TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


என் தோழி சாவில் என்ன நடந்தது என்பது போலீசார், டாக்டர்களுக்கு நன்கு தெரியும்

Go down

என் தோழி சாவில் என்ன நடந்தது என்பது போலீசார், டாக்டர்களுக்கு நன்கு தெரியும் Empty என் தோழி சாவில் என்ன நடந்தது என்பது போலீசார், டாக்டர்களுக்கு நன்கு தெரியும்

Post by அருள் Sat Jan 05, 2013 9:39 pm

என் தோழி சாவில் என்ன நடந்தது என்பது போலீசார், டாக்டர்களுக்கு நன்கு தெரியும் 66453_517248804975013_548043885_n
என்
தோழி சாவில் என்ன நடந்தது என்பது போலீசார், டாக்டர்களுக்கு நன்கு
தெரியும். அவர்கள் மன சாட்சியுடன் நடந்து கொண்டாலே போதும். என் தோழி
மரணத்துக்கு மெழுகு வர்த்தி ஏற்றுவதால் எந்த புண்ணியமும் இல்லை. அதுபோல
சட்டத்துக்கு என் தோழி பெயர் சூட்டப்படுவதால் என்ன நடந்து விடும்? நம்மிடம்
போதுமான சட்டங்கள் உள்ளது. ஆனால் அவை சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்.
அந்த சட்டங்கள் பற்றி மக்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.”"என்று கூறினார் டெல்லி மாணவியின் நண்பர்!

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மாணவியின் நண்பர் ‘ஜீ நியூஸ்’
தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அந்த பேட்டி நேற்றிரவு
ஒளிபரப்பானது. அந்த பேட்டியில் மாணவர் கூறியதாவது:-

மரணம் அடைந்த
மாணவியும் நானும் உயிருக்கு உயிராக பழகி வந்தோம். டிசம்பர் 16-ந்தேதி
ஞாயிற்றுக்கிழமை தெற்கு டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றோம்.
பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பும்போது இரவு 9.30 மணி ஆகி விட்டதால்
எங்களுக்கு வீடு திரும்ப பஸ் கிடைக்கவில்லை. ஆட்டோ பிடிக்க நாங்கள் முயன்று
கொண்டிருந்த போதுதான் அந்த பஸ் வந்தது. அதில் இருந்த ஒருவன் நாங்கள்
வசிக்கும் பகுதி வழியாகத்தான் பஸ் போகிறது. வந்து ஏறி கொள்ளுங்கள் என்று
பேசி அழைத்தான். நாங்கள் இருவரும் ஏமாந்து ஏறி அமர்ந்துவிட்டோம்.


அப்போதுதான் பஸ்சில் வேறு யாருமே இல்லாதது தெரியவந்தது. கருப்பு பிலிமாலும்
துணியாலும் மூடப்பட்டிருந்ததால் அந்த பஸ்சில் இருந்து வெளியில் எதுவும்
தெரியவில்லை. பஸ் புறப்பட்டதும் 3 பேர் வந்து என் தோழியை கிண்டல் செய்தனர்.
நான் அதை கண்டித்தேன். உடனே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.


என்னையும் என் தோழியையும் அவர்கள் கடுமையாக திட்டினார்கள். இதனால் தகராறு
முற்றியது. அப்போது மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் இருவரும் கையில்
இரும்பு கம்பி வைத்திருந்தனர். கண் மூடித்தனமாக என் மீது தாக்குதல்
நடத்தினார்கள். அதை தடுத்த என் தோழிக்கும் இரும்பு கம்பியால் அடி
விழுந்தது. அதன் பிறகுதான் அந்த பாவிகள் என்னை அடித்து தள்ளிவிட்டு என்
தோழியை பலாத்காரம் செய்தனர். அவள் துணிச்சலாக போராடினாள். 3 வாலிபர்கள்
சரமாரியாக மீண்டும் தாக்கியதில் அவள் நிலை குலைந்து போனாள்.


சுமார் 2 மணி நேரம் ஓடும் பஸ்சில் அவர்கள் என் தோழியை வேட்டையாடி விட்டனர்.
அதன் பிறகும் 6 பேருக்கும் எங்கள் மீது வெறி அடங்கவில்லை. எங்களை அடித்து
நிர்வாணப் படுத்தினார்கள். நாங்கள் உதவி கேட்டு கதறியது வெளியில்
கேட்கவில்லை. பிறகு பஸ்சை திடீரென ஒரு இடத்தில் நிறுத்தி ரோட்டோரத்தில்
எங்களை தள்ளிவிட்டனர்.

அந்த சமயத்திலும் என் தோழி துணிச்சலை
இழக்காமல் அவர்களை எச்சரித்தாள். இதனால் அந்த 6 பேரும் மேலும் ஆத்திரம்
அடைந்தனர். எங்களை பஸ் ஏற்றி கொல்ல முயன்றனர். நான் என் தோழியுடன் விலகிக்
கொண்டதால் தப்பினோம். இரவு 11.30 மணி அளவில் நிர்வாண நிலையில் நாங்கள்
தவித்தோம். என் தோழி ரத்த வெள்ளத்திலும் தரையில் சாய்ந்து விட்டாள். நான்
அந்த வழியாக காரில் வந்தவர்களிடம் கையை காட்டி உதவி கேட்டேன்.


கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கரங்களில் அந்த வழியாக வந்த எல்லாரும் நான் கை
காட்டியதும் வேகத்தை குறைத்தனர். நாங்கள் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக
கிடந்ததை பார்த்து, பக்கத்தில் கூட வராமல் ஒதுங்கி சென்றுவிட்டனர். சிலர்
என்ன நடந்தது என்று கேட்டு விட்டு எங்களுக்கு உதவி செய்யாமல் சென்றனர்.
இப்படி ரோட்டோரத்தில் சுமார் 2 மணி நேரம் தவித்தோம்.

கடைசியில்
யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் 3 வேன்களில் போலீசார் வந்தனர். ஆனால்
அவர்களுக்குள் எல்லைத் தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்துக்கு
போலீசாருக்கும் நாங்கள் தள்ளப்பட்டு கிடந்த போலீசாருக்கும் இடையே
வாக்குவாதம் நடந்தது. நிர்வாணமாக கிடந்த எங்களை கண்டு கொள்ளாமல் அவர்கள்
சுமார் 45 நிமிடம் எல்லை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களில்
இரக்க குணம் கொண்ட ஒரு போலீஸ்காரர் மட்டும் எங்கிருந்தோ ஒரு துணி எடுத்து
வந்து என் தோழி மீது போர்த்தி விட்டார். பிறகு எல்லை பிரச்சினை ஓய்ந்து
எங்களை போலீஸ் வேனில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது கூட
அவர்கள் என் தோழிக்கு உதவ வில்லை. நான்தான் அவளை தூக்கி போலீஸ் வேனில்
ஏற்றினேன்.

எங்களை போலீசார் அருகில் உள்ள ஏதாவது ஒரு தனியார்
ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கலாம். நீண்ட தூரத்தில் உள்ள சப்தர்ஜங்
ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மயங்கிய நிலையில் இருந்த என் தோழிக்கு
உடனடி சிகிச்சை கொடுக்க தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர்.
அப்போதும் நான் நிர்வாண நிலையில் வெளியில் தரையில் கிடந்தேன். அன்றே என்
தோழி செத்து இருக்கலாம்.

அவர் மிகவும் சித்ர வதையை அனுபவித்து
விட்டாள். அடுத்த 4 நாட்கள் நான் ஸ்டெச்சரில்தான் கிடந்தேன். தனியார்
மருத்துவமனைக்கு சென்று நான் சிகிச்சை பெற்றதால் பிழைத்தேன். என்தோழி
மிகவும் துணிச்சல் கொண்டவள். எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாதது அவளுக்கு
நடந்து விட்டது. அவ்வளவு நடந்த பிறகும் அவள் நம்பிக்கையுடன் உயிர் வாழ
ஆசைப்பட்டாள்.

அவளைப் பார்க்க நான் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது,
என்னை பார்த்ததும் லேசாக சிரித்தாள். அவ்வளவு வலி, வேதனையிலும் அவள் என்னை
பார்த்து சிரித்ததும் நான் துடித்துப் போனேன். ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு
செலவாகிறது என்று அடிக்கடி கேட்டாள். தன் தாய்க்கு அவள் தைரியம்
கொடுத்தாள். அவள் நிலையில் வேறு எந்த பெண்ணாலும் அப்படி இருந்திருக்க
முடியாது.

தன்னை நாசம் செய்த குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது
என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்களா?
என்று அடிக்கடி கேட்டாள். 6 குற்றவாளிகளையும் உயிரோடு தீ வைத்து எரிக்க
வேண்டும் என்று என்னிடம் கூறினாள். அவளிடம் பெண் மாஜிஸ்திரேட் 2 தடவை
வாக்குமூலம் வாங்கினார். அந்த 2 தடவையும் அவள் துணிச்சலாக எல்லா
தகவல்களையும் தெரிவித்தாள். வேறு எந்த பெண்ணாலும் இப்படி சொல்ல இயலாது.

என் தோழிக்கு முதலில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் சிறப்பாக இருந்தன. முதல்
அறுவை சிகிச்சைக்கு பிறகு அவள் தெளிவாக பேசினாள். அவள் இறந்து விடுவாள்
என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

என் தோழி சாவில் என்ன நடந்தது
என்பது போலீசார், டாக்டர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் மன சாட்சியுடன்
நடந்து கொண்டாலே போதும். என் தோழி மரணத்துக்கு மெழுகு வர்த்தி ஏற்றுவதால்
எந்த புண்ணியமும் இல்லை. அதுபோல சட்டத்துக்கு என் தோழி பெயர்
சூட்டப்படுவதால் என்ன நடந்து விடும்? நம்மிடம் போதுமான சட்டங்கள் உள்ளது.
ஆனால் அவை சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அந்த சட்டங்கள் பற்றி
மக்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.”என்று மாணவியின் நண்பர்
கூறினார்.

ஜீ நியூஸ் டி.வி.யில் இந்த பேட்டி ஒளிபரப்பானது டெல்லி
போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி நண்பர்தான் இந்த
வழக்கில் முக்கிய சாட்சி ஆவார். அவர் வெளியிட்ட தகவல்களை இதுவரை டெல்லி
போலீசார் ரகசியமாக வைத்திருந்தனர். அது அம்பலமாக்கப்பட்டு விட்டதற்காக ஜீ
நியூஸ் தொலைக்காட்சி மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை
எடுத்துள்ளனர்.

இந்நிலையில் தில்லியில் மாணவி பலாத்காரம்
செய்யப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தில்,அவரது நண்பர் கூறியுள்ள
குற்றச்சாட்டுக்களை காவல்துறை மறுத்துள்ளது.

டிசம்பர் 16ம் தேதி
இரவு இந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததும் காவல்துறையினர் விரைந்து சென்று
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். மாணவியின் நண்பர்
கூறியது போல கால தாமதம் ஏற்படவில்லை என்றும், வழக்கு விசாரணையில்
இருப்பதால், விசாரணை குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்றும்
கூறியுள்ளனர்.புது தில்லியில் இன்று காவல்துறை உயர் அதிகாரி,
செய்தியாளர்களைச் சந்தித்து, நண்பரின் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத்
தெரிவித்துள்ளார்.

via : [You must be registered and logged in to see this link.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum