TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மத்திய அரசிடம் வறட்சி நிதி கேட்க தமிழக அரசு திட்டம்: ஒத்துழைப்பாரா கருணாநிதி?

Go down

மத்திய அரசிடம் வறட்சி நிதி கேட்க தமிழக அரசு திட்டம்: ஒத்துழைப்பாரா கருணாநிதி? Empty மத்திய அரசிடம் வறட்சி நிதி கேட்க தமிழக அரசு திட்டம்: ஒத்துழைப்பாரா கருணாநிதி?

Post by அருள் Fri Aug 10, 2012 7:58 am

பாசனத்திற்கு நீர் இல்லாததால், காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை
சாகுபடி பெரிதும் பாதித்துள்ள நிலையில், மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதி
கேட்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விவசாய உற்பத்தி பாதிப்பு தகவல்கள்
சேகரிக்கும் பணியில், வேளாண் மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டு
வருகின்றனர்.

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர்
உள்ளிட்ட, 11 டெல்டா மாவட்டங்களில், 16 லட்சம் ஏக்கர் நிலம்,
பாசனத்திற்காக, காவிரியை நம்பியுள்ளன. ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக,
ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த, 78
ஆண்டுகளில், இதுவரை, 15 ஆண்டுகள் மட்டுமே, ஜூன், 12ல், மேட்டூர் அணை
திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, காவிரியில்
உபரி நீர் வந்தால் தான், மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. கடந்தாண்டு,
வரலாற்றில் இல்லாத அளவிற்கு, ஜூன் 6ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
இதனால், இம்மாவட்டங்களில், 12.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில், குறுவை நெல்
சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இது, கடந்த, 2010 - 2011ம் ஆண்டு சாகுபடி
பரப்பைவிட, 1.7 லட்சம் ஏக்கர் கூடுதலாக அமைந்தது.

மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்ட காலங்களில் எல்லாம், டெல்டா மாவட்ட
விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதால், விவசாயிகள், பெரும் இழப்பிற்கு ஆளாகி
வருகின்றனர். இந்தாண்டு கர்நாடகாவில், தென்மேற்குப் பருவமழை, கடந்த இரு
மாதங்களில், எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், காவிரியில் இருந்து மேட்டூர்
அணைக்கு, தண்ணீர் வரவில்லை. கோடை தாக்கத்தால், மேட்டூர் அணையின்
நீர்மட்டம் குறைந்ததால், இந்தாண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்
படவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் கூட, சராசரியாக, 9
லட்சம் ஏக்கர் வரை, விவசாயம் செய்யப்படும். ஆனால், கிணற்று நீர் பாசனம்,
ஆழ்துளை குழாய் பாசனம் மூலம், ஒரு லட்சம் ஏக்கருக்கு குறைவாகவே, இந்தாண்டு
குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றிற்கு, 12 மணி நேரம்
மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், மின் தட்டுப்பாடு காரணமாக
தொடர்ச்சியாக மின் வினியோகம் செய்வது பாதிக்கப்பட்டது. இதனால், பாசனம்
செய்ய முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர்.

இந்நிலையில், வறட்சியால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதித்தது
குறித்து, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம், முதல்வர் ஜெயலலிதா,
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வறட்சியிலும்,
குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை,
உடனுக்குடன் செய்யுமாறு, வேளாண் துறையினருக்கு முதல்வர் உத்தரவு
பிறப்பித்துள்ளார். வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு, கடன் நிவாரணம் மற்றும்
இழப்பீடுகளை வழங்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி
வலியுறுத்தியுள்ளார். டெல்டா விவசாயிகளுக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு
ஏற்படும் என்றும், அவர் கணித்துள்ளார். இதே போல, டெல்டா விவசாயிகளுக்கும்,
தொழிலாளர்களுக்கும், 10 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என,
மா.கம்யூ., மாநில செயலர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு விவசாய
சங்கங்களும், இந்த பிரச்னையை மையப்படுத்தி, களத்தில் இறங்க ஆலோசித்து
வருகின்றன. இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி விவரங்களைப்
பட்டியலிடும் பணி துவங்கியுள்ளது. விவசாயம் பாதித்த நிலங்களின் விவரங்களை,
வேளாண் துறையினரும், வருவாய் பாதித்த விவரங்களை, வருவாய் துறையினரும்,
சேகரித்து வருகின்றனர். இப்பணியில் கிராம நிர்வாக அலுவலர்களும்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது,
மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு வறட்சி நிதி கோரலாம் எனக்
கூறப்படுகிறது.

கருணாநிதி ஒத்துழைப்பாரா? வறட்சியால் காவிரி டெல்டாவில் குறுவை
சாகுபடி பாதிக்கப்பட்டதால், 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என,
கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம், மாநில அரசு வறட்சி நிவாரண
நிதி கேட்கும்போது, மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி என்ற
முறையில், அந்த நிதியை பெற்றுத் தர, தி.மு.க., தலைவர் கருணாநிதி நடவடிக்கை
எடுக்க வேண்டும். தானே புயல் பாதிப்பிற்கு போதுமான நிதி பெற்று தருவதில்,
கருணாநிதி அதிக முனைப்பு காட்டாத நிலையில், இதற்காகவாவது, தமிழக அரசு
கேட்கும் நிதியை பெற்றுத் தர, கருணாநிதி ஒத்துழைப்பாரா என்ற கேள்வி, டெல்டா
மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத் தமிழர்களுக்கோ, தமிழக மீனவர்களுக்கோ மத்திய அரசு அனுசரணையாக இல்லை: கருணாநிதி
» ஆறுகள் இணைப்புக்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசு
» பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதால் சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்
» தமிழக அரசு கேட்ட நிதியில் மத்திய அரசு இதுவரை 1 ரூபாய்கூட ஒதுக்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா
» ஏர் இந்திய நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1732 கோடி நிதி உதவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum