TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழக மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு எமது மக்கள் பாடம் பற்றுக் கொள்ள வேண்டும் - எஸ்.ஜெயானந்தமூர்த்தி

2 posters

Go down

தமிழக மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு எமது மக்கள் பாடம் பற்றுக் கொள்ள வேண்டும் - எஸ்.ஜெயானந்தமூர்த்தி  Empty தமிழக மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு எமது மக்கள் பாடம் பற்றுக் கொள்ள வேண்டும் - எஸ்.ஜெயானந்தமூர்த்தி

Post by அருள் Fri Mar 15, 2013 5:09 pm


தமிழக மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு எமது மக்கள் பாடம் பற்றுக் கொள்ள வேண்டும் - எஸ்.ஜெயானந்தமூர்த்தி  Iuhi

எமது இனத்தின் விடுதலைக்காக தமிழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் எழுச்சி
போராட்டங்களைக் கண்டு புலம் பெயர் மக்கள் குறிப்பாக இளையோர் பாடம் கற்றுக்
கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தமிழக

மாணவர்களின் போராட்டத்திற்கு எமது ஆதரவைத்
தெரிவிப்பதாகவும் அவர்களுடன் கைகோர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக மாணவர்களின் போரட்டம் தொடர்பாக இணையத்தளமொன்றுக்கு வழங்கிய
செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்: ‘மாணவர் சக்தியே ஒரு
நாட்டின் முதுகெலும்பாகும். அவர்கள் வீறுகொண்டு எழும்போது அந்நாடே
தாங்காது. அதுவே இன்று தமிழகத்தில் எழுந்துள்ளது. அறவழிப்போராட்டத்தில்
இன்று அவர்கள் நம்பிக்கை கொண்டு உண்ணாவிரதத்தைத் தமது ஆயுதமாகக் கையில்
எடுத்துள்ளனர். லயோலாக் கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்த இப்போராட்டம் இன்று
தமிழகம் எங்குமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டம்
பாரத தேசத்தை இன்று ஆட்டம் காண வைத்துள்ளது. அவர்களின் கோரிக்கைகள் மிகவும்
வலுவானது இந்திய தேசம் தலையிட்டு தமிழர்களுக்கு தனிநாட்டை அமைக்க
வேண்டும், இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும், படுகொலையைச் செய்த
இலங்கை அதிபர் மற்றும் படை அதிகாரிகளுக்கு தண்டணை வழங்க வேண்டும் என்பன
முக்கியமானவை. இவ்வாறான கோரிக்கைகளை அம்மாணவர்கள் முன்வைத்து போராடி
வருகின்றனர்.


ஆனால் எமது புலம் பெயர் மக்கள் இன்று மௌனமாகவே காலத்தைக் கழித்து
வருகின்றனர். அதிலும் இளையோரின் செயற்பாடுகள் வெறும் பூச்சியமாகவே
இருக்கின்றது. இவர்கள் தமிழக மாணவர்களின் எழுச்சியைக் கண்டாவது பாடம்
கற்றுக் கொள்ள வேண்டும். புலம் பெயர் நாடுகளில் தமிழக மாணவர்களின்
போராட்டத்துக்கு இணைவாக தாமும் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய காலம்
இதுவாகும். எமது தேசியத் தலைவர் 2008 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் புலம்
பெயர் மக்களையும் குறிப்பாக இளையோரையும் நோக்கி குறிப்பிட்ட வாசகங்களை
இவர்கள் மறந்துவிடக் கூடாது. அவர் மிக தீர்க்க தரிசனத்துடனேயே போராட்டத்தை
புலம் பெயர் தளத்திற்கு மாற்றினார் என்பதையும் எமது மக்கள் நன்கு புரிந்து
கொள்ள வேண்டும்.


ஆனால் இன்று புலம் பெயர் தேசத்தில் மக்கள் எழுச்சியையோ போராட்டங்களையோ
காணவில்லை. இவ்வாறான போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களும் இன்று அமைதியாகவே
உள்ளனர். அல்லது ஒன்று கூடல்களை நடத்தினாலும் அதில் மக்கள் எழுச்சியை
ஏற்படுத்தும் செயற்பாடுகளைக் காணவில்லை. புலம் பெயர் நாடுகளில் உள்ள சில
அமைப்புகள் கூட்டங்கள் மாநாடுகளை நடத்துவதாகக் கூறிக் கொண்டு தமது
அரசியலைச் செய்ய முற்படுகின்றனர். அதில் தமிமீழம் பற்றியோ அல்லது எமது
மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றியோ பேசுவதில்லை. போர்குற்றம்
என்பதை மாத்திரம் நாசுக்காக கூறிவிட்டு நழுவி விடுகின்றனர். சிலர் புலம்
பெயர் நாடுகளில் ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
சோனியாவின் கண்களில் புதிதாக ஒளிவட்டத்தைக் காணுகின்றனர். தென்னாபிரிக்கா,
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் உறவு கொண்டாடி எமது
விடுதலைப்போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்க முற்படுகின்றனர்.
விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம்
சுமத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பைரூ nடிளி;புலம் பெயர் நாடுகளுக்கு
அழைத்து கூட்டங்கள் நடத்தி அவர்களின் கூற்றுக்கு அங்கீகாரம்
வழங்குகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் எமது மக்கள் மத்தியில் பெரும்
விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.


இவர்களின் இச் செயற்பாடுகள் எமது இனத்திற்கு என்றுமே விடுதலையைப் பெற்றுத்
தரப்போவதில்லை. மாறாக இவர்கள் எமது இனத்தை மீண்டும் படுபாதாளத்திற்கே
கொண்டு செல்லுவார்கள் என்பதே யதார்த்தம். எனவே நாம் இன்றைய உலகச் சூழலைக்
கவனத்தில் கொண்டு எமது இனத்தின் மீது இனப்படுகொலை இடம் பெற்றது என்பதை
சர்வதேசத்திற்கு உணர்த்தி உலக நாடேங்கும் போராட்டங்களை நடத்த வேண்டும்.
அதன் மூலம் சர்வதேசத்தை அசைய விடாது எமது கோரிக்கையை வென்றெடுக்க முடியம்;.


அமெரிக்கா தீர்வைக் கொண்டு வரும் எமக்கு விடுதலை கிடைத்து விடும் நாம்
அமைதியாக இருந்தால் போதும் என்று நினைத்தால் அல்லது இவ்வாறு யாரும்
கூறினால் இதைவிட முட்டாள்தனம் எதுவும் இல்லை. எனவே இவ்வாறான சிந்தனைகளை
மறந்து இன்று இலங்கை தொடர்பாக உலகத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தை நாம்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் எமது உரிமைக்காக போராடுவதை விட
வேறு வழியில்லை. இதற்கு தமிழக மாணவர்களின் போராட்டமும் நல்ல உறுதுணையாக
அமைந்துள்ளது.


சில புலம் பெயர் அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள்
மக்களுக்கு தவறான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். நாம் இராஐதந்திர
வழிகளில்தான் போக வேண்டும். சற்று விட்டுக் கொடுத்து, பணிந்து, வளைந்து
போகவேண்டும். இதுதான் வெளிநாட்டவர்களுக்குப் பிடிக்கும். உணர்ச்சி வசப்படக்
கூடாது என்றெல்லாம். பழைய பல்லவியைக் கூறி மக்களை எழுச்சி கொள்ளாமல் வைக்க
முயலுகின்றனர். இதை மக்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.


எனவே நாம் பொறுத்தது போதும். இனியும் பொறுமை எமக்கு விடுதலையைப் பெற்றுத்
தரப்போவதில்லை. எனவே எமது மக்கள் ஒன்றுபட்டு உணர்வுடன் எழுந்து போராடுவதன்
மூலமே எமது விடுதலையைப் பெறமுடியும்’ என ஜெயானந்தமூர்த்தி
தெரிவித்துள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மக்கள் படுகொலைகளை தொடர்ந்து தமிழினை அழிக்க வேண்டும் தமிழர் பகுதிகளில் சிங்களத்தினை நிலை நாட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஈழத்தில் இருக்கும் பதாகைகள்...
»  தமிழக உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுடன் போராடும் முதல்வருக்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது கடமை-பழ. நெடுமாறன்
» சர்வதேசமே எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்: பிரான்சில் தமிழீழ மக்கள்
» தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாக கருதிவிட முடியாது! அமெரிக்கா தூதுவர்
» தமிழக மாணவர்களின் ஆதரவுக்கு நன்றி – தமிழீழ அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum