TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறிலங்கா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான தருணம்

Go down

சிறிலங்கா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான தருணம் Empty சிறிலங்கா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான தருணம்

Post by piraba Sun Jun 09, 2013 7:35 am

சிறிலங்கா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான தருணம்
******************************************************

சிறிலங்கா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான தருணம் 947178_380454495409380_1873516689_n
சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் உண்மையான மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த
முயலவில்லை. இதனை அனைத்துலக சமூகம் மேற்கொள்ள வேண்டும். சிறிலங்காவில்
உண்மையான மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக அனைத்துலக சமூகத்தால்
முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு அமெரிக்காவானது தலைமை தாங்க வேண்டும்.


இவ்வாறு CNN செய்தி நிறுவனத்தின் இணையத்தில் காருண்யன் அருளானந்தம்* [By
Karunyan Arulanantham, Special to CNN] எழுதிய Time for U.S. pressure on
Sri Lanka சிறப்புக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது
முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட,
சிறிலங்காவின் வடக்கிலுள்ள வன்னிப் பிரதேசத்தை அரசாங்கம் திட்டமிடப்பட்ட
ரீதியில் அடிமைப்படுத்துவதானது ஒரு துன்பியல் உண்மையாகும்.


நந்திக்கடல் நீரேரிக்கும் முல்லைத்தீவு நகருக்கு வடக்கே உள்ள கடலுக்கும்
இடையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் குடாநாட்டில், யுத்தம்
இறுதிக்கட்டத்தை அடைந்த போது சிறிலங்கா அரசாங்கம் அதனைப் பாதுகாப்பு வலயம்
என அறிவித்தது. இங்கு பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமது உயிரைப்
பாதுகாப்பதற்காக தஞ்சம் புகுந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து
நடைபெற்ற சம்பவங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாதவையாகும். இறுதிக்
கட்டப் போரில் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு வலயம்
நோக்கி தொடர்ச்சியான, செறிவான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டதுடன், இந்தப்
பகுதிகளை சுற்றிவளைத்துக் கொண்டது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது,
கனரக ஆயுதங்களைத் தாம் பயன்படுத்தவில்லை என சிறிலங்கா அரசாங்கம் உலக
நாடுகளுக்கு உறுதியளித்த பின்னரும் கூட, இவ்வாறான எறிகணை வீச்சுக்களை
மேற்கொண்டது.

மே 2009ன் பிற்பகுதியில் சிறிலங்கா அரசாங்கமானது,
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து போர் வெற்றியைப்
பிரகடனப்படுத்தியது. இவ்வாறு போர் முடிவுக்கு கொண்டு வந்தவேளையில்,
சிறிலங்கா பாதுகாப்பு படையால் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள்
படுகொலை செய்யப்பட்டனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் 40,000 வரையான
பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சிறிலங்கா தொடர்பில் ஐ.நா
வல்லுனர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் இறுதி அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப் பொருத்தமான விசாரணைகளை மேற்கொள்ளும் போதே
இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டோர் தொடர்பாக வரையறுக்க முடியும் என ஐ.நா
வல்லுனர் குழு சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பில் சில ஆய்வாளர்கள்
மிகத் துல்லியமான, உறுதியான புள்ளிவிபரங்களை முன்வைத்துள்ளனர்.


2008ம் ஆண்டிலிரந்து 140,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்பான முடிவு
இன்னமும் அறியப்படாது உள்ளதாக மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆயர் ஜோசப்
இராயப்பு சாட்சியமளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச்சில்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம், யுத்தத்தின் போது
அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டமை
தொடர்பாக சுயாதீனமான, நம்பகமான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்பதை
வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை முன்வைத்தது.

இவ்வாறான தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்ட போதும் சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் தனது நாட்டில்
அடக்குமுறைகளையும், சித்திரவதைகளையும் மேற்கொண்டு வருகிறது. சிறிலங்காவில்
உள்நாட்டு யுத்தம் ஒன்று ஆரம்பமாவதற்கு காலாக இருந்த அடக்குமுறையையும்
மீறல்களையும் இந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்தும் நிறைவேற்றி வருகிறது.

சிறிலங்காவில் தொடரப்படும் “பலவந்தமாக காணாமற் போதல்கள், திட்டமிடப்பட்ட
படுகொலைகள், சித்திரவதைகள், கருத்து வெளிப்படுத்தல் சுதந்திர உரிமையைப்
பறிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் மீறல்கள், அமைதியான முறையில்
ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பறித்தல், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
மற்றும் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள்
போன்றோர்களின் நடவடிக்கைகளில் தலையீடு செய்தல், சுயாதீன நீதிச்சேவை மற்றும்
சட்ட ஆட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்தல், மதம் அல்லது நம்பிக்கையை
அடிப்படையாகக் கொண்டு பாரபட்சப்படுத்துதல்” போன்றன சிறிலங்காவில் தற்போதும்
தொடரப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் கடந்த ஆண்டு அமெரிக்க
இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான
அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டிருந்தன. “நாட்டில் காணாமற்போன
ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பளிக்கவில்லை.
அத்துடன் மனித உரிமை மீறல்கள் மிகப் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக ஊடக நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை மீது தாக்குதல் மற்றும்
சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என அமெரிக்க இராஜாங்கத்
திணைக்களத்தால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ‘சிறிலங்கா தொடர்பான மனித
உரிமைச் செயற்பாடுகள்’ என்கின்ற அறிக்கையில் மேலும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதேவேளையில், சிறிலங்காவில் வாழும்
தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படுகின்றனர், அடக்கப்படுகின்றனர்,
ஆபத்தைச் சந்திக்கின்றனர். தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல்
பிரதிநிதித்துவம் மற்றும் பொருளாதார வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் சொந்த நிலங்கள் மற்றும் வீடுகள் தொடர்ந்தும்
சுவீகரிக்கப்பட்டு, இராணுவமயமாக்கல் இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணம்
வலிகாமத்தில் மாத்திரம் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 6381 ஏக்கர்
நிலப்பரப்புக்களை சிறிலங்கா இராணுவத்தினர் கையக்கப்படுத்தியுள்ளதாக
அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழ் மக்கள் வாழும் வடக்கின் ஏனைய பகுதிகளிலும் சிறிலங்கா
இராணுவத்தால் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக
புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

போரின் பின்னர்,
உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் சிறிலங்காவின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில்
இசைக்கக் கூடாது என அரசாங்கம் அறிவித்தது. இவ்வாறான நடவடிக்கை மூலம், தமிழ்
மக்களின் கலாசார அடையாளத்தை மிக விரைவாக, திட்டமிட்ட ரீதியில் அழிப்பதற்கு
சிறிலங்கா அரசாங்கம் முயற்சி செய்கிறது.

இவ்வாறான அடக்குமுறைகள்
நிலவுவதை உறுதிப்படுத்திய போதிலும், சிறிலங்கா விடயத்தில் அனைத்துலக சமூகம்
காத்திருப்பதற்கான காரணம் என்ன? அனைத்துலக சமூகமானது சிறிலங்கா விடயத்தில்
சுயாதீன விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதிக்கின்ற ஐ.நா பொறிமுறை ஒன்று
உருவாக்கப்படுவதற்கான காலம் முடிந்துவிட்டது. இதேபோன்று ஐ.நா தலைமையில்
நிலையான சமாதானத் தீர்வை முன்வைப்பதற்கான கருத்துவாக்கெடுப்பு ஒன்றை
நடாத்துவதற்கான கால அவகாசமும் முடிவடைந்துவிட்டது.


இதயசுத்தியுடனான உண்மையான மீளிணக்கப்பாட்டை அடைந்துகொள்வதன் மூலம் மட்டுமே
சிறிலங்காவில் நிரந்தரத் தீர்வொன்றை எட்டமுடியும். இதுவே இதற்கான சிறந்த
வழியாகும்.

தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான
தகைமையைக் கொண்டுள்ளனர். ஆனால் இன்னமும் இவர்கள் திட்டமிடப்பட்ட வகையில்
சிறிலங்கா அரசாங்கத்தால் அடக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றனர்.
எதிர்காலத்தில் தமிழ் மக்களை சிறிலங்காவிலிருந்து துரத்துவதற்கு அல்லது
அழிப்பதற்கு, தேசத்தின் ஒட்டுமொத்த நினைவுகளிலிருந்து தமிழ் மக்களின்
அடையாளங்களை அழிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட கைங்காரியங்களை
மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு ஒரு நாட்டில் வாழும் குறித்த இனத்தவர்கள்
அடக்கப்படும் போது, மீளிணக்கப்பாட்டையோ அல்லது நிலையான தீர்வையோ இங்கு
எட்டமுடியாது என வரையறை கூறுகிறது.

இதேவேளையில், சிறிலங்கா இன்று
எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகளை சிறிலங்கா அரசாங்கமானது பல்வேறு பொது
உறவுகள் தொடர்பான மூலோபாயங்கள் மூலம் தட்டிக்கழித்து, மறுதலித்து வருகிறது.
நாட்டில் பயனுள்ள நகர்வுகளை மேற்கொள்வதாக சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி
அளித்த போதிலும், சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி வருகிறது.

ஆண்டுகள் பல கடக்கும் போது இவ்வாறு தான் வழங்கிய வாக்குறுதிகளை அனைத்துலக
சமூகம் மறந்துவிடும் என சிறிலங்கா அரசாங்கம் நம்புகிறது. ஆனால் கடந்த
காலத்தை மறப்பதானது ‘வரலாறு மீண்டும் மீண்டும் நிகழும்’ என்பதை
நினைவூட்டுகிறது. இதனை சிறிலங்கா அரசாங்கம் மறந்துவிடக் கூடாது.


சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் உண்மையான மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்த
முயலவில்லை. இதனை அனைத்துலக சமூகம் மேற்கொள்ள வேண்டும். சிறிலங்காவில்
உண்மையான மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக அனைத்துலக சமூகத்தால்
முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு அமெரிக்காவானது தலைமை தாங்க வேண்டும்.

“முன்னோக்கிச் செல், சிறிலங்காவானது பாதுகாப்பான, நிச்சயமான, நிலையான,
தனது நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களையும் திருப்திப்படுத்தும் சமாதானம்
ஒன்றை எட்டிக்கொள்ள வேண்டும்” என 13, மே 2009ல் சிறிலங்காவில் உள்நாட்டுப்
போர் நிறைவை எட்டிய போது, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருந்தார்.

அண்மைய கால வரலாறுகளைப் பார்க்கும் போது, சிறிலங்காவானது தானாகவே தனது
சொந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளாது என்பது தெளிவாகிறது.

*Karunyan Arulanantham is the executive director of the Tamil American Peace Initiative, an organization of Tamil Americans.

அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.


[You must be registered and logged in to see this link.]
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறிலங்கா மீது நேரடியாக அழுத்தம் கொடுக்கப்படும் – அமெரிக்கா
» அமெரிக்கா, இலங்கை மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது!- சர்வதேச ஆங்கில ஊடகம் சீ.என்.என்
» போர்க்குற்ற நீதிமன்றில் சிறிலங்கா நிறுத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை
»  இலங்கை மீது உளவிய இலங்கை மீது உளவியல் போர் ஆரம்பித்துள்ள அமெரிக்கா!-கொழும்பு ஆங்கில ஊடகம்.
»  சிறீலங்கா மீது தொடரும் அமெரிக்காவின் அழுத்தம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum