TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தை தமிழர் ஒருவரின் சோகக்கதை!

Go down

ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தை தமிழர் ஒருவரின் சோகக்கதை! Empty ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தை தமிழர் ஒருவரின் சோகக்கதை!

Post by மாலதி Wed Oct 10, 2012 9:58 am

ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணம்
மேற்கொண்டு, நாடு திரும்பி விட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது
சோகக் கதையினை பகிர்ந்து கொள்கிறார்.

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரி கிறிஸ்மஸ்
தீவை வந்தடைபவர்களை தென் பசுபிக் கடற்பரப்பிலுள்ள நாவுறு தீவில் தங்கவைத்து
விசாரணைகளை மேற்கொள்ள ஏற்கனவே ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தை தமிழர் ஒருவரின் சோகக்கதை! ஸ்ரீலங்கன்-இன்-போட்-வித்-ஆஸ்திரேலியா-போலீஸ்
கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதிக்கு பின்னர் புகலிடம் கோரி வருபவர்கள் அந்த
தீவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு செல்ல விரும்பாதவர்கள் சுய
விருப்பத்தின் பேரில் நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கடந்த மாதம் 22ஆம் தேதி 18 பேரும், 29ஆம் தேதி 26 பேரும்,
தமது சுய விருப்பத்தின் பேரில் சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு
வழித்துணையுடன் நாடு திரும்பியுள்ளார்கள்.

இறுதியாக நாடு திரும்பியவர்களில் சிங்களவர்கள் 23 தமிழர்கள் 2 முஸ்லிம் 1
என்ற எண்ணிக்கை அடங்கும் இவர்களில் தமிழர்களில் ஒருவரான யாழ் மாவட்டத்தைச்
சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது பயணம் தொடர்பாகவும் மேலும் கிறிஸ்மஸ் தீவிலுள்ள ஏனைய இலங்கையர் பற்றி தெரிவிக்கையில்,
””கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு பயண ஏற்பாட்டாளர்களால்
கடல் பிரதேசமொன்றிற்கு 23ஆம் தேதி வாகனமொன்றில் அழைத்துச் செல்லப்பட்டோம்.

கொழும்பிலிருந்து நான்கு மணித்தியாலங்கள் வாகனத்தில் பயணம் இரவு நேரம்
என்பதால் இடங்களை அடையாளம் காண முடியவில்லை. அதிகாலை ஒரு மணிக்கு எங்களை
ஏற்றிய படகு தனது பயணத்தை ஆரம்பித்தது.

இந்த பயணத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி பிள்ளை உட்பட 66
பேர் பயணம் செய்தோம். 18 முதல் 19 நாட்கள் பயணத்தின் பின்னர் செப்டெம்பர்
கொஸ்கோ தீவை சென்றடைந்தோம். கடல் பயணத்தின் போது வாந்தி, மயக்கம், தலைவலி
போன்ற பிரச்சினைகளை எதிர் நோக்கினார்கள் இந்த பயணத்தை ஏன் தான் நாடினோம் என
எண்ணத் தோன்றியது.

எனது குடும்பத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே பொருளாதார ரீதியாக பெரிதும்
பாதிக்கப்பட்டது. எனது தந்தையார் கூலி வேலை செய்து தான் எங்களை வளர்த்தார்.
அவரது கடின உழைப்பு நோய் காரணமாக தொடர்ந்தும் அவருக்கு தொழிலுக்குச் செல்ல
முடியாத நிலை.

இந்நிலையில் எனது குடும்ப பொருளாதார நிலையைக் கருதியே சட்டவிரோத பயணமாக
இருந்தாலும் இந்த பயணத்தை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். எனது
காணியில் ஒரு பகுதியை மூன்று இலட்சம் ரூபாவிற்கு விற்று பயண
ஏற்பாட்டாளர்களுக்கு முற்பணமாகக் கொடுத்தேன்.

சட்டவிரோத பயணமாக இருந்தாலும் மிகவும் ஆபத்தான பயணமாக இருந்தாலும் அந்த
நாட்டில் தொழில் வாய்ப்பு பெற்று ஒரு காலத்தில் நாடு திரும்பும் போது
இலங்கை அரசாங்கம் பொது மன்னிப்பு தரும் என்ற நம்பிக்கையும் எனக்கு
இருந்தது.

ஆகஸ்ட் மாதம் 23ஆந் திகதி கிறிஸ்மஸ் தீவில் நான் தங்க வைக்கப்பட்ட போது
நாட்டுக்குள் புகலிடம் கோரி வருபவர்கள் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள
புதிய தீர்மானம் பற்றி எமக்கு விளக்கமளித்தனர்.

அதாவது ஆகஸ்ட் 13ஆந் திகதிக்கு பின்னர் நாட்டுக்குள் நுழைபவர்கள் நவுறு
தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு பின்னர் தான் புகலிடம்
பற்றி தீர்மானிக்கப்படும். இப்படி அங்கு செல்லாதவர்கள் சுயவிருப்பத்தின்
பேரில் நாடு திரும்ப விரும்பினால் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின்
வழித்துணையுடன் அதற்கான ஏற்பாடு செய்யப்படும். அந்த அமைப்பின் ஊடாக
நாட்டில் தொழில் செய்வதற்கான வசதிகளும் செய்து தரப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டது.
ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தை தமிழர் ஒருவரின் சோகக்கதை! Srilankan-இன்-அப்செட்-பிக்
நவுறு தீவில் தங்க வைக்கப்படும் கால எல்லை பற்றி அவர்கள் எதுவும்
குறிப்பிடவில்லை என்றாலும் அது நீண்டகாலம் எடுக்கும் போல் தெரிந்தது.
குடும்பத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு உழைக்க வேண்டும் என சென்று
என்னைப் பொறுத்தவரை இவ்வாறு நீண்டகாலம் தங்கியிருப்து என்னைப் பொறுத்தவரை
முடியாத காரியம்.

இந்நிலையில் எனது குடும்பத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினேன்.
அவர்களும் நாடு திரும்ப சம்மதம் தெரிவித்தார்கள். 20 நாட்கள் கிறிஸ்மஸ்
தீவில் தங்கியிருந்த நான் நாடு திரும்பினேன்.

அவுஸ்ரேலியா அதிகாரிகள் மற்றும் சர்வதேச புலம்பெயர்தோர் அமைப்பு
வழித்துணையுடன் நாடு திரும்பினேன். விமான நிலயத்தில் குடிவரவு குடியகல்வு
அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர், குடும்ப விபரம் மற்றும்
பயணத்தின் நோக்கம் பற்றி கேட்டு பதிவு செய்தனர்.

குடும்பத்தின் பொருளாதாரம் கருதியே இந்த சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ள
வேண்டி ஏற்பட்டது என தெரிவித்த போது, இனி இவ்வாறான பயணத்தை நாட வேண்டாம்
எனக் கூறி விமான நிலையத்துக்கு வெளியே செல்ல அனுமதித்தனர். விசாராணைகளைப்
பொறுத்தவரை எவ்வித கெடுபிடிகளுமின்றி சாதாரணமாகவே நடைபெற்றது.
ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தை தமிழர் ஒருவரின் சோகக்கதை! Srilankan-in-விமானத்தில்-ரிட்டர்ன்
விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது 29 ஆயிரம் 767 ரூபா பணத்தை
யாழ்ப்பாணம் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளுக்காக ஒரு
அமைப்பொன்ற வழங்கியது. அந்த அமைப்பின் யாழ் பிரதேச அமைப்பாளர்களால் தொழில்
செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தருவர்கள் என கூறப்பட்டது.

கிறிஸ்மஸ் தீவைப் பொறுத்தவரை குடும்பங்கள் கொஸ்கோ தீவில் தங்க
வைக்கப்பட்டுள்ளார்கள். அங்கு இலங்கையர்கள் மட்டுமல்ல பாகிஸ்தான்,
பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும்
தங்கியுள்ளார்கள்.

அங்கு தங்கியிருந்த காலத்தில் பராமரிப்பு நன்றாக இருந்தது விசேட ஆங்கில
வகுப்புகள் நடைபெறுகிறது. உறவினர்களுடன் தொடர்பு கொள்ள தொலைபேசி வசதி
செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகைப் பணமும் கைச் செலவிற்கு
வழங்கப்படுகிறது.

நவுறு தீவைப் பொறுத்தவரை அங்கு இப்படியான வசதிகள் அங்கு எதிர்பாக்க
முடியாதென அங்கு தங்கியுள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள். காட்டுப் பிரதேசம்
கூடாரங்களில் தான் தங்க வைக்கப்படுவார்கள் எவ்வளவு காலத்துக்குத்தான் அங்கு
தங்கியிருப்பது என்று தெரியவில்லை என்ற காரணத்தினால் கிறிஸ்மஸ் தீவிலுள்ள
பலரும் அங்கு செல்ல விரும்புவதாக இல்லை.

இலங்கையரைப் பொறுத்தவரை நவுறு தீவுக்குச் செல்வதா? நாடு திரும்புவதா?
என்ற நிலையிலுள்ளனர். அவர்களின் மனநிலையைப் பொறுத்தவரை பல்வேறு
கஸ்டங்களுக்கு மத்தியில் இலட்சக் கணக்கில் பணம் செலவளித்துவிட்டோம்.
நடப்பது நடக்கட்டும் நவுறு தீவுக்குச் செல்வோம் என ஒரு சாரார் நிலைப்பாடு
உள்ளது. மற்றவர்களைப் பொறுத்தவரை தொழில் வாய்ப்பு விரைவாக கிடைக்கும் என்ற
நம்பிக்கை இழந்த நிலையில் நாடு திரும்புகிறார்கள்.

என்றாலும் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் ஏதாவது வழி கிடைத்து
அவுஸ்ரேலியாவிற்குள் செல்ல அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது
ஆனாலும் இது எந்தளவு சாத்தியப்படும் என்று தெரியாது””. என
தெரிவித்துள்ளார்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான் ஆபத்தான நாடு : முஷாரப்
» இலங்கை ஆபத்தான நாடு! அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை! நிராகரிக்கிறது சுற்றுலாத்துறை
» நாடு திரும்பிய இந்திய மீனவர்கள்: இலங்கை சிறையிலிருந்து விடுதலை
»  ஆஸியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழர் ஒருவரின் ஓவியத் திறமை! (ஓவியங்கள் சிலவற்றின் புகைப்படங்களைக் காணலாம்)
» பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் இலங்கைத் தமிழர் ஒருவரின் பிரபலமான கடையினை இரண்டு முகமூடியணிந்த திருடர்கள் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum