TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"களத்துமேட்டிலும் கரன்ட் உற்பத்தி செய்யலாம்" -நடைமுறை உதாரணம்!!

2 posters

Go down

"களத்துமேட்டிலும் கரன்ட் உற்பத்தி செய்யலாம்" -நடைமுறை உதாரணம்!! Empty "களத்துமேட்டிலும் கரன்ட் உற்பத்தி செய்யலாம்" -நடைமுறை உதாரணம்!!

Post by mmani Mon May 13, 2013 10:24 pm

வருங்காலம்… விவசாயத்துக்கு வருமானம் தரும் காலம் !
"களத்துமேட்டிலும் கரன்ட் உற்பத்தி செய்யலாம்" -நடைமுறை உதாரணம்!! 181473_486476391423728_1257230899_n
ஒரு பேராசிரியரின் பெருமித விவசாயம் !
ஜி. பழனிச்சாமி, படங்கள்: க. ரமேஷ்


”காவிரிப் பாசன விவசாயிகள், கர்நாடகத்தை நம்ப வேண்டிய நிலை. கிணற்றுப்
பாசன விவசாயிகளுக்கோ… கரன்டை நம்ப வேண்டிய நிலை. கர்நாடகமும் ‘கரன்ட்’டும்
காலை வாரிவிட்டுக் கொண்டே இருப்பதால், அந்த விவசாயிகள் கலங்கிக்
கிடக்கிறார்கள். ஆனால், நான் சூரியனை நம்பி விவசாயம் செய்வதால்… கலக்கம்
தீர்ந்து, கலகலப்புடன் நடமாடிக் கொண்டிருக்கிறேன்’’ என்று நாட்டு நடப்பை,
தன்னுடைய வயல் வாழ்க்கையோடு இணைத்து அழகாகப் பேசுகிறார்… ஈரோடு மாவட்டம்
நம்பியூர் அருகில் உள்ள எ. செட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த
பேராசிரியர் வைரமணி.


அக்கம்பக்கத்து விவசாயிகள் மின்சாரத்தை
எதிர்பார்த்து, பம்ப்செட் அறையிலேயே தவம் கிடக்க, இவருடைய பம்ப்செட்டில்
அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது நீர். அதைப் பெருமையாகப் பார்த்தவரே
நம்மிடம் பேசத் தொடங்கினார். ”நான்

32 வருஷமா கல்லூரியில
வணிகவியல் பேராசிரியராக வேலை பார்த்துட்டு, போன வருஷம்தான் ஓய்வுபெற்றேன்.
வீட்ல சும்மா இருக்க முடியாம, விவசாயத்துல இறங்கிட்டேன்.



எங்க குடும்பத்துக்கு 75 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. எங்க ஊரை ஒட்டி,
கீழ்பவானி வாய்க்கால் போறதால, கிணறுகள்ல தளும்பத் தளும்ப தண்ணி கிடக்கும்.
ஆனா, என்னதான் தண்ணி கிடைச்சாலும்… அதை இறைச்சு பாசனம் செய்ய கரன்ட்
வேணுமே? ஏற்கெனவே இருக்கிற மின் இணைப்பு மூலமா 5 ஹெச்.பி. மோட்டாரை வெச்சு
தண்ணி இறைக்கிறேன். ஆனா, அதை வெச்சு, 75 ஏக்கர் பாசனம் செய்ய முடியாது.
மேற்கொண்டு மோட்டார் போடணும்னா… புது மின் இணைப்பு வேணும். அது வந்து சேர
15 வருஷமாகும். அப்படியே கிடைச்சாலும், மின்தடையால முழுமையா பாசனம் செய்ய
முடியாது. இதற்கு மாற்று வழியை யோசிச்சுகிட்டு இருந்தப்பதான்,
‘களத்துமேட்டிலும் கரன்ட் உற்பத்தி செய்யலாம்’ங்கிற தலைப்புல ‘பசுமை
விகடன்’ல ஒரு கட்டுரை வெளியாச்சு. சூரிய ஆற்றல் மின்சாரத்தைப் பயன்படுத்தி
500 அடி ஆழமுள்ள போர்வெல்லுல இருந்தும் தண்ணியை இறைச்சு பாசனம் செய்ய
முடியும்னு படிச்சதும்… ஆர்வம் அதிகமாகிடுச்சு. அந்தக் கட்டுரையில இடம்
பிடிச்சுருந்த கோயம்புத்தூர், எட்டிமடை விஜயகுமாரோட தோட்டத்துக்கு நேர்ல
போயிட்டேன். மொத்தத்தையும் பார்த்துட்டு, அவர்கிட்ட எல்லாத்தையும் தெளிவா
கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு வந்தேன்.

ஏழு மணி நேர மின்சாரம் !

அதுக்குப் பிறகு, என் கிணத்துக்கும் சோலார் மின்மோட்டாரைப் பொருத்தினேன்.
ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் மோட்டார் ஓடுது. 60 அடி ஆழமுள்ள திறந்த
வெளிக்கிணற்றில்

40 அடி தண்ணி இருக்கு. அந்தத் தண்ணியை இறைச்சு,
கிணத்துமேட்டில் இருந்து 1,100 அடி தூரத்தில் இருக்கற மானாவாரி நிலத்துக்கு
குழாய் மூலமா கொண்டு போறேன். தண்ணி வசதி கிடைச்சதால அந்த நிலத்துல,
புகையிலை, வாழைனு பணப்பயிர்களை சாகுபடி செய்ய ஆரம்பிச்சுருக்கேன். கிணறு
ஆழம் குறைவாக இருக்கறதால, சோலார் மோட்டார் வெளியேற்றும் தண்ணீர் அதிகமாகவே
கொட்டுது. அதனால சொட்டுநீர் அமைக்காம, நேரடிப் பாசனம்தான் செய்றேன்.

எல்லா விவசாயிகளுக்கும் சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்த அரசாங்கம்
உதவணும். இப்ப, ஒரு குதிரைத் திறன் மோட்டாரை இயக்க ஒரு லட்ச ரூபா
செலவாகுது. இந்த முதலீட்டைக் குறைச்சு, மானியத்தை அதிகப்படுத்தினா… நிறைய
விவசாயிங்க இதுல பயனடைவாங்க. குறிப்பா மானாவாரி விவசாயிங்களுக்குப்
பயன்படும்.

ஐ.டி பார்க் போல… அக்ரி பார்க் உருவாகும்..!


அதேசமயம்… பத்து லட்ச ரூபாய் கொடுத்து, சொகுசு கார் வாங்கி வாசல்ல
நிறுத்துறதைப் பெருமையா நினைக்குற பெரிய விவசாயிங்ககூட, 5 லட்ச ரூபாய்
செலவு செஞ்சு சோலார் பேனல் அமைக்க யோசிக்கறாங்க. கார் வாங்குறதுக்கு
கூவிக்கூவிக் கடன் கொடுக்குற வங்கிகள்… சோலார் பேனல் போன்ற விவசாயத்
தொழில்நுட்பக் கருவிகளை வாங்கறதுக்கு கடன் தர யோசிக்குதுங்க.

32
வருஷமா வணிகவியல் பேராசிரியர் பணியில இருந்த அனுபவத்தில் சொல்றேன்…
வருங்காலம் விவசாயத்துக்கு வருமானம் கொடுக்குற காலமா இருக்கப் போகுது.
படிச்ச இளைஞர்கள் விவசாயத்துக்கு நிறைய வருவாங்க. ஐ.டி. பார்க் போல,
அக்ரி-பார்க் நாடு முழுக்க உருவாகும்” என்று அழுத்தம் கொடுத்து சொன்ன
வைரமணி,

”மின்தட்டுப்பாடு காரணமா விவசாயத்தை விட்டுடலாம்ங்கற
மனநிலையில் இருந்த எனக்கு பசுமை விகடன்தான் புதிய உத்வேகத்தைக்
கொடுத்துச்சு. அதுக்காக என மனமார்ந்த நன்றிகள்” என்றபடி விடை கொடுத்தார்.

அதை ஆமோதித்தன… பாசனக் குழாயின் வழியே தடதடவென கொட்டிய தண்ணீர் துளிகள்.


தொடர்புக்கு, பேராசிரியர். வைரமணி, செல்போன்: 99658-23482.

நன்றி : பசுமை விகடன்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

"களத்துமேட்டிலும் கரன்ட் உற்பத்தி செய்யலாம்" -நடைமுறை உதாரணம்!! Empty Re: "களத்துமேட்டிலும் கரன்ட் உற்பத்தி செய்யலாம்" -நடைமுறை உதாரணம்!!

Post by KAPILS Mon May 13, 2013 10:27 pm

024
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு தமிழ்நாடு அரசால் நடைமுறை படுத்தபட்டுள்ளது ..
» கப்சா கரன்ட்!தமிழகம் முழுதும் திரட்டிய 'ஷாக்’ தகவல்கள்
» நடைமுறை சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணைப் பரபரப்பு
» ஹிப்னாடிசத்துக்கு ஒரே உதாரணம் தமிழக மக்கள் தான்!
» மொபைல் தொல்லைகள்: அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum