TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள்.

3 posters

Go down

சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள். Empty சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள்.

Post by sakthy Tue Oct 16, 2012 11:44 pm

சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள்.

ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை மூலம் பலி கொடுத்து, தமிழர்களின் மனத்தில் அழியாத வடுவாகி விட்ட இந்த அரக்கத்தனமான கொடிய செயலையும், அதே நேரம்,இரண்டாம் உலக யுத்தத்தில் அணுக் குண்டுகளால் பலி எடுக்கப்பட்ட அப்பாவி மக்களையும்,நாசிகளால் கொல்லப்பட்ட யூதர்களையும் நினைவு கொண்டு,அன்று நடந்த கொடுமைகளில் ஒன்றான ஹிரோஷிமா நாகசாக்கி அழிவு பற்றி, சிறிது தெரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பதிவு அமைகிறது. மறக்க முடியாத ஹிரோஷிமா,நாகசாக்கியும்,மறக்க முடியாத யூதப் படுகொலையும்,மறக்க முடியாத ஈழ இனப்படுகொலையும் மனிதனால் என்றும் மறக்க முடியாததும், வெட்கப்பட வேண்டியவையும் ஆகும். படுகொலை செய்யப்பட்ட அந்த மக்களையும் மாவீரர்களையும் என்றும் நினைவு கொள்ள வேண்டியது மனித இனத்தின் கடமையாகும்.

இரண்டாம் உலக யுத்தத்தின் உச்ச கட்டம்,ஒரு பக்கம் ஜப்பான் முன்னேறிய நேரம்,அடுத்து ரஷ்யா முன்னேறிக் கொண்டிருந்த வேளை, இறுதியாக................

நேச நாடுகள் ஜப்பான் மீது தீக் குண்டுகளை வீசித் தாக்கிக் கொண்டிருந்த வேளை,ஐரோப்பிய போர்முனையில் நாசி செருமனி 1945, மே 8ஆம் நாள் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. அதே நாளில் "சரண் ஆவணம்" (instrument of surrender) கையெழுத்தானது. அதே நேரம் பசுபிக் போர் முனையில் போர் தொடர்ந்தது.அதைத் தொடர்ந்து,1945, சூலை 26ஆம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தோடு இணைந்து, பாட்சுடம் அறிக்கை (Potsdam Statement) வெளியிட்டு, ஜப்பானின் அரசு தோல்வியை ஏற்று, நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று தெரிவித்தது.அதை ஜப்பான் ஏற்காத நிலையில் மான் கற்றன் செயல் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அணுக்குண்டுகளை அமெரிக்கா வீசியது.

1945 ஆக்ஸ்ட் 6,ல், போயிங்க் பி 29 எனோலா கை (Enola Gay)என்ற விமானம், யூரேனியம் செறிவூட்டப்பட்ட அணுக் குண்டை சுமந்து கொண்டு,அமெரிக்க விமானப்படையின் விமானி, கர்னல் போல் டிபெட்ஸ்(Colonel Paul Tibbets) ஒட்டிச் செல்ல, ஜப்பானை நோக்கிப் பறந்து, காலை 8.15 ற்கு, ஹிரோஷிமாவில் குண்டை வீசியது. இந்தக் குண்டு டினிட்டி சோதனைக்குப் (அனுக்குண்டுப் பரிசோதனை மெக்சிக்கோ நாட்டிற்கு 56 கி.மீ.தூரத்தில் உள்ள Jornada del Muerto என்ற பாலைவனத்தில் 1945 ஜூலை 16 ல் பரிசோதிக்கப்பட்டது) பின்னான இரண்டாவது செயற்கைக் குண்டும், முதலாவது அணு ஆயுதமுமாகும்.64 கிலோ யூரேனியத்தில்,600-860 மில்லிகிராம் வரையே, யுரேனியம்-235 கொண்ட இதன் செறிவு 16 கிலோ தொன்களாகும்.இந்தக் குண்டினால் உடனடியாக 90.000 பேரும்,10 கிலோ மீற்றர் சுற்றளவிற்குள் இருந்த 145.000 பேர் ஒரு மாதத்திற்குள்ளும் இறந்தனர். நான்கு கிலோ மீற்றர் சுற்றளவிற்குள், 10 வினாடிக்குள் முற்றாக நகரம் அழிக்கப்பட்டது.இந்த முதல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுக்குண்டை,மான் கற்றன் ப்ரொஜெக்ட் (Manhattan Project) தயாரித்தது.

இதைத் தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 9,காலை 11.02 ற்கு, இரண்டாவது அணுக்குண்டு, பொக்ஸ் கார் என்ற பி -29 ரக போர் விமானத்தில் இருந்து, சார்ள்ஸ் சுவீனி( Charles Sweeney) என்ற விமானியால் நாகசாக்கியில் 550 மீ. உயரத்தில் இருந்து வீசப்பட்டது.இந்தக் குண்டு 6,2 கிலோ புளுடோனியம் கொண்டு அதன் செறிவினால் 21 கிலோ தொன் களைக் கொண்டதாக இருந்தும்,நாகசாக்கி மலைப்பாங்கான பகுதியாக இருந்ததால், உயிரிழப்பு சிறிது குறைவாகவே இருந்தது என்கிறார்கள். இங்கே 40.000 பேர் உடனடியாகவும்,75,000 பேர் அந்த வருட இறுதிக்குள்ளும் இறந்தனர்.இந்தக் குண்டு 6,7 சதுர கி.மீ பகுதியை முற்றாக எரித்து சாம்பலாக்கியது.

கதிரியக்கம்,எரி காயங்கள்,கட்டிட இடிபாடுகள் என பல வகையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.இந்த
அழிவுகள் உடனடியானவையாகவும்,பின்னர் சுற்றி இருந்த பல ஆயிரக்கணக்கனோர், கதிரியக்கம் காரணமாக உடல் ஊனமுற்றவர்களாகவும்,மற்றும் பல முறைகளில் பாதிக்கப்பட்டனர். இன்றும் அதன் தாக்கம் பலரிடம் இருப்பது கானப்பட்டுள்ளது.

இந்தக் குண்டுகளுக்கு வைக்கப்பட்ட பெயர், சின்னவன்(Little Boy) அமெரிக்க அதிபர் ரூஸ்வல்ட்டையும்,பெரியவன் (Fat Man)வின்சண்ட் சர்ச்சிலைக் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

1945, ஆகத்து 15ஆம் நாள், அதாவது, நாகசாக்கியில் அணுகுண்டு வீசப்பட்ட ஆறாம் நாள், ஜப்பான் போரில் தோல்வியை ஏற்று நேசநாடுகளின் முன் சரணடைந்தது. அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் ஜப்பான் சரண் ஆவணத்தில் (Japanese Instrument of Surrender) கையெழுத்திட்டது. இதைத் தொடர்ந்து உலகப் போர் முடிவுக்கு வந்தது. இந்த அணுக்குண்டை போடாதிருந்தால்,வேறு வகையில் மக்கள் பல அழிவுகளை சந்திக்க நேரிட்டு இருக்கும் என அமெரிக்கா தன் சார்பில் சமாதனத்தை வைத்தது.ஆனாலும்,அமேரிக்கா ஏர்கனவே ஜப்பானை தாக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.இரண்டாம் உலகப் போரின் போது 1.25 மில்லியன் அமெரிக்க போர் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒரே மாதத்தில் 88,000 இராணுவ வீரர்கள் ஜேர்மனியில் நாசி படையினரால் கொல்லப்பட்டு இருந்தனர். இதன் தாக்கம் அணுக்குண்டாய் மாறி, அப்பாவி மக்களை சின்னா பின்னமாக்கியது. இது எந்த விதத்தில் நியாயம் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இந்தப் போரின் முடிவில் 1967 ல் ஜப்பான் நாடு தனக்கென மூன்று கொள்கைகளை கைப் பிடிக்க முடிவு செய்தது. அவை,ஜப்பான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது; அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டிராது;அணு ஆயுதங்கள் ஜப்பானுக்குள் வர இசையாது.

இந்த அணுக்குண்டு தாக்குதலை, மிக மோசமான பயங்கரவாத செயல் என்று இன்றும் வர்ணிக்கிறார்கள்.

சக்தி.



avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள். Empty Re: சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள்.

Post by மாலதி Wed Oct 17, 2012 6:45 am

சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள். 917304 சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள். 917304 சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள். 917304 சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள். 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள். Empty Re: சின்னவன் பெரியவனால் நாசமாக்கப்பட்ட ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum