TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணவன்- மனைவி நகைச்சுவை

2 posters

Go down

கணவன்- மனைவி நகைச்சுவை Empty கணவன்- மனைவி நகைச்சுவை

Post by logu Tue Apr 30, 2013 8:13 am











  • சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம். இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • ஹோட்டலில் சாப்பிடுவதற்கும், வீட்டில் சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்? ஹோட்டலில் சாப்பிட்ட பின் மாவு ஆட்டுவோம். வீட்டில் மாவு ஆட்டியபின் சாப்பிடுவோம்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • அவசரம்
    அவசரமாக மெடிக்கல் ஸ்டோருக்கு ஓடி வந்த ஒரு பெண் கடைக்காரரை பார்த்து
    ஆத்திரமும் அழுகையுமாக எனக்கு விஷபாட்டில் ஒன்று வேண்டும் சீக்கிரம்
    கொடுங்கள். என்றாள். கடைக்காரர் எதற்கு? என்றார்.
    என் கணவனை
    கொல்வதற்குத் தான் என்றாள். அந்த பெண். உடேன கடைக்காரன் பதறி, ஐயோ டாக்டர்
    சீட்டு இல்லாமல் விஷம் தரமாட்டேன். உடேன அப்பெண் என் கணவன் மோசமானவன், நான்
    நான் இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறான் இந்த
    போட்டோவை பாருங்கள் எனக்காட்டினாள். அதை பார்த்த கடைக்காரன் கடும் கோபமாகி
    இந்த அயோகியனை உடனே கொல்லுங்கள் என விஷபாட்டிலை எடுத்து கொடுத்தான்.
    கடைக்காரன்.
    மனம் மாறியது எப்படி?
    ஏனென்றால் போட்டாவில் அந்த பெண்ணின் கணவனுடன் உல்லாசமாக இருந்தது போட்டோகாரருடைய மனைவி.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • அம்மா தாயீ, உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ என் புருஷன்தாம்பா இருக்கார் பரவாயில்லையா?
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க. மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
    கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • கணவன்
    மனைவி சண்டையில் இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்று போனது. அடுத்த நாள்
    அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய கணவன் மனைவிடம் பேசமுடியாததால், அதிகாலை 5
    மணிக்கு எழுப்பு என்றெழுதிய தாளை கொண்டு போய் மனைவியின் தலையனைக்கு
    அடியில் வைத்து விட்டு தூங்கி விட்டான். மறுநாள் எழுந்தேபாது 7 மணி
    ஆகியிருந்தது. கோபத்துடன் மனைவியை பார்த்தான். மனைவி அவன் தலையனையை சுட்டி
    காட்டினாள். அதன் அடியில் ஒரு தளில் மனைவி எழுதியிருந்தாள். தயவு செய்து எழுந்திருங்கள் மணி 5.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என் மனைவி காபின்னு விஷத்தைக் கொடுத்தாக் கூட நான் குடிச்சிடுவேன். அவ்வளவு நம்பிக்கையா?
    அவளோட குடும்பம் நடத்துறதை விட சாகறதே மேல்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • புதிதாக
    திருமணம் ஆனவர் தன் மனைவிக்கு காது கேட்கிறதா என சோதிப்பதற்காக
    வெளியிலிருந்து மனைவிடம் இன்று என்னை குழம்பு என்று கேட்டார் பதில்
    வரவில்லை. வீட்டிற்குள் வந்து என்ன குழம்பு என்றார் மனைவிடமிருந்து
    பதிலில்லை. சமையலறைக்கு சென்று என்ன குழம்பு என்றார். மூன்றாவது முறையும்
    பதிலில்லை. அருகில் வந்தார் அதற்கு மனைவி நீங்கள் 3 முறை கூப்பிட்டதற்கு
    இன்று இன்று கருவாட்டுக் குழம்பு என்று சொனனானே கேட்க வில்லையா என்றாள்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என் மனைவி எனக்கு கணக்கு மாதிரி. எப்படி?
    அடிக்கடி உதைப்பதால்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • ஒரு மாசத்துக்கு வீட்டு வேலை செய்ய உங்க அம்மாவை வரவைழச்சியா? உன் மனைவி எங்க?
    சேலை எடுக்க ஜவுளி கடைக்கு போயிருக்கா...!
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • தனலட்சுமி விஜயனை மணந்து கொண்டதால அவள் அவனை இலட்ச ரதிபதியா ஆக்கிட்டாள். ஓ அப்படியா? தனலட்சுமி வருவதற்கு முன் விஜயன் எப்படி இருந்தான்.
    கோடீஸ்வரனாக இருந்தான்...!
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • எவ்வளவு வேணாலும் திருடிட்டு போங்க ஆனா போகும் போது இவரை மட்டும் அவுத்து விட்ருங்க. ஏன் வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்கார். இவர் பக்கத்து வீட்டுக்காருங்க.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • உங்க மனைவி போட்டாவை பக்கத்துல வச்சி கிட்டு கதை எழுதுறீங்கேள என்ன கதை? பேய்க் கதைதான்...!
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • நான் வாழ்க்கையில் ரொம்ப அடிப்பட்டவன் சார்? இருக்கும் உங்க மனைவியை பார்த்தா கொஞ்சம் முரட்டுத்தமாத் தான் இருக்காங்க.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா. ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
    உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு எப்படி சொல்ற ராதா
    என் சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • உங்க மனைவியை தேள் கொட்டிச்சாமே என்ன பண்ணீங்க? என்ன பன்றது? சந்தோஷத்தை கொண்டாட முடியாம தவிச்சுப் போயிட்டேன்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • சாப்பிடும்போது கூட உன் கணவருக்கு ஆபிஸ் ஞாபகமா? எப்படிச் சொல்றே? உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • எப்போதும் தமிழில் அச்சனை. எங்கே?
    என் வீட்டில்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா? சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்...
    அப்பப்ப அடிக்கறதோடு சரி
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே? தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா?
    கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என் கணவர் பயங்கர பந்தா பேர்வழி அதுக்காக வியாழன் கிரகத்துல சூப்பரான பிளாட் ஒண்ணு பேசி முடிச்சிட்டேன்னு எல்லோர் கிட்டியும் பீலாவுடறது நல்லா இல்ல.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம். எப்படி?
    துவைக்க ஈஸியா இருக்கிற புடவை தான் வாங்குவா.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • தினமும் என் புருஷன் குடிச்சிட்டு வர்றாரு ஏன் விட்டு வைக்றே. கேட்க வேண்டியதானே?
    சீ... குடிக்கிற பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • உங்க வாழ்க்கையிலேயே உங்களுக்கு ரொம்ப பிடித்தமானவரைப் பற்றி கூறுங்க? அது நிச்சயம் என் மனைவிதான் சார்
    அடப் பயப்படாதீங்க சார் உண்மையைச் சொல்லுங்க.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • உன் சமையல் எப்பவும் டாப்டக்கறா தான் இருக்குது மீனா நீங்க என்னதான் ஐஸ் வச்சாலும் தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • மனைவி - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க? கணவன் - இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம் பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என்னங்க தலையிலே காயம்? விறகு இடிச்சிட்டது
    பார்த்து போககூடாது. ஆமா விறகு எங்க இருந்துச்சி?
    என் பொண்டாட்டி கையில
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • சென்சார் போர்டு அதிகாரியை கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு ஏன்?
    பெட்ரூமை பார்த்தாலே வெறுப்பாயிடுறார்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • ராதா, கட்டின புடவையோட வா, உன்னை காப்பாத்துகிறேன்? அப்ப ஜாக்கெட் போடாம வரச் சொல்றீங்களா
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • அவர் ஏன் அந்த பொண்ணை அப்படி முறைச்சி பார்க்கிறார்? அவர் தான் முறை மாப்பிள்ளையாம்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...! சந்தியமா உண்மைங்க...!
    அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பு வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • கருவை கலைக்கனும்னு சொல்றியே, உன் வீட்டுக்காரர் அனுமதியை கேட்டியா? எப்படி கேட்குறது? அவர் வெளிநாட்டுக்கு போய் இரண்டு வருஷமாச்சே
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என்னங்க மாப்பிள்ளை, உடம்புபூரா ஒரே தழும்பா இருக்கு? நான் அப்பவே சொல்லல.. மாப்பிள்ளை வாழ்க்கையில் ரொம்பவும் அடிபட்டவர்னு.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா? ஏங்க?
    அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என் மனைவிக்கு என் மேல் பிரியம் ஜாஸ்தி எப்படி?
    என்னை அடிக்கும் போது கூட, ரத்தம் வராமத்தான் அடிப்பா.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • உன் புருஷன் எப்போது சாப்பிட்டாலும் சாப்பாட்டை புகழ்ந்து கொண்டே சாப்பிடுகிறாரே ஏன்? அது அவரே சமைத்தது அல்லவா
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • காலையில என் வீட்டு வாசல்ல நான் தண்ணீ தெளிச்சாபோதும், என் வீட்டுக்காரர் எழுந்துக்குவார் எப்படி?
    குடிச்சிட்டு அங்கதானே விழுந்துகிடப்பார்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • ஏன் உங்க பேரை கரப்பான் பூச்சி குமார்னு வச்சிட்டீங்க? என் மனைவி என்னை கண்டு பயப்படனும் தான்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என்னது உங்க வீட்டுக்காரர், வீட்டுக்கு நடுவில் வெடுகுண்டை வெச்சிட்டு என்னமோ எழுதிகிட்டிருக்கார்? கேட்டேன், வெடிகுண்டை மையமா வெச்சி நாவல் எழுதிகிட்டிருக்காராம்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என்னது வீட்டுல செயின் கமிஷன் விசாரணையா? ஆமா என் மனைவிக்கு செயின் வாங்கிக் கொடுத்த விஷயத்தை எங் கம்மா விசாரணை பன்றாங்க.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • ரவி மனைவி சுகுனா பக்கத்து வீட்டுக்காரியுடன் பேசிக் கொண்டி ருந்தாள். சுகுனா, உன்புருஷன் எப்போதும் பார்த்தாலும் இரவு நேரத்தில் நேரம் கழித்து வருகிற பழக்கம் உள்ள வராச்சே. எப்படி அவரை திருத்தினாய்?
    அதற்கு சுகுனா ஒரு நாள் வந்து அவர் கதவை தட்டும் போது யாராது ரமேஷா? நீயாகத்தானிருக்கும். நீ தான் இந்த நேரத்திற்கு வருவோ.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • உன் புருஷன் செத்ததுக்கு நீ அழவே இல்லையே ஏன்? நிறைய டி.வி. சீரியல்ல பார்த்து அழுதட்டதால் கண்ணீர் நின்னு போச்சு.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குறிக்கிறே? யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என்ன நமக்கு பிறந்த ரெட்டை குழந்தைகள்ள ஒன்னு கருப்பாகவும், ஒன்னு சிவப்பாகவும் இருக்கு? அதுவா ஒன்னு ஒரிஜினல், அதை கார்பன் காப்பி எடுக்கும் போது இன்னொன்னு கருப்பாயிடுச்சு.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம். பரவாயில்லை!! என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அரு ள் புரியணம் அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என்னங்க என் பல் ரொம்ப வலிக்குது அப்படி என்ன வலுவா கடிச்ச அமலா?
    உங்க அம்மாவைத்தான்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • திருமணமானவர்களையே ஏன் சேல்ஸ் மேனாக வைத்திருக்கிறீர்க ள்? அவர்கள் தான் மகிழ்ச்சியுடன் வெளியூர் செல்கிறார்கள்!
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என் மனைவி தன் கையாலேயே எனக்கு பரிமாறுவாள்! கொடுத்துவைத்தவன் நீ
    ம்ஹும் சமையல் மட்டும் என்னை செய்ய சொல்கிறாளே!
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • ஓட்டப் பந்தயத்துலு எப்படி சார் முதலில் வந்து தங்க பதக்கம் வாங்கினீங்க? அதன் ரகசியம் சொல்லுங்க, இதற்கு யார் காரணம்? என் மனைவிதான் தினமும் என்னை துரத்தி துரத்தி அடிக்க வருவா ஓடி ஓடி பழக்கப்பட்டு முதல் பரிசு வாங்கிட்டேன்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • என் கணவருக்கு சர்க்கரை வியாதி இருக்குமோன்னு பயமா இருக்கு ஏன்?
    அவரை சுத்தி எப்பவும் எறும்பு மொய்க்குது.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • உன் வீட்டுக்காரர் கோலமெல்லாம் போடுறாராமே? யார் சொன்னா?
    என் வீட்டுக்காரர் காலையில் கோலம் போடும் போது பார்த்தாராம்...!
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • உப்பு, உரப்பு இல்லாத சுரணை இல்லாம இனிமேல் சாப்பிடனும். கல்யாணமானதிலிருந்து அப்படித்தான் சாப்பிடுறேன் டாக்டர்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • எங்க தெருவுல பிச்சைக்காரங்களே இல்லாததுக்கு காரணம் என் மனைவிதான்...! ம்ஹூம் அவ சமைச்ச சாப்பாட்ட போட்டே அனுப்பிச்சிட்டாங்க.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • பொண்டாட்டிக்கு பயப்படுவதில்லைன்னு முடிவுக்கு வந்திட்டேன். சபாஷ் எப்பேலர்ந்து...?
    அவ செத்துப் போனதிலேர்ந்து
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • தெரியாத்தனமா இவரை கல்யாணம் பண்ணிட்டேன். ஏண்டி சலிச்சுக்குறே?
    முதலிரவு ரூமுக்குள்ளே நுழைஞ்சதும்.
    எல்லோரும் இன்னிக்கு உங்களுக்கு முதலிரவுன்னு சொல்லாங்க நீ இதுவரைக்கும் இரவையே பார்த்ததில்லையான்னு கேட்கிறார்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • மாமனாரிடம் டூ வீலர் கேட்டது தப்பா போச்சு? ஏன் என்னாச்சி?
    மாட்டு வண்டி வாங்கிகொடுத்துட்டார்
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1


  • ஏண்டி வீட்டுக்காரர் பயங்கர கஞ்சத்தனம்... எப்படி...?
    தலைக்கு டை அடிச்சா 50 ரூபா செலவு ஆகுதுன்னு ஒரே செலவா கறுப்பு விக் வாக்கி மாட்டிக்கிட்டார்.
    கணவன்- மனைவி நகைச்சுவை Line1
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:14 am

    மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
    அழகான் முகமா!!!
    அன்பான மனமா!!!
    பணிவான குணமா!!
    கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "

    *****************************


    என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர்,
    குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?

    அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.

    *****************************


    கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

    மனைவி: கட்டிக்க போறது நான்தானே

    கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்

    *****************************




    மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"

    கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

    *****************************


    கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

    மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

    *****************************


    "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

    "யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

    "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

    *****************************


    ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..

    கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:15 am

    கணவன்- மனைவி நகைச்சுவை News_7653






    வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.
    மனைவி:
    ஏதாவது சாப்பிடுறீங்களா?
    கணவன்: no darling, the disk is full.






    மனைவி: உங்கள்

    சம்பள உயர்வு கிடைத்ததா?

    கணவன்: Access not allowed.

    மனைவி: வரும்போது

    பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கினீங்களா?

    கணவன்: Bad command or file name

    மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க....

    கணவன்: erroneous syntext

    மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க....நான் வான்கிக்கிறேன்.

    கணவன்: access denied

    மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?

    கணவன்: wrong password

    மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்

    கணவன்: data mismatch

    மனைவி: உன் தொழில்

    புத்தி உன்னை விட்டுப் போகாது

    கணவன்: by default

    மனைவி: மவனே, என்னை யாரென்று

    எண்ணிக் கொண்டாய்

    கணவன்: virus detedted

    மனைவி: நான் சொல்வது ஏதாவது உன்

    மண்டையில் ஏறுகிறதா?

    கணவன்: too many parameters

    மனைவி: உன்னை விட்டுத்

    தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி

    கணவன்: press contl, alt & del

    மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.

    கணவன்: illegal operation, system shuts down

    மனைவி: நான் தொலஞ்சு போறன்.

    கணவன்: reboot
    மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரியும்

    கணவன்: change user
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:16 am

    கணவன்- மனைவி நகைச்சுவை Muthu
    ஒருவர்: அந்த புரோக்கர் தாங்க எங்க அஞ்சி பொன்னுக்கும் கல்யாணம் பண்ணி வச்சாரு?


    மற்றொருவர்: அப்புடியா? அவருக்கு ஏன்னா குடுத்தீங்க?


    ஒருவர் : என் ஆறாவது பொண்ண அவருக்கு தான் குடுத்தேன்..


    மற்றொருவர்: ??????!!!!!!!!
    ---------------------------------------------------------------------------
    ஒருவர் : என்னங்க உங்க பொண்டாட்டி உங்க மேல பாத்துரம் கீத்துரம் எல்லாத்தையும் தூக்கி வீசுறாங்க?


    மற்றொருவர் : ஆமாங்க.. அவளுக்கு "வீசிங்" ட்ரபுள்


    -----------------------------------------------------------------------------------
    Boy: I love you



    Girl : நா அஜித் மாதிரி உள்ள பையன தான் லவ் பண்ணுவேன்
    Boy: நா அஜித் மாதிரி இருந்தா உன்ன ஏண்டி லவ் பண்ண போறேன்?


    Girl: ????!!!!!!!!


    ---------------------------------------------------------------------------------------------


    காதல் கவிதை:


    நான் அலையாக இருந்தேன்
    வந்து வந்து மோதுவாள் என்று...
    பாடலாக இருந்தேன்... என்னை பாடுவாள் என்று
    யாருக்கு தெரியும் இப்படி யாருடனாவது ஓடுவாள் என்று?


    -----------------------------------------------------------------------------------------------
    ஒருவர் : நேத்து எங்க வீட்டுல திருடன் வந்து எல்லாத்தையும் தூக்கிட்டு போயிட்டான்..


    மற்றொருவர் : நீங்க தான் துப்பாக்கி வச்சிருக்கீங்களே...


    ஒருவர் : நல்ல வேளை.. அத டிராவுல வச்சி பூட்டி வச்சிருந்தேன்... இல்லன்ன அதையும் எடுத்துட்டு போயிருப்பான்...


    மற்றொருவர்: ????!!!!!
    -----------------------------------------------------------------------------------


    டாக்டர்: உங்க புருஷனுக்கு தூக்கத்துல நடக்குற வியாதிக்கு treatment பண்ணோமே இப்ப எதாவது improvement இருக்கா?


    "இருக்கு டாக்டர்,... முன்னாடி 5 கிலோ மீட்டர் நடந்துகிட்டு இருந்தாரு... இப்போ பதினஞ்சி கிலோ மீட்டர் நடக்குராறு"


    -------------------------------------------------------------------------------------------------
    டாக்டர் : நர்ஸ்... அந்த மூணாம் நம்பர் பேஷன்ட்டுக்கு BP இருக்க?
    நர்ஸ்: இல்ல டாக்டர்
    டாக்டர் : சுகர் இருக்கா?
    நர்ஸ் : இல்ல டாக்டர்
    டாக்டர்: பலஸ் இருக்கா?
    நர்ஸ் : இல்ல டாக்டர்
    டாக்டர் : என்?
    நர்ஸ் : ஏன்ன அவனுக்கு உயிரே இல்ல டாக்டர்..
    டாக்டர் : ???!!!!
    --------------------------------------------------------------------------------------------




    காதலி: ஏங்க நாம ஓடி போக போற விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சி போச்சிங்க...


    காதலன்: ஐயோ அப்புடியா என்ன சொன்னாரு? காதலி: செலவுக்கு 5000 ரூபா பணம் குடுத்தாரு
    காதலன் : ????!!!
    காதலி: என் தங்கச்சிக்கும் தெரிஞ்சி போச்சுங்க....
    காதலன்: ஐயோ.. அவ என்ன சொன்ன?
    காதலி: அவளும் கூட வரணும்கரா ....
    காதலன்: ??!!!

    -----------------------------------------------------------------------------
    மனைவி: ஏங்க கட்டிக்கிறதுக்கு உருப்படியா ஒரு பொடவை இருக்கா? வீட்டுக்கு வர்ரவங்கல்லாம் என்னை சமயக்காரின்னு நெனைக்கிறாங்க...

    கணவன்: கவலைப்படாத... உன் சமயல சாப்புட்டப்புரம் அப்புடி நெனைக்க மாட்டாங்க...

    மனைவி: ???!!!

    ------------------------------------------------------------------------------------------------

    கணவன்: நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான் கல்யாணம் பண்ணிக்கணும்..

    மனைவி: ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..

    கணவன்: அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு தெரியலம்மா..
    மனைவி : ???!!!!!!
    ------------------------------------------------------------------------------------------------------




    நன்றி: மதுரை முத்து
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:17 am


    கணவன் மனைவி நகைச்சுவைகள்..II







    ராமு ; டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே
    1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!

    சோமு ; ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..? எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ

    என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து
    எழுந்து வருவார்..தெரியுமா..?


    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    தோழி 1 ஏய் கலா.. எம்புருசன் சின்ன வீடு வச்சிருக்காரோன்னு சந்தேகமா இருக்குடி..!

    தோழி 2 நான் இதை நம்ப மாட்டேன்.. நீ என்னை கடுப்பேத்தறதுக்காக சொல்லறே..!



    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    நண்பன் 1; கனவுக்கன்னி, கை நிறைய பணம், பெரிய வீடு, பென்ஸ் காரு எல்லாம்
    நான் நினைச்சது மாதிரியே என் வாழ்க்கையிலும் நடந்துச்சு..அப்புறம் தான் அந்தக்
    கொடுமை நிகழ்ந்தது..

    நண்பன் 2 ; ஐய்யோ.. என்னாச்சு..?

    நண்பன் 1 ; எல்லாம் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சு போச்சு...!!!!



    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    ராஜா ; கண்ணம்மா..இன்னிக்குதாண்டி உப்பு உறைப்போட சரியா ஒரு டிபன்
    பண்ணியிருக்கே.. இதுக்கு பேர் என்ன?

    கண்ணம்மா ; அய்யோ.. அது பால் கோவாங்க..!!


    ராஜா ; ??????



    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    மகன் ; அப்பா.. ஆப்ரிக்காவிலே வரப்போற பொண்டாட்டி எப்படி இருப்பான்னு
    கணவனுக்கு தெரியாதாமே..?

    அப்பா ( சோகமாக) ; அது ஆப்ரிக்காவிலே மட்டுமில்லே..எல்லா நாட்டுலேயும்

    நடக்குற அநியாயம்டா மகனே..!



    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    காதலி எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நின்றாள்..

    65 கி.

    குதி உயர் காலணியை அகற்றினாள்..

    63 கி.

    துப்பட்டாவை காதலனிடம் கொடுத்தாள்....

    62 கி.

    அத்துடன் கையில் இருந்த சில்லறை தீர்ந்தபடியால் அடுத்து என்ன

    செய்வதென்றறியாமல் நின்ற போது.. காதலன் சொன்னான்...

    கவலைப்படாதே.. அன்பே.. என்கிட்ட 25 நாணயங்கள் இருக்கின்றன...!!!



    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    கணவன் கிட்டே மனைவி சொன்னா.." டார்லிங்.. கண்ணாடியை கழட்டிடுங்க..
    அப்பதான் நீங்க அழகா இருக்கீங்க.."

    கணவன் கண்ணாடியை கழற்றியபின் சொன்னான்.. " நீயும்தான்..!"



    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    ராணி;-வீட்ல மிக்ஸி,குக்கர்,வாஷிங் மிஷின்,ப்ரிஜ் ன்னு எது ரிப்பேர் ஆனாலும்
    வேற வேற இடத்துக்கு தூக்கிட்டு போறது ரொம்ப தொல்லையா இருக்கு.
    நீ எப்படி சமாளிக்கிறே..?

    வாணி;-நான் எப்பவும் எங்க குடும்ப டாக்டர்கிட்டே தான் அழைச்சுக்கிட்டு போவேன்.



    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:18 am

    “முன் தினம் பார்த்தேனே, பார்த்ததும் பூத்தேனே” என்று காதலித்து பின்
    மணமுடித்த அல்லது “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று
    அம்மா/அப்பா பார்த்த பெண்ணை மணந்துகொண்ட திருமணமான ஆண்களின், அன்றைய
    (திருமணத்திற்கு முன்) இன்றைய (திருமணத்திற்குப் பின்) சுவாரசியமான
    உரையாடல்களை ரிவைண்ட் செய்யலாமா?
    தி.மு. (தொலைபேசியில்) — இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே.

    தி.பி. — என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு. எனக்கு ஆஃபிஸில் நிறைய வேலை இருக்கு.

    தி.மு. (பீச்சில்) – இந்த அலை எவ்வளவு அழகா இருக்கு. உன் கூட நிறைய நேரம் இப்படியே உட்கார்ந்திருக்கலாம் போல இருக்கு.

    தி.பி. — போலாமா ? ரொம்ப நேரமாச்சு.

    தி.மு. (ஹோட்டலில்) – நீ ஐஸ்கிரீம் சாப்பிடற அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தினமும் இங்கேயே மீட் பண்ணலாமா?

    தி.பி. — ஹோட்டல் எதுக்கு,
    ரொம்ப நேரம் வெய்ட் பண்ணனும். வீட்டிலேயே சிம்பிளா ஏதாவது பண்ணிடேன்.

    தி.மு. (பஸ் ஸ்டாப்பில்)– ரொம்ப நேரமா பஸ்ஸுக்காக வெய்ட் பண்றீங்க போல இருக்கு. நான் வேணா டிராப் பண்ணட்டுமா?

    தி.பி. — நீ பஸ்ல போய்டறியா? எனக்கு ஆஃபிஸுக்கு சீக்கிரம் போகணும்.

    தி.மு. – ஆஃபிஸில இன்னிக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சு. அதான் பர்மிஷன் போட்டு உன்னைப் பார்க்க வந்தேன்.

    தி.பி. – ஆஃபிஸில இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. ஈவ்னிங் வர லேட்டாகும்.

    தி.மு. – நீ பேசறத கேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கு.

    தி.பி. – ஏன் தொணதொணன்னு பேசிண்டே இருக்கே?

    தி.மு. – இந்த லெமன் எல்லோ கலர் டிரஸ்ஸில தேவதை மாதிரி இருக்கீங்க.

    தி.பி. – ஏதாவது ஒரு டிரஸ் போட்டுண்டு சீக்கிரம் கிளம்பேன், எவ்ளோ நேரம்.

    தி.மு. – உன் கையால பண்ணா சாதாரண சாப்பாடு கூட விருந்து மாதிரி இருக்கு.

    தி.பி. – சே, மனுஷன் சாப்பிடுவானா இந்த சாப்பாட்டை.

    தி.மு. – இன்னிக்கு ஹாலிடே தான, எங்கயாவது வெளில போலாமா?

    தி.பி. – நாளைக்கு கண்டிப்பா இந்த வேலையை முடிச்சு கொடுத்தாணும். அதனால வீட்டில பண்ணலாமேன்னு இருக்கேன்.

    தி.மு. – ஒண்ணே ஒண்ணு தரட்டுமா ?

    தி.பி. – ஒண்ணு குடுத்தேன்னா கன்னம் வீங்கிடும், ஜாக்கிரதை.

    ‘எப்படி இருந்த நீங்க இப்படி மாறிட்டீங்க’ ஏன் சார்?

    பி.கு. :-

    என் இனிய கணவருக்கு, இந்த லிஸ்ட்ல நீங்க இல்லவே இல்லை (என் தலை மட்டும்
    மேலும் கீழுமாக ஆமாமென்றதை நல்லவேளை அவர் கிரிக்கெட் மேட்ச் ரொம்ப
    சுவாரசியமாக பார்த்துக் கொண்டிரு்ந்ததால் கவனிக்கவில்லை)

    ********
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:18 am

    கணவன்- மனைவி நகைச்சுவை Hsbnd+n+wyf+death
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:19 am

    கணவன் & மனைவி ஜோக்ஸ்


    கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே..

    மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே

    கணவன்:- துவைக்கிறவனுக் குதானே கஷ்டம் தெரியும்...!!


    கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

    மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே..!


    மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

    கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..



    மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?

    கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!


    மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு
    தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம்
    பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா
    தண்ணியடிக்கிறாராம்...

    கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:20 am


    நகைச்சுவை கதைகள்..கணவன் மனைவி








    ஒரு திறமையான மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் ஒரு மாசமா ஏரொப்ளேன்லயே
    தொழில் சம்பந்தமா சுத்திட்டு வீடு திரும்பினான்.ரொம்ப நாள்
    பிரிஞ்சிருந்ததால ரெண்டு பேரும் சேர்ந்து படத்துக்கு போனாங்க.தியேட்டர்ல
    படம் போட்டதும் லைட் ஆப் பண்ணிட்டாங்க.உடனே அவன் இடுப்பை கைல சுத்தினாப்ல
    ஏதோ தேட,அவன் வைஃப் கேட்டா,“என்னங்க தேட்றீங்க?”அவன் சொன்னான்
    ”அதான்...சீட் பெல்ட்”


    ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கணவன்
    மனைவியிடம் சொன்னான், "நான் எப்போதாவது சீரியஸ்ஸாக ஏதாவது ஒரு மிஷினை
    நம்பிக்கொண்டு பெட்டில் படுத்துக்கொண்டிருக்கும் நிலை வந்தால்..."

    மனைவி,"கவலைப் படாதீர்கள் அப்படி எதுவும் இல்லை"

    "இல்லை அதே போல் கண்ட கண்ட திரவங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை வந்தாலும்...
    அதற்கு பதில் என்னை கொன்றுவிடு"

    "நிச்சயமாக இனி அப்படி ஒரு நிலை வராது" என்றபடி உள்ளே சென்ற மனைவி டிவி,பீர் கேஸ் எல்லாவற்றையும் தூக்கி வெளியே எறிந்தாள்.

    திடீரென ஆபிஸில் இருந்து போன்


    “டார்லிங்... இந்த வாரம் எங்க ஆபிஸில் ஃபிஷிங் டூர் போறோம். அதனால ஒரு
    வாரத்துக்கு தேவையான துணியெல்லாம் எடுத்து வெச்சிடு. அப்டியே மீன்
    பிடிக்கிற தூண்டில், முள், அதெல்லாம் வைக்கிற பிஷ்ஷிங் டூல் பாக்ஸ்
    எல்லாத்தயும் எடுத்து வெச்சிடு. ஆபிஸ்ல இருந்து அப்டியே கிளம்பறேன் ஸோ
    இதெல்லாம் போற வழில அப்டியே எடுத்துட்டு போயிட்றேன். எங்க பாஸ்ஸ இம்ப்ரெஸ்
    பண்ண சரியான நேரம் இது தான். அப்டியே மறக்காம என்னோட ப்ளூ சில்க் பைஜாமாவ
    எடுத்து வெச்சிடு”

    டொக்

    அவளும் பெரிதாக எதிர் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள், அவன் வந்து லக்கேஜ் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

    ஒரு வாரம் கழித்து மிகுந்த சோர்வோடு வந்தான்.

    “அப்புறம்... பிஷ்ஷிங் எப்படி போனது?”

    “அருமை... வாளை மீன், வஞ்ஜிர மீன் எல்லாமே என்னோட தூண்டில்ல தான்
    கிடைச்சது... ஆமா நான் ப்ளூ சில்க் பைஜாமா எடுத்து வைக்க சொன்னேனே... ஏன்
    எடுத்து வைக்கல?”

    “எடுத்து வெச்சேன் ஹனி... உங்களோட ஃபிஷ்ஷிங் பாக்ஸ்ல...”
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:21 am

    ஒரு ஜோடி ஹோட்டலில் ரூமெடுக்க போயிருந்தார்கள்.ரூமெடுத்து விட்டு மனைவி
    சோர்வாக இருக்க தூங்க சொல்லி விட்டு கணவன் கீழே இருந்த பாருக்கு போய்
    விட்டான்.

    அவள் படுத்து தூங்க சரியாக ஒரு நிமிடத்தில் அறைக்கு சற்று வெளியே ஒரு ரயில் மிக வேகமாக போனது.

    சரி வெளியூரில் சகஜம் என்று திரும்ப தூங்க அதே போல ஒரு ரயில் போனது.உடனே
    மேனேஜரை பார்த்து இப்படி ரயில் போகிற சப்தத்தால் தூங்க முடியவில்லை என்று
    சொல்ல அவனும் அறைக்கு வந்து பார்த்தான்.

    "இதோ இந்த பெட்டில் படுத்து பாருங்கள் தெரியும்" என்று சொல்ல அவனும் ரயிலுக்காக படுத்து காத்திருந்தான்.

    அப்போது பார்த்து அவள் கணவன் வந்தான்,"இங்கென்ன செய்கிறாய்?"

    "அது...நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?"
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:22 am

    ஒரு கணவன் போன வேலை பாதியிலேயே கேன்சல் ஆயிட்டதால திரும்பி வீட்டுக்கு
    வந்தான், மனைவிக்கு தகவல் சொல்லாமலே.கதவ ரொம்ப நேரமா தட்டி அப்புறந்தான்
    திறந்தா மனைவி.

    இவ்வளவு நேரம் என்ன பண்ணின?
    அது குளிச்சிட்டு இருந்தேன்
    வரவர நீ சரியில்ல ஹே இதென்ன களிமண் சிலை...
    அது... நேத்து ஸ்மித் வீட்டுல இதே மாதிரி சிலை பாத்தேன் அதான் ஒண்ணு ஆர்டர் பண்ணிட்டேன்
    ஹ்ம்ம் வெட்டி செலவு

    அதுக்கப்புறம் அவன் கண்டுக்கல, நைட் ரெண்டு மணி மனைவி தூங்கிட்டாளான்னு
    பாத்துட்டு ப்ரெட், தண்ணி கொண்டு போயி சிலை கிட்ட சாப்பிடுன்னான்.சிலையா
    நடிச்சவனுக்கு ரொம்ப ஆச்சர்யம்,

    ரொம்ப நன்றி சார் எப்படி கண்டு பிடிச்சீங்க?
    ஹ்ம்ம் ஸ்மித் வீட்ல சிலையா நின்னது நாந்தான், மூணு நாள் பச்சத்தண்ணி கூட எவனும் தரலை
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:22 am

    அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
    2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
    கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்
    நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
    சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.
    அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
    நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'
    'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'
    என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
    என் நாய் கடித்து விட்டது.
    உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.
    வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
    அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார்.
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:23 am

    நல்லா மூச்சு முட்ட குடிச்சதால ஹேங் அவுட் ஆன புருஷன் லேட்டா எழுந்து ரூம
    விட்டு வெளிய வந்து பாத்தான்.டைனிங் டேபிள்ல லெட்டர்,”அன்பே ஹாட் பேக்கில்
    சப்பாத்தி இருக்கிறது நீங்கள் களைப்பாக இருப்பீர்கள் என்று உங்கள்
    பாஸ்க்கு போன் பண்ணி லீவ் சொல்லிவிட்டேன் மாலை சந்திப்போம்”.அவனுக்கு
    ஒண்ணும் புரியல , குழந்தைங்க கிட்ட,”என்னடா நடந்தது நைட்”னான்.
    அது,” நீங்க ரொம்ப குடிச்சிட்டு க்லாஸ் எல்லாம் உடைச்சிட்டு வாந்தி எடுத்தீங்க”
    “ஆனா எல்லாம் நீட்டா இருக்கு சரி மேல சொல்லு”
    “அப்புறம் அம்மா உங்கள படுக்க வைக்க ஷர்ட்,பேன்ட்லாம் கழட்டுனாங்க, நீங்க
    ‘கையை எடு கேடு கெட்டவளே எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி’ன்னீங்க”
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:23 am

    ஒரு வெள்ளிக்கிழமை, இளைஞன் நகைக்கடைக்குள்ள ஒரு பொண்ணை கூட்டிட்டு
    வந்தான்.அங்கிருந்த ஆளை கூப்பிட்டு "என் காதலிக்கு ஒரு வைர நகை
    எடுக்கணும்" அப்டின்னான், அந்தப் பொண்ணை பார்த்துக்கிட்டே.

    கடைக்காரரும் ஒரு நகையை காட்டி 50000 ரூபா ஆகும்னாரு.அவன்
    சலிச்சுக்கிட்டே,"இல்ல பாஸ் என் காதலிக்கு தர்ற நகை...யுனிக்...அப்டியே
    அவ்ளோ அழகா இருக்கணும்"

    கடைக்காரர் ரொம்ப இம்ப்ரஸ் ஆகி ஒரு லட்ச ரூபா நகை ஒண்ணு காமிச்சார்,
    அந்தப்பொண்ணுக்கு கண் கொள்ளல, அவன் "ஓகே ஓகே இதை பேக் பண்ணுங்க நான் செக்
    தர்றேன்" அப்டின்னான்.

    "ஸாரி சார் செக் ஏத்துக்கறதில்ல"

    "ஓகே இப்ப செக் வாங்கிக்கங்க திங்கக்கிழம பேங்க்ல பணம் இருக்கான்னு
    கேட்டுட்டு சொல்லுங்க அப்புறம் வாங்கிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பி
    விட்டார்கள்.

    திங்கட்கிழமை கடைக்காரர் கோபமாக போனில் பேசினார்,"யேய் பேங்க்ல உன் அக்கவுண்ட்ல ஒரு பைசா இல்ல எதுக்குடா வந்து ஆர்டர் பண்ணின?"

    "மன்னிச்சுக்கங்க சார் ஆனா இந்த வீக் எண்ட் எப்டி போச்சு தெரியுமா?"
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:24 am

    புதிதாக திருமணம் ஆனவர் தன் மனைவிக்கு காது கேட்கிறதா என சோதிப்பதற்காக
    வெளியிலிருந்து மனைவிடம் இன்று என்னை குழம்பு என்று கேட்டார் பதில்
    வரவில்லை.
    வீட்டிற்குள் வந்து என்ன குழம்பு என்றார் மனைவிடமிருந்து பதிலில்லை.
    சமையலறைக்கு சென்று என்ன குழம்பு என்றார். மூன்றாவது முறையும் பதிலில்லை.
    அருகில் வந்தார் அதற்கு மனைவி நீங்கள் 3 முறை கூப்பிட்டதற்கு இன்று
    கருவாட்டுக் குழம்பு என்று சொனனானே கேட்க வில்லையா என்றாள்.
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:25 am

    ரெண்டு நண்பர்கள் பேசிக்கிட்டாங்களாம்
    நேத்து எனக்கும் என் வைஃப் புக்கும் பயங்கர சண்டை நான் பீச் போலாம்கறேன்
    அவ சினிமா போலாம்னா
    சரி கடைசில என்ன படத்துக்கு போனீங்க?
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:25 am

    ஒரு நாள் பேரழிவுல உலகம் அழிஞ்சிடிச்சி கடவுள் வந்து மனைவிகளை
    சொர்க்கத்துக்கு அனுப்பிட்டாரு.வீட்ல மனைவி சொல் கேக்குற ஆம்பளங்கள ஒரு
    பக்கமும், தான் அதிகாரம் பண்றவங்களை ஒரு வரிசைலயும் நிக்க சொன்னார்.பாத்தா
    ஒரே ஒருத்தன் தான் நிக்கறான்.அவருக்கு கடுப்பாய்டிச்சி, “என்னப்பா இது
    என்னோட சாயல்ல உருவாக்கினா இப்படி எல்லோரும் இருக்கீங்களே, ஒரே ஒருத்தன்
    தான் சிங்கக்குட்டி மனைவியை அதிகாரம் பண்றான், உன்ன நினைச்சா பெருமையா
    இருக்கு மகனே”ன்னாரு.அவன் உடனே சொன்னானாம்,”அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க,
    ஏதோ என் பொண்டாட்டி தான் இங்க நிக்க சொன்னா”.
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:26 am

    ஒரு பெண் இறந்து சொர்க்கம் போனாள்,வாசலில் நின்றிருந்த போது அங்கே கடவுள் வந்தார், அவள் அவசரமாக "எப்படி உள்ளே வருவது?" என்றாள்.
    "நீ ஒரு வார்த்தையை spell பண்ண வேண்டும்" என்று போர்டு காட்டினாளர் அங்கே எழுதியிருந்தது
    "love"
    அவள் சொன்னதும் வழி விடப்பட்டது.சொர்க்கத்தில் ஒரு வருடம் கழிந்தது.ஒரு
    நாள் கடவுள் அவளிடம் வந்து இன்றொரு நாள் வருபவர்களை கவனித்துக் கொள் எனக்கு
    வேலை இருக்கிறது" என்றார்.

    அவள் கேட்டில் நின்ற போது அவள் கணவன் வந்தான்,"ஹேய் உன்னை இங்கே எதிர்பார்க்கவே இல்லை"
    "சரி பூமியில் எப்படி வாழ்ந்தாய்?"
    "நீ காய்ச்சலாக கிடந்த போது பார்த்துக்கொண்டாளே ஒரு அழகான நர்ஸ் அவளை
    கல்யாணம் செய்து கொண்டேன் லாட்டரியில் பரிசு கிடைத்தது நாம் இருந்த சின்ன
    வீட்டை விற்று பெரிய அப்பார்ட்மெண்ட் போனோம் அப்புறம் டூர் போனபோது
    ஆக்சிடெண்ட் ஆகி இறந்து இங்கே வந்தேன் சரி எப்படி உள்ளே வருவது?"
    "நீ ஒரு வார்த்தையை spell பண்ண வேண்டும்" என்று போர்டு காட்டினாள் அங்கே எழுதியிருந்தது,

    "Czechoslovakia."
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:27 am

    கணவன் மனைவி சண்டையில் இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்று போனது. அடுத்த
    நாள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய கணவன் மனைவிடம் பேசமுடியாததால்,
    அதிகாலை 5 மணிக்கு எழுப்பு என்றெழுதிய தாளை கொண்டு போய் மனைவியின்
    தலையனைக்கு அடியில் வைத்து விட்டு தூங்கி விட்டான். மறுநாள் எழுந்தேபாது 7
    மணி ஆகியிருந்தது. கோபத்துடன் மனைவியை பார்த்தான். மனைவி அவன் தலையனையை
    சுட்டி காட்டினாள். அதன் அடியில் ஒரு தளில் மனைவி எழுதியிருந்தாள்.
    தயவு செய்து எழுந்திருங்கள் மணி 5.
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:27 am

    புருஷனுக்கு நெஞ்சு வலின்னு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனாங்க ஒரு
    அம்மா.டாக்டர் எல்லா டெஸ்ட்டும் பண்ணிட்டு அந்தம்மாவ மட்டும் தனியா
    கூப்ட்டு, “இதோ பாரம்மா, உன் புருஷன் ரொம்ப ஸ்ட்ரெஸ்னால அவதிப்படுறாரு,
    நீங்க பாத்து நடந்துக்கலன்னா அவரு சீக்கிரமா இறக்க வாய்ப்பிருக்கு”

    “அய்யய்யோ டாக்டர்...சொல்லுங்க நான் என்ன பண்ணனும்?”

    “இனிமே தினம் அவர் விரும்பறத சமைச்சு போடணும், அவர் ஆசப்பட்ட மாதிரி
    நடக்கணும், அவர் வேல பாக்காம பாத்துக்கிட்டா நல்லது, அவருக்கு எந்த
    வகையிலயும் உங்களால ஸ்ட்ரெஸ் வரக்கூடாது”

    அதுக்கப்புறம் போகும்போது கணவன், “டாக்டர் உன்ட்ட தனியா ஏதோ சொன்னாரே என்னது? கண்டிப்பா ஏதோ சீரியஸ் என்ட்ட மறைக்காத”

    “அது... நீங்க சாகப்போறீங்களாம்”
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:28 am

    ஒரு சந்தோஷமான தம்பதியோட அறுபதாவது வருட வெட்டிங் டே அன்னைக்கு “எப்டி
    இவளோ ஒற்றுமையா உங்களால குடும்பம் நடத்த முடிஞ்சது?”ன்னு புருஷன் கிட்ட
    கேட்டாங்க.அவரு தன்னோட நினைவுகள்ல மூழ்க ஆரம்பிச்சார் “அப்ப எங்களுக்கு
    ஹனி மூன் நாங்க ஊட்டில குதிர சவாரி பண்ணிட்டிருந்தோம், அது அவளோட
    குதிரை.ரெண்டு பேரும் குதிரையை கூட்டிட்டு நடந்து போய்ட்டிருந்தோம்,
    குதிரை திடீர்னு முரண்டு பிடிச்சது அவ ஒழுங்கா வான்னு அதட்டுனா, நான் 'ஏன்
    கோபப்படுற'ன்னு கேட்டேன் அவ எதும் பேசல. திரும்ப முரண்டு
    பிடிச்சது,திரும்ப ஒழுங்கா வான்னா ‘ரெண்டு தடவ தான் சொல்லணும் மூணாவது தடவ
    எதுத்தா சுட்டுடணும்’னு தனக்கு தானே சொல்லிட்டு துப்பாக்கிய துடைச்சா
    நான் வெளையாட்டுக்கு சொல்றாள்னு விட்டுட்டேன்.திரும்ப குதிரை முரண்டு
    பிடிச்சது, பொசுக்குன்னு சுட்டுட்டா. நான் கோபமா ஏன் சுட்டேன்னு
    கேட்டேன்,என்ன ஒரு மாதிரி கோபமா பாத்துட்டே துப்பாக்கிய
    துடைச்சா...ஹ்ம்ம்ம்...அப்புறம் ஆயிடிச்சு அறுபது வருஷம்”
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:32 am

    டியர் ஹஸ்பெண்ட்,
    உங்களை விட்டு பிரிகிறேன் என்ற நற்செய்தியை சொல்லவே இக்கடிதம்.
    ஒரு நல்ல மனைவியாக உங்களோடு 7 வருடங்கள் குடும்பம் நடத்தியதற்கு எனக்கென்று இப்போது எதுவும் இல்லை
    அதிலும் கடைசி இரு வாரங்கள் நரகமாக இருந்தன.உங்கள் பாஸ் எனக்கு போன் பண்ணி நீங்கள் வேலையை விட்டு விட்டதாக சொன்னார்.
    நீங்கள் வீட்டுக்கு வந்த போது நான் அழகாக ஹேர் கட் செய்திருந்தேன்,
    உங்களுக்கு பிடித்த உணவு செய்திருந்தேன் மற்றும் புது இரவு உடை
    அணிந்திருந்தேன்
    அன்று இரவு நீங்கள் வந்து சில நொடிகளில் சாப்பிட்டு விட்டு ஸ்போர்ட்ஸ் பாத்துட்டு தூங்கப்போய்ட்டீங்க
    என்னைக் காதலிக்கிறேன் என்று கூட சொல்லவில்லை என் பக்கம் திரும்பக் கூட இல்லை

    நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்களோ அல்லது காதலிக்கவில்லையோ நான் உங்களைப் பிரிய முடிவெடுத்து விட்டேன்

    பின் குறிப்பு: என்னைத் தேட வேண்டாம், நானும் உங்கள் நண்பர் ஜானும் அவர் சொந்த ஊருக்கு செல்கிறோம்
    முன்னாள் மனைவி

    ------------------

    அன்புள்ள முன்னாள் மனைவிக்கு,
    உன் கடிதத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஏதும் இல்லை
    நாம் ஏழு வருடங்கள் ஒன்றாக இருந்ததையே பெரிய சாதனையாகக் கருதுகிறேன்
    நான் ஸ்போர்ட்ஸ் அதிகமாக பார்க்க காரணமே உன் தொணதொணப்பு தாங்காமல் தான் ஆனால் அது ஒரு போதும் பலனளித்ததில்லை

    உன் ஹேர்கட்டை நான் கவனித்தேன் "ஆண் போல இருக்கிறாய்" என சொல்ல நினைத்தேன்
    ஆனால் நல்லதாக ஏதும் பேச முடியாவிட்டால் ஏதும் பேசாதே என்று என் அம்மா
    சொல்லியிருக்கிறார்கள் அதனால் அமைதியாகி விட்டேன்

    நீ எனக்கு பிடித்தமான உணவு செய்ததாகக் கூறினாய் அனேகமாக நீ ஜானையும்
    என்னையும் குழப்பிக்கொண்டாய் என நினைக்கிறேன் நான் 5 வருடங்களுக்கு முன்பே
    பன்றிக்கறி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்

    உன் இரவு உடையையும் பார்த்தேன் அதில் விலை tag கூட இருந்தது அன்று தான்
    என்னிடம் ஜான் 50 $ வாங்கியிருந்தான் அந்த உடை விலை 49.99$ இது தற்செயலானது
    என நம்புகிறேன்

    இவை எல்லாவற்றுக்கும் அப்புறமும் நாம் பேசி சரி செய்ய முடியுமென நம்பினேன்

    அதனால் தான் எனக்கு லாட்டரியில் 10 மில்லியன் டாலர் விழுந்த போது வேலையை
    ரிசைன் செய்து விட்டு நம் இருவருக்கும் ஜமைக்காவுக்கு டிக்கட் வாங்கினேன்

    வீட்டுக்கு வந்து பார்த்தால் உன் கடிதம் தான் இருந்தது

    எல்லாவற்றுக்குமே ஒரு காரணம் இருக்குமென நம்புகிறேன், முழு திருப்தி தரும் வாழ்க்கை உனக்கு கிடைக்குமென நம்புகிறேன்

    உன் கடிதம் கிடைத்ததால் ஜீவனாம்சமாக சல்லிக்காசு கூட தரத் தேவையில்லை என வக்கீல் சொன்னார்
    டேக் கேர்

    பின் குறிப்பு: இதற்கு முன் சொன்னதாக நினைவில்லை ஜான் ஒரு ஆப்பரேஷனுக்கு
    முன்பு மேரியாக இருந்தவன் அது உங்கள் வாழ்க்கைக்கு பெரும் பிரச்னையாக
    இருக்காது என நம்புகிறேன்

    விடுதலை மகிழ்ச்சியோடு முன்னாள் கணவன்
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by logu Tue Apr 30, 2013 8:34 am

    திருமணமான ஒரு பெண்ணின் இறுதிச்சடங்கில் பல பேர் அழுது கொண்டு நின்றனர்.
    கணவனுக்கு அருகில் நின்று இன்னொரு ஆணும் அழுது கொண்டு நின்றார். அக்கம்
    பக்கம் நின்றவர்கள் ஏன் நீ அழுகிறாய்?... என்று வினாவினார்கள். அதற்கு
    அவன் சொன்னான் இது என் கள்ளக்காதலி என்று. அப்போ அருகில் நின்ற கணவன்
    சொன்னார்!... ஏன் கவலப்பட்டு அழுகிறாய்?... வெகு விரைவில் நான் இன்னொரு
    கல்யாணம் பண்ணிடுவன்!.....
    logu
    logu
    பண்பாளர்
    பண்பாளர்

    Posts : 6689
    Join date : 12/02/2010

    http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by ஜனனி Tue Apr 30, 2013 12:27 pm

    கணவன்- மனைவி நகைச்சுவை 254248 கணவன்- மனைவி நகைச்சுவை 254248 கணவன்- மனைவி நகைச்சுவை 254248 கணவன்- மனைவி நகைச்சுவை 523182
    ஜனனி
    ஜனனி
    வலை நடத்துனர்
    வலை நடத்துனர்

    Posts : 16302
    Join date : 11/02/2010

    Back to top Go down

    கணவன்- மனைவி நகைச்சுவை Empty Re: கணவன்- மனைவி நகைச்சுவை

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum