TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழீழ விடிவுக்கான கருத்துக்களும், எச்சரிக்கைகளும்!

Go down

தமிழீழ விடிவுக்கான கருத்துக்களும், எச்சரிக்கைகளும்!  Empty தமிழீழ விடிவுக்கான கருத்துக்களும், எச்சரிக்கைகளும்!

Post by logu Thu Apr 11, 2013 9:41 pm

தமிழீழ விடிவுக்கான கருத்துக்களும், எச்சரிக்கைகளும்!

இந்த வாரத்தில் ஈழத் தமிழர்களது தலைவிதியுடன் தொடர்புபட்ட நான்கு முக்கிய நிகழ்வுகளும் இரண்டு எச்சரிக்கைகளும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்ட இந்தச் சம்பவங்களை ஈழத் தமிழர்கள் யாரும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

முதலில் ஒரு எச்சரிக்கைச் செய்தி ஒன்று சிறிலங்கா எதிர்பாராத
திசையிலிருந்து கிளம்பியது. முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சரும்,
இந்தியாவின் தேசியக் கட்சி ஒன்றின் முக்கிய தலைவருமான யஸ்வந்த் சின்ஹாவின்
இந்த எச்சரிக்கை சிங்கள ஆட்சியாளர்களை மட்டுமல்லாது, இந்தியாவை ஆளும்
காங்கிரஸ் கட்சியையும் நிலை குலைய வைத்துவிட்டது. 'இலங்கையில் தமிழர்கள்
மீது தொடர்ந்தும் அடக்குமுறையை கையாண்டால் தனி ஈழம் அமைவது வெகுதூரத்தில்
இல்லை என்பதை ராஜபக்சேவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்', என்று சென்னையில்
நடந்த கூட்டம் ஒன்றில் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்திருந்தார். இதுவரை
காலமும், தமிழீழ மக்களது அரசியல் அபிலாசைகளை இந்தியாவின் பிராந்திய
வல்லாதிக்க கண்களினால் நோக்கிய இந்திய தேசியக் கட்சிகளில் ஒன்றான
பா.ஜ.க.வின் தமிழீழ மக்கள் குறித்த புதிய நிலைப்பாடு ஒரு பெரும்
மாற்றத்திற்கான அறிகுறியாகவே கருதப்படுகின்றது.

இதற்கு
அடுத்ததாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் ஒரு எச்சரிக்கையை
சிங்கள ஆட்சியாளாகளை நோக்கி விடுத்துள்ளார். 'தமிழ் மக்களின்
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில்
விசாரணை நடத்தப்படாவிட்டால் மீளவும் முரண்பாடுகள் ஏற்படக் கூடும்' என அவர்
தெரிவித்துள்ள கருத்தும் யதார்த்தத்தின் வெளிப்பாடே. மாறாத சிங்கள இனவாதம்
தமிழிழத்தைப் பிரசவிப்பதற்கான தருணத்தை உருவாக்கி வருகின்றதென்பதை
அமெரிக்கா நன்றாகவே உணர்ந்துள்ளதன் வெளிப்பாடே இது.

இந்த
நிலையில், இந்திய நாடாளுமன்றத்தின் குழு ஒன்று இலங்னை சென்றுள்ளது. இந்திய
தொழில் - வர்த்தகக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இவர்கள் இலங்கை
சென்றிருந்தாலும், இந்தப் பயணத்தின் அரசியல் முக்கியத்துவத்தையும் நாம்
குறைத்து மதிப்பிட முடியாது. தமிழக மாணவர்களது போர்க் கோலம் இந்திய மத்திய
ஆளும் வர்க்கத்திற்கு அச்சத்தையும், அதனைச் சரியாகக் கொள்வதன் மூலமாக
மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தியாவின் அடுத்த ஆட்சிக்கான தருணத்தைத்
தமதாக்கிக் கொள்ளலாம் என்று முதன்மை எதிர்க் கட்சியான பா.ஜ.க.வுக்கு
நம்பிக்கையையும் ஏற்படுத்தியுளள தருணத்தில் இந்தப் பயணமும் அரசியல்
முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்திய நாடாளுமன்றக் குழு
இலங்கையின் அரசியல் களத்தைச் சூடேற்றி வரும் நிலையில், சிறிலங்காவின்
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தியாவை நோக்கி ஒரு ஏவுகணைக்கு
ஒப்பான தாக்குதலை நடாத்தியுள்ளார். அதாவது, 'சிங்களத்திற்கான உண்மை'
ஒன்றைத் தெரிவித்து இந்திய ஆட்சியாளர்களை அடக்கும் நடவடிக்கையில்
ஈடுபட்டார். சிங்கள ஊடகம் ஒன்றிற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
வழங்கிய நேர்காணல் ஒன்றில், 'தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம்' என்று குற்றம்
சாட்டியுள்ளார்.

'இந்தியாவின் போரையே நாங்கள் நடாத்தி
முடித்தோம்' என்ற இவரது முன்னைய உண்மையை மறுதலிக்க முடியாமல் திணறிய
காங்கிரஸ் ஆட்சியாளர்கள், கோத்தபாயவின் இந்தக் குற்றச்சாட்டையும் காதில்
கேட்காத மன்மோகன்களாக இப்போதும் இருந்து கொள்வதைத் தவிர வேறு தெரிவு
எதுவும் அவர்களுக்குக் கிடையாது. ஏனென்றால், அடுத்த பூதம் ஒன்று
சிங்களத்திலிருந்து வெளிக் கிளம்புவதை அவர்கள் விரும்பப் போவதில்லை.

கோத்தபாயவின் இந்தக் குற்றச்சாட்டு சலசலப்பை ஏற்படுத்திய காலத்தில்,
இன்னொரு 'காமெடி'யும் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் போரின்
இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து,
இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, ராணுவம்
நியமித்த ராணுவ நீதிமன்றம், இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, ராணுவத்துக்கு
இந்தக் கொலைகளில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று கூறும் ஒரு அறிக்கையை
பாதுகாப்புச் செயலரிடம் சமர்ப்பித்திருக்கிறது.

அந்த அறிக்கையில்,
'விடுதலைப்புலிகள்தான் பொதுமக்கள் சுமார் 3 லட்சம் பேரை மனிதக் கேடயமாகப்
பயன்படுத்தினார்கள். அது மட்டுமல்ல சிவிலியன் மக்கள் கூட்டத்தின்
மத்தியிலிருந்து குண்டுத்தாக்குதல்களை அவர்கள் தான் நடத்தினார்கள். இந்தக்
குற்றத்துக்கு முழுப்பொறுப்பும் அவர்கள்தாம் ஏற்கவேண்டும். இதை அவர்கள்
செய்யாமல் இருந்தால், போரில் ஏற்பட்ட எதேச்சையான பொதுமக்கள் உயிர்ச்சேதம்
நடந்திருக்காது. துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட இந்த எதேச்சையான பொதுமக்கள்
உயிர்ச்சேதத்துக்கு விடுதலைப்புலிகள்தான் பொறுப்பு.' என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான
அனைத்துலக விதிமுறைகளை மீறிய யுத்த நடவடிக்கைகள் மூலம் தமிழின அழிப்பை
மேற்கொண்ட சிங்கள இராணுவமே தன்னை விசாரித்து, தனக்கான நற்சான்றிதழைத்
தயாரித்து, அதன் முதன்மைக் கொடூரன் ஒருவனிடம் கையளித்துள்ளது.


இறுதியாக, இன்னொரு நிகழ்வையும் சொல்லாமல் போனால், அது வரலாற்றுத் தவறாக
அமைந்துவிடும் என்பதால், இதையும் நியாயமாகப் பதிவு செய்து விடுகின்றேன்.
கடந்த சில நாட்களாகப் புலம்பெயர் நாடுகளில் பரபரத்துவரும் 'தமிழீழ சுதந்திர
சாசன வரைவு' குறித்த தகவல்கள் குறித்தது. இதற்கும், இந்திய அமைதிப் படை
வெளியேற்றத்துடன் இந்தியாவில் தஞ்சமடைவதற்கு முன்னர், அன்றைய வட - கிழக்கு
மாகாண முதல்வர் வரதராஜப் பெருமாளின் சுதந்திர தமிழீழ அறிவிப்புக்கும் அதிக
வித்தியாசம் இருப்பதாகக் கணிப்பிட முடியவில்லை.

முள்ளிவாய்க்கால்
வரையும், அதன் பின்னருமான விடுதலைப் புலிகளது போராட்டம், புலம்பெயர்
தமிழர்களது கண்ணீர்ப் போராட்டம், தமிழக மாணவர்களது எழுச்சிப் போராட்டம் என
உலகெங்கும் தமிழீழ விடுதலைக்கான போர்க் களங்கள் விரிந்து சென்று, நடைமுறை
உலக ஒழுங்கினையே கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், 'சுதந்திர சாசன வரைவு'
குறித்த அறிவிப்பினை நாடு கடந்த தமிழீழ அரசு அறிவித்துள்ளது. அதாவது, உலகத்
தமிழர்களது உழைப்பினையும், கண்ணீரையும், போராட்டத்தையும்,
அர்ப்பணிப்பையும், உயிர்க் கொடைகளையும் அறுவடையாகப் பெற்றுக்கொள்ளும்
அயோக்கியத் தனத்தையே நாடு கடந்த அரசாங்கம் செய்வதற்கு முற்படுகின்றது.

2009 இற்குப் பின்னரான எந்தப் போராட்டத்தையும் நாடு கடந்த அரசாங்கம்
மேற்கொள்ளவில்லை. எந்தப் போர்க் களத்திலும் பங்கேற்கவில்லை. குறைந்தபட்சம்,
தமிழ் மக்களது கண்ணீரையும், கதறல்களையும் கருத்தில் கொள்ளாமலேயே மாவீரர்
தினத்தையும் இரண்டாகப் பிளந்த பாவத்தைப் புரிந்ததைத் தவிர எந்த
அடையாளத்தையும் நாடு கடந்த அரசாங்கத்தின் சாதனையாகக் குறிப்பிட முடியாது.

தமிழ் மக்களது வரலாறு 'விடுதலைப் புலிகளுக்குப் பின்' என்ற வெற்றிடத்தை
எப்போதும் கொண்டிருக்கப் போவதில்லை. அதனையே, தமிழகத்தின் பேரெழுச்சியும்
உலகத்திற்குப் புரிய வைத்துள்ளது. சிங்களம் எதிர்த்தாலும், இந்தியம்
தடுத்தாலும் தமிழீழம் விடுதலை பெறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
மலரும் தமிழீழத்தின் சுதந்திர மண்ணில் உருவாகும் தமிழீழ நாடாளுமன்றம்,
தனக்கான சுதந்திர சாசனத்தை வரையும். அதுவரை, தமிழீழ விடுதலைக்கான
போராட்டத்தைத் தொடர்வது மட்டுமே புலம்பெயர் தமிழர்களது கடமையாக இருக்க
வேண்டும்.

இசைப்பிரியா
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» மே18 - தமிழீழ தேசிய துக்க நாள்! முன்னெடுப்புகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு!
» அக்குபங்சர் சிகிச்சையும் சில எச்சரிக்கைகளும்
» தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
» அனைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து தமிழீழ மாவீரர்நாளை கடைபிடிக்குமாறு – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை
» தமிழீழ தேசிய அட்டை தமிழீழ அரசினால் வழங்கப்பட்டு வருகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum