TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள்

3 posters

Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள்

Post by mmani Sat Apr 27, 2013 2:49 pm


 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Mother_with_child_bw







DOWNLOAD



ஆயிரந்தான் கவிசொன்னேன்

அழகழகாப் பொய் சொன்னேன்

பெத்தவளே ஒம்பெரு(மை)ம

ஒத்தவரி சொல்லலையே!


காத்தெல்லாம் மகன்பாட்டு

காயிதத்தில் அவன் எழுத்து

ஊரெல்லாம் மகன் பேச்சு

ஒங்கீர்த்தி எழுதலையே!


எழுதவோ படிக்கவோ

ஏலாத தாய்பத்தி

எழுதிஎன்ன லாபமின்னு

எழுதாமாப் போனேனோ?


பொன்னையாத் தேவன் பெத்த

பொன்னே! குலமகளே!

என்னைப் புறந்தள்ள

இடுப்புல்வலி பொறுத்தவளே!


வைரமுத்து பிறப்பான்னு

வயித்தில்நீ சுமந்ததில்ல

வயித்தில்நீ சுமந்த ஒண்ணு

வைரமுத்து ஆயிருச்சு


கண்ணுகாது மூக்கோட

கறுப்பா ஒருபிண்டம்

இடப்பக்கம் கெடக்கையில

என்னென்ன நெனச்சிருப்ப?


கத்தி எடுப்பவனோ?

களவாணப் பிறந்தவனோ?

தரணிஆள வந்திருக்கும்

தாசில்தார் இவந்தானோ?


இந்த வெவரங்க

ஏதொண்ணும் அறியாம

நெஞ்சூட்டி வளத்தஒன்ன

நெனச்சா அழுகவரும்


கதகதன்னு களி(க்) கிண்டி

களிக்குள்ள குழிவெட்டி

கருப்பட்டி நல்லெண்ண

கலந்து தருவாயே


தொண்டையில் அதுஎறங்கும்

சொகமான எளஞ்சூடு

மண்டையில இன்னும்

மசமன்னு நிக்கிதம்மா


கொத்தமல்லி வறுத்துவச்சுக்

குறுமொளகா ரெண்டுவச்சு

சீரகமும் சிறுமொளகும்

சேத்துவச்சு நீர்தெளிச்சு


கும்மி அரச்சு நீ

கொழகொழன்னு வழிக்கையிலே

அம்மி மணக்கும்

அடுத்ததெரு மணமணக்கும்


திக்திக்கச் சமச்சாலும்

திட்டிக்கிட்டே சமச்சாலும்

கத்திரிக்கா நெய்வடியும்

கருவாடு தேனொழுகும்


கோழிக் கொழம்புமேல

குட்டிக்குட்டியா மெதக்கும்

தேங்காச் சில்லுக்கு

தேகமெல்லாம் எச்சிஊறும்


வறுமையில நாமபட்ட

வலிதாங்க மாட்டாம(ப்)

பேனா எடுத்தேன்

பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!


பாசமுள்ள வேளையில

காசுபணம் கூடலையே!

காசுவந்த வேலையிலே

பாசம்வந்து சேரலையே!


கல்யாணம் நான் செஞ்சு

கதியத்து நிக்கையிலே

பெத்தஅப்பன் சென்னைவந்து

சொத்தெழுதிப் போபபின்னே


அஞ்சாறு வருசம்உன்

ஆசமொகம் பாக்காமப்

பிள்ளைமனம் பித்தாச்சே

பெத்தமனம் கல்லாச்சே


படிப்புப் படிச்சுக்கிட்டே

பணம் அனுப்பி வச்சமகன்

கைவிட மாட்டான்னு

கடைசியில நம்பலையே!


பாசம் கண்ணீரு

பழையகதை எல்லாமே

வெறிச்சோடி போன

வேதாந்த மாயிருச்சே!


வைகையில ஊர்முழுக

வல்லூறும் சேர்ந்தழுக

கைப்பிடியாக் கூட்டிவந்து

கரைசேத்து விட்டவளே!


எனக்கொண்ணு ஆனதுன்னா

ஒனக்குவேற பிள்ளையுண்டு

ஒனக்கேதும் ஆனதுன்னா

எனக்குவேற தாயிருக்கா?
-vairamuththump3.blogspot-
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள்

Post by mmani Sat Apr 27, 2013 2:52 pm

காதலித்து பார்
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்

தலையனையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது
ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருள காண்பாய்
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்

இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்
நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாண் ஏற்றி, உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்
ஆர்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்
தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
காதலித்து பார்

பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னாள் உன்னுமா?

அத்வைத்தம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே அதற்க்காகவேணும்
புலங்களை வருத்தி புதிர்ப்பிக்க முடியுமே அதற்க்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கும், பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விலங்குமே அதற்க்காகவேணும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே , அதற்க்காகவேணும்
காதலித்து பார்

சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் களவு போய் இருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சக்கனை சிலுவையில் அறையபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்து பார்

சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty கவிப்பேரரசு வைரமுத்து ரசித்த கவிதை வரிகள்

Post by mmani Sat Apr 27, 2013 2:53 pm

‘‘நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது’’
- அப்துல் ரகுமான் (பால்வீதி)
‘‘பூங்கொடியே உனக்குப்
பூ வாங்கி வருகிறேன்
முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக் கதவைத்
தட்டியது மாதிரி’’
- மீரா (‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ தொகுப்பில் விடுபட்ட கவிதை ஒன்று)
வானவில்
‘‘இந்தப் பொல்லாத வானம்
மழையையும் தூறிக் கொண்டு
துணியையும் உலர்த்துகிறது’’
- நா.காமராசன் (கறுப்பு மலர்கள்)
‘‘ஐந்து புலன்களும்
கால் பந்து விளையாடும்
மைதானம் உடல்
விதிகள் தெரிந்தால்
விளையாட்டு
ஆழம் தெரியாமல் ஆடினால்
பேய் மணல்’’
- சிற்பி (இறகு)
‘‘அம்பு கூர்மையாய்
இருந்தென்ன
பார்வை?’’
- ஈரோடு தமிழன்பன் (ஒரு வண்டி சென்ரியு)
காதல்
‘‘இரண்டு கண்களும்
இரண்டு கண்களும்
எதிர்ப்பட்டுக்கொள்ள
நான்கும் குருடானபின்
நடக்கும் நாடகம்’’
- மு.மேத்தா (அவர்கள் வருகிறார்கள்)
______________________________________
நன்றி
கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள்-குமுதம் 12-12-07
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty வீடீயோ கவிதைகள்-2: "கவிப்பேரரசு வைரமுத்துவின் "தோழிமார் கதை"

Post by mmani Sat Apr 27, 2013 2:55 pm

mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty படித்ததில் பிடித்தது - கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்

Post by mmani Sat Apr 27, 2013 2:56 pm


படித்ததில் பிடித்தது - கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்







ஆகஸ்ட் 15
அவன் ஒரு பட்டுவேட்டியை
பற்றிய கனாவிலிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது !

சுதந்திரம்

மகாத்மா
நீ உன்னையே உருக்கி
இவர்களுக்கு
சுதந்திர மோதிரம்
செய்து கொடுத்தாய்
அணியும் போதுதான்
தெரிந்து கொண்டார்கள்
இவர்கள் விரல்களே இல்லாத
தொழுநோயாளிகள் என்று !
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்

Post by mmani Sat Apr 27, 2013 2:59 pm

அந்தந்த வயதில்...

இருபதுகளில்...

எழு!

உன் கால்களுக்கு

சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

ஜன்னல்களைத் திறந்து வை!

படி! எதையும் படி!

வாத்சாயனம் கூடக்

காமமல்ல, கல்விதான்..

படி!

பிறகு

புத்தகங்களை எல்லாம்

உன்

பிருஷ்டங்களுக்குப்

பின்னால் எறிந்துவிட்டு

வாழ்க்கைக்கு வா..

உன் சட்டைப் பொத்தான்,

கடிகாரம்,

காதல்,

சிற்றுண்டி,

சிற்றின்பம்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள்

Post by mmani Sat Apr 27, 2013 3:00 pm

எல்லாம்

விஞ்ஞானத்தின் மடியில்

விழுந்து விட்டால்,

எந்திர அறிவு கொள்!

ஏவாத ஏவுகணையினும்

அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

மனித முகங்களை

மனசுக்குள் பதிவு செய்!

சப்தங்கள் படி!

சூழ்ச்சிகள் அறி!

பூமியில் நின்று

வானத்தைப் பார்!

வானத்தில் நின்று

பூமியைப் பார்!

உன் திசையைத் தெரிவு செய்!

நுரைக்க நுரைக்க காதலி!

காதலைச் சுகி!

காதலில் அழு!

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

மணம் புரி!

பூமியில் மனிதன்

இதுவரை துய்த்த இன்பம்

கையளவுதான்..

மிச்சமெல்லாம் உனக்கு!

வாழ்க்கையென்பது

உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

இன்னும்... இன்னும்...

சூரியக் கதிர்கள்

விழமுடியாத ஆழத்தில்...

**

முப்பதுகளில்...

சுறுசுறுப்பில்

தேனீயாயிரு!

நிதானத்தில்

ஞானியாயிரு!

உறங்குதல் சுருக்கு!

உழை!

நித்தம் கலவி கொள்!

உட்கார முடியாத ஒருவன்

உன் நாற்காலியை

ஒளித்து வைத்திருப்பான்..

கைப்பற்று!

ஆயுதம் தயாரி..

பயன்படுத்தாதே.

எதிரிகளைப் பேசவிடு!

சிறுநீர் கழிக்கையில் சிரி!

வேர்களை,

இடிபிளக்காத

ஆழத்துக்கு அனுப்பு..

கிளைகளை,

சூரியனுக்கு

நிழல் கொடுக்கும்

உயரத்தில் பரப்பு..

நிலை கொள்.

**

நாற்பதுகளில்...

இனிமேல்தான்

வாழ்க்கை ஆரம்பம்..

செல்வத்தில் பாதியை

அறிவில் முழுமையை

செலவழி..

எதிரிகளை ஒழி!

ஆயுதங்களை

மண்டையோடுகளில் தீட்டு!

ஒருவனைப் புதைக்க

இன்னொருவனைக்

குழிவெட்டச் சொல்!

அதில்

இருகையால் ஈட்டு..

ஒரு கையாலேனும் கொடு..

பகல் தூக்கம் போடு.

கவனம்!
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள்

Post by mmani Sat Apr 27, 2013 3:00 pm

இன்னொரு காதல் வரும்!

புன்னகைவரை போ..

புடவை தொடாதே.

இதுவரை இலட்சியம் தானே

உனக்கு இலக்கு!

இனிமேல்

இலட்சியத்துக்கு நீதான்

இலக்கு..

**

ஐம்பதுகளில்...

வாழ்க்கை, வழுக்கை

இரண்டையும் ரசி..

கொழுப்பைக் குறை..

முட்டையின் வெண்கரு

காய்கறி கீரைகொள்!

கணக்குப்பார்!

நீ மனிதனா என்று

வாழ்க்கையைக் கேள்..

இலட்சியத்தைத் தொடு

வெற்றியில் மகிழாதே!

விழா எடுக்காதே!

**

அறுபதுகளில்...

இதுவரை

வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

இனியேனும்

வாழ்க்கையை நீ வாழ்..

விதிக்கப்பட்ட வாழ்க்கையை

விலக்கிவிடு..

மனிதர்கள் போதும்.

முயல் வளர்த்துப் பார்!

நாயோடு தூங்கு!

கிளியோடு பேசு!

மனைவிக்குப் பேன் பார்!

பழைய டைரி எடு

இப்போதாவது உண்மை எழுது..

**

எழுபதுக்கு மேல்...

இந்தியாவில்

இது உபரி..

சுடுகாடுவரை

நடந்து போகச்

சக்தி இருக்கும்போதே

செத்துப்போ...

ஜன கண மண...

**நன்றி:கவிப்பேரரசு வைரமுத்து
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty இது போதும் எனக்கு- ஒலிவடிவத்துடன் புதிய முயற்சி

Post by mmani Sat Apr 27, 2013 3:04 pm

கவிப்பேரரசு
வைரமுத்துவின் கவிதைகள் ஆழமான சிந்தனைகளுடன் அழகிய இலகு தமிழில் எவர்க்கும்
புரியும் படியில் இருக்கும். அதனால்தான் எனக்கு அதிகம் பிடித்துப்போனது
கவிப்பேரரசை. அதன் ஒரு விளைவுதான் கவிப்பேரரசின் கவிகளை ஒலிவடிவில் தர
தூண்டியுள்ளது. இதன் முதல் அத்தியாயம் இங்கே ஆரம்பிக்கிறது. 'இது போதும்
எனக்கு' என்ற கவிதையை இன்று ஒலிவடிவத்தில் தருகிறேன்.\


Last edited by mmani on Sat Apr 27, 2013 3:06 pm; edited 1 time in total
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள்

Post by mmani Sat Apr 27, 2013 3:05 pm

mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள்

Post by Tamil Sun May 12, 2013 1:56 pm

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் 28284  கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் 28284
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள்

Post by Tamil Sun May 12, 2013 1:56 pm

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் 28284  கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் 28284
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள்

Post by அருள் Thu Jun 20, 2013 7:28 am

024024024
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum