TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு!

2 posters

Go down

கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு! Empty கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு!

Post by சாமி Mon Oct 08, 2012 11:39 pm

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சைவத் தமிழ் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சைவப் பெரியோர்களும், ஆன்மீக அறிஞர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத்தீர்மானம் அனைவரின் முன்னிலையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத்தீர்மானம் அனைவரின் முன்னிலையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.

சுவர்ண பூமி என்றழைக்கப்படுகின்ற சுவிட்சர்லாந்தில் பேர்ண் நகரில் 16. 09. 2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அருள்ஞானமிகு ஞானம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் தீர்த்தத்திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சைவத்தமிழ் மாநாடும் அதனைத் தொடர்ந்து மாநாட்டில் செந்தமிழ் வழிபாட்டுப் பிரகடனம் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் சைவ உலகத் தமிழ் அறிஞர்களிடையே செய்யப்பட்டது.

நால்வரும் திருமுறைகளும்

அன்று முதலாவது நிகழ்வாக சமயக்குரவர் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகப்பெருமான் என நால்வரையும் ஞானலிங்கேச்சுரர் ஆலயக்குருமார்கள் முரளி ஐயா, விக்னேஸ் ஐயா, கிரி ஐயா, சுரேஸ் ஐயா ஆகிய நான்கு குருமார்களும் நாயன்மார்களை காவிவர ஞானலிங்கேச்சுரர் அடியவர்களும், உலக சைவப்பேரவைத் தொண்டர்களும் பூமாரி பொழிய சசிஐயா, கிளிஐயா வெள்ளித்தாம்பாளத்தில் அருட்பெரும் செல்வர் நம்பியாண்டார் நம்பி தொகுத்தளித்த செந்தமிழ்த் திருமறைத் திருமுறைகளைத் தாங்கிவர ஆரம்பமானது.

சைவ அறிஞர்களுக்கு வரவேற்பு

நால்வரும் திருமுறைகளும் மேடையில் எழுந்தருள, சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தேவாரம் பாடி மாநாட்டினை ஆரம்பித்து நிகழ்ச்சித் தொகுப்பினை திருநிறை. சாமிக்கண்ணு தினேஸ்குமார் அவர்களிடம் கையளித்தார். மாநாட்டு வரவேற்புரையினை அருட்திரு. யோகன் ஐயா, ஞானலிங்கேஸ்வரர் திருத்தொண்டர் ஆலோசகர் ஆற்றினார். அவர் தனது உரையில் இந்நிகழ்வானது இறைவன் ஏற்பாடாகும் எனும் பொருட்பட ஆற்றி கூடியிருக்கும் திருக்கூட்டத்தையும் சைவத்தமிழ் அறிஞர் பெருமக்களையும் சைவநெறிக்கூடத்தின் பெயராலும் உலக சைவப் பேரவையின் பெயராலும் வரவேற்றார்.

சைவத்தமிழ்த்திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டின் தேவை தொடர்பாக யோகிராம் சுந்தர், யோகாசன ஆசிரியர் (யோகி), இலண்டன், வினாசித்தம்பி தில்லையம்லம், ஆலோசகர் ஞானலிங்கேச்சுரர் ஆலயத் திருத்தொண்டர்சபை, இளங்கோ ஏரம்பமூர்த்தி, தமிழாசிரியர், சித்தவைத்தியர், சைவநெறிக்கூடம் சிவபணிநிலையம், காட்முற் ஹஸ், சர்வமதபீடத்தின் தலைவர், சுவிஸ், சுப்பிரமணியம் உதயபாரதிலிங்கம், சுவிஸ் தமிழ் ஆசிரியர்சங்கத் தலைவர், சசிகலா இராஜமனோகரன், வைத்தியகலாநிதி, இலண்டன், கனகசாபாபதி சக்திதாசன், கவிஞர், டென்மார்க், சின்னத்துரை சிறீறஞ்சன், உச்சி முருகன்கோவில் நிறுவனர், இலண்டன், செல்லத்துரை மனோகரன், உலக சைவப்பேரவை செயலாளர், இலண்டன், செல்லத்துரை தேவராஜா உபதலைவர், ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் தேவஸ்தானம், அட்லிஸ்வில், சுவிஸ், பொன்னம்பலம் முருகவேள், உலகத்தமிழர்பண்பாட்டு இயக்க தலைவர் சுவிஸ், குமரிநாடு இணையம், வள்ளுவன்பாடசாலை நிறுவனர், கந்தையா இராஜமனோகரன், பொறியியலாளர், கவிஞர், இலண்டன், இரா. சசிதரசர்மா, அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம், லுட்சேர்ன், வசந்தாதேவி பிரேமச்சந்திரன், உலக சைவப்பேரவை, இலண்டன், சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் (தொண்டர்), அறங்காவலர் நாகபூசணி அம்மன் ஆலயம், இலண்டன் ஆகியோர் சிறப்புறை ஆற்றினார்கள்.

திருமுறை வழிபாட்டுத் தீர்மானம்

செந்தமிழ்த் திருமறை வாழிபாட்டுத் தீர்மானம் 'சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார்", ஞானலிங்கேச்சுரர் ஆலயக் குருவால் முன்மொழியப்பட்டது. 'உலகெங்கும் உள்ள சைவத் திருக்கோயில்களின் கருவறையில் சென்றது போக இனி செந்தமிழ்த் திருமறை வழிபாடே நடைபெறவேண்டும்" இதற்கு உலகத் தமிழ் அறிஞர்கள் யாவரும் கூடி நின்று உறுதி மேற்கொண்டு ஆவன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இம்மாநாட்டிற்கும் தீர்மானப்பிரகடனத்திற்கும் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு. பெ. சத்தியவேல் முருகனார் தலமைதாங்கியிருந்தார். மாநாட்டு நிறைவுத் தீர்மானத்தினை சைவமாநாட்டின் பெயரால் சைவநெறிக்கூடத்தின் திருநெறிய தமிழ்நாயகம் "சிவருசி" த. சசிக்குமார் அவர்கள் வாசித்தளித்தார்.

மேலும் ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் இன்றுமுதல் தீர்மானத்திற்கமைவாக தமிழ்படுத்தப்பட்டு "அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்" என வழங்கப்படும் எனும் அறிவிப்பினையும் தெரிவித்தார்.
வழிமொழிவினை திருநிறை. சின்னராசா இராதாகிருஸ்ணன், சைவத் தமிழ்ச் சங்கம் சுவிஸ், கூடியிருந்த அடியவர்களின் பெயரால் வழிமொழிந்தார். குமரி இணைய நிறுவனர் பொ. முருகவேளும் வழிமொழிவில் இணைந்துகொண்டார் தமிழார்வலர் அனைவரின் பெயராலும். வழிபாட்டு தீர்மானத்தினைப் போற்றி சிறிதரன் திருநாவுக்கரசு, சைவ தமிழ் பண்பாட்டுப்பேரவை, டென்மார்க், வைரமுத்து சண்முகராஜா, ஞானலிங்கேச்சுரர் திருத்தொண்டர் சபை, சிவஈஸ்வரன் சிவனுஜன், உயர்கல்வி மாணவர், ஞானலிங்கேச்சுரர் திருத்தொண்டர் சபை தொண்டர் ஆகியோர் பேசினர்.

அரியபுத்திரன் நிமலன் நன்றி உரையுடன் வாழ்த்து அனுப்பியிருந்த அனைவரையும் நிரலிட்டு வாசித்தளித்தார். நிறைவில் தலைமை உரை ஏற்று நடாத்திய திரு. மு. பெ. சத்தியவேல் முருகனார் பல பேச்சாளர்களும் சுட்டிக்காட்டிய அனைத்து தகவல்களுக்கும் பதில் அளிக்கும் முகமாக உரை ஆற்றியதுடன் பேச்சாளரில் ஒருவர் தாய்மொழியில் வழிபாடு அவசியம் ஆனால் 'தமிழ்" தெய்வத் தமிழ் என்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளது என தன் கருத்தை முன்வைத்திருந்தார். இதற்கும் பதிலளிக்கும் வகையில் இறைவனிற்கு மொழி மதம் பேதம் கிடையாது ஆனால் இறைவன் கழகம் கண்ட ஒரே மொழி தமிழ். ஆகவே தமிழ் தெய்வத் தமிழாகும். அத்துடன் எப்போதும் தமிழில் வழிபாடு நடைபெற்று வந்திருக்கிறது. இருண்ட வரலாற்றுக்காலத்தில் தான் தமிழ் மருவி வடமொழி வழிபாடு புகுந்தது. ஆகவே இத்தீர்மானமும் தமிழ் வழிபாட்டின் மீள் எழுச்சியும் செம் பொன்னப்பலத்து விருப்பாகும் எனும் பொருள்படும்படி நிறைவுரையினை ஆற்றினார்.

அடியார்களின் ஆனந்த கண்ணீர்

காலை 07.00 மணிக்கு தீர்த்தத்திருவிழாவுடன் விழா ஆரம்பித்து, நண்பகல் 12.00 மணிக்கு மாநாடு கூடியது இரவு 21.00 மணிக்கு மாநாடு நிறைவுற திருக்கோவில் வழிபாடு இரவு 22.30 மணிக்கு நிறைவடைந்தது. மாநாட்டின் ஆரம்பம் முதல் நிறைவு வரை அடியவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பல அடியர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்ட காட்சி மெய் உறையச் செய்தது. தினேஸ் அவர்களின் நிகழ்ச்சித்தொகுப்பின் திறன் அடிவயர்களை மிகவும் கவர்ந்தது.

(நன்றி ஈழம் நியூஸ்)
சாமி
சாமி
உதய நிலா
உதய நிலா

Posts : 39
Join date : 11/04/2012
Location : சென்னை

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு! Empty Re: கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு!

Post by மாலதி Tue Oct 09, 2012 9:48 am

தகவலுக்கு நன்றிகள் சாமி கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு! 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum