TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?

Go down

திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது? Empty திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?

Post by ஜனனி Wed Sep 05, 2012 4:34 pm

திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?

சென்னையில் 7000 எலிவளைகளை கண்டுபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை
திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற
நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம்.

சென்னை திருவல்லிக்கேணி
கஸ்தூரிபாய் தாய்சேய் நல அரசு மருத்துவமனையில் 26-ம் தேதி பிறந்த குழந்தையை
எலி கடித்து முகம் சிதைந்ததன் எதிரொலியாக அடிமை மந்திரிசபை, தொப்பை
அதிகாரிகள், மற்றும் கொடநாடு பட்டத்து ராணி தலைமையில் ஆலோசனை நடத்தி
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 100 ஆண்டு (கேலி) பேசும் அரிய முடிவை
எடுத்துள்ளனர்.

GH-ல் உள்ள எலிகளை ஒழிப்பது, குப்பைகளை
தற்காலிகமாக அப்புறப்படுத்துவது, முக்கியமாக சாலையோர உணவகங்களை
அப்புறப்படுத்தி அவர்களின் வயிற்றில் அடிப்பது, இதை துரித வேகத்தில்
நிறைவேற்ற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்
7000 எலி வளைகள் கண்டு பிடிக்கப்பட்டது, 550 எலிகள், 1 பாம்பு, 12 நாய், 1¼
பூனை அப்புறப்படுத்தப்பட்டன. (புள்ளிவிபர உபயம் தினமலர்)


அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை
கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் திருச்சி மாவட்ட பெண்கள்
விடுதலை முன்னணி சார்பில் ஆய்வில் இறங்கினோம்.

பிரசவ வார்டு, பெண்கள் பயன்படுத்தும் கழிவறை உள்ளே நுழைய முடியாத அளவு நாறிப் போயுள்ளது.

தினசரி பிறக்கும் குழந்தைகளை விட பல கோடி கோடி மடங்கு கிருமிகள் பிறப்பு அதிகமாக உள்ளது.

கழிவறை அருகிலேயே பிரசவ வார்டு, அதில் நிறைமாத கர்ப்பிணி, வயதானோர், தாங்க
முடியாத துயரத்திலும் மூக்கைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி
கழிவறைக்கு போவது பார்க்கவே கொடுமையாக இருந்தது. இதுவும் இல்லன்னா, தனியார்
ஆஸ்பத்திரிக்கு போயி ஆயிரக்கணக்கில் கொட்ட வேண்டி வரும், நம்ம
தலையெழுத்துன்னு போக வேண்டியது தான் என புலம்புகின்றனர். மக்களின் வறுமை
நிலை இந்த சீர்கேடுகளை சகித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கிறது.

கிருமி ஒழிப்பு அறை என்று இருந்தாலும், கிருமி உற்பத்தி அறை என்று பொருள் கொள்ளும்படி உள்ளது.

குழந்தை பிறந்த வார்டில் எலியை தேடும் போது அதன் புகலிடத்தை பெண்கள்
காட்டினார். நர்சுகள், வாட்ச்மேன் நம்மை விரட்டி திட்டி தீர்க்கிறாங்க,
அந்த வெறுப்பை எல்லாம் இங்கவரும் எலிகளிடம் காட்டி திட்டி விரட்டுகிறோம் என
குமுறினர். எலிகளை அடித்து கொல்லவும் பயம், டாக்டர்கள் திட்டு வாங்களோன்னு
தயங்கி மிரண்டு நிற்கின்றனர். ஆனால் நர்சுகள், மருத்துவர்கள்,
காவலாளிகள் எலியைப் போலத்தான் உழைக்கும் மக்களை கருதுகின்றனர்.


கலைஞர் அரசோ, ஜெயா அரசோ காப்பீட்டு திட்டம் எனும் பெயரில் தமது பங்குக்கு
தனியார் மருத்துவமனைகளை வாழ வைக்க மக்களின் பணத்தை வாரி இறைக்குது, ஆனால்
லட்சக்கணக்கான மக்கள் நம்பி இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு நிதி
ஒதுக்கி சுகாதார சீர்கேடுகளை ஒழிப்பது, சுத்தத்தை பேணுவது, ஆட்களை
அதிகளவில் சேர்ப்பது என்பதை செய்யவில்லை.

அரசு மருத்துவமனையில்
உள்ள இலவசக் கழிப்பிடத்தை பயன்படுத்துபவர்கள் அதே ஆஸ்பத்திரியில் உள்ள
கட்டணக் கழிப்பிடம் சுத்தமாக இருப்பதாக கூறுகின்றனர். அதே சுத்தத்தை
இலவசத்தில் செய்ய முடியாமல் போனது ஏன்? சுத்தம், சுகாதாரம் என்பது
மருத்துவமனைகளில் இருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டியவையாக இருக்க
வேண்டும். ஆனால் நமது அரசும், அதிகாரிகளும். காறிதுப்பும் அளவுக்கு
வைத்துள்ளார்.

10-மாதம் குழந்தையை சுமந்து பெற்றெடுத்து
மறுபிறவியாக வரும் பெண்கள் ஆபரேசன் செய்யப்பட்டு 3 நாளைக்கு எந்திரிக்க
முடியாமல் உள்ள சூழ்நிலையில் பிஞ்ச நிலையில் தொற்று நோய் பரப்பும் பாயில்
படுக்க வைக்கப்படுகின்றனர். படுக்கையில் உட்கார்ந்தால் தான் அவர்களுக்கு
இதமாக இருக்கும் என்பது கூட அங்கே கனவாகத்தான் உள்ளது. அரசு மருத்துவர்கள்
தினமும் ஒரு முறை பார்வையிட்டு விட்டு தனி கிளீனிக்கில் மீத நேரத்தை
செலவிட்டு கல்லா கட்டுகின்றனர். பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களை
கசக்கிப்பிழிந்து வேலை வாங்குகின்றனர்.

அடிப்படை கருவிகளான
இங்க்பேட்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் போதிய அளவில் இல்லை. இருக்கின்ற
கருவிகளும் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஆட்டியோ, குலுக்கியோ, உதறியோ
செய்தால் தான் இயங்கும் நிலை, இவ்வளவு கொடுமைகள் தீர இன்னும் எத்தனை காலம்
காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

தமிழகம் முழுவதும் உள்ள
மருத்துவக்கல்வி இயக்கத்தில் உள்ள 63 மருத்துவமனைகள், மருத்துவம் மற்றும்
ஊரக நலப் பணிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 31 மாவட்ட தலைமை
மருத்துவமனைகள், 154 வட்ட மருத்துவமனைகள், 76 வட்டமில்லாத மருத்துவமனை. 10
நடமாடும் பிரிவு, 7 பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, 2 காசநோய்
மருத்துவமனை 7 தொழுநோய் மருத்துவமனையும், 1612 ஆரம்ப சுகாதார நிலையம், 8706
துணை சுகாதார நிலையம். 385 நடமாடும் மருத்துவமனை ஆகியவை இயங்கி வருகிறது.

இவற்றிற்கு 5569 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தொகையை
அரசும், அதிகாரிகளும் தின்று செரித்தது போக மீதி என்ன செலவு
செய்திருப்பார்கள், பின்னொரு காலத்தில் யாராவது சுயசரிதை எழுதினால் தான்
உண்மை தெரியும்.

தனியார்மயம், தாராளமயம், உருவாக்கிய
ஆக்கிரமிப்புதான் அரசு சேவையை ஊற்றி மூடும் அயோக்கியத்தனமாகும். இத்தகைய
கொடுமையை ஒழிக்க எலியை ஒழிப்பது தீர்வல்ல! பஸ்ஸில் ஒட்டையில் விழுந்த
சுருதி இறப்புக்கு காரணம், ஓட்டை அல்ல? கும்பகோணம் பள்ளி குழந்தைகள்
கருகியதற்கு காரணம்-மேற்கூரையல்ல, அரசு மருத்துவமனையில் குழந்தையை எலி
கடித்ததற்கு காரணம்-எலிகள் அல்ல. தனியார்மயம், தாராளமயம் என்ற கொலைகார
பெருச்சாளிகளை விரட்டும் வரை மக்களுக்கு விடிவு இல்லை.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு மருத்துவமனை அலட்சியத்தால் குழந்தையை இழந்த பெண்
» அரசு மருத்துவமனை தவறான சிகிச்சையால் மாணவியின் கால்நரம்பு பாதிப்பு
» மனநலம் பாதித்த, ஆதரவற்ற மூதாட்டிக்கு கண் பார்வை தந்தது அரசு மருத்துவமனை
» திருவாடானை அரசு மருத்துவமனை வாசலில் உயிருக்கு போராடும் முதியவர்:மரத்துப்போனதா மனிதநேயம்
» திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum