TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!

2 posters

Go down

அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!  Empty அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!

Post by KAPILS Fri May 31, 2013 9:57 pm


உணவில் சுவைக்காக சேர்க்கும் பொருட்களில் பஞ்சமே இல்லாமல் கலந்து இருக்கிறது ஆபத்து.

தற்போது பரவலாக காணப்படும், பேசப்படும் உடல் உபாதைகளில் சிறுநீரக கற்கள் என்பது அதிக பிரபலமாகியுள்ளது.

சிறுநீரக கற்கள் பல வகைகள் உள்ளன.

1 கால்சியம் ஆக்ஸலேட் கற்கள்

2 கால்சியம் பாஸ்பேட் கற்கள்

3 யூரிக் அமில கற்கள்

4 ஸ்ட்ருவிட் கற்கள்

5 சிஸ்டைன் கற்கள்



இவைகளுக்கான காரணங்களும் அதன் உணவு வகைகளும் வேறு வேறானவை. ஒவ்வொரு வகை கல்லின் தன்மைக்கு மருத்துவ முறைகளும் வேறு வேறானவை. நாம் உட்கொள்ளும் சோடியம், இதன் அளவானது குறிப்பிட்ட வரையறைக்குள் இருபது நலம். கற்கள் ஓர் முறை வந்து அவதி பட்டவரோ, அல்லது முன் கூட்டி எச்சரிகையுடன் உள்ளவரோ சில உணவு வகைகளை தவிர்த்தல் அல்லது குறைந்த அளவில் எப்போதாவது எடுத்துக்கொண்டால் நலம் பயக்கும். கீழே குறிப்பிட்டுள்ள ரசாயன உப்புக்கள் உடலில் சேருவதும் சிறு நீரக கற்கள் உண்டாக காரணமாகும்.

ஆடம்பரமான ஏ.சி. மாலில் தள்ளு வண்டிகளில் தேவையான பாக்கெட்டுகளை அள்ளி போட்டுகொண்டு, ஐஸ் க்ரீமை நக்கிக்கிகொண்டோ, சாக்லேட்டை கடித்துகொண்டோ வந்து கவுண்டரில் கிரிடெட் அட்டையை கொடுத்து “இழுத்துவிட்டு ” லாவகமாக காரை நோக்கி தள்ளுவண்டியை நாம் கொண்டு செல்வோம். அதெல்லாம் சரிதான். ஷெல்பிலிருந்து உணவு பாகெட்டுக்களை எடுக்கும் போது வெறும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை மட்டும் பார்க்காமல் கீழே கண்ட உப்புக்கள் அந்த உணவு பொருளில் அடங்கி யுள்ளனவா என்றும் கவனிப்பது நலம்.






Monosodium glutamate (MSG)
Sodiumbicarbonate, the chemical name for baking soda
Baking powder, which contains sodium bicarbonate and other chemicals
Disodium phosphate
Sodium alginate
Sodium nitrate or nitrite

அஜினோமோட்டோவில் கலந்-திருக்கும் மோனோ-சோடியம்குளுட்டோமேட் (MSG)’ என்பது ஒற்றைத் தலைவலி, சோர்வில் ஆரம்பித்து பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கக் கூடியது’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இதை உணர்ந்த சீனா தங்கள் நாட்டில், அஜினோமோட்டோவைத் தடை செய்திருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சீனா தன் உபயோகத்தைத் தடை செய்திருக்கிறதே தவிர, உற்பத்தியைத் தடை செய்யவில்லை.

அதாவது, உள்ளூரில் தடை செய்யப்பட்ட அஜினோமோட்டோவைத் தான் இந்தியாவுக்கு அனுப்பிவருகிறது.

இந்தியாவில் அஜினோமோட்டோவின் ஆபத்தை உணர்ந்து தடை செய்வது அரசின் கையில் இருக்கலாம்.

ஆனால், நம் வீட்டுக்குள் அஜினோமோட்டோ வராமல் தடுக்கும் வாய்ப்பு நமது கரங்களில்தான் இருக்கிறது.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!  Empty Re: அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!

Post by Tamil Sat Jun 01, 2013 8:56 am

[You must be registered and logged in to see this image.]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!  Empty Re: அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!

Post by Tamil Sat Jun 01, 2013 8:57 am

கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த
வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக
இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட்என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத
உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக்குள்ளும் புகுந்துவிட்டது.

*
இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும்
பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு
இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன.

*
கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால்
அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில்
சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

* அஜினோமோட்டோ கலந்த
உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத்
தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். இதனால் உடல் வளர்ச்சி
தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட்
நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக
அதிகரிக்கும்.

* மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல்
போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும்
ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத
வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும்.

* ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த
வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில்
எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும்.
இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப்
பட்டுள்ளது.

* அஜினோ மோட்டே£வைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும்,
ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ
ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது
என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* ஜீரோ ஏடேட் ஹைட்ரோ
ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின்
கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித
கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ்,
பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எண்ணெயில்தான்
தயாரிக்கப்படுகின்றன.

* இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப
பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள்
கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ்
பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல
தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம்.

* ஆனால் இந்த எண்ணெயைப்
பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய்,
உடல் பருமன் எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள்.

* திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.

*
ஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப்
பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ
கலந்திருப்பதை மறைத்து மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி
ஏமாற்றுகிறார்கள்.

* சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான்
குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி
பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட
இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர்.

* குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக்கொடுப்பர்.
சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை.

*
பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி,
வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல்,
மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ்
என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும்
நோய்களாகும்.

பெற்றோர்களே ! குழந்தைகளே இயற்கையான உப்பு நம்மிடம் இருக்க இந்த அஜினோமோட்டோ என்ற ஆபத்து தேவையா?
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!  Empty Re: அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!

Post by Tamil Sat Jun 01, 2013 8:58 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
நாம் உட்கொள்ளும் உணவில் அடங்கியுள்ள வேதியியல் குணங்களே நம் உடலுக்கு நன்மையையும் தீமையையும் தருகின்றன.
தற்போது பரவலாக காணப்படும், பேசப்படும் உடல் உபாதைகளில் சிறுநீரக கற்கள் என்பது அதிக பிரபலமாகியுள்ளது.


நம்
உடலுக்கு தேவையான சக்தியையும் மற்றும் வளர்ச்சி, திசுக்களை புதுப்பித்தல்
போன்ற தேவைகளுக்கு நாம் உண்ணும் உணவிலிருந்து தேவையான காரணிகள் இரத்தத்தில்
எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு உண்டாகும் கழிவுகள் முறையாக அதற்கென்று
அமைந்துள்ள உறுப்புகள் மூலம் அகற்றபடுகிறது.இரத்தத்தில் மீதம் உள்ள
கழிவுகள் சிறு நீரகங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு
சுத்திகரிக்கப்பட்டு பின்னர் தூய்மையான இரத்தம் மீண்டும் உடலுக்கு கிடைக்க
வழி செய்வது சிறுநீரகம்.



இவ்வாறு
சிறு நீரகங்களில் ரத்தம் தூய்மையாக்கும் பணி நிகழும் போது சில வகை உணவால்
உண்டாகும் கழிவுகள் அதன் உப்புக்கள் சிறுநீரக உட்புறங்களில் சிறுக சிறுக
படிந்து நாளடைவில் இந்த பதிவுகள் கற்களாக உருமாறிவிடும். இந்த
உப்பு படிகங்களே சிறுநீரக கற்களாகும்.இவைகள் சிறுநீரக உட்புறத்தில் உள்ள
குழிவான பகுதிகளில் அமர்ந்துவிடும் அப்போது வலி ஆரம்பிக்கும். அல்லது
அங்கிருந்து சிறுநீருடன் நகர்ந்து குறுகிய சிறுநீர் குழாயை அடைந்து
அங்கேதடைபட்டு நின்று விடுவதால்

சிறுநீர் குழாயில் அழற்ச்சி ஏற்பட்டு பயங்கரமாக வலிக்க ஆரம்பிக்கும்.


வலி
என்றால் பிராணன் போகும் வலியுண்டாகும். கூறிய உணர்வுடன் வயிற்றின்
அடிபாகத்தில் சற்று நடு பகுதியில் உணரமுடியும். அடிவயிறு முழுதும் கூட
சிலருக்கு வலி இருக்கும்.தலை சுற்றல், வாந்தி எடுக்கும் உணர்வு
போன்றவைகளும் இருக்கும். கற்கள் சிறுநீர் குழாய்களில் தங்கிவிடுவதால் தசை
சுவர்களில் உராய்ந்து ரத்தமும் கூட சிறுநீருடன் வெளியேறும் மேலும் இந்த
நிலையில் கிருமிகள் தொற்றி காய்ச்சலும் கூட உண்டாகும்.



// சரி சரி, அறுக்காத, இதெல்லாம் எங்களுக்கும் தெரியும் அஜினோமொட்டவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? //


அய்யா சாமிகளா அதைத்தான் சொல்ல வந்தேன். சிறுநீரக கற்கள் பல வகைகள் உள்ளன.


1 கால்சியம் ஆக்ஸலேட் கற்கள்
2 கால்சியம் பாஸ்பேட் கற்கள்
3 யூரிக் அமில கற்கள்
4 ஸ்ட்ருவிட் கற்கள்
5 சிஸ்டைன் கற்கள்


இவைகளுக்கான
காரணங்களும் அதன் உணவு வகைகளும் வேறு வேறானவை. ஒவ்வொரு வகை கல்லின்
தன்மைக்கு மருத்துவ முறைகளும் வேறு வேறானவை. நாம் உட்கொள்ளும் சோடியம்,
இதன் அளவானது குறிப்பிட்ட வரையறைக்குள் இருபது நலம். கற்கள் ஓர் முறை வந்து
அவதி பட்டவரோ, அல்லது முன் கூட்டி எச்சரிகையுடன் உள்ளவரோ சில உணவு வகைகளை
தவிர்த்தல் அல்லது குறைந்த அளவில் எப்போதாவது எடுத்துக்கொண்டால் நலம்
பயக்கும். கீழே குறிப்பிட்டுள்ள ரசாயன உப்புக்கள் உடலில் சேருவதும் சிறு
நீரக கற்கள் உண்டாக காரணமாகும்.


ஆடம்பரமான
ஏ.சி. மாலில் தள்ளு வண்டிகளில் தேவையான பாக்கெட்டுகளை அள்ளி
போட்டுகொண்டு,ஐஸ் க்ரீமை நக்கிக்கிகொண்டோ,சாக்லேட்டை கடித்துகொண்டோ வந்து
கவுண்டரில் கிரிடெட் அட்டையை கொடுத்து "இழுத்துவிட்டு " லாவகமாக காரை
நோக்கி தள்ளுவண்டியை நாம் கொண்டு செல்வோம். அதெல்லாம் சரிதான்.
ஷெல்பிலிருந்து உணவு பாகெட்டுக்களை எடுக்கும் போது வெறும் தயாரிப்பு
மற்றும் காலாவதி தேதிகளை மட்டும் பார்க்காமல் கீழே கண்ட உப்புக்கள் அந்த
உணவு பொருளில் அடங்கி யுள்ளனவா என்றும் கவனிப்பது நலம்.







( இதெல்லாம் யார் போடுகிறார்கள்? - நம்ம ஊர் சட்டப்படி இவைகளை போட்டாகவேண்டும் சாமி! )


  • Monosodium glutamate (MSG)

  • Sodium bicarbonate, the chemical name for baking soda

  • Baking powder, which contains sodium bicarbonate and other chemicals

  • Disodium phosphate

  • Sodium alginate

  • Sodium nitrate or nitrite

  • Monosodium Glutamate (MSG) -
    இதுதான் இன்று பிரபலமாகி விட்ட அஜினோமோட்டோ. ஜப்பான், சைனா , கொரியாவில்
    இதனை உணவில் சுவைக்காக பயன்படுத்த ஆரம்பித்து பின்னர் அது ஐரோப்பாவில் பரவி
    பின்னர் "உலகமயமாக்கல்" வழியாக நம்ம ஊருக்கும் வந்தாகிவிட்டது. துரித உணவு
    கடைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதோடு நில்லாமல் நம்ம ஊர் சமையல்
    வகைகளிலும், சாம்பார், ரசம் போன்றவற்றிலும் பயன்படுத்தச்சொல்லி
    விளம்பரங்கள் வேறு.

    இறக்குமதி
    செய்து அல்லது தயாரித்து விற்பவர்களுக்கு தங்களின் தயாரிப்பு விலை
    போகவேண்டும் அவ்வளவுதான். விளம்பர செலவெல்லாம் அவர்களுக்கு ஜுஜுபி. காணும்
    அனைத்தையும் நம்பவோ, விலைக்கு வாங்கவோ அவசியம்
    இல்லை அல்லது
    ஓசியில் கொடுத்தால் கூட வாங்காமல் விடுவதே மரியாதை. நாம் ஆண்டாண்டு
    காலமாக பயன்படுத்தும் பாரம்பரிய , இயற்கையான மசாலா மற்றும் மணம் கூட்டும்
    பொருட்கள் இருக்க இந்த "சைனா சனியனை " ஏன் விலை கொடுத்து வாங்கி தின்று
    விட்டு பின்னர் அடி வயிற்றை பிடித்துக்கொண்டு டாக்டரிடம் ஓடவேண்டும்?

    இவைகள்
    அதிகமாக நம் உடலில் சேருவது பலவகை சிறுநீரக கற்கள் உண்டாக கட்டியும்
    கூறுவது நிச்சயம். கேக் போன்ற பேக்கரி தயாரிப்புகளையும், பிஸ்கட் களையும்
    அளவோடு சாப்பிடவேண்டும். "என் பிள்ளை கேட்டான்,என் பெண் கேட்டாள், என்
    வைப் ஆசைப்பட்டாள் " என்று டம்பமாக இவைகளை வாங்கி தின்னுவதால் நமது
    பர்சுக்கும் பின்னர் உடல் நலத்திற்கும் கேடுதான். அதுசரி, சிறுநீரக கல்
    வராமல் இருக்க எளிய வழி என்ன? நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.குடியுங்க
    குடியுங்க குடிசிகிட்டே இருங்க ! தற்காலத்தில் குளிர் சாதனம் அதிகம்
    பயன்பாட்டில் இருப்பதால் தாகம் எடுக்கும் உணர்வே குறைந்து போய் அதனால்
    தண்ணீர் குடிக்கும் அளவும் குறைந்துவிடும். நாளடைவில் உபாதைகள்
    ஆரம்பிக்கு. எனவே நிறைய தண்ணீர் குடிப்பதே சிறந்த வழி.

    'கெட்டபசங்களுக்கு' மீண்டும் ஒரு நல்ல சேதி.
    பீர் மற்றும் ஒயின் அருந்துவது சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்குமாம்.
    அப்டி போடு !அதான் எங்களுக்கு வேணும்!!
    பீர் மற்றும் ஒயின் தான் சொல்லபடுகிறதே அல்லாமல் விஸ்கி, பிராண்டி,ரம்
    போன்ற "காட்டமான " விஷயங்களை ஓரம் கட்டி வைப்பது நம் உடம்புக்கும்,
    பர்சுக்கும், வண்டிக்கும் கூட நல்லது. Smile
    Tamil
    Tamil
    வலை நடத்துனர்
    வலை நடத்துனர்

    Posts : 11801
    Join date : 02/01/2010

    https://www.tamilcpu.com

    Back to top Go down

    அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!  Empty Re: அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!

    Post by Tamil Sat Jun 01, 2013 8:59 am

    [You must be registered and logged in to see this image.]
    நீங்கள் வாய்க்கு ருசியாக சாப்பிடவேண்டும் என்று நினைப்பதில்
    தவறில்லை. அதற்காக குட்கா, அபின் போன்ற போதைப்பொருளை, உணவில் சேர்த்து
    சாப்பிட விரும்புவீர்களா? பாக்கெட் உணவுகளை அதிகம் ருசிப்பவரா? தாகம்
    எடுக்கிறது என்பதற்காக பிளாஸ்டிக் டப்பாவை உடைத்து "மொடக்"குபவரா?


    வேண்டாமே, இந்த விபரீதம், நாம் அமெரிக்காவை போல உயரலாம், அதற்காக,
    அவர்கள் "கேடுகெட்ட" உணவுப் பழக்கத்தை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமா?
    மிளகிலும், சுக்கிலும், திப்பிலியிலும் அரிய மருத்துவ குணங்கள் இருக்கிறது
    என்று அவர்கள் பின்பற்றத் துவங்கிவிட்டனர். ஆனால், அவர்கள் விட்டொழித்த
    "டப்பா" உணவுகளை நாம் ஏதோ ஆசைக்கு வாங்கி சாப்பிடலாம். அதற்காக வாழ்க்கையே
    டப்பா உணவாகி விடலாமா? நாம் சமையல் அறைகள் என்ன ரசாயன தொழிற்கூடமா?
    உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் எல்லாம் நமக்கு அவசியம் தானா?

    நாம் இதையெல்லாம் யோசிக்க மறுக்கிறோம்? அது மட்டுமல்ல, நம் அந்தஸ்த்து,
    ஸ்டேட்டஸ் என்று எல்லாம் பார்த்து, பார்ட்டி என்ற பெயரில், நாள்தோறும் கண்ட
    கண்ட தின்பண்டங்களை சாப்பிட்டு, நாம் குழந்தைகளையும் சாப்பிட வைத்து
    எதிர்காலத்தில் அவர்களை அவஸ்தைப்பட வைக்க நினைப்பவரா?

    * நீங்கள் சாப்பிடும் எந்த ஒரு டப்பா உணவிலும், டப்பா குளிர்பானங்கள்,
    மது வகைகளிலும், சீஸ், பர்ஜர் என்ற சமாச்சாரங்களிலும் அசைவம்
    சேர்ந்திருக்கிறது.

    * நீங்கள் சைவமாக இருக்கலாம். அதில் பிடிவாதமாக இருக்கலாம். ஆனால்,
    நீங்கள் சாப்பிடும் இறக்குமதி சாக்லெட் முதல் எல்லாமே, மாட்டிறைச்சி, மீன்
    கொழுப்பு என்று ஏதாவது சேர்த்துத்தான் இருக்கும்.

    * நாம் சமையலில் பயன்படுத்தும் பல பாக்கெட் சமாச்சாரங்களிலும் இப்படிப்பட்ட "ப்ளேவர்" கூட்டும் ரசாயனங்கள் இல்லாமல் இல்லை.

    * நம்மில் சிலர் பயன்படுத்தும் "டேஸ்ட்" தருவதற்கான அஜினோமோட்டோவில் கூட
    முழுக்க ரசாயனம் தான். அதை பயன்படுத்தி வந்த சீனர்களும், அமெரிக்கர்களும்
    அதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

    ஆம், இப்படி நாம் எப்போது உலகமயமாக்கலில் கவனம் செலுத்தி, இப்போது
    மூழ்கி விட்டோமோ, அப்போதே நம் வாழ்க்கையில் சர்வதேசத்தனம் ஊடுருவத்
    துவங்கிவிட்டது. அதன் மூலம் தான் நம் சைவ உணவு பொருட்கள் கூட,
    இறக்குமதிகளால், ரசாயனம், அசைவம் சேர்ந்து வரத்துவங்கி விட்டது. பாக்கெட்
    உணவுகளால் ஆபத்தில்லை. ஆனால், நாம் அதிக அளவில் அதை பின்பற்றக்கூடாது
    என்பது தான். பலரும் அதிலேயே மூழ்கி விட்டது தான் ஆபத்து தருவதாகும்.

    அஜினோமோட்டோ, இதன் உண்மையான பெயர் எம்.எஸ்.ஜி., என்பது தான். மோனோ
    சோடியம் க்ளூட்டாமேட் என்பது தான் இதன் முழு ரசாயனப்பெயர்.
    கெச்சப்பாகட்டும், மஷ்ரூம் அயிட்டங்களாகட்டும், சிக்கன்
    சமாச்சாரங்களாகட்டும் எதிலும், இந்த எம்.எஸ்.ஜி., இருக்கும். நம்மூர் சோடா
    உப்பு போல் தான். இந்த எம்.எஸ்.ஜி., தான் நம்மில் அஜினோமோட்டோ என்று
    பிராண்ட் பெயரில் அழைக்கப்படுகிறது.

    இந்த எம்.எஸ்.ஜி., தரும் பிளேவர், டேஸ்ட் பெயர் தான் "யுமாமி" என்று
    அமெரிக்கர்களும், ஜப்பானியர்களும் கூறுகின்றனர். சீனாவிலும், இது
    கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், அமெரிக்காவில் கடந்த பத்தாண்டுக்கு முன்பே
    பெரும்பாலும் குறைக்கப்பட்டுவிட்டது. எம்.எஸ்.ஜி., இல்லாத உணவு என்றே சில
    ஓட்டல்களில் தனி அயிட்டங்கள் உண்டு. ஜப்பானிலும் குறைந்து விட்டது.

    அமெரிக்கா உட்பட பல பணக்கார நாடுகளும், உடல் ஆரோக்கியத்துக்கு எதெல்லாம்
    கெடுதல் என்று அறிந்து, அதை குறைத்து விட்டனர். ஆனால், நம் தலையில் கட்டி
    வருகின்றனர். அஜினோமோட்டோ பற்றி மத்திய சுகாதாரத்துறை இன்னமும் உறுதியான
    விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை. குறிப்பிட்ட சதவீதம் வரை பயன்படுத்தினால்,
    உடலுக்கு கேடில்லை என்று மற்ற ரசாயன பொருட்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கும்
    கொள்கையே கடைப்பிடித்து வருகிறது.

    மொத்தத்தில் அஜினோமோட்டோ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அதை
    பயன்படுத்தும்போதும் தவிர்ப்பது நில்லது. ஏனென்றால், நிம் இயற்கையான
    தானியங்களில், மூலிகைகளில் இல்லாத பிளேவரா அதில் இருக்கப்போகிறது?

    ஆனால், இதை நாம் உணர வேண்டுமானால், அதையும் அமெரிக்க நிபுணர்கள் தான்
    சொல்ல வேண்டும். அதுவரை நாம் அவர்கள் ஒதுக்க விரும்பும் "கேடுகெட்ட" ரசாயன
    உணவுகளை தான் சாப்பிடுவோம். அவர்கள் குறைக்க விரும்பிய கொழுப்பை நாம்
    ஏற்றத்தான் செய்வோம். முப்பது வயதில் வாக்கிங் போகும் நிலை இப்போது
    இருப்பது போய், குழந்தைப் பருவத்திலேயே வாக்கிங் போக வேண்டிய நிலை வரும்.

    அஜினோமோட்டோ கண்டுபிடித்தது யார்?: பலருக்கும் அஜினோமோட்டோ என்றால், அதை
    சீனர்கள் தான் கண்டுபிடித்தனர் என்று தெரியும். சீனர்களின் பாரம்பரிய
    உணவுப்பொருள் என்று நினைக்கின்றனர். உண்மை என்னவென்றால், இதை
    கண்டுபிடித்தது சீனர் அல்ல, ஒரு ஜப்பானிய மருத்துவ நிபுணர்
    கண்டுபிடித்தார்.

    அவர் பெயர் கிகுனே இகடே. கடந்த 1908ம் ஆண்டு இதை கண்டுபிடித்தார்.
    டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளராக இருந்தார். ஜப்பானிய
    சூப்பில் இருந்து பல உணவுகளிலும் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்டது. அங்கெல்லாம்
    இதன் பெயர் எம்.எஸ்.ஜி., தான்.

    இதுவரை நான்கு சுவை; இத்தோடு ஐந்தாவது சுவை: பல நு‘று ஆண்டுகளாக
    விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது நான்கு சுவைகள் தான். அவை, இனிப்பு,
    கசப்பு, புளிப்பு, உப்பு. ஆனால், ஜப்பானிய நிபுணர், கண்டுபிடித்த சுவைதான்
    "யுமாமி" ஜப்பானிய மொழியில் இப்படி அழைக்கப்படுகிறது. நாம் பிளேவர், கமகம
    என்ற பெயர்களால் அழைத்துக் கொள்கிறோம்.

    அஜினோமோட்டோ, இப்போதெல்லாம் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. உடலுக்கு
    எதுவும் பண்ணாது தான். எப்படி குட்காவோ, அதுபோல, உடலில் போனால்,
    விர்ர்ர்...என்று சுவை கூட்டும். நாக்கில் வைத்தாலே டொமேட்டோ கெச்சப்,
    சப்பு கொட்ட வைக்கிறதே, அந்த டேஸ்ட் தருவது எம்.எஸ்.ஜி., என்ற அஜினோமோட்டோ
    தான்.

    காலப்போக்கில் இது நரம்பு மண்டலங்களை தாக்கும் ஆபத்து உள்ளது. அதனால்,
    அதிக அளவில் சேர்க்கக் கூடாது என்று சர்ச்சை எழுந்தது. இருபதாண்டு அமெரிக்க
    சர்ச்சை, இன்னும் உலக முழுக்க தொடர்கிறது.

    அவசியமா? ஆபத்தா? அரசு சொல்ல வேண்டும்: மும்பையில் பல பெரிய ஓட்டல்களில்
    அஜினோமோட்டோ பயன்படுத்தி, பிளேவர் தந்தனர். அது கொடிகட்டிப் பறந்தது.
    அதனால் சர்ச்சைக்குரிய இந்த அஜினோமோட்டோ விஷயத்தில் அரசு கட்டுப்பாடுகளை
    கொண்டுவந்தால் நல்லது.

    அரசு செய்யாவிட்டாலும், நாம் முடிவெடுப்பது நல்லது. ருசி தேவைப்பட்டால்,
    நமக்கு இயற்கையாக கிடைக்கும் லவங்கம் பட்டை, சோம்பு என்பதை விட்டு, இப்படி
    ரசாயன கலவையை உடலில் ஏற்றிக்கொள்ள வேண்டுமா? சிந்தியுங்கள்.
    Tamil
    Tamil
    வலை நடத்துனர்
    வலை நடத்துனர்

    Posts : 11801
    Join date : 02/01/2010

    https://www.tamilcpu.com

    Back to top Go down

    அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!  Empty நூடுல்சில் அஜினோமோட்டோ -கேன்சர் வரவைக்கும் -ஆய்வு

    Post by Tamil Sat Jun 01, 2013 9:00 am

    சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின்
    ருசியையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர்
    அஜினமோட்டோ.. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன்
    ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.
    தொடர்ந்து
    அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று
    சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான்
    பிரச்னை?
    வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது?இதில்
    78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது
    பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு
    அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி
    செய்யப்படுகிறது.
    அதென்ன அஜினமோட்டோ?உணவில் வாசனையை
    அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த
    அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம்,
    சீனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு
    வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை
    மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற
    வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு
    அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க
    ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும்
    நிலைத்து விட்டது.இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.
    நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ
    புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை
    நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.
    அப்புறம் என்ன?
    அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது
    உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்
    நஞ்சுதானே... அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது
    மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்!
    MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?நமது
    உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ்
    என்ற பகுதியில் உள்ளது. MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது.
    இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை
    அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான்
    கூடும்! மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி,
    மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை
    ஏற்படுகிறது. MSG நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில்
    சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது. தூக்கக்
    குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக
    சக்தி குறைந்து, கவனக்குறைவும், திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது.
    அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA
    (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.
    இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை.
    மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு, நடத்தை
    விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.
    சோதனைச்
    சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார்
    5-மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு
    குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள
    குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. தீவிரவாதச்
    செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட
    வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.
    பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச்
    சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள்
    ஏற்படலாம்.
    உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி,
    நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு
    உள்ளாகின்றன.

    அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம்
    தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால்
    சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள்
    வெளிப்படுகின்றன.தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து
    குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸில் மிகவும் அதிகமாக
    MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக
    ஆளாகிறார்கள்.ஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து
    உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும்
    இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல்
    ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய
    விஷயம்.
    எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது?பதப்படுத்தப்பட்ட
    உணவு வகைகள்சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு
    சோயா சாஸ்)கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.சூப் பவுடர்கள்.பாஸ்ட் புட் ,கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான நொறுக்கு தீனிகள் .குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ்
    Tamil
    Tamil
    வலை நடத்துனர்
    வலை நடத்துனர்

    Posts : 11801
    Join date : 02/01/2010

    https://www.tamilcpu.com

    Back to top Go down

    அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!  Empty Re: அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » 'அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள்' மற்றும் 'உலகை அச்சுறுத்தும் சக்தியாக வளர்ந்து வரும் மோசமான நாடுகள்' இலங்கையும் இடம்பெற்றிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
    » மாசு :- பூமியை அச்சுறுத்தும் ஆபத்து
    » மீனவர் படுகொலை – அச்சுறுத்தும் அரசியல்
    » கருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்
    » அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்.. தடுப்பதற்கான எளிய முறைகள்..

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum