TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்!

Go down

ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்! Empty ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்!

Post by Tamil Thu Nov 29, 2012 7:10 pm

ஈழப் போரில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு:

பாகம் 01

இப்
பதிவானது ஏற்கனவே நடந்து முடிந்த ஓர் சம்பவத்தைப் பற்றியது. இந்தத்
தாக்குதலோடு தொடர்புடையவர்களில் தற்போது உயிரோடு இருப்பவர்களின் பெயர்
விபரங்கள் யாவும் மாற்றப்பட்டுள்ளது.


சுருக்க விவரணம்:

ஈழப் போராட்ட வரலாற்றில் ஈழம் எனும்
இலட்சியத்தினைத் தாங்கிப் பல போராட்ட அமைப்புக்கள் ஆயுத முனையிலும்,
அரசியல் நீரோட்டத்திலும் போராடி காலவோட்டத்தில் காணாமற் போய் விட்டன.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புத் தான் தாம் தலைமேற் கொண்ட கடமை என
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினைத் தம்மால் முடிந்தளவிற்கு காப்பாற்ற
வேண்டும் எனும் நோக்கில் இறுதி வரை போராடினார்கள். புலிகள்நாற்று அமைப்பினர்
குறைந்தளவு ஆள் பலத்தினையோ அல்லது ஆயுத பலத்தினையோ தம் வசம்
வைத்திருந்தாலும் தம்மோடு போர் புரிந்தவர்களுக்கு அதிகளவான இழப்புக்களைக்
கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்கள்.

ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்! LTTE_Suicide_Attack_20061018_Galle_Harbour_and_Navy_Base

புலிகள் தலைவர் பிரபாகரனும், குறைந்தளவு
ஆளணியினை வைத்துப் பெருமளவனா படையினருடன் மோத வரும் எதிரணியினரை தம்
மனோபலம் எனும் ஆயுதம் மூலம் எதிர்க்கின்ற வலிமையினைத் தன் போராட்ட
அமைப்பிற்குக் கற்றுக் கொடுத்திருந்தார். புலிகள் தீவிரவாதிகள் எனும்
கூற்று உண்மையிலே சரியானது தான். புலிகள்
தாம் கொண்ட கொள்கையிலும் சரி, அல்லது தமது தாக்குதல்களிலும் சரி தம்மைத்
தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டதனால் அவர்களைத் தீவிரவாதிகள் என அழைத்தல் ஒரு
போதும் அவ் அமைப்பினைத் தாழ்த்தியிருக்காது என்று நினைக்கிறேன்.
நாற்று நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த புலிகளின்
ஒவ்வோர் தாக்குதலின் வெற்றியின் பின்னணியிலும் பொட்டம்மான் தலமையிலான
உளவுத் துறை அல்லது புலனாய்வுத் துறையின் பங்களிப்பு அதிகமாக இடம்
பெற்றிருக்கும். உலக வல்லரசு நாடுகள் வியந்து போற்றிய பெருமையினை புலிகளின்
புலனாய்வுத் துறையானது பெற்றிருந்தது. புலிகள் தமது பகுதிக்குள் இடம்
பெற்ற உட்பூசல்கள் மூலம் பல கருமங்களில் வீழ்ச்சி கண்டிருந்த போதிலும்,

இந்த உட் பூசல்களையெல்லாம் முற் கூட்டியே
அறிந்து புலித் தலமையினை, அவதானத்துடன் நடக்கும் படி பல சந்தர்ப்பங்களில்
எச்சரித்த பெருமையினைம் இந்தப் புலனாய்வுத் துறையானது பெற்றிருந்தது.

எச்சரிக்கை செய்யப்படும் நபர்கள் மீது
புலித் தலமைக்கு இருந்த அதீத நம்பிக்கை காரணமாக நம்பிக் கெட்டுப் போன
பெருமையும் இந்தப் புலித் தலைவருக்கு உண்டு. புலிகளின் தாக்குதல்களின்
வெற்றியினை விளக்க ஒரு வசனம் கூறுவார்கள். ‘காற்றுப் போக முடியாத
இடத்திலும் புலிகள் புகுந்து சேதம் விளைவிக்கக் கூடியளவிற்கு தேர்ச்சி
பெற்றிருந்தார்களாம்.

புலிகளின் புலனாய்வுத் துறையினரின்
வீரமிகு- விவேக மிகு பங்களிப்புக்கள் மூலமாக, பல ஆயிரம் எதிரணிப் படைகளால்
தீவிர கண்காணிப்புடன் 24 மணி நேரமும் மின்சாரம் பாய்ச்சப்படும் முட் கம்பி
வேலிகள் கொண்ட பகுதிகளினுள்ளும், ஊடுருவித் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாகத்
தமது தளம் திரும்பக் கூடிய பெருமையினை புலிகள் ஒரு காலத்தில் தம் வசம்
தக்க வைத்திருந்தார்கள்.நாற்று

ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்! Tiger

எதிரணியினரின் குகையினுள், அதிகளவான
சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதியான- இலங்கையின் தலை நகருக்கு சமீபமாக
உள்ள கொழும்புப் பகுதியினுள் ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி
முடிப்பதென்பது கடினமான விடயமாக இருந்த போதிலும், புலித் தலமை சளைக்காது
தனது புலனாய்வுத் துறையினரின் உதவியோடு இந்தத் தாக்குதல்களையெல்லாம்
வெற்றிகரமாக நடாத்தியிருந்தது. நாற்று

ஒரு கட்டத்தில் எதிரணியினரின் குகையினுள்
ஊடுருவித் தாக்கும் தாக்குதல்களுக்கான காய் நகர்த்தல்களை, உளவுத்
தகவல்களைச் சேமிப்பதில் மிகுந்த சிரமங்கள் நிலவிய போதும்; புலித் தலமையும்-
பொட்டம்மானும் கையாண்ட உத்திகள் தான்

*பெண் உளவாளிகளை அனுப்பி இராணுவத்தினரோடு
காதல் களியாட்டங்களில் ஈடுபட வைத்து அவ் இராணுவத்தினர் மூலமாக இராணுவத்
தலமையம், முக்கிய அரசியற் பிரமுகர்களின் வாசஸ்தலம், இராணுவ மையங்கள்,
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் முதலியவற்றினைப் பற்றிய
தகவல்களைச் சேகரித்துக் கொள்ளுவதாகும்.

*சிங்கள மக்களை விலை கொடுத்து(பணம் கொடுத்து) வாங்கி உளவாளிகளாகச் செயற்பட வைத்தல்.

ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்! LTTE_Atrocities_20061201_Gotabhaya_Rajapaksa_02

கொழும்பு
நகரில் இராணுவத்தினரின் புலானய்வுத் தகவல்களைத் திரட்டும் புலியணிக்குப்
பொறுப்பாக நியூட்டன் இருந்த காலப் பகுதியில், இடம் பெற்ற தாக்குதலைப்
பற்றிய மர்மங்கள் தான் இங்கே பகிர்ந்து கொள்ளப்படவிருக்கிறது.
புலித்
தலமையினைப் பொறுத்தவரை தமிழர் விரோதச் செயல்களில் ஈடுபட்ட தமிழர்களை-
தமிழ் அமைச்சர்களைப் போட்டுத் தள்ள வேண்டிய தேவை எழுகின்ற போதெல்லாம்
அதிகளவான ரிஸ்க் எடுக்கமாட்டார்கள்.

தமது எதிராளி ஒரு தமிழ் அரசியற்
கட்சியினைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில்; தமது புலி உறுப்பினர்
ஒருவரை அவர்களது கட்சியினுள் சேர வைத்துத் தமக்கு வேண்டிய தேவையினை அப்
புலி உறுப்பினர் மூலமாக நிறைவேற்றிக் கொள்வார்கள். நாற்று

இந்த இராணுவ அதிகாரி புலிகளால் தீவிரமாக
கண்காணிக்கப்பட்டு வந்த ஒரு நபர். புலிகளால் குறித்த அமைச்சர் மீது, அதாவது
இந்தச் சம்பவத்தின் மூலம் உயிர் தப்பினார் எனக் கூறப்பட்ட அமைச்சர் மீது
தற்கொலைத் தாக்குதல் நடாத்த வேண்டிய அளவிற்கு அக் காலப் பகுதியில் (20….ம் ஆண்டு ஜூ………மாதத்தில்)

அவர் ஒரு முக்கியமான இலக்காக
காணப்படவில்லை, டம்மிப் பீஸ் ஒன்றிற்காக கொழும்பின் உயர் பாதுகாப்பு
வலயத்தினுள் தமது ஆயுதங்களை நகர்த்தித் தற்கொலைப் போராளி ஒருவரைத் தயார்
செய்து தாக்குதல் நடாத்தும் அளவிற்கு புலிகள் அப்போது முனைப்புக்
காட்டவில்லை.

குறிப்பிட்ட அமைச்சர் மீது புலிகள்
தாக்குதல் நடாத்த வேண்டிய தேவை இருப்பின், யாழ் மாவட்டத்தில் அவரது கட்சி
உறுப்பினர்களோடு கூட இருந்து, அக் கட்சி உறுப்பினர்கள் சிலரைச் சுட்டுக்
கொன்று விட்டுச் சென்ற புலிகளால் அவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து இலக்கு
வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கொழும்பு வரை பின் தொடர்ந்து சமாதான ஒப்பந்த
காலப் பகுதியில் இலக்கு வைக்கப்படுமளவிற்கு இவர் அப்போது புலிகள்
அமைப்பிற்கு வேண்டிய ஒரு நபராக காணப்படவில்லை.

ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்! Mi24_01

கொழும்பு மாவட்டத்தில் நிகழும் புலிகளின்
நடவடிக்கைகளைக் கண்காணித்தல், தமிழ் வணிகர்களின் வியாபரத் தகவல்களைத்
திரட்டி இராணுவத்தினருக்கு வழங்குதல் முதலிய விடயங்களில் ஜால்ராப் போட்டு
வீணை வாசித்துக் கொண்டிருந்த ஒருவர்…அடிக்கடி இராணுவத்தின் கொழும்பு
மாவட்டப் புலனாய்வுப் பிரிவில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இஸ்லாமிய
அதிகாரியினைத் தனது கட்சி அமைவிடத்திற்கு அழைத்துச் சந்திப்புக்களை
மேற்கொண்டு இரசியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார். நாற்று

இனி……….யார் மீது? எத்தனை பேரின்
உதவியோடு, புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித வெடி குண்டுத் தாக்குதல்
எனப்படும் கரும்புலித் தாக்குதல் தோல்வியடைந்தது? அது எப்படித் திசை
திருப்பட்டது எனும் தகவல்கள் அடுத்த பாகத்தில் பார்ப்போமா……………..

அன்பான அறிவித்தல்: ஏற்கனவே
நடந்து முடிந்த, வழக்குகள் யாவும் நிறைவுற்ற, குற்றவாளிகள் தண்டனை
பெற்றுக் கொண்ட சம்பவத்தினையே இங்கு பகிர்கிறேன். இம் மர்மங்களை
எழுத்துருவிற்கு கொண்டு வருவதன் மூலம்; குறித்த அமைச்சரைப் பற்றிய
தகவலினைப் பகிரங்கப்படுத்த நான் முயற்சி செய்யவில்லை.
நடந்து
முடிந்த ஒரு சம்பவத்தினை இங்கே பகிர்வதால், இக் கட்டுரையினைக்
கட்டுரையாகவே விட்டு விடுவோம். யார் மனதையும் புண்படுத்த வேண்டும் எனும்
நோக்கிலோ, அல்லது சம்பவத்தோடு தொடர்புடைய நபரை இக் கட்டுரையூடாக
வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவோ இக் கட்டுரையினை இங்கே
எழுதவில்லை.

thanks:http://www.puradsifm.com/athiradi/
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்! Empty Re: ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்!

Post by Tamil Thu Nov 29, 2012 7:11 pm

கொழும்பு
மாவட்டத்தில் நிகழும் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், தமிழ்
வணிகர்களின் வியாபரத் தகவல்களைத் திரட்டி இராணுவத்தினருக்கு வழங்குதல்
முதலிய விடயங்களில் இராணுவத்திற்குச் சார்பாக ஜால்ராப் போட்டு வீணை
வாசித்துக் கொண்டிருந்த ஒருவர்…அடிக்கடி இராணுவத்தின் கொழும்பு மாவட்டப்
புலனாய்வுப் பிரிவில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இஸ்லாமிய
அதிகாரியினைத் தனது கட்சி அமைவிடத்திற்கு அழைத்துச் சந்திப்புக்களை
மேற்கொண்டு இரசியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார். நாற்று
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
இனி……….யார் மீது? எத்தனை பேரின் உதவியோடு, புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித
வெடி குண்டுத் தாக்குதல் எனப்படும் கரும்புலித் தாக்குதல் தோல்வியடைந்தது?
அது எப்படித் திசை திருப்பட்டது எனும் தகவல்கள் அடுத்த பாகத்தில்
பார்ப்போமா………….



ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்! Nisham+Muththalif

நிஷாம்
முத்தலிப் என்ற பெயரை அறியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். இலங்கை
அரசின் இராணுவ புலனாய்வுத் துறையில் 1995-2005ம் ஆண்டு வரையான காலத்தில்
புலனாய்வுத் துறையின் வழி நடத்துனராக இருந்தவர் தான் இந்த நிஷாம்
முத்தலிப். கொழும்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் பல அப்பாவி வட
கிழக்குத் தமிழர்களைக் கைது செய்து, அவர்களை நாலாம் மாடி, போகம்பரை முதலிய
வதை முகாம்களுக்கு அனுப்புவதற்கு முன்பதாக தந்திரமாக விசாரணை செய்து
புலிகள் பற்றிய சிறு துரும்புத் தகவலைக் கூட இலாவகமாகப் பெற்றுக் கொள்வதில்
வல்லவராக விளங்கினார் நிஷாம் முத்தலிப்.


கொழும்பு
மாவட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காரணமின்றிக் கைது
செய்யப்பட்டு நாலாம் மாடி எனும் சித்திரவதைக் கூடத்திற்கு அனுப்பப்பட்ட பல
தமிழ் உறவுகளிற்கு நிஷாமின் வலது கையின் ஐந்து விரல்களும் கன்னத்தில்
அச்சுப் போல் பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இதே வேளை பல தமிழர்களை
இலகுவில் மயக்கி, விலை பேசி தன் வசப்படுத்திப் புலிகளால் கொழும்பு
மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்து
கொழும்பு மாவட்டத்தில் ரகசியமாகப் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும்
புலிகளின் நடமாட்டத்தினை வேரோடு கிள்ளி எறிவதிலும் முனைப்புக் காட்டியவர்
தான் மேஜர் துவான் நிஷாம் முத்தலிப். தமிழை வழுவின்றித் தெளிவாகப்
பேசுவதிலும் நிஷாம் முத்தலிப் தேர்ந்த ஒரு முஸ்லிம் தமிழராக
வாழ்ந்திருக்கிறார்.




2004ம் ஆண்டு, ஜூலை மாதம், 07ம் திகதி.
நிஷாம் அவர்கள் கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அரசாங்கத்திற்கு
விசுவாசமாக வாலாட்டுகின்ற அமைச்சரின் அலுவலகத்திற்கு வழமை போன்று
வருகின்றார். வழமையாக (தொடர்ச்சியாக) குறிப்பிட்ட ஜால்ரா நபரைச் சந்தித்து
தமிழர் தரப்பின் பல உளவுத் தகவல்களையும், கொழும்பு மாவட்ட தமிழ்
வணிகர்களின் தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்காக நிஷாம் முத்தலிப் அவர்கள்
வருவதனை புலிகள் அறிந்து வைத்திருந்தார்கள். நீண்ட நாட்களாக புலிகளின்
அணிகளால் வலை வீசிக் கதை முடிக்க காத்திருக்கும் பட்டியலில் உள்ள நபராக
நிஷாம் முத்தலிப் அவர்கள் இருந்தாலும், கொழும்பின் உயர் பாதுகாப்பு
வலயத்தினுள் நிஷாமின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த
காரணத்தினாலும் அவர் மீது தாக்குதல் நடாத்துவதற்கான சந்தர்ப்பம்
புலிகளுக்கு இலகுவில் கிடைக்கவில்லை.




சம்பவ
தினம், நிஷாம் அமைச்சரைச் சந்தித்து உரையாடும் வேளை, மறு புறத்தில்
கொழும்பில் இராணுவப் பாஸ் பெறுவதற்காக அமைச்சரின் காலடியில் விழுந்து
கெஞ்சுவதற்காக ஒரு தொகுதி மக்களும், ஏனைய அலுவலகங்களில் தம் பதவியினைத்
தக்க வைப்பதற்காக இன்னோர் பகுதி மக்களும் வாசலில் காத்திருக்கிறார்கள்.
நிஷாம் தன் அலுவலகத்திற்கு வருகை தந்ததை உணர்ந்த அமைச்சர் தனியாக அவரைச்
சந்தித்து உரையாடத் தயாராகின்றார். இந் நிகழ்வுகள் அனைத்தையும் உற்று
நோக்கியபடி, வாசலில் தற்கொலையாளிப் பெண் காத்திருக்கிறார்.




அமைச்சரைச்
சூழ்ந்திருந்தோர் விலகும் சமயம் பார்த்து தன் கருமத்தில் கண்ணாக இருந்த
அப் பெண் நிஷாமினை நோக்கிப் பாய்வதற்குத் தயாரான வேளை, நிஷாம் திடீரென்று
உள்ளே போகின்றார். அமைச்சருக்கு அருகாக சந்தேகத்திற்கிடமான பெண் நிற்கிறாள்
என்பதனை அறிந்த மெய்க் காவலர்கள், அப் பெண்ணினை நோக்கி விரைந்து செல்லும்
சந்தர்ப்பத்தில் அப் பெண் தன்னால் இன்று தாக்குதலைச் சரியாகச் செய்து
முடிக்க முடியாத சந்தர்ப்பம் உருவாகி விட்டதனை உணர்ந்து தான் உயிரோடு
எதிரியிடம் அகப்படக் கூடாது எனும் நோக்கில் குண்டினை வெடிக்க வைக்கின்றாள்.



ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்! Colombo_checkpoints


விடயத்தைப்
புரிந்து கொண்ட நிஷாம் சமயோசிதமாக ஏனைய இராணுவப் பாதுகாப்பு பிரிவினர்
சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பதாக வெளியேறுகின்றார். இராணுவத்தினர்
வந்ததும், 10வது தடவையாகப் புலிகள் தன் மீது தற்கொலைத் தாக்குதல் என
பதற்றதோடு செய்தி பரப்பி, அதனை ஊடகங்களிற்கும் அனுப்புகின்றார் அமைச்சர்.
இதன் பின்னர் நடந்தது என்ன? நிஷாம் முத்தலிப் அவர்கள், தீவிர விசாரணையினை
மேற்கொண்டு, குறிப்பிட்ட அந்தப் பெண்ணும், ஏனைய ஒரு சில புலிகளின்
உளவாளிகளும், தன்னை நோக்கித் தான் தாக்குதல் நடத்தும் நோக்கில் அமைச்சரின்
அலுவலகத்திற்குத் தான் வரும் நாட்களை எதிர்பார்த்து வந்திருக்கிறார்கள்
எனும் உண்மையினை அறிந்து கொள்கின்றார்.




சமயோசிதமாகச்
செயற்பட்ட நிஷாம்; தன் மீதான தாக்குதலுக்கு புலிகளின் தலமையால் அனுப்பி
வைக்கப்பட்ட கொழும்பில் உள்ள எஞ்சிய புலிகளின் நடவடிக்கைகளைத் திசை
திருப்பி; புலிகளின் தலமைப் பீடத்திற்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் எனும்
நோக்கில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கினார் நிஷாம் முத்தலில் பிரஸ்தாப
அமைச்சரைச் சந்திப்பதில்லை என்றும், தமிழ் அமைச்சரின் அலுவலகத்திற்குப்
போவதுமில்லை என்றும் ஒரு மாயையினை உருவாக்கினார். அவராகவே சம்பவத்தோடு
தொடர்புடையவர்கள் என்று அமைச்சரின் அலுவலத்தில் விசுவாசிகளாகப் பணி புரிந்த
இருவரை விசாரணைக்கு என அழைத்துச் சென்று நாடகமாடினார். புலிகளின் தலமைப்
பீடம் தாம் அனுப்பிய போராளிகள் தவறான இலக்கினை எட்டி விட்டார்கள் என்று
நம்பும் படியான நடவடிக்கைகளில் இறங்கித் தன் உயிரினைப் பாதுகாக்கும் விடா
முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார் நிஷாம்.




மங்கை,
அன்பரசன், நெடுங்குரலோன், செந்நிலா (இவை யாவும் புனை பெயர்கள்) எனப்
புலிகளால் அனுப்பப்பட்ட போராளிகளில், மங்கை குறிப்பிட்ட தாக்குதலில்
உயிரிழந்து கொள்ள, ஏனைய மூன்று போராளிகளும் தவறான வழியில் தாக்குதலை
நடத்தியாக தலமைப் பீடத்திலிருந்து கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கை அறிவுப்பு
நியூட்டன் அவர்கள் ஊடாக பரிமாறப்படுகின்றது. இவ் வேளையில்
கொள்ளுப்பிட்டிக்கு அண்மையில் உளவு பார்த்தார் எனும் குற்றச் சாட்டில்
அன்பரசன் அவர்கள் கைது செய்யப்படுகின்றார்.அன்பரசனின் கைது மூலம் நிஷாம்
பற்றிய தாக்குதல் தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக்
கொள்கின்றார்கள்.



ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதலும், அதன் பின்னுள்ள மர்மமும்! N4435646456412381582292


நெடுங்குரலோனுக்கும்
இலக்கில் சறுக்கல்கள் ஏற்படுவதற்குச் சான்றாக, இராணுவ வீரர்கள் வந்து
போகும் விபச்சார நிலையத்திற்குச் சென்று தகவல் சேகரித்து வரும் காலப்
பகுதியில் அங்கே உள்ள ஒரு பெண்ணோடு காதல் ஏற்பட்டுக் கொள்கிறது. இவ் விடயம்
பொறுப்பாளரிற்குத் தெரிந்து கொள்ள கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்
நெடுங்குரலோன்.
இக்
காலப் பகுதியில் திடீரென நியூட்டன் இருக்கும் இடத்தினை இலங்கையின்
புலனாய்வுப் பகுதி அதிகாரிகள் சூழ்ந்து கொள்ள, நிஷாம் மீதான தாக்குதல்
தோல்வியில் முடிவடைகின்றது. ஆனாலும் புலிகளின் தலமை தன் மன உறுதியினை
இழக்கவில்லை.




செந்நிலாவினைப்
பாதுகாப்பாக வன்னிக்கு அழைத்த புலிகளின் தாக்குதற் பிரிவினர், மீண்டும்
புதிய மூன்று போராளிகளை அனுப்பி நிஷாம் முத்தலிப்பைக் கண்காணிக்கத்
தொடங்குகிறார்கள். 2005ம் ஆண்டு மே மாதம், 31ம் திகதி காலை 7.50 மணியளவில்
நரஹேன்பிட்டி- பொல்ஹன்கொடச் சந்தியில் (கொழும்பிலிருந்து சற்றுத்
தொலைவிலுள்ள இடம்) வைத்து நிஷாம் முத்தலிப் அவர்கள் மோட்டார் சைக்கிளில்
வந்த புலிகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.




“ஈழத்தை
அதிர வைத்த தற்கொலைத் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்து கொள்ள, அதன் மூலம்
இராணுவ புலனாய்வுத் துறையினைச் சேர்ந்த நிஷாம் அவர்கள் தன் நிலையினைப்
பலப்படுத்திட முயற்சிகள் எடுக்கும் சந்தர்ப்பத்தில், பிரஸ்தாப அமைச்சரோ தன்
சுய நலத்திற்குச் சாதகமாகத் தாக்குதலை காரணங் காட்டித் தன் பாதுகாப்பினை
அதிகரித்துக் கொண்ட காலப் பகுதியில், புலிகள் மீண்டும் தாம் மன வலிமையில்
எப்போதும் குறைந்தவர்கள் அல்ல என்பதனை நிரூபித்து சிறு சத்தம் ஏதுமின்றி
வெற்றி கரமாக நிஷாம் முத்தலிப் மீதான தாக்குதலை நிறைவு
செய்திருந்தார்கள்.”




அன்பான அறிவித்தல்: ஏற்கனவே
நடந்து முடிந்த, வழக்குகள் யாவும் நிறைவுற்ற, குற்றவாளிகள் தண்டனை
பெற்றுக் கொண்ட சம்பவத்தினையே இங்கு பகிர்கிறேன். இம் மர்மங்களை
எழுத்துருவிற்கு கொண்டு வருவதன் மூலம்; குறித்த அமைச்சரைப் பற்றிய
தகவலினைப் பகிரங்கப்படுத்த நான் முயற்சி செய்யவில்லை. நடந்து முடிந்த ஒரு
சம்பவத்தினை இங்கே பகிர்வதால், இக் கட்டுரையினைக் கட்டுரையாகவே விட்டு
விடுவோம். யார் மனதையும் புண்படுத்த வேண்டும் எனும் நோக்கிலோ,
அல்லது சம்பவத்தோடு தொடர்புடைய நபரை இக் கட்டுரையூடாக வெளிச்சத்திற்கு
கொண்டு வரவேண்டும் என்பதற்காகவோ இக் கட்டுரையினை இங்கே எழுதவில்லை.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum