TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன? தொடரும் உண்மைகளின் சங்கமம்..

4 posters

Go down

வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன? தொடரும் உண்மைகளின் சங்கமம்.. Empty வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன? தொடரும் உண்மைகளின் சங்கமம்..

Post by sakthy Sun Sep 23, 2012 5:29 pm

வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன?
தொடரும் உண்மைகளின் சங்கமம்.....................................

சுதந்திரப் போராட்டம் என்றதும் வரும் பல பெயர்களில் வாஞ்சி நாதனும் ஒருவன்.ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர்.1911 ஜூன் 17 காலை 10.45 மணிக்கு மணியாச்சி, தற்போது வாஞ்சி மணியாச்சி சந்திப்பு,(ராஜிவ் காந்தியால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது)தொடரூந்து சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கோடைக்கானலுக்கு செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார்.

வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும்,சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது. தமிழில் எழுதப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்திடப்பட்டுள்ளது.அந்தக் கடிதம்.இதோ...........

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கி லேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.
எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.
அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண் டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta

இதில் பஞ்சமன் என்பது.......ஐந்தைக் குறிக்கும். பஞ்ச தந்திரம், பஞ்ச பாண்டவர், பஞ்சமா பாதகம் இப்படி. ஆனால் வாஞ்சி அய்யர் குறிப்பிட்ட பஞ்சமன் என்பது வர்ணம்,சாதியில் ஐந்தாவது,தலித்தைக் குறிக்கிறது.இன்னும் சொல்லப் போனால் ஜார்ஜ் என்ற சாதியில் குறைந்த என்று பொருளே தவிர ஐந்தாம் ஜோர்ஜை குறிக்கவில்லை..பஞ்சமர் என்ற சொல்லுக்குப் பொருள், சென்னைப்பல்கலைக்கழக அகராதியில்,நால்வர்ணத்திற்கும் புறம்பான வர்ணத்தார்.

ஆக, வாஞ்சி நாதன் இந்திய சுதந்திரத்திற்காக போராடும் நோக்கத்தில் இல்லாமல் இந்திய சாதி வெறியுடன் தான் நடந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. அவ்வளவு தெளிவாக சாதி வெறியையும்,இந்து பார்ப்பணிய உணர்வுடனும் அவர் கடிதம் இருந்தது.இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் இருந்தும் கூட அவர்கள் பற்றி குறிப்பிடவில்லை.

கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை என்று குறிப்பிட்டுள்ளார். இதனைக் கொண்டு அவர் சாதி, சனாதன உணர்வுகளைக் கொண்டிருந்தார் கோ (பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு என்ற இந்த வரி, வாஞ்சிநாதனை சுதந்திர போராட்ட வீரனாக அல்ல, ஜாதி வெறியனாகத்தான் காட்டுகிறது.வெள்ளைக்காரனை திட்டுவதற்குக்கூட, தாழ்த்தப்பட்டவரை (பஞ்சமன்) இழிவான குறியிடாக பயன்படுத்துகிற, புத்திக்குப் பேர்தான், விடுதலை உணர்வா? தாழ்த்தப்பட்டவர்கள் இந்தியர்கள் இல்லையா? காந்தியை கோட்சே என்ன காரணத்திற்காக கொன்றானோ, அதுபோன்ற ஒரு காரணத்திற்காகத்தான் ஆஷை வாஞ்சிநாதன் கொன்றான்.காரணம் அன்று படித்தவர்கள்,பதவியில் இருந்தவர்கள், முதலாளிகள், மிராசுதாரர்கள் இப்படி எல்லோருமே உயர்ந்த சாதிக்காரர்களாக, பார்ப்பணர்களாக இருந்ததும்,அவற்றை வெள்ளையன் கண்டு கொள்ளாமல் விட்டதும் தான்.

இப்போ அந்தக் கடிதத்தையும்,இன்றைய அரசியல்வாதிகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஈழத் தமிழர் பிரச்சனையை எடுத்துக் கொண்ட கருணாநிதி,அதே காரணத்தை வைத்து சில செயல்களை மேற்கொண்ட ஜெயலலிதா, ஈழத் தமிழர்களை அன்றும் இன்றும் எதிர்த்தே வரும் சோ,சுவாமி போன்றோரின் நடவடிக்கைகள். உண்மை வேறு போர்வை வேறாக இருந்தே வந்திருக்கிறது. திமுக காங்கிரசுடன் இருப்பதால் ஜெ.ஜெ.காங்கிரசுக்கு எதிர்ப்பு,திமுக விலகியவுடன் காங்கிரசுடன் சேராமல் விடுவாரா? தேர்தலின் போதே காங்கிரசுடன் இணைய தூது அனுப்பியதையும்,வைகோவை ஒதுக்கித் தள்ளியதையும் மறக்க முடியுமா?இலங்கைப் பிரச்சனையில் வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் பேசும் தமிழக காங்கிரஸ் மற்றும் பாஜக போன்றவை.

இதைவிட கூடங்குளம் பற்றி சில தினங்களுக்கு முன் சோ விட்ட அறிக்கை படித்துப் பாருங்கள். ஆறாவது வகுப்பிலேயே சாதி சான்றிதழ், ஜேயின் புதிய அறிவிப்பு. அந்த பச்சிளங் குழந்தைகளிடமுமா சாதி வெறியை விதைக்க வேண்டும்?

அன்று ஆங்கிலேயனை எதிர்த்த சிலர் சாதி வெறியுடன் தான் செயல்பட்டதை நன்கு உணர முடிகிறது.அதனால் தான் திராவிட இயக்கங்கள் இவர்களுக்கு எதிராக செயல்பட்டன.

பாரதியின் சில பாடல்களில் ஒலிக்கும் சாதி வெறி........................

பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான், ….........என்று சாடிய பாரதி திடீரென.......

ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ?...............
…............ஈனப் பறையர்களேனும் என்கிற இந்த விஷம் தோய்ந்த வார்த்தை அல்லது விஷமாகவே இருக்கிற வார்த்தை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி ….........எனவும்,
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்.............என்றும்,
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்................என்றும் ஒரு சுதந்திரப் போராட்டத்தில் இருப்பது நியாயமா?

எண்ணிப் பாருங்கள். பார்ப்பணர்கள் ஆதிக்கம் அன்று ஆக்கிரமித்திருந்தது.அதே சமயம் சுதந்திரப் போர் என்ற போர்வையில், சாதியை சொல்லி இழிவு படுத்தவும் அவர்கள் தயங்கவில்லை. இன்று ஈழத் தமிழர் பிரச்சனையை போர்வையாக்கி அரசியல்,அன்று சுதந்திரப்போரை போர்வையாக்கி சாதி வெறி.

சுதந்திரப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் எண்ணம் எனக்கில்லை.ஆனால் இன்று நாம் காணும் ஆரிய மத்திய அரசு, தமிழின விரோதிகளாக இருப்பதை எண்ணிப் பாருங்கள். தமிழகம் கொதித்து எழுகிறது.தமிழ் நாடு எங்கோ இருப்பது போல் கண்டு கொள்ளாது,கொடியவன் ராஜபக்சேக்கு விருந்து கொடுத்து மகிழ்கிறார் பிரணாப் என்ற பிராமணர்.நானில்லை என்று சொல்லிக் கொண்டே சுஷ்மாவும், காங்கிரசும்,தமிழர்களை ஏமாற்றி வருகிறார்கள்.காவிரி நதி நீரில் கையை விரிக்கிறது,கூடங்குளத்தில் அராஜகம்,முல்லைப் பெரியாற்றில் கண்ணை மூடுகிறது.

ஆனால் விடுதலைப் புலிகளின் போரில் அனைவரும் தமிழர்களாகப் பார்க்கப் பட்டார்கள். சாதி என்ற பேச்சுக்கே இடம் இருக்கவில்லை. ஆனால் அன்றைய சுதந்திரப் போராட்டத்தில், சுதந்திரப் போரோடு சாதிப் போரையும் சேர்த்து பின்னால் இழுத்து சென்றிருக்கிறார்கள்.இன்னுமா ஆரிய இந்துக் கொள்கைகளுக்கு வக்காளத்து வாங்கப் போகிறீர்கள்.சிந்தியுங்கள்.
ஆதாரம்.....பெ.சு. மணி, எழுத்தாளர்-ஆய்வாளர், சென்னை-33 ,விக்கிபேடியா.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன? தொடரும் உண்மைகளின் சங்கமம்.. Empty Re: வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன? தொடரும் உண்மைகளின் சங்கமம்..

Post by ஜனனி Mon Sep 24, 2012 7:38 am

வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன? தொடரும் உண்மைகளின் சங்கமம்.. 28284 வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன? தொடரும் உண்மைகளின் சங்கமம்.. 28284 வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன? தொடரும் உண்மைகளின் சங்கமம்.. 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன? தொடரும் உண்மைகளின் சங்கமம்.. Empty Re: வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன? தொடரும் உண்மைகளின் சங்கமம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய சுதந்திரப் போராட்ட வெற்றிக்கு அகிம்சை காரணமா? நேதாஜியின் வாழ்வின் மர்மங்கள்.உண்மை என்ன?
» 17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு அவரை பற்றிய தொகுப்பு
» நீலகண்ட பிரம்மச்சாரி.தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர்
» 94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி இன்று அலிகாரில் காலமானார்கள்.
» காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum