TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ராகுல்காந்தி தலைமை ஏற்றதும் கட்டிப்பிடித்து அழுத சோனியா. அதிகாரத்துடன் ஆபத்தும் நெருங்குகிறதா?

Go down

ராகுல்காந்தி தலைமை ஏற்றதும் கட்டிப்பிடித்து அழுத சோனியா. அதிகாரத்துடன் ஆபத்தும் நெருங்குகிறதா? Empty ராகுல்காந்தி தலைமை ஏற்றதும் கட்டிப்பிடித்து அழுத சோனியா. அதிகாரத்துடன் ஆபத்தும் நெருங்குகிறதா?

Post by மாலதி Thu Jan 24, 2013 8:18 am

ராகுல்காந்தி தலைமை ஏற்றதும் கட்டிப்பிடித்து அழுத சோனியா. அதிகாரத்துடன் ஆபத்தும் நெருங்குகிறதா? Resize_20130123170856

ப்பு...’
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சிறுவயது ராகுல் காந்தியை இப்படித்தான்
அழைப்பார். பேரன் 'பப்பு’, இப்போது 127 வருட காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை
ஏற்கத் தயாராகி விட்டார்!

ராஜஸ்தான்
மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூன்று
நாள் கூட்டத்தின்போது கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க
கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி முன்மொழிய, பொதுச் செயலாளர்
ஜனார்த்தன் துவிவேதி வழிமொழிந்தார். தேர்தல் காய்ச்சல் காங்கிரஸை
பாடாய்ப்படுத்த, புதிய மருத்துவராக ராகுலைத் தேர்ந் தெடுத்துள்ளது!



இரண்டு காரணங்கள்



ராகுல்
நியமன அறிவிப்பு ஜெய்ப்பூரில் வெளியான அடுத்த நொடியில் இந்தியா முழுக்க
காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். காங்கிரஸ்
கட்சியில் நேரு குடும்பத்து ஆறாவது வாரிசு ராகுல். மோதிலால், ஜவஹர்லால்,
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் மற்ற ஐவர். ஆனால்,
இதனால் சோனியாவுக்கு இனி ஓய்வு என்று சொல்ல முடியாது. கட்சித் தலைவராக
சோனியா காந்தியும் பிரதமராக மன்மோகன் சிங்கும் இன்னும் சில மாதங்களுக்குத்
தொடரப்போகிறார்கள். ஆனால், ராகுலின் நியமனம் இரண்டு காரணங்களுக்காக
இப்போது நடத்தப்பட்டது. அதற்குத்தான் இந்த இடைக்காலப் பதவி ஏற்பாடுகள்.
ஒன்று சோனியாவின் உடல்நிலை. அவர் கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில்
சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டாவது, தனக்குப் பின்னர் தன்
குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியைக் கொண்டு வருவது.







கங்காரு குழந்தை



ராகுல்
காந்திதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்றோ, அவர் இன்னும் சில மாதங்களில்
காங்கிரஸ் கட்சித் தலைவர் என்றோ, இப்போது அறிவிக்கப்படவில்லை. ராகுல்
காந்தி அடுத்த பொதுத்தேர்தல் வரை கங்காரு குழந்தையாகத்​தான் இருப்பார்.
காரணம்? நன்மைகள் நடந்தால், ராகுலால் நடந்ததாகச் சொல்லலாம்... வரப்போகும்
சட்டமன்ற தேர்தல்களிலும் பொதுத் தேர்தலிலும் தோல்விகள் ஏற்பட்டால், அதற்கு
அவரைப் பொறுப்பு ஏற்பதில் இருந்து தவிர்க்கலாம் என்பதே இத்தாலித் தாயின்
முடிவு. வரும் தேர்தல்களில் தோல்வி அடைந்தால், அது ராகுலின்
எதிர்காலத்தைப் பாதிக்கும். அந்தத் தோல்வியில் இருந்து தன் மகனை முழுப்
பாதுகாப்பில் வைக்கிறார் என்பதே உண்மை. இந்த உண்மையை மறைத்து, 'காங்கிரஸ்
கட்சி தேர்தலுக்கு முன் எப்போதும் பிரதமர் வேட்பாளர் பெயரைச் சொன்
னதில்லை’ என்கிறார் திக்விஜய் சிங்.




ஒருவார ஒத்திகை



ஜெய்ப்பூர்
கூட்டத்துக்கு முன்பே ராகுல் விழா குறித்த ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.
டெல்லி ஜவஹர் பவனில் ஒரு பயிற்சி முகாமையும் காங்கிரஸ் ரகசியமாக
நடத்தியது. ஆஸ்கார் பெர்னாண்டஸ், ஜெய்ராம் ரமேஷ், ஜனார்த்தன் துவிவேதி,
திக் விஜய் சிங் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்ட இந்த ஒருவார ஒத்திகை
முகாமில், ஜெய்ப்பூர் அறிவிப்புகளும் அதைத் தொடர்ந்து ராகுலுக்காகச்
செய்யவேண்டிய அனைத்து முன்ஏற்பாடுகளும் பற்றி இளைஞர் அணிக்கும் மாணவர்
அணிகளுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டன. பயிற்சி கொடுத்தவர்களும்
பயிற்சியில் பங்கெடுத்த இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ்
பிரிவைச் சேர்ந்தவர்களும் ராகுலுக்கு முழு நம்பிக்கையானவர்கள். அவர்கள்
மட்டுமே டெல்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் அழைக்கப்​பட்டனர். இதில் தமிழகம்,
புதுச்சேரி உட்பட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸாருக்கு
அழைப்பு இல்லை!







புத்துணர்வு கூட்டம்



ஜெய்ப்பூரில்
இரண்டு நாட்கள் கட்சித் தலை வர்களுக்குப் புத்துணர்வு 'சிந்தனை அமர்வு’
கூட்டம் நடக்கும் என்றுதான் அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட் டத்தில்
எடுக்கப்படும் முடிவுகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் விவாதித்து
இறுதி ஒப்புதல் எடுக்கப்படும் என்றுதான் இந்த சிந்தனை அமர்வுக் கூட்டம்
குறித்து கூறி இருந்தனர். ஆனால், ராகுல் அறிவிப்புக்குப் பிறகு எல்லாம்
மாறிவிட்டது.



நெருக்கடி
நிலைக்கு பிறகு, ஜெயப்பிரகாஷ் நாரா யணனின் பிரசாரத்தை எதிர்கொள்ள
இந்திராகாந்தி காலத்தில் (1978) முதல் சிந்தனை அமர்வுக் கூட்டம் நடந்தது.
சோனியா காந்தி கட்சிப் பொறுப்பு ஏற்ற சமயத்தில் 1998-ல் காங்கிரஸ்
கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்துப் பேச, மத்தியப் பிரதேசத்தில்
இரண்டாவது கூட்டம் நடந்தது. அந்த சமயத்தில் ஐக்கிய முன்னணி அரசுகளுக்கு
ஆதரவு கொடுத்து விலக்கிக்கொண்ட கட்சிகளுடன் கூட்டணி சேராமல் தனித்தே
செயல்படுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பின்னர், மூன்றாவதாக 2003-ல்
சிம்லாவில் நடந்த சிந்தனை அமர்வுக் கூட்டத்தில் 'தனித்து செயல்படும்
முடிவைக் கைவிட்டு கூட்டணியை அமைத்தாவது ஆட்சியைப் பிடிக்கத் தயங்கக்
கூடாது’ என்ற முடிவுக்கு வந்தது. இந்த ஜெய்ப்பூர் சிந்தனை அமர்வில்,
'கூட்டணிக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அதேசமயத்தில் கட்சியையும் வளர்க்க
வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு முடிவுகளோடு காங்கிரஸ் கிளம்பியுள்ளது.
சுமார் 370 பேர் கலந்துகொண்ட இந்த அமர்வில் இளைஞர் காங்கிரஸாரும் மாணவ
காங்கிரஸாரும்தான் பெரும்பான்மை.



டெல்லி
மாணவி பலாத்காரத்தை ஒட்டி டெல்லியில் நடந்த போராட்டங்கள் காங்கிரஸ்
கட்சியை நிலைகுலைய வைத்தது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இளம்
தலைமுறையினர், சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்று திரண்டது குறித்த ஆலோ
சனைகளும் ஜெய்ப்பூர் கூட்டத்தில் முக்கியச் சிந்தனையாக இருந்தது.







மோடியின் தொழில்நுட்பக் குழு



இதில்
சில ரகசியங்களையும் போட்டு உடைத்தார் ராகுலுக்கு நெருக்கமானவரும்
கட்சியின் பொதுச் செயலாளருமான திக்விஜய் சிங். குஜராத் மாநிலம் அகமதாபாத்
அருகே நரேந்திர மோடி அமைத்திருக்கும் பெரிய தகவல் தொழில்நுட்ப மையம்
குறித்த தகவல்தான் இது. சுமார் 50 தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழு இந்த
மையத்தில் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும் இந்த மையம்தான் காங்கிரஸுக்கு
எதிரான எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மோடியின் இந்த மையம் சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களையும் இளம்
பெண்களையும் தூண்டுவதாகக் குற்றம் சாட்டினார். மோடியின் இந்த மையத்தை
எதிர்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்துப் பேசிய காங்கிரஸின் சிந்தனைக்
கூட்டம், இனி சமூக வலைத்தளங்களைக் கையாளும் பயிற்சி அளித்து இளம்
தலைமுறை​யினரைக் கட்சிக்குக் கொண்டுவர முடிவு எடுத்தது. முக்கியமாக,
பி.ஜே.பி-யில் இன்னும் சில வாரங்களில் அமைக்கப்படும் தேர்தல் கமிட்டி
மற்றும் பிரசாரக் கமிட்டிகளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இடம்பெறப்
போவதை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.



மோடியா, ராகுலா?



பி.ஜே.பி-யின்
பிரதமர் வேட்பாளராக மோடியும் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல்
காந்தியும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சஞ்சய் காந்தியும் ராஜீவ்
காந்தியும் இந்திரா காந்திக்கு உதவவே அரசியலுக்கு வந்தனர். ஆனால், ராகுல்
காந்தி அப்படி அல்ல. காலி யாகப்போகும் இடத்தை நிரப்புவதற்குத்
தயாராகிறார். அகில இந்திய அளவில் தலைவர்களுக்கு இப்போது பெரிய வெற்றிடம்.
மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் செயல் இழந்து விட்டனர். பிரணாப்
முகர்ஜி போன்றவர்கள் இடம்பெயர்ந்து விட்டனர். வேறு சிலர் தங்கள் இடத்தைக்
காலி செய்யும் சூழ்நிலையில் உள்ளனர். (முலாயம் சிங், சரத்பவார், அத்வானி
என்று பலர் இடத்தைக் காலி செய்பவர்களில் அடக்கம்). காங்கிரஸில் ராகுல்
காந்திக்கு யாரும் போட்டி இல்லை. பி.ஜே.பி-யிலும் மோடியைத் தவிர்க்க
முடியாத சூழ்நிலை.



ராகுல்
தன்னை தன் தந்தை பாணியில் நவீன இந்தியாவைப் படைக்கும் தலைவராக அடையாளம்
காட்ட முற்பட்டால், மோடி ஆற்றல்மிக்க இந்தியாவை உருவாக்கும் தலைவராகத்
தன்னைக் காட்டிக்கொள்ள முற்படலாம். சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிர
தேசம், டெல்லி ஆகியவை பி.ஜே.பி-க்கு வாய்ப்புள்ள மாநிலங்கள். இங்கு
சட்டமன்றத் தேர்தல்களும் வர இருக்கின்றன. இவற்றில் காங்கிரஸுக்கும் பி.ஜே.
பி-க்கும்தான் நேரடிப் போட்டி. கூட்டணி அமைக்கும் இடங்களில்
மகாராஷ்ட்ராவும் ஆந்திராவும் ராகுலுக்கு சவாலாக இருக்கும். ஒருவேளை,
ஆந்திராவை இழந்தாலும் கர்நாடகா கைகொடுக்கும் என்று ராகுல் நம்பலாம்.
ஒடிசாவிலும் பீகாரிலும் உள்ள ஆளும் கட்சியோடு காங்கிரஸுக்குக் கூட்டணி
ஏற்படாது என்றாலும், தேர்தலுக்குப் பிறகு புரிந்துணர்வு ஏற்படலாம். இதை
'டேக்டிக்கல் அலையன்ஸ்’ என்கிறது காங்கிரஸ். ஒருவேளை, 2013-ல் சட்ட மன்றத்
தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலும் நடந்தால் என்னாகும் என்பதுதான் இப்போது
காங் கிரஸுக்குப் பிரச்னை. அப்படி ஆகும்பட்சத்தில் ராகுல் கடும் சவாலை
எதிர்கொள்வார்.



இப்போது
அரசியல் உத்திகளைக் கையாளும்விதம், பிரச்னைகளுக்குப் பதில் சொல்வதில் மோடி
முன்னி​லையில் இருக்கிறார். உ.பி-யில் அதிக இடங்களைப் பெற்றது, கட்சியில்
இளைஞர் காங்கிரஸ் தேர்தலை மேற்கொண்டது போன்றவை ராகுலின் சாதனை. அதே
சமயத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள், பிற கட்சித் தலைவர்களுக்கு மதிப்பு
அளிப்பது சம்பந்தமாக ராகுல் மீது விமர்சனங்கள் உண்டு.



உணர்ச்சிகரமான பேச்சு



தாயார்
இந்திரா காந்தியின் மரணத்தையட்டி ராஜீவ் திடீரெனப் பொறுப்பை ஏற்றார்.
ஆனால், ராகுல் காந்தி கடந்த ஒன்பது ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் வலம்
வந்து படிப்படியாகப் பொறுப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால், தந்தை
அளவுக்கு ராகுல் சாதனை எதையும் இந்த ஒன்பது ஆண்டுகளில் நிகழ்த்தவில்லை
என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். பதவி ஏற்றதும் ராகுலின் ஏற்புரைப்
பேச்சு காங்கிரஸ் கட்சியினரை உசுப்பி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.



ஏற்புரையில்
தனது சொந்த அனுபவங்கள் பலவற்றையும் பகிர்ந்து நெகிழ வைத்தார். ''எனக்கு
பேட்மின்டன் விளையாடுவது மிகவும் பிடிக்கும். என்னுடைய பாட்டி
வீட்டில்தான் இந்த விளை​யாட்டை நான் கற்றுக்கொண்டேன். பாட்டியைப்
பாதுகாத்த போலீஸார் இரண்டு பேர் என்னோடு பேட்மின்டன் விளையாடி அந்த
விளையாட்டையும் எனக்குக் கற்றுக்கொடுத்தனர். அதே போலீஸார்தான் என்னுடைய
பாட்டியையும் கொன்றனர். நன்மை, தீமை இரண்டையும் அந்த விளையாட்டுத்தான்
கற்றுக் கொடுத்தது'' என்று ஆபத்தான அரசியலில் இறங்கி இருப்பதை உருக்கமாகப்
பேசினார்.



''நேற்று
(19-ம் தேதி) இரவு என் தாயார் சோனியா காந்தி என்னுடைய அறைக்கு வந்து
என்னைக் கட்டிப்பிடித்து அழுதார். அதி காரங்களை எல்லோரும் விரும்புவது
உண்டு. அதில் ஆபத்துக்களும் வரும். அதை உணர்ந்துதான் எனது தாயார் கண்ணீர்
விட்டார்'' என்றார் ராகுல். இப்படி பாட்டி, தந்தை போன்றவர்களுடனான ஆபத்து
நிறைந்த அனுபவங்களைச் சொல்லிவிட்டு, இந்தியாவுக்​காகவும்
காங்கிரஸுக்காகவும் தன்னை அர்ப்​பணித்துக் கொள்ளப்போவதாக ராகுல் கூற, அதே
நேரத்தில் சோனியா கண்களைத் துடைத்துக்கொண்டு இருந்ததைப் பார்க்க
முடிந்தது. இந்தியாவை நவீனப் படுத்தியதில் கடந்த காலத்தில் காங்கிரஸ்
செய்த சாதனைகளோடு, சில திட்டங்கள் முறையாகச் சென்றடையாததையும்
நினைவுபடுத்தினார் ராகுல்.



சமீபத்திய
'உங்கள் பணம் உங்கள் கையில்’ திட்டத்தின் மூலம் ஏழைகளுக்குரிய பணம்
சிந்தாமல் சிதறாமல் முழுமையாகப் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடையும்
என்கிறார். பல திட்டங்கள், பல தொலைநோக்குப் பார்வைகள், ஏழைகளுக்கு
அதிகாரப் பகிர்வு... என்று உற்சாகமாகப் பேசி கிளாப்ஸ் வாங்கினார் 'பப்பு’.



ராகுலுக்கு
வயது 42. திருமணம் செய்து கொள் ளாதவர். அந்த எண்ணம் இல்லையா... அல்லது
சூழ்நிலை அமையவில்லையா எனத் தெரியவில்லை. இன்றைய நிலையில் சொன்னால், ஒரு
வகையில் வாரிசு அரசியலுக்கு வழி வகுக்காத தலைவராக அவர் இருக்கக்கூடும்!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மகளை கட்டிப்பிடித்து ராஜாத்தி கண்ணீர்: கனிமொழி நாளை அப்பீல்?
» அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவி ஏற்றதும் அதிரடி அறிவிப்பு...!
» தினமணி நாளிதழுக்கு இந்திய தேர்தல் தலைமை ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் ஆணையர் இவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் கூட தெரியவில்லையா?
» பச்சைகுத்திக் கொள்வதால் அழகுடன் சேர்த்து ஆபத்தும் வருகிறது!
» மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஆசிரியர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum