றேன் என்று மார்தட்டிக் கொள்வது வீரமல்ல….

வீரப்பன் இல்லாத நிலையில், இன்று கேரள எல்லையில், தொடர்ந்து சந்தன மரங்கள்
கடத்தப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வீரப்பன் இருந்த வரை, யானைகளையும்
வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடக் கூட, வனத்துறையினர் அஞ்சி
நடுங்கியதாகவும், இப்போது, பழைய ராஜாக்கள் காலம் போல, வனத்துறையினர்,
மான்களையும், மற்ற வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும்
தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பனுக்கு, உணவு கொடுத்தோம், உதவி செய்தோம் என்ற காரணத்துக்காக,
பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான மலைவாழ் மக்கள் கூட, இன்று வீரப்பன்
இல்லாததை நினைத்து வருந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பன் என்ற ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம். வனச் சொத்துக்களை
அழித்தான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டலாம். வீரப்பன் வனச் சொத்துக்களை
அழித்தான் என்றால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் இயற்கை
வளத்தையும், நீராதாரத்தையும் அழித்துச் சுரங்கம் தோண்டும் வேதாந்தா
குற்றவாளி இல்லையா ? அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம்
குற்றவாளி இல்லையா ? மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு
ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி
இல்லையா ?

இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை ? காட்டில் அழித்தால் மட்டும் தான்
இயற்கை வளமா ? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு
விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், ரியல்
எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?!!!!!!!!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

வீரப்பன்வாழ்கை ஒரு வீர வரலாறு !!!!!!!  Empty Re: வீரப்பன்வாழ்கை ஒரு வீர வரலாறு !!!!!!!

Post by மாலதி Wed Jun 12, 2013 9:30 am

கோயம்புத்தூர்: தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு சவால்விட்டு வந்த
சந்தனக் காட்டு வீரப்பனை சதி செய்து போலீஸ் கொலை செய்த கதையை உளவாளியாக
செயல்பட்ட ஒருவர் ஜீனியர் விகடன் இதழ் மூலமாக ஒப்புதல் வாக்குமூலமாக
கொடுத்திருக்கிறார்.

கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் இளநிலைப் பணியாளராக பணிபுரியும்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சையத் ஷானாவாஸ் இது
தொடர்பாக கூறியுள்ளதாவது:

நான் 10-ம் வகுப்பு முடித்த உடன் எங்கள் பகுதி போலீஸ் நண்பனாக இருந்தேன்.
உடுமலைப்பேட்டையில் பணிபுரிந்த போலீசார் வின்சென்ட், வீரப்பன் வேட்டைக்காக
அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார். அவருடன் நான் தொடர்பில் இருந்தேன். கோவை
சிறையில் இருத வீரப்பன் அண்ணன் மாதையனை சந்திக்க கனகராஜ் என்பவர் அடிக்கடி
வந்து செல்வார். அவர் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு விடுதலை
செய்யப்பட்டவர்.

தீவிரவாதிகளாக உளவாளிகள்

அவர் கோவை சிறைக்கு வந்தபோது அவரிடம் ஒரு கடிதத்தை போலீஸ் கைப்பற்றியது.
அந்தக் கடிதத்தில் சிறையில் உள்ள முஸ்லிம் அமைப்பினர் மூலம் ஆயுதங்களைத்
திரட்டுமாறு மாதையனுக்கு வீரப்பன் கோரியிருந்தார். இந்தக் கடிதம்தான்
வீரப்பன் உயிருக்கே உலை வைத்தது. இந்தக் கடிதம் அதிரடிப்படை எஸ்.பி.யாக
இருந்த செந்தாமரைக் கண்ணனிடம் ஒப்படைக்கப்படது.

வீரப்பன் தெரிவித்திருந்த யோசனைப்படி 4 முஸ்லிம் இளைஞர்கள் தேர்வு
செய்யப்பட்டோம். நான், கன்னியாகுமரியைச் சேர்ந்த அனஸ்கான், உபயத்துல்லா,
உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜியாவுல் ஹக் ஆகியோர் இந்த உளவு வேலைக்கு
தேர்வானவர்கள். எங்களுக்கு 3 மாதங்கள் ஆயுத பயிற்சி கொடுக்கப்பட்டது. அதன்
பின்னர் வீரப்பனிடம் போய் தீவிரவாதிகளாக நடந்து கொண்டு தகவல்களை சேகரிக்க
சொன்னார்கள். நான் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு காவல்துறை உயர்
அதிகாரியிடம் அறிமுகப்படுத்தப்பட்டேன். உளவு வேலையை சரியாக செய்தால் ரூ50
லட்சம் தருவதாக சொன்னார்கள்.

பிணைக் கைதியாக வீரப்பன் உறவினர் மகன்

பின்னர் வீரப்பன் உறவினரான கனகராஜிடம் விவரத்தை சொல்லி வீரப்பனிடம் கொண்டு
சேர்க்கக் கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் வீரப்பன் மகனை
பிணையாக வைத்துக் கொண்டு எங்களை வீரப்பனிட சேர்க்காவிட்டால் கொன்றுவிடுவேன்
என்ற் மிரட்டி ஒப்புக் கொள்ள வைத்தார்.

2003-ம் ஆண்டு கனகராஜ் மூலம் வீரப்பனிடம் சேர்ந்தோம். மொத்தம் 20 நாட்கள்
வீரப்பனிடம் தீவிரவாதிகளாக நடித்தே உளவு பார்த்தோம். வீரப்பனின்
பலவீனங்கள், திட்டங்களை போலீசிடம் சொன்னோம். நாங்கள் சொன்ன தகவலை
வைத்துதான் சிலர் பொடா சட்டத்தில் சிக்கினர். இந்த ஆபரேஷனுக்குப் பெயர்
ககூன் (பட்டுக்கூடு). இந்த ஆப்பரேஷனை வைத்தே வீரப்பன் கொலை செய்யப்பட்டார்.
கடந்த 2004-ம் ஆண்டு எங்களது பெயரை சொல்லாமல் ஜூனியர் விகடனுக்கு
எஸ்.பி.யாக இருந்த செந்தாமரைக் கண்ணன் கூறியும் இருந்தார். ஆனால் எனக்கு
சேர வேண்டிய தொகை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இது பற்றி காவல்துறை அதிகாரி செந்தாமரைக் கண்ணன் கூறுகையில், ''நாங்கள்
நால்வரையும் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால், 50 லட்சம் ரூபாய் தருகிறோம்
என்று எப்போதும் வாக்குறுதி கொடுக்கவில்லை. வேலை வாய்ப்புக்கு உறுதி
கொடுத்திருந்தோம். அதை செய்து கொடுத்திருக்கிறோம்'' என்று
சொல்லியிருக்கிறார் என்று ஜூனியர் விகடன் பதிவு செய்திருக்கிறது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

வீரப்பன்வாழ்கை ஒரு வீர வரலாறு !!!!!!!  Empty Re: வீரப்பன்வாழ்கை ஒரு வீர வரலாறு !!!!!!!

Post by மாலதி Wed Jun 12, 2013 9:31 am


வீரப்பன் விவகாரத்தில் நடந்தது என்ன? பழ நெடுமாறன் பேட்டி







1.
வீரப்பனை நேரில் சந்தித்தவர், அவர் மிகவும் நம்பியவர்களுள் நீங்களும்
ஒருவர் என்ற முறையில் அவரைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உண்மையாக,
நேர்மையாகச் சொல்லுங்கள்?''

''வீரப்பன்
படிப்பறிவற்ற காட்டுவாசிதான். ஆனால், அவரிடம் மனிதநேயமும் சொன்ன சொல்லைக்
காப்பாற்றும் சத்தியமும் இருந்தது. வீரப்பன், ராஜ்குமாரைக் கடத்தி
வைத்திருந்தபோது, அவரை மீட்பதற்காக நான் உள்ளிட்ட குழுவினர் காட்டுக்குள்
சென்றோம்.


அப்போது எங்களையும் வீரப்பன்
பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தால், யாராலும் எதுவும் செய்துஇருக்க
முடியாது. எங்களை அனுப்பிவைத்த அரசாங்கமும் கண்டுகொள்ளாமல்தான்
விட்டிருக்கும். நாங்கள் அரசை நம்பி அல்ல... வீரப்பன் என்ற தனி மனிதனின்
நேர்மையை நம்பித்தான் காட்டுக்குள் சென்றோம். வீரப்பனும் கடைசி வரையில்
அந்த நேர்மை யைக் காப்பாற்றினார்.




[You must be registered and logged in to see this image.]
வீரப்பன்
வேட்டை என்ற பெயரில் அதிரடிப் படையினர் சத்தியமங்கலம் பகுதி மலைவாழ்
மக்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தன மான தாக்குதல்களை நாம் அறிவோம்.
ராஜ்குமார் கடத்தல் சமயத்தில் 'பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இழப்பீடு
தர வேண்டும்’ என்பது வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. அதற்காக அவர்
ஒரு பட்டியல் கொடுத்தார். அதில் ஊர் வாரியாகப் பாதிக்கப்பட்ட மக்களின்
பெயர்கள் குறிக் கப்பட்டு இருந்தன.




அந்தப் பட்டியலில் வீரப்பன்
குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர்கூட இல்லை. ஆனால், அவர் குடும்பத்தைச்
சேர்ந்த ஐந்து பேரை அதிரடிப் படை கொன்றிருந்தது. நான் இதைப் பற்றி
வீரப்பனிடம் கேட்டபோது, 'என் குடும்பம் அழிந்தது... அழிந்ததுதான். நான்
இழப்பீடு வாங்கி என்ன செய்யப்போறேன்? என் பெயரைச் சொல்லி அழிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தால் போதும்’ என்று சொல்லி அதில்
உறுதியாகவும் இருந்தார். வீரப்பனிடம் இருந்த இந்தப் பெருந்தன்மை அவரை
வேட்டையாடிய அதிகாரிகளுக்கு இல்லை.






அந்தச் சமயத்தில் நான் மொத்தம்
ஐந்து நாட்கள் காட்டுக்குள் இருந்தேன். அந்த ஐந்து நாட்களும் எனக்காக
எல்லோரும் சைவ சாப்பாடுதான் சாப்பிட்டனர். எந்த வசதியும் இல்லாத
காட்டுக்குள் வீரப்பன் செய்த உணவு உபசரிப்பை என்னால் எப்போதும் மறக்க
முடியாது!''





2. ''ஈழ அரசியல் பேசுவதே புலம்பெயர் ஈழத் தமிழர்களைவைத்து பிழைப்பு நடத்தத்தான் என்று பலர் உங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்களே?''




''அது ஓர் அபத்தமான
குற்றச்சாட்டு. ஈழத் தமிழர்களை ஆதரிப்பதால், நாங்கள் எவ்வளவோ சொந்த
இழப்புகளுக்கு ஆளாகிஇருக்கிறோம். காவல் துறையின் நெருக்கடி, பொய்
வழக்குகள், உளவுத் துறையின் கண்காணிப்பு எனப் பல வகைகளிலும் எங்கள்
அரசியல் வாழ்க்கையும் சொந்த வாழ்க்கை யும் சிக்கலில்தான் தள்ளப்பட்டு
இருக்கிறது.




ஈழத் தமிழர்களைக் கொண்டு நாங்கள்
ஆதாயம் அடைந்தோம் என்பது அபாண்டத்திலும் அபாண்டமான குற்றச்சாட்டு. அப்படி
ஏதாவது ஆதாயம் அடைந்திருந்தால், எங்களைக் கண்கொத்திப் பாம்பாகக்
கண்காணித்துவரும் மத்திய, மாநில அரசுகள் இத்தனை காலம் சும்மா
விட்டுவைத்திருக்குமா? வழக்குப்போட்டு உள்ளே தள்ள எவ்வளவு நேரம் ஆகும்?''

3. ''ராஜபக்ஷேவை எந்தக் காலத்திலாவது தண்டித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?''




''நிச்சயமாக!




இரண்டாம் உலகப் போரில் 50
லட்சத்துக் கும் அதிகமான யூத மக்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்தது
ஹிட்லர் கும்பல். போரின் முடிவில் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதும், மற்ற
குற்றவாளிகளுக் குச் சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததும் வரலாறு.




செர்பிய குடியரசுத் தலைவராக
இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006-ம்
ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். நான்கு ஆண்டு
காலமாகவிசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறை யிலேயே உயிர் துறந்தார்.




அண்மையில் சூடான் அதிபர் ஓமர் அல்
பஷீர் கைதுசெய்யப்பட்டு, அவர் மீது சர்வ தேச நீதிமன்ற விசாரணை
நடைபெற்றுவருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.




ஒரு நாட்டின் அதிபராக இருப்பது,
மக்களைக் கொல்வதற்கான உரிமம் அல்ல. அப்படிக் காட்டுமிராண்டித்தனமாக
நடந்துகொள்ளும்போது, நாகரிகச் சமுதாயம் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம்
தண்டிக்கும். ஆகவே, சர்வதேச சமூகம் ராஜபக்ஷேவையும் போர்க் குற்றவாளியாக
அறிவித்து, தண்டனை வழங்கும் காலம் நிச்சயம் வரும். அதற்கு ரொம்பக் காலமும்
ஆகாது!''




4. ''இலங்கையில் முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் இப்போதைய நிலை என்ன?''




''நிலைமை இன்னும் மோசமாகத்தான்
இருக்கிறது. முகாம்களில் இருந்து வெளியேறிப் போகச்சொல்வதாகச்
சொல்கிறார்கள். ஆனால், வெளியில் சென்று அந்த மக்களால் எதுவும் செய்ய
முடியாது. ஏனெனில், அவர்களின் நிலங்களில் எல்லாம் சிங்களர்கள்
குடியேறிவிட்டார்கள். முகாம்களிலும் இருக்க முடியவில்லை. குழந்தைகள்,
வயதான பெரியவர்கள் எல்லோரும் நல்ல உணவோ, தங்கும் இடமோ கிடைக்காமல் கொஞ்சம்
கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கின் றனர். இப்படித் தமிழர்கள்
பட்டினியாலும் நிர்க்கதியாலும் சாக வேண்டும் என்றுதான் ராஜபக்ஷே அரசு
எதிர்பார்க்கிறது!''







5. ''வாடகைக்கு வீடு கிடைப்பதில் உங்களுக்குச் சிக்கல் என்று கேள்விப் பட்டேன். அது உண்மையா?''




''எங்கள் கட்சி அலுவலகத்துக்கு
ஒரு வாடகைக் கட்டடத்தைப் பிடித்து முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் எல்லாம்
போட்ட பின்னர், கட்டட உரிமையாளர் 'தர முடியாது’ எனப் பின்வாங்கிவிட்டார்.
காரணம், உளவுத் துறை அவரை மிரட்டி இருக்கிறது. இப்படி எத்தனையோ
சம்பவங்கள். சென்னை நகர எல்லையைக் கடந்து பல்லாவரத்தில் எங்கள் அலுவலகம்
இருப்பதற்கு இந்த வீட்டுப் பிரச்னையும் ஒரு காரணம்.


இவற்றையும் தாண்டி எங்களுக்கு
வீடு தருபவர்களும் அலுவலகத்துக்கு இடம் தருபவர்களும் இருக்கத்தான்
செய்கின்றனர். ஆனால், இது எனக்கு மட்டுமான பிரச்னை இல்லை. எதிர்க்
கட்சிகளைச் சேர்ந்த எல்லோருமே இடைவிடாமல் கண்காணிக்கப்படுகிறோம்.
மறைமுகமாகவும் சமயங்களில் நேரடியாகவும் மிரட்டப்படுகிறோம். எங்கள்
தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் அரசியல்
வாழ்வின் ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ளப் பழகிக்கொண்டுவிட்டேன்!''





6. '' 'ஈழத் தமிழர்கள்’ என ஏன் பிரித்துச் சொல்ல வேண்டும்? தமிழர்கள் என்று சொன்னால் போதாதா?''




''அப்படிப் பொதுவாகச் சொல்ல
முடியாது. ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்தபோதிலும்,
ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் ஆஸ்திரேலியர்கள், கனடாவில் வாழ்ந்தால்
கனேடியர்கள், அமெரிக்காவில் வாழ்ந்தால் அமெரிக்கர்கள். அந்த நாட்டுப்பற்றை
விட்டுக்கொடுக்க முடியாது. மலேசியா வில் வாழ்பவர்கள் மலேசியத் தமிழர்கள்,
இந்தியாவில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர்கள், ஈழத்திலே வாழ்பவர்கள் ஈழத்
தமிழர்கள்தான்.


தேச எல்லைகளைக் கடந்து நம்மை
மொழி ஒன்றிணைக்கிறது என்பதுதான் இதில் முக்கியம். இந்த வித்தியாசங்களை
ஏற்றுக்கொண்டுதான் நாம் ஒன்று சேர முடியுமே தவிர, அதை அழித்துவிட்டு
முடியாது. ஆகவே, 'எல்லோரும் தமிழர்கள்’ எனப் பொதுவாக வரையறுப்பது
பொறுத்தமற்றது!''



7. '' 'ஏன்தான் இந்த அரசியலுக்கு வந்தோமோ?’ என்று நொந்துகொண்ட தருணங்கள் உண்டா?''




''அரசியலில் சலிப்புக்கு
ஒருபோதும் இடம் இல்லை. மக்களுக்குத் தொண்டு புரியத்தான் வந்திருக்கிறோம்.
அதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்குச் சலிப்பு
ஏற்படுவது இல்லை. என் அரசியல் வாழ்க்கையில் எத்த னையோ பிரச்னைகளைச்
சந்தித்திருக்கிறேன். தடாவில் சில நாட்கள், பொடாவில் 18 மாதங்கள் என
ஐம்பதுக்கும் அதிகமான முறை என்னை இந்த அரசுகள் சிறைக்கு அனுப்பி
வைத்திருக்கின்றன. ஒருமுறைகூட அதற்காக வருந்தியதோ, சோர்வு அடைந்ததோ இல்லை.


மாறாக, மேலும் உற்சாகத்துடன்
மக்கள் பணிபுரியும் உந்துதலே ஏற்படும். பதவிக்காகவும் பணத்துக்காகவும்
அரசியலுக்கு வருபவர்களுக்கு வேண்டுமானால் இத்தகைய சலிப்புகள் ஏற்படலாம்.
மக்கள் நலனை மனதில்கொண்டு அரசிய லுக்கு வருபவர்களுக்கு ஒவ்வொரு நாளும்
உற்சாக தினம்தான்!''




8. ''ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்கு எதை, யாரைக் காரணம் என்பீர்கள்?''




''பின்னடைவுக்கு முக்கியமான முதல்
காரணம், சர்வதேசச் சூழல்தான். அமெரிக் காவில் இரட்டைக் கோபுரம்
தாக்கப்பட்ட 9/11 சம்பவத்துக்குப் பிறகு, உலக நாடு களின் போக்கு
முற்றிலும் மாறிவிட்டது. தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கும்
பயங்கரவாதச் செயல்களுக்கும் இடையே வேறுபாடு காணப் பல நாடுகள்
விரும்பவில்லை.




எல்லா நாடுகளும் மக்கள்
போராட்டங்களை நசுக்குவதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.
இதன் ஓர் அங்கமாகத்தான் விடுதலைப் புலிகளும் பயங்கரவாதிகளாகச்
சித்திரிக்கப்பட்டனர். இப்படி ஒன்றுசேர்ந்த நாடுகளின் உள்நோக்கத்தை நாம்
புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவை எடுத்துக்கொண்டால், காஷ்மீர், பஞ்சாப்,
அஸ்ஸாம், நாகாலாந்து போன்ற பல இடங்களில் தேசிய இனப் போராட்டங்கள்
நடக்கின்றன.


சீனாவில் திபெத் மக்கள்
நீண்டகாலமாக தனிநாடு கேட்டுப் போராடி வருகின்றனர். பாகிஸ்தானில் சிந்து
மாநில மக்களும், எல்லைப்புறத்தைச் சேர்ந்தவர்களும் விடுதலைக்காகப்
போராடுகின்றனர். இவர்களை எல்லாம் ஒழித்துக்கட்ட இந்த நாடுகள் முயற்சி
செய்கின்றன. அதனால்தான், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதத்தின்
பெயரால் கொச்சைப்படுத்தி சிங்கள அரசுக்குத் துணை நிற்கின்றன. உலக அளவிலான
ஆளும் வர்க்கங்கள் தமக்குள் அமைத்துக்கொண்ட கள்ளக்கூட்டும் சூழ்ச்சியான
நடவடிக்கைகளும்தான் ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்கு முக்கியக் காரணம்!''




-அடுத்த வாரம்...





''
'நம்மைவிட பிரபாகரனுக்கு 'அலர்ட்னஸ் - உஷார்தன்மை’ அதிகம்!’ என்கிறார்
எனது போலீஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அதை எப்போ தேனும்
உணர்ந்திருக்கிறீர்களா?''









''உங்கள் தந்தை காந்தியடிகளிடம் கையெழுத்து கேட்டு, அதற்கு அவர் காசு கேட்டார் என்று படித்த ஞாபகம். அது உண்மையா?''




''எதிர்காலத் தமிழகம் குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? முன்னேற்றப் பாதையில்தான் தமிழர்கள் செல்கிறார்களா?''




- இன்னும் பேசலாம்...

thanx - vikatan


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

வீரப்பன்வாழ்கை ஒரு வீர வரலாறு !!!!!!!  Empty Re: வீரப்பன்வாழ்கை ஒரு வீர வரலாறு !!!!!!!

Post by logu Sat Mar 29, 2014 8:09 am

மொத்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை இரண்டும் ஒன்று
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

வீரப்பன்வாழ்கை ஒரு வீர வரலாறு !!!!!!!  Empty Re: வீரப்பன்வாழ்கை ஒரு வீர வரலாறு !!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum