TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்திய சுதந்திரப் போராட்ட வெற்றிக்கு அகிம்சை காரணமா? நேதாஜியின் வாழ்வின் மர்மங்கள்.உண்மை என்ன?

3 posters

Go down

இந்திய சுதந்திரப் போராட்ட வெற்றிக்கு அகிம்சை காரணமா? நேதாஜியின் வாழ்வின் மர்மங்கள்.உண்மை என்ன? Empty இந்திய சுதந்திரப் போராட்ட வெற்றிக்கு அகிம்சை காரணமா? நேதாஜியின் வாழ்வின் மர்மங்கள்.உண்மை என்ன?

Post by sakthy Wed Sep 12, 2012 7:38 pm

இந்திய சுதந்திரப் போராட்ட வெற்றிக்கு அகிம்சை காரணமா? நேதாஜியின் வாழ்வின் மர்மங்கள்.உண்மை என்ன?


இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தி உட்பட பலர் பங்காற்றினார்கள் என்பது அறிந்ததே.ஆனாலும் காந்தியை விட உயர்ந்த இடத்தில் வைத்து தலைவர் என்ற தகுதியை மக்கள் கொடுத்தது சுபாஸ் சந்திர போசிற்கே. நேதாஜி என்றால் தலைவர் என்று பொருள்.காந்திக்கு கூட கொடுக்காத தலைவர் அந்தஸ்தை இந்திய மக்கள் சுபாசிற்கே கொடுத்திருந்தார்கள்.ஆனால் வரலாறு அதை மாற்றி எழுதி விட்டது.

இதை நிலை நிறுத்த இன்றும் இந்திய அரசு மட்டுமல்ல தமிழக அரசும் கூட முனைந்து வருவது தெரிகிறது. இதை 2010.04.11 குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில் Subas chandra Bose is not greater than Gandhi …......ஏன் இந்த கேள்வி???? கருணா நிதியும் காங்கிரசும் வேண்டுமானால் நேதாஜியை அவமானப்படுத்தலாம்.ஆனால் நேதாஜியின் எழுச்சிதான் இந்திய சுதந்திரப் போரில் எழுச்சியை உருவாக்கியது.அந்த எழுச்சியும் பகத்சிங் போன்றவர்களின் இரத்தமும் தான் பிரிட்டிஷ் அரசை கலங்க வைத்தது. அகிம்சை அல்ல என்பதை ….....

ஹிரோஷிமா நாகசாக்கியில் அணுக்குண்டு வீசப்பட்டு ஜப்பான் சரணடைந்தாலும்,ஜேர்மனியில் கிற்லர் தோல்வியை தழுவிக் கொண்டு தற்கொலைக்கு போன போதும் கூட, ஜேர்மன்- பேர்லினில் ரஷ்ய இராணுவம் நிலை கொண்டிருந்த நிலையில்,இந்திய விடுதலை இராணுவம் நேதாஜி இல்லாமலே தீவிரமாக செயல்படக் கூடும் என்றறிந்திருந்த பிரிடிஷ் ஆட்சியினர்,ரஷ்ய ஆதரவு இந்திய தேசிய இராணுவத்திற்கு கிடைத்து விட்டால்,ஆத்திரத்தில் இருக்கும் ஜப்பான் இராணுவம் இந்திய தேசிய இராணுவத்திற்கு துணை போக நேரிட்டால் நிலை என்னவாகும் என்ற திகில் தான் பிரிடிஷ்சை சிந்திக்க வைத்தது. விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்றது போல் தன்னை தாழ்த்திக் கொள்ள விரும்பாத இங்கிலாந்து காந்தியை காட்டி,துப்பாக்கியைக் காட்டினால் நாம் துப்பாக்கியை காட்டி இருப்போம்.ஆனால் காந்தி அகிம்சை என்ற ஆயுதத்தை காட்டியதால் தான் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி இந்தியாவிற்கு சுதந்திரத்தை கொடுத்தது பற்றி பெருமை பாராட்டியது. னாமும் அதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டு விட்டோம்.


இந்திய சுதந்திரப் போரும் அகிம்சையும்... இங்கிலாந்து அரசியல்வாதிகளினது நடவடிக்கை பேச்சை வைத்து அகிம்சையினால் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் கூட உண்மையில் நடந்தது என்ன? னேருவின் தூண்டுதலால் காந்தி எத்தனை முறை குள்ளத்தனம் செய்தார் என்பதை சிறிது எண்ணிப் பார்க்கிறேன். பதவி ஆசை நேருவையும் விடவில்லை. அன்றே போட்ட திட்டம்,நேதாஜியை மெல்ல வெறுத்து ஒதுக்க முற்பட்டார். அதற்கு காந்தியும் துணை போனதுதான் ஒரு கறுப்புப் புள்ளியை காந்தி மேல் வைத்து விட்டது.

1928 மேயில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியாவிற்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார் நேதாஜி.இதை காந்தியும், நேருவும் எதிர்த்து பூரண சுதந்திரம் வேண்டாம் பூரண குடியேற்ற நாடு என்ற அந்தஸ்து போதும் என்றனர்.ஆனால் 1927 டிசம்பரில் இந்த தீர்மானம் 42 வது காங்கிரஸ் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதும்,காந்தி எதிர்த்தது நேதாஜியை புண்படுத்தியது.1929 டிசம்பர் 29 ல் லாகூரில் இதே தீர்மானம் காந்தி நேரு இருவராலும் மீண்டும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேதாஜி சொல்வது அனைத்தையும் காந்தியும்,நேருவும் எதிர்த்தே வந்திருந்தனர்.அதற்கு அவர்கள் சொன்ன காரணம் நேதாஜி ஆத்திரக்காரர்,பண்படாதவர் என்பதாகும்.யார் சொன்னாலும் உண்மையை,நல்லதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே.ஆனால் அவர்கள் நேதாஜி சொல்வதை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.

அயர்லாந்து போல் சுதந்திர போட்டி அரசை அமைப்போம் என்ற நேதாஜியின் தீர்மானத்தைக் கூட காந்தி தோற்கடித்து விட்டார்.இத்தோடு நிற்காது அந்த மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வை ஜனவரி 2 ற்கு அறிவித்து விட்டு, ஜனவரி 1 ல் நடத்தி முடித்து நேதாஜியையும் அவர் ஆதரவாளர்களையும் வராமலே செய்து விட்டிருந்தனர் காந்தியும் நேருவும்.

இதை எல்லாம் எடுத்துக் கூறிய நேதாஜி புதிய கட்சியை உருவாக்கப் போவதாக அறிவித்தார்.
ஆனாலும் தொடர்ந்த சிறைவாசம், கட்சியை தொடங்க முடியாதிருந்த நிலையில், 1937 நவம்பர் 10 ல் கல்கத்தாவில் காங்கிரஸ் கட்சி தலைவராக தெர்வானார்.இரண்டாம் போர் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தை நிறுத்தி வைக்க காந்தி முடிவு செய்த போது நேதாஜி ஏற்கவில்லை.தொடர்ந்து வந்த காங்க்ரஸ் கட்சி தலைவர் தேர்தலில் காந்தி தன் வெறுப்பைக் காட்ட பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார்.இருப்பினும் நேதாஜி பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றார்.இந்த நேதாஜியின் வேற்றி காந்திக்கு அதிர்ச்சியையும் மக்களுக்கு மகிழ்வையும் கொடுத்தது. முடிவு கட்சியில் பூசல் நேதாஜி இராஜினாமாவில் முடிந்தது.
ஆனால் நேதாஜி ஜேர்மனி இத்தாலி,ஜப்பான் நாடுகளுடன் உடன்பாட்டு ஒப்பந்தம் செய்து வெளிநாடுகளில் இருந்த கைதிகளை வைத்து இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி பயிற்சி அளித்தார்.உலகின் பல நாடுகளிலும் பயிற்சி நடந்தது ஜான்சி இராணி என்ற பெண்கள் படையும் 12 – 18 வயதிற்குட்பட்ட பாலர் படையும் உருவானது.பெண்கள் படை தளபதியாக லட்சுமி சுவாமினாதன் என்ற தமிழ் பெண் தலைமை தாங்கினார்.1943 ஒக்டோபர் 21 ல் சிங்கப்பூரில் இந்திய சுதந்திர அரசை அறிவித்தார். ஒரு மாத காலத்துள் ஜப்பான,; பர்மா, பிலிப்பைன்ஸ், ஜேர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி, தாய்லாந்து ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. அயர்லாந்து வாழ்த்து அனுப்பியது.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்னர் மதுரையில் நெடுமாறனுடன் இருந்த போது,1982 ல், இந்த லட்சுமி என்ற நேதாஜி தளபதியை,இந்திய அரசு நினைவு தின நாளில் சந்தித்த போது தான், விடுதலைப் புலிகளுக்கும் ஒரு பெண் படையணி தேவை என்ற சிந்தனை அவருள் எழுந்தது.அந்த வயதிலும் கூட லட்சுமி வீராங்கனையாக கண்ணீர் மல்க உணர்ச்சியுடன் பேசியதை பிரபாகரன் நெடுமாறன் உடன் இருந்து கேட்டு கண்ணீர் விட்டதாக ஒரு முறை பேசி இருந்தார்.

நேதாஜியின் தேசிய இராணுவம் சிறப்பாக செயல்பட தொடங்கியதைத் தொடர்ந்து,ஜப்பான் கைப்பற்றிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1943 டிசம்பர் 31 ல் நேதாஜிடம் ஒப்படைக்கப்பட்டது.சுதந்திர இந்திய தேசியக் கொடியை அங்கே நேதாஜி ஏற்றினார்.1944 மார்ச் 18 ல் நேதாஜியின் இராணுவம் இந்திய மண்ணில் கால் வைத்து நாகலந்து மணிப்பூர் என முன்னேற முயன்ற போது ஜப்பான் அமெரிக்கவிடம் சரணடைந்தது.

நேதாஜி மீது பிரிட்டிஷ் அரசும் இந்திய தலைவர்களும் அவதூறுகள் சுமத்தினார்கள்.உண்மையில் சொல்லப் போனால் நேதாஜியின் துணிவும் ஈடுபாடும் தான் காந்தியை வேகமாக போராட்டத்தில் ஈடுபட செய்தது எனலாம்.
ஆனாலும் என்ன, நேரு போட்ட குடும்ப ஆட்சித் திட்டம்,அதற்காக நேதாஜி மேல் சுமத்திய குற்றங்கள்,நேதாஜி மேல் காந்தியை வெறுப்பு ஏற்பட வைத்தது.

1945 ஆகஸ்ட் 18 ல் நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டார் என அறிவிக்கப்பட்டது.1947 ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் அடைந்தது. உண்மையில் நடந்தது என்ன? இதை தேவபிரதா பிஸ்வாஸ் விபரிக்கிறார்.

…..........ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது. தைவான் நாட்டு அரசும், தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்று கூறிவிட்டது.
ஜப்பான் அரசும், ”சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரிலோ இச்சிரோ உக்குடா (நேதாஜிக்கு சூட்டிய புனைபெயர்) என்ற பெயரிலோ எவரும் இறந்து சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை” என்று தெரிவித்துவிட்டது.

நேதாஜியினுடையது என்று ஜப்பானிய கோயில் ஒன்றில் வைக்கப்பட்ட அந்தச் சாம்பல் மற்றும் எலும்புகளை டி.என்.ஏ பரிசோதனை நடத்தவிடாமல் இந்திய அரசு தடுத்துக் குழப்பியது உலகுக்கே தெரியும். இறுதியாக, முகர்ஜி கமிஷனும் ஆகஸ்ட் 18, 1945-ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று அரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தவித காரணமும் கூறாமல், தானே நியமித்த முகர்ஜி கமிஷன் அறிக்கையை ஏற்க முடியாது என்று இந்திய அரசு நிராகரித்ததுதான்.
நேதாஜி தொடர்பான ஏராளமான ஆவணங்களை பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகிய மூன்றும் சேர்ந்து அழித்து ஒழித்துவிட்டன. இதை நீதிபதி முகர்ஜி கமிஷனே சுட்டிக்காட்டி உள்ளது.
எல்லா ஆதாரமும் அழிந்து விட்டதா? இல்லை, சுமார் 800 பைல்கள் ,ரகசிய பைல்கள், என்று முத்திரை குத்தப்பட்டு மத்திய அரசிடம் உள்ளன. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே ரகசிய பைல்களாக வைத்திருந்து, பின்னர் ஆய்வாளர்களுக்காக பொது ஆவணமாக அறிவிப்பார்கள். இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால், இந்த 800 பைல்களையும் நிரந்தரமாக ரகசிய பைல்களாக இந்திய அரசு வைத்துள்ளது. இது பகிரங்கப் படுத்தப்பட்டால் நேதாஜிக்கு நேர்ந்தது என்ன என்பதை உலகம் அறிந்து கொள்ளும்.
நேதாஜி வரலாறு மட்டுமல்ல. இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவத்தின் வீரம் செறிந்த வரலாற்றைக்கூட இந்திய அரசு வெளியிடவில்லை. சுதந்திரப்போரின் உண்மை வரலாற்றை வெளியிட, இந்திய அரசு ஏன் மறுத்து வருகிறது என்பது புரியவில்லை. நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய சுதந்திர வரலாற்றை எழுத இராதா வினோத்பால் என்ற அறிஞரை கேட்டுக்கொண்டது. அவரும் வரலாற்றின் கையெழுத்துப்படியை நேரு அரசிடம் ஒப்படைத்தார். அதுவும் புத்தகமாகி வெளியே வரவில்லை. அப்படி வந்தால், பல உண்மைகள் வெளிப்படும். ஏன் நேரு எல்லாவற்றையும் மறைத்தார்? இந்திய அரசு மறைப்பதும்,பைல்களை அழித்ததும் ஏன்?

ஏன் இந்தக் கொலைவெறி..............???????

ஆதாரம்.... நேதாஜி பேசுகின்றார், நேதாஜியின் வீரவரலாறு, வீரத்திருமகன், நேதாஜியின் போர்முறைகள்.வரலாற்று ஆசிரியர் ஆர்.சீ.மஜும்தாரின் History of the Freedom Movement of India என்ற நூலில் குறிப்பாக 109 -110 பக்கங்களில் பாருங்கள்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இந்திய சுதந்திரப் போராட்ட வெற்றிக்கு அகிம்சை காரணமா? நேதாஜியின் வாழ்வின் மர்மங்கள்.உண்மை என்ன? Empty Re: இந்திய சுதந்திரப் போராட்ட வெற்றிக்கு அகிம்சை காரணமா? நேதாஜியின் வாழ்வின் மர்மங்கள்.உண்மை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?உண்மை என்ன? தொடரும் உண்மைகளின் சங்கமம்..
» இந்திய சுதந்திரம் தனியே மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் அகிம்சை வழியில் மட்டும் பெறப்படவில்லை. அதற்குப் பின்னால் கண்ணீரால், குருதியால், வியர்வையால் எழுதப்பட்ட வீரம் செறிந்த போராட்ட வரலாறு உள்ளது. ஆதலினால் ஆயுதம் எந்தி போராடியவர்களயும் வணங்குவோம்
» நீலகண்ட பிரம்மச்சாரி.தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர்
» 94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி இன்று அலிகாரில் காலமானார்கள்.
» காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum