TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அருள் தரும் வரலாறு

Go down

அருள் தரும் வரலாறு Empty அருள் தரும் வரலாறு

Post by Tamil Fri Jan 08, 2010 7:28 am

அருள் தரும் வரலாறு
பதினெட்டாம் படி பாலகன் வரலாறு்


அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது....
தன்
சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை
பழிவாங்க மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை
நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள்
என்றார்.
சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால்
அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம்
கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில்
தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.
தேவர்கள்
துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான
மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார்.
பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும்,
பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக
எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து
மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன்
என்றும் பெயர் ‘ட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.
எல்லா
லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். ராஜராஜன் என்ற அந்த ராஜகுமாரன்
எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன்,
மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த
மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும்
போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும்
பலிக்கவில்லை. பின் தனது ‘ழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான்
மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச்
சொல்லச் செய்கிறான்.
இது ‘ழ்ச்சி என்று தெரிந்தபோதிலும்,
மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின்
வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து
மகிஷியினால்படும் துயரத்தைக் கூறனர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை
தேவலோகத்தில் நின்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.
ஐயன்
அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப
விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான்
பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாதுஎன்றும், தான்
இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர்
விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.
மகிஷியின் கொடுமை
நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து
பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப்
பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர்.
ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும்
மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.
மணிகண்டனும்,
மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில
எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம்
செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக
உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று
சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு
எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு
சபரிமலையில் விழந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும்
பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு
மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.
மணிகண்டன்
கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே
மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை
கட்டினார்.
ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத
பேதமின்றி மாலை அணிந்து 4 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து
புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும்
மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில்
காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

அச்சம் தீர்க்கும் அச்சன் கோவில்

<table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%">
<tr>
<td align="left" valign="top" width="51%">அருள் தரும் வரலாறு Ayappanhistory

</td>
<td align="left" valign="top" width="49%">அச்சன்
கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள
செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின்
அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை ‘ழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.
ஐயப்பன்
பாலகனாக வளர்ந்தது குளத்துப்புழையில். இளைஞனானதும் அவர் அச்சன்கோயில்
வந்தார். சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது
அச்சன்கோவில் ஆகும்.</td>
</tr>
</table>
அச்சன்கோவில்
பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன்
விக்கிரகங்கள் தீயாலும், இதர ஐயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து
மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய
விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர்
கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள்
கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா
நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும்
அச்சன் கோயிலிலும் மட்டமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது
நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம்
கிடையாது. இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால்
நள்ளிரவு நேரமானாலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள
சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்கள்
கூறுகின்றனர். இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.

ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு

வாபர்
ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும்
வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து
தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த
பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால்
வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.
ஒருமுறை
ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு
எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால்
உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான
ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான்
கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம்
கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ
கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன
செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய
பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.
அதன்படி
அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலக்கு
வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ
எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இதன்படி
சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள்
ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று
உத்தரவிட்டார்.
ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர்,
ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக
நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு
தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது
வாடிக்கையாக இருந்து வருகிறது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அருள் தரும் வரலாறு Empty வழிபாட்டு இடங்கள்

Post by Tamil Fri Jan 08, 2010 7:29 am

வழிபாட்டு இடங்கள்
பந்தளம்
சபரிமலையில்
இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும்
இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். பந்தள ராஜாவின் குடும்ப கோயில்
இங்குள்ளது.மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான
திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி
பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து
சேருகிறது
மகர சங்கிரம தினத்தில் ஜோதிபாய் ஐயன் தெரியும் போது மட்டுமே சபரிமலை ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.
ஐயப்பன்
திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம்,
அங்குலியங்கள், பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், மாளிகைபுறத்தம்மனுக்கு
அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். தை
முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது,
வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு, திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து
வரும் காட்சி கண்கொள்ள அதிசய காட்சி.
ஐயனுக்கு
திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சங்கிரம தினத்தின் அந்திம நேரத்தில்
மங்களகரமான தீபாராதனை காண பத்தணம்திட்டா (10 கி.மீ), ஆரமுளா (10 கி.மீ),
எருமேலி (52.கி.மீ), ஆகிய இடங்களுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்கள்
உள்ளன. தங்கும் விடுதி வசதியும் இங்கு உண்டு. இது தவிர பெட்ரோல் பாங்க்.
பாங்க் வசதி கூட உண்டு.

குளத்துப்புழை
<table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%">
<tr>
<td align="left" valign="top" width="42%">அருள் தரும் வரலாறு Aiyappan</td>
<td align="left" valign="top" width="58%">செங்கோட்டையில்
இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது குளத்துப்புழை. சிறு குழந்தைகள்
நுழையும் அளவுக்கே கோயிலின் வாசல் அமைந்திருக்கும். சன்னதியில் பாலகன்
வடிவில் தவழ்ந்த கோலத்தில் ஐயப்பன் காட்சி தருகிறார்.
விஜயதசமியன்று
வித்தியாரம்பம் என்ற பெயரில் இங்கு நடக்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி
பெற்றதாகும். இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பள்ளியில் குழந்தையைச்
சேர்த்தால் கல்வியில் குழந்தை தேர்ச்சி பெறும் என்பது ஒரு நம்பிக்கை.
குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் தீரும். கோயில் முன்பு மீன்கள்
துள்ளி விளையாடும் ஆறும் ஓடுகிறது. குடும்பத்துடன் சென்று ஐயப்பனை வழிபட
ஏற்ற தலம்.</td>
</tr>
</table>

ஆரியங்காவு
<table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%">
<tr>
<td align="left" valign="top" width="54%">அருள் தரும் வரலாறு Aiyappanplace2</td>
<td align="left" valign="top" width="46%">கல்யாண
கோலத்தில், குமார சொரூபத்தில் ஐயப்பன் குடிகொண்ட கோயில்.
திருவனந்தபுரத்தில் இருந்து 66 கி.மீ தொலைவில் உள்ள இக்கோயில்
தமிழகத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது.
செங்கோட்டையிலிருந்து
ஆரியங்காவுக்கு அடிக்கடி கேரள அரசு பஸ்கள் சென்று வருகின்றன. மதுரையை
சேர்ந்த புஷ்கலாதேவி என்ற பெண் இங்கு ஐயனோடு ஐக்கியமானதாக வரலாறு
கூறுகிறது. இதன் மூலம் சமபந்தி ஆகியுள்ள மதுரை சவுராஷ்டிர மக்கள்
ஆண்டுதோறும் மண்டல பூஜையின்போது இங்கு வந்து ஐயனுக்கு திருக்கல்யாண வைபவம்
நடத்தி விருந்த வைக்கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் வண்ணமயமான
இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், கேரளாவின் பல
பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருவர்.</td>
</tr>
</table>

பதினெட்டாம் படி
<table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%">
<tr>
<td align="left" valign="top" width="55%">அருள் தரும் வரலாறு Aiyappanplace3</td>
<td align="left" valign="top" width="45%"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%">
<tr>
<td class="heading" align="left" valign="top">பதினெட்டாம் படி பாலகன் வரலாறு</td>
</tr>
<tr>
<td align="left" valign="top">அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது....
தன்
சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை
பழிவாங்க மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை
நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள்
என்றார்.
சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த
புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி
வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில்
தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.</td>
</tr>
</table></td>
</tr>
</table>

மகரஜோதியின் தத்துவம்
<table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%">
<tr>
<td align="left" valign="top" width="56%">அருள் தரும் வரலாறு Jothi</td>
<td align="left" valign="top" width="44%">இறைவனுக்கென்று
உருவ வழிபாடு பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில் மனிதன் தோன்றிய
காலத்தில் உலோகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கற்களில் துவங்கிய
சிற்பக்கலை படிப்படியாக வளர்ந்து, பிற்காலத்தில் ஐம்பொன் வரை சென்றது.
எனவே மனிதன் துவக்க காலத்தில் ஒளியையே தெய்வகமாக வழிபட்டுள்ளான். ‘ரிய
வழிபாடு முதலில் தோன்றியது.</td>
</tr>
</table>

நம்மை
மீறிய ஒரு சக்தி இருக்கிறது என மனிதன் பகுத்தறிந்த போது ஜோதி வடிவாக அவன்
இறைவனைக் கண்டான். அதனால்தான் வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி என
அழைத்தார்.
இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி
அளிக்கிறார். கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆண்டு முழுவதும் எரிவது
அதனால் தான். இதே போல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதி வடிவாக காட்சி அளிப்பது,
பொன்னம்பல மேட்டில் மகரசாந்தியன்று அவர் ஆண்டுதோறம் இந்த கலிகாலத்திலும்
ஜோதி வடிவாய் காட்சி அளிக்கிறார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அருள் தரும் வரலாறு Empty பெருவழிப்பாதை பயணம்

Post by Tamil Fri Jan 08, 2010 7:31 am

பெருவழிப்பாதை பயணம்

அருள் தரும் வரலாறு Periyapathai ஐயப்ப
பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு
காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியிலிருந்து செல்லும்
காட்டுப்பாதை மட்டுமே பயன்பட்டதாக கூறுவர். இந்தப்பாதையில் சென்று ஐயப்பனை
தரிசிப்பதே முறையானதாகும். எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரையில் 56
கி.மீ., தூரம் உள்ள இந்த பாதை தான் பெருவழிப்பாதை என அழைக்கப்படுகிறது.
இந்த பெருவழிப்பாதை வழியாகச் சென்றால் உடலும், உள்ளமும் தூய்மையடையும். பந்தளராஜா, ஐயப்பனைக் காணச் சென்ற வழியும் இதுவே.
இந்தப் பாதை வழியே ஐயப்பனைத் தரிசிக்க புறப்படுவோமா!
எருமேலி: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள்
எல்லோரும் ஒன்று கூடும் இடம் இது. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால்
கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும்,
வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் தர்மசாஸ்தா காட்சியளிக்கிறார்.
அருள் தரும் வரலாறு Arimeli_koil


வாபர் கோயில்:
எருமேலியில் பேட்டை சாஸ்தா கோயில் எதிரில் ஐயப்பனின் முஸ்லிம் நண்பரான
வாபரின் பள்ளி வாசல் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வாபர் பள்ளி வாசலுக்கு
சென்று வணங்கி அங்கு தரப்படும் விபூதி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.


பேட்டைதுள்ளல்: ஐயப்பன், எருமைத்தலை அரக்கி மகிஷியை
கொன்ற தலம் இது. எருமைக்கொல்லி எனப்பட்ட இத்தலம், "எருமேலி' என மருவியது.
இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன்
நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு தான் பேட்டை துள்ளல்
எனப்படுகிறது. . உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை
கட்டிக் கொண்டு மரத்தினாலான ஆயுதங்களுடன் மேளதாளத்துடன் சுவாமி
திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாபர் சன்னதியை
வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சன்னதி
வந்தடைந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு
பெருவழிப்பாதையாத்திரையை தொடர வேண்டும்.

பேரூர்தோடு:பெருவழிப்பாதையில் முதலில் வரும் இடம்
பேரூர்த்தோடு. இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல்
கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி
சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.

காளையை கட்டிய மரம் : காடு, மலை ஏறி, இறங்கி மேலும்
சுமார் 6 மைல் நடந்து, அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை
சென்றடையலாம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த
சிவன், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இப்பெயர்
ஏற்பட்டது.
காளைகட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை
சென்றடையலாம். மணிகண்டனால் தூக்கி எறியப்பட்ட மகிஷியின் உடல் இந்த
நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும்,
பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும்.


அருள் தரும் வரலாறு Aluthariver அழுதாநதி:அழுதையாற்று
நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அங்கிருந்து சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால்
இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம்.
பின்னர், கல்லிடும் குன்று என்ற இடம் வருகிறது. மகிஷியை வதம் செய்த
ஐயப்பன், அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வை த்துச்
சென்றாராம்.
இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டுச் செல்கிறார்கள்.

காவலர் ஐயப்பன் : அழுதாமலை உச்சியில்,
"இஞ்சிப்பாறைக்கோட்டை' இருக்கிறது. இங்குள்ள கோயிலில் "தேவன்
வியாக்ரபாதன்' என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். "வியாக்ரம்' என்றால்
"புலி'. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக்
காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக
ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை
பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய
ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்த பாதகங்களே
மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த கொடிய புலிகளை
கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி
மார்க்கத்திற்குள் மனிதன் வருவான். இந்த ஐயப்பனை வணங்கி விட்டு நடந்தால்,
முக்குழி என்ற இடம் வரும். இங்கு மாரியம்மன் அருள் செய்கிறாள். அம்பிகையை
வணங்கி விட்டு தொடர்ந்து நடந்தால் கரியிலம்தோட்டை அடையலாம். இவ்விடத்தில்
மலைப்பாதை சமதளமாக இருக்கும். இங்கு பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியுள்ளது.
அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்துப் பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடக்க
வேண்டும்.

அருள் தரும் வரலாறு Karimalai கரிமலை:கரியிலம்தோட்டை
அடுத்து கரிமலை அடிவாரத்தை அடையலாம். இந்த மலையில் ஏறும்போது தங்கள்
பிரம்மச்சரிய விரதத்தின் சக்தியை உணரலாம். இதை விட கடினமான மலை உலகில்
இல்லையோ என்று எண்ணுமளவுக்கு பெரும் ஏற்றத்தில் பக்தர்கள் ஏறுகிறார்கள்.
இம்மலையிலுள்ள மண் கருப்பாக இருக்கும். எனவே
இம்மலைக்கு "கருமலை' என்ற பெயர் இருந்து "கரிமலை' என்று மாறிவிட்டது. மலை
உச்சியில் கரிமலைநாதர் என்ற மூர்த்தியின் சிலை பிரதிஷ்டை
செய்யப்பட்டிருக்கிறது.இங்கு சுவையான தண்ணீருடன் கூடிய சுனை உள்ளது. இதை
ஐயப்பன் தனது அம்பினால் உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நீரை பக்தர்கள்
குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள்.


கரிமலையில் மிகவும் கவனமாக நடக்க வேண்டும். ஏனெனில், ஒரு
ஒற்றையடிப் பாதையே நம் கண்முன் தென்படும். ஒரு பக்கம் அதலபாதாளம்,
மறுபக்கம் உரசும் பாறைகள் என இருப்பதால் மிக கவனமாக ஏற வேண்டும். ஏற்றம்
இருக்கும் அளவுக்கு இறக்கமும் பக்தர்களைச் சிரமப்படுத்தும். கால்கள்
பின்னி தடுமாறும். ஆனாலும், ஐயப்பன் கருணையுடன் இந்த இடத்தைக் கடக்க
அருள்செய்வார். மனதிற்குள் சரணம் சொல்லியபடியே பக்தர்கள் மலையேறுவார்கள்.
இம்மலையில் மூலிகைச் செடிகள் அதிகம் இருக்கிறது என்பதால், இதைக்
கடந்தவுடனேயே தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்கிறார்கள்.
பெரியானை வட்டம் : கரிமலையைக் கடந்து சமதளப்பகுதி வருகிறது. இவ்விடத்தை "பெரியானை
வட்டம்' என்பர். யானைகள் அதிகமாக வசித்த பகுதி என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
இங்கே
பம்பா நதி சிறு ஓடைபோல பாய்கிறது. இங்கிருந்தபடியே மகர ஜோதியை
தரிசிக்கலாம் என்பதும் விசேஷத்தகவல். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில்
"சிறியானை வட்டம்' என்ற பகுதி வருகிறது. இங்கு பம்பை நதி பரந்து ஓடுவதைக்
காணலாம். இங்கிருந்து சிறிது தூரம் பயணம் செய்து பம்பா நதியை அடையலாம்.

அருள் தரும் வரலாறு Bambariver பம்பா நதி:
எருமேலியிலிருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் பக்தர்களும் சாலக்காயம்
வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக்கரையில் ஒன்று கூடுகின்றனர்.
கங்கையைப்போன்ற புண்ணிய நதி பம்பா. இந்த நதிக்கரையில் தான் ராமர் தனது
தந்தை தசரதருக்கு "பிதுர் தர்ப்பணம்' செய்ததாக கூறுவர். இதனடிப்படையில்
ஒரு சில பக்தர்கள் இந்த
நதியின் முதல் பாலம் அருகே உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிதுர்
தர்ப்பணம் செய்கின்றனர். மற்ற பக்தர்கள் எல்லாம் இங்கு நீராடி நீண்டதூரம்
நடந்து வந்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றனர்.
ஐயப்ப "சத்ய' : பம்பையாற்றின் கரையில் ஓர் இரவு தங்கி,
இரவில் ஆற்றில் பம்பாவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபடுகின்றனர். பின்னர்,
இருமுடியின் பின் முடியிலுள்ள சமையல் சாமான்களைக் கொண்டு சமைக்கின்றனர்.
அந்த உணவை ஐயப்பனுக்கு நைவேத்யம் செய்து, அதை பக்தர்களுக்கு விருந்தாக
(சத்ய) கொடுத்து உபசரிக்கின்றனர். பக்தனை உபசரிப்பது பகவானையே (ஐயப்பன்)
உபசரிப்பது போல என கருதுகின்றனர். ஐயப்பனே பக்தர்களின் வடிவில்
சாப்பிடுவதாக ஐதீகம். இந்த பூஜையை "பம்பா சக்தி' என்றும், "சக்தி பூஜை'
என்றும் சொல்வர்.
பம்பா கணபதி : பின்னர் பம்பையாற்றின் கரையிலுள்ள கணபதி,
ராமர், அனுமன், சக்தி கோயில்களில் வழிபட்டு, பந்தள மன்னர் பரம்பரையில்
வந்தவர்களுக்கு காணிக்கை செலுத்தி, அவர்களிடம் விபூதி வாங்கி நெற்றியில்
அணிந்து நீலிமலை ஏற துவங்கலாம். பெண்கள் இப்பகுதியைத் தாண்டி மலையில் ஏற
அனுமதிக்கப்படமாட்டார்கள்.

நீலிமலை: இந்த மலையில் ஏறுவதும் கரிமலையில் ஏறுவது போல்
மிகக்கடினம். கால் முட்டி, தரையில் உரசுமளவுக்கு மிகவும் சிரமப்பட்டு இந்த
மலையை ஏற வேண்டும். நீலிமலையில் வசித்த மாதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன்
சிவனை நோக்கி தவம் செய்த தாகவும், அவளது பெயரில் இம்மலை விளங்குவதாகவும்
கூறப்படுகிறது.
இம்மலைப்பாதையின்
துவக்கப்
பகுதியில், வலது பக்கமாக ஒரு பாதை பிரிகிறது. இதை "சுப்பிரமணியர் பாதை'
என்பர். இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை
மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மேடு, இப்பாச்சி குழி என்ற சமதளப்பகுதி
வருகிறது. அப்பாச்சிமேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னிசுவாமிகள் வீசி
எறிவார்கள். வனதேவதையை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.

அருள் தரும் வரலாறு Sabaribeedam சபரிபீடம்:
நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான்
"சபரிமலை' என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள். இந்த
மூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி
சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்...
ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ஸ்ரீராம அவதாரம்.
அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு,
விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும்
சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள்
சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக
காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள்.
அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை
காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை
காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை
அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார்.
அந்த பரமபக்தையின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கு தேங்காய்
உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். இங்கிருந்து சன்னிதானம் வரை
சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம்.
யானைப்பாதை : சபரிபீடத்தை அடுத்து சன்னிதானத்திற்கு
செல்லும் பாதை இரண்டாகப்பிரிகிறது. இடது பக்கம் செல்லும் பாதை யானைப்பாதை
எனப்படுகிறது. ஆனால், பக்தர்கள் வலது பக்கம் உள்ள சரங்குத்தி பாதை
வழியாகத்தான் செல்கின்றனர்.

சரங்குத்தி:
இது கன்னி ஐயப்பன்மார்களுக்கு ஒரு புனிதமான இடமாகும். இங்கு
கன்னிச்சாமிகள், எருமேலியில் பேட்டை துள்ளிவிட்டு கொண்டுவரும்
மரக்கத்திகளை போட்டு வழிபடுகின்றனர். இங்கிருந்து சிறிது தூரம் சென்றால்
சுவாமி ஐயப்பனின் புனித சந்நிதானம் அடையலாம்.

அருள் தரும் வரலாறு Sannithanam சன்னிதானம்:
சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின் தங்க கோயிலை தரிசித்தவுடனேயே,
மனம் உற்சாகமாகிறது. ஐயப்பன் சன்னிதானம் நெருங்க நெருங்க "சாமியே சரணம்
ஐயப்பா' என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப்பிளக்கிறது.


பொன்னு பதினெட்டாம் படி:
சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள். இந்த படிகள் அனைத்தும் தங்கத்தகடுகளால் ஆனது.
18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி
முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம்
மறந்து, தேங்காய் உடைத்து, சரண கோஷத்துடன் பதினெட்டுப்படிகளில் ஏற
வேண்டும்.

நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற
அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18
படிகளும் 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள்
மட்டுமே 18 படி ஏறமுடியும்.
அருள் தரும் வரலாறு Thathuvamasi "தத்வமஸி':
பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில்
"தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது "நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே
உள்ளாய்' என்பது இதன் பொருள். ""ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு
தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை. காடு மேடுகளைக் கடந்திருக்க
வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன். நான், இங்கிருந்து உன்னை
எப்படி பாதுகாக்கிறேனோ,


அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்.
அவர்களிடம் நல்லதைப் பேசு, நல்லதை செய், நன்மையே நாடு'' என்பது
இந்தச்சொல்லுக்குள் அடங்கியுள்ள தத்துவம்.
ஐயப்பன் மூலஸ்தானம் : படியேறிய பக்தர்கள் கொடிமரம்
தாண்டி கோயிலை வலம் வந்து ஹரிஹர புத்திரனாகிய தர்மசாஸ்தாவை கண்டு மனமாற
வேண்டிக்கொள்ளலாம். ஐயப்பனை தரிசித்தாலே இந்தப்பிறவியின் பலனை அடைந்த
சந்தோஷம் ஏற்படும்.
மூலஸ்தானத்தில் ஐயப்பன் ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக,
கேட்டவரம் தரும் வள்ளலாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவர் மூன்று விரலை
மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு "சின்முத்திரை'
காட்டுகிறார். "சித்' என்றால் "அறிவு'. இந்த வார்த்தையே "சின்' என
திரிந்துள்ளது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவது சின்முத்திரை.

""மனிதா! நீ என்னை நாடி இத்தனை மேடுகளை கடந்து வந்தாயே! இதனால், நான் மகிழ
மாட்டேன். என் மடங்கிய மூன்று விரல்கள் உன்னிடமுள்ள ஆணவம், கன்மம்
(பொறாமை), மாயை(உலக வாழ்வும் இன்பமும் நிலைத்திருப்பது என்ற எண்ணம்)
ஆகியவை. என் ஆட்காட்டி விரலே ஜீவாத்மாகிய நீ. என் கட்டை விரலே
பரமாத்மாவாகிய நான். ஆம்...மானிடனே! இந்த மூன்று குணங்களையும், நீ விட்டு
விட்டாயானால், என்னை நிஜமாகவே அடையலாம்,''என்கிறார்.
யோகபாதாசனத்தில், சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள
ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் போது, இவரது காலில் சுற்றியுள்ள
வஸ்திரம் ஒன்றை அவசியம் கவனிக்க வேண்டும். இதை "யோக பட்டம்' என்பர்.

அருள் தரும் வரலாறு Aknikundam நெய் அபிஷேகம் : ஐயப்பன் தரிசனம் முடிந்தபின் கன்னிமூலை கணபதியையும் , நாகரையும் தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்க வேண்டும்.
குருசாமியுடன் இருமுடி கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடியினை திறந்து நெய் தேங்காயை உடைக்க வேண்டும்.
அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க வேண்டும். பின் அபிஷேகம்
செய்த நெய்யையும், நெய தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசாதமாக
வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இன்னொரு முடியை பதினெட்டுப்படிகளின் முன்
உள்ள அங்கினிகுண்டத்தில் எறிந்து விட வேண்டும்.

மஞ்சமாதா : ஐயப்பன் கோயிலுக்கு இடது பக்கம் மஞ்சமாதா
தனிசன்னதியில் அருளுகிறாள். இங்கு மஞ்சள்பொடி தூவி, தேங்காய் உருட்டி வலம்
வந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.இங்குள்ள மணி மண்டபத்தில் தான்
ஐயப்பனின் திருவாபரணப்பெட்டி வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். இவளது
சன்னதிக்கு அருகில் நாகர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இங்கு தான்
கொடுகொட்டி பாடல் பாடுவது வழக்கம். ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள்
கொடுகொட்டி கலைஞர்களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்கிவருவர்.



அருள் தரும் வரலாறு Jothif ஜோதி தரிசனம்:
எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகரசங்கராந்தி
நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார்.
அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள
ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன்
காட்சிதருவார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அருள் தரும் வரலாறு Empty சரண மாலை

Post by Tamil Fri Jan 08, 2010 7:32 am

சரண மாலை


மகா கணபதி தியான ஸ்லோகம்

மூக்ஷிக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
ஐயப்பனுக்கு மாலை அணியும் முன் சொல்லும் மந்திரம்

அருள் தரும் வரலாறு Sabarimala_Ayappa_01_V

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம்
குருமுத்ராம் நமாம் யஹம்


வன முத்ராம் சுக்த முத்ராம்
ருத்ர முத்ராம் நமாம் யஹம்


சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம்
வருதமுத்ராம் நமாம் யஹம்


சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம்
யாதுதா சேதாபிமே


குருதக்ஷ்ண்யா பூர்வம் தஸ்யா
நுக்ரஹ காரினே


சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம்
தாரயா யஹம்


சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம்
நமாம் யஹம்


சபர்யாசல முத்தராயை
நமஸ்துப்யம் நமோ நம;


சாஸ்தா காயத்ரீ

ஓம் பூத நாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்
ஐயப்பன் மகா மந்திரம்
ஸ்ரீ பூதநாத ஸதானந்தா
ஸர்வபூத தயாபரா

ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ


ஐயப்பன் 108 சரணக் கோவை

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா


ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா

ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா

ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா


ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா

ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா


ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா

ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா

ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா


ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா

ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா

ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா


ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா

ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா

ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா


ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா

ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா


ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா


ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா

ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா

ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா

ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா


ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா

ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா

ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா

ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா


ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா

ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா

ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா

ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா

ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா


ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா


ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த
சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான
பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி,
ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த
சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

சாஸ்தா சதகம்

அருள் தரும் வரலாறு Saranam020

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணமய்யப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்


1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷõகரம் விபும்

பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


(சுவாமியே சரணம் ஐயப்பா)


2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்

ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


(சுவாமியே சரணம் ஐயப்பா)


3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்

ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


(சுவாமியே சரணம் ஐயப்பா)


4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்

அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


(சுவாமியே சரணம் ஐயப்பா)


5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்

ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


(சுவாமியே சரணம் ஐயப்பா)


6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம்

கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


(சுவாமியே சரணம் ஐயப்பா)


7. சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம்

சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்


(சுவாமியே சரணம் ஐயப்பா)


8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா

தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்


(சுவாமியே சரணம் ஐயப்பா)


9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா

ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ


(சுவாமியே சரணம் ஐயப்பா)


10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்

வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்


(சுவாமியே சரணம் ஐயப்பா)


11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்

சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே


(சுவாமியே சரணம் ஐயப்பா)


ஐயப்பன் கவசம்

கணபதி துதி

அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே

இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே

உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே

எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே

ஐங்கரனே அருள் புரிவாய்.

காப்பு

அருள் தரும் வரலாறு Iyappanmalar4

ஹரிஹரபுத்ரனை ஆனந்த ரூபனை

இருமூர்த்தி மைந்தனை அறுமுகன் தம்பியை

சபரிகிரீசனை, சாந்த ஸ்வரூபனை

தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்

ஐயப்ப தேவன் கவசமிதனை

அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்

தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்

நாடிய பொருளும் நலமும் வருமே


நூல்

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய

மணிகண்ட தேவா வருக வருக

மாயோன் மைந்தா வருக வருக

ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக

புலிவாஹனனே வருக வருக

புவியெல்லாம் காத்திட வருக வருக

பூரணை நாதனே வருக வருக

புண்ணியமூர்த்தியே வருக வருக

பூத நாயகா வருக வருக

புஷ்களை பதியே வருக வருக


பொன்னம்பலத்துறை ஈசா வருக

அடியாரைக் காக்க அன்புடன் வருக

வருக வருக வாசவன் மைந்தா

வருக வருக வீர மணிகண்டா

வஞ்சனை நீக்கிட வருக வருக

வல்வினை போக்கிட வருக வருக

ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக

அச்சம் அகற்றிட அன்பனே வருக

இருவிளை களைந்தே எனையாட்கொள்ள

இருமூர்த்தி மைந்தா வருக வருக


பதினென்படியை மனத்தில் நினைக்க

பண்ணிய பாவம் பொடிப்பொடியாகும்

ஐயப்பா சரணம் என்றே கூறிட

ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே

சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்

துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்

சரணம் சரணம் என்றே சொல்லிட

சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே

பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்

பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்


ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க

அவினியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்

சரணம் சரணம் ஐயப்பா சரணம்

சரணம் சரணம் சபரி கிரீசா

சரணம் சரணம் சத்குரு நாதா

சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.


வேண்டுதல்

சிவனார் மகன் என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணிணைக் காக்க
நாராணன் பாலன் நாசியைக் காக்க
இருமூர்த்தி மைந்தன் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
பம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முகப் பூஜீயன் நாவினைக் காக்க
கலியுக வரதன் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பி என் குரல்வளை காக்க

புஷ்களை நாதன் புஜங்களைக் காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க
வீரமணி கண்டன் விரல்களைக் காக்க
கயிலை மைந்தன் மார்பினைக் காக்க
மணிகண்ட தேவன் மார்பினைக் காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க
முழுமுதற் கடவுள் முதுகினைக்காக்க
இருமுடிப்பிரியன் இடுப்பினைக் காக்க
பிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க
தர்மசதஸ்தா என் துடைதனைக் காக்க

முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
விஜயகுமரன் விரல்களைக் காக்க
அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க
ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க
காட்டாளரூபி காலையில் காக்க
நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க

மாலின் மகனார் மாலையில் காக்க
ஹரிஹர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க
எருமேலி சாஸ்தா என்றுமே காக்க
ஹரியின் மகனார் அநுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடி ஈசன் இடப்புறம் காக்க
காக்கக் காக்க கருணையால் காக்க
பார்க்கப் பார்க்க பாபம் பொடிபட

இம்மையும் மறுமையும் இல்லா தொழிந்திட
ஈசன் மகன்எனை என்றுமே காக்க
கொடிய விஷயங்களும் கொள்ள நோய்களும்
குருதியைக் குடிக்கும் துஷ்டப் பேய்களும்
காந்தமலைதனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய்
பில்லி, சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்

வாதம், பித்தம் சிலேட்சுமத் துடனே
வாந்தியும், பேதியும் வலிப்பும் சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணுகாமல்
என்றுமே காப்பாய் எருமேலி தேவா
கல்வியும், செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா
காமம், குரோதம், லோபம் மோஹம்
மதமாச்சர்ய மெனும் ஐம்பெரும் பேய்கள்

என்றுமே என்னை அணுகிவிடாமல்
ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய்
சூது, பொறாமை, பொய் கோபமில்லாமல்
சோரம், லோபம் துன்மார்க்கம் கல்லாமல்
வேத நெறிதனை விலகி நில்லாமல்
வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய்
மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
வந்தனை வாட்டி வதை செய்யாமல்
உள்ளன் புடனே உன்திருநாமம்
அநுதினம் சொல்ல அருள் தருவாயே


நமஸ்காரம்

ஹரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐயங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ
பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்


சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

1. ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


2. சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


3. ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


4. துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


5. த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


6. பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


7. களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


8. ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

மஹாசாஸ்தா அஷ்டோத்தரம்

ஓம் மஹாசாஸ்த்ரே நம
ஓம் விச்வசாஸ்த்ரே நம
ஓம் லோகசாஸ்த்ரே நம
ஓம் தர்மசாஸ்த்ரே நம
ஓம் வேத சாஸ்த்ரே நம


ஓம் காலசாஸ்த்ரே நம
ஓம் கஜாதி பாய நம
ஓம் கஜாரூடாய நம
ஓம் கணாத் யக்ஷõய நம
ஓம் வ்யாக்ரா ரூடாய நம


ஓம் மஹாத்யுதயே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
ஓம் கதா தங்காய நம
ஓம் கதா க்ரண்யை நம


ஓம் ரிக்வேத ரூபாய நம
ஓம் நக்ஷத்ராய நம
ஓம் சந்த்ர ரூபாய நம
ஓம் வலாஹகாய நம
ஓம் தூர்வாச்யாமாய நம


ஓம் மஹா ரூபாய நம
ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் உத் பலாகாராய நம


ஓம் காலஹந்த்ரே நம
ஓம் நராதிபாய நம
ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
ஓம் மதனாய நம


ஓம் மாதவஸுதாய நம
ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் மஹாத் ஸாஹாய நம
ஓம் மஹாபாப விநாசநாய நம


ஓம் மஹா சூராய நம
ஓம் மஹா தீராய நம
ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
ஓம் அஸி ஹஸ்தாய நம
ஓம் சரதராய நம


ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
ஓம் அர்ஜுநேசாய நம
ஓம் அக்னிநயநாய நம
ஓம் அநங்க மதனாதுராய நம
ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம


ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷிதாய நம
ஓம் கஸ்தூரி திலகாய நம
ஓம் ராஜசேகராய நம
ஓம் ராஜ ஸத்தமாய நம


ஓம் ராஜ ராஜார்சிதாய நம
ஓம் விஷ்ணு புத்ராய நம
ஓம் வநஜனாதிபாய நம
ஓம் வர்சஸ்கராய நம
ஓம் வரருசயே நம


ஓம் வரதாய நம
ஓம் வாயுவாஹனாய நம
ஓம் வஜ்ர காயாய நம
ஓம் கட்க பாணயே நம
ஓம் வஜ்ரஹஸ்தாய நம


ஓம் பலோத்ததாய நம
ஓம் த்ரிலோகஞாய நம
ஓம் அதிபலாய நம
ஓம் புஷ் கலாய நம
ஓம் வ்ருத்த பாவநாய நம


ஓம் பூர்ணாதவாய நம
ஓம் புஷ்கலேசாய நம
ஓம் பாசஹஸ்தாய நம
ஓம் பயாபஹாய நம
ஓம் பட்கார ரூபாய நம


ஓம் பாபக்னாய நம
ஓம் பாஷண்டருதி ராகனாய நம
ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம


ஓம் பூஜ்யாய நம
ஓம் பூதசாஸ்த்ரே நம
ஓம் பண்டிதாய நம
ஓம் பரமேச் வராய நம
ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம


ஓம் கவயே நம
ஓம் கவீ நாமதிபாய நம
ஓம் க்ருபாளவே நம
ஓம் க்லேசநாசனாய நம
ஓம் ஸமாய நம


ஓம் அரூபாய நம
ஓம் ஸேநான்யை நம
ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
ஓம் வ்யாக்ரசர்மதராய நம
ஓம் சூலிணே நம


ஓம் கபாலினே நம
ஓம் வேணுவாதநாய நம
ஓம் கலாரவாய நம
ஓம் கம்புகண்டாய நம
ஓம் கிரீடாதி விபூஷிதாய நம


ஓம் தூர்ஜடவே நம
ஓம் விரநிலாய நம
ஓம் வீராய நம
ஓம் விரேந்த்ர வந்திதாய நம
ஓம் விச்வரூபாய நம


ஓம் வ்ருஷபதயே நம
ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
ஓம் தீர்க்கநாஸாய நம
ஓம் மஹாபாஹவே நம
ஓம் சதுர்பாகவே நம

ஓம் ஜடாதராய நம

ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம

ஓம் ஹரிஹராத்மஜாய நம


நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

பதினெட்டாம் படிகளே சரணம்

1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


4. நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


5. ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


6. ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


7. ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


8. எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


9. ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


10. பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


11. பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


12. பன்னிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


13. பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


14. பதினான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


15. பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


16. பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


17. பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


18. பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


19. படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


20. படி தொட்டு வந்தனம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அருள் தரும் வரலாறு Empty வரைபடங்கள்

Post by Tamil Fri Jan 08, 2010 7:33 am

வரைபடங்கள்


அருள் தரும் வரலாறு Map
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அருள் தரும் வரலாறு Empty போக்குவரத்து தகவல்கள் - சபரி மலை வழிகள்

Post by Tamil Fri Jan 08, 2010 7:36 am

போக்குவரத்து தகவல்கள் - சபரி மலை வழிகள்

சென்னையிலிருந்து

1. சென்னையிலிருந்து சபரிமலை
தூரம் 780 கி.மீ
2. சென்னையிலிருந்து பம்பைக்கு மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி
வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சிறப்பு அரசு பஸ் விடப்படுகிறது. கட்டணம் ரூ.510
(தேனி, கம்பம் வழியாக)
3. சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மதியம் 3.25
மணிக்கும், சென்னை - திருவனந்தபுரம் மெயில் இரவு7.45 மணிக்கு புறப்படுகிறது.
கோட்டயத்தில் இறங்க
வேண்டும்.

பாண்டிச்சேரியிலிருந்து

பாண்டிச்சேரியிலிருந்து
சபரிமலைக்கு 3 வழிகளில் செல்லலாம்.
1. பாண்டி - விழுப்புரம் - திருச்சி - மதுரை-
குற்றாலம் - புனலூர் - பம்பை 650 கி.மீ
2. பாண்டி - விழுப்புரம் - திருச்சி -
திண்டுக்கல்- குமுளி - எருமேலி- பம்பை 625 கி.மீ
3. பாண்டி - விழுப்புரம் -
சேலம் - கோயம்புத்தூர் - குருவாயூர் - கோட்டயம் - எருமேலி-பம்பை 750
கி.மீ

ரயில் வழி....
கடலூரிலிருந்து சபரிமலைக்கு
சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.இரவு 8 மணிக்கு சென்னையிலிருந்து
புறப்பட்டு விழுப்புரம் வழியாக செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரசில் சென்று
அங்கிருந்து சபரிமலைக்கு செல்லலாம்.


வேலூரிலிருந்து

1. வேலூர் - ஆம்பூர்-வாணியம்பாடி -
திருப்பத்தூர் - தர்மபுரி - பவானி - மேட்டூர் - பெருந்துறை - கோவை - பாலக்காடு -
குருவாயூர் - சோட்டானிக்கரை - வைக்கம் - கோட்டயம் - எருமேலி - பம்பை - சபரிமலை 830
கி.மீ
2. வேலூர் - திருவண்ணாமலை - திருச்சி - மதுரை - குற்றாலம் - செங்கோட்டை-
கோட்டயம் - வடசேரிக்கரா - பம்பை - சபரிமலை 760 கி.மீ
3. வேலூர் - திருவண்ணாமலை -
திருக்கோயிலூர் - மடப்பட்டு - உளுந்தூர்பேட்டை - திருச்சி - திண்டுக்கல் - தேனி -
கம்பம் - எருமேலி - பம்பை - சபரிமலை 689
கி.மீ

ஈரோட்டிலிருந்து

ரயிலில் செல்பவர்கள், ஈரோடு
வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனைத்து ரயில்களிலும் சென்று, செங்கனூர் இறங்கி,
அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.
ஈரோட்டிலிருந்து நேரடி பஸ் வசதி இல்லை. சேலம் -
குருவாயூர், சேலம் - எர்ணாகுளம் அரசு விரைவு பஸ்கள் ஈரோடு வழியாக செல்கின்றன.
குருவாயூர் அல்லது எர்ணாகுளம் சென்று அங்கிருந்து சபரிமலை செல்ல வேண்டும்.
இந்த
பஸ்களின் விபரம்:
சேலம் - குருவாயூர் வழி: ஈரோடு, கோவை, பாலக்காடு, திருசசூர்.
(ஈரோட்டிலிருந்து எர்ணாகுளம் தூரம்: சுமார் 310 கி.மீ.)


கோவையிலிருந்து

ரயிலில் செல்பவர்கள், கோவை வழியாக
திருவனந்தபுரம் செல்லும் அனைத்து ரயில்களிலும் சென்று, செங்கனூர் இறங்கி,
அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.
கோவையிலிருந்து 3 வழிகளில் சபரிமலை
செல்லலாம்.
1. கோவை - திருச்சூர் - பெரும்பாவூர் - தொடுபுழா - ஈராட்டுபேட்டா -
காஞ்சிராபள்ளி - எருமேலி - சாலக்கயம் - சபரிமலை 330 கி.மீ
2. கோவை - திருச்சூர்
- எர்ணாகுளம் - அரூர் - சேர்த்தலை - ஆலப்புழை - பத்தனம்திட்டா - பம்பை - சபரிமலை
380 கி.மீ
3. கோவை - பாலக்காடு - எர்ணாகுளம் - கோட்டயம் - திருவல்லா -
பந்தனம்திட்டா - பம்பை - சபரிமலை 360
கி.மீ

திருச்சியிலிருந்து

திருச்சியிலிருந்து
மணப்பாறை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, உசிலம்பட்டி, கம்பம்,
குமுளி வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன.
1. திருச்சி - குமுளி பயண தூரம் 241
கி.மீ
2. குமுளியில் இருந்து வண்டிப்பெரியார், பாம்பனாறு, முண்டக்கயம்,
காஞ்சிரம்பள்ளி, எருமேலி வழியாக பம்பை வரை கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
குமுளி - பம்பா பயண தூரம்: சுமார் 115 கி.மீ
<table width="100%">

<tr>
<td align="middle"> </td></tr></table>திருநெல்வேலியிலிருந்து

ரயிலில்
செல்பவர்கள், சென்னையிலிருந்து திருநெல்வேலி வழியாக குருவாயூர் எக்ஸ்பிரசில்
செங்கனூரில் இறங்கி, அங்கிருந்து பஸ்சில் சபரிமலை செல்லலாம்.
திருநெல்வேலியிலிருந்து பஸ்சில் 2 வழிகளில் சபரிமலை செல்லலாம்
1. திருநெல்வேலி -
செங்கோட்டை - அச்சங்கோவில் - ஆரியங்காவு- புனலூர் - பத்தனம்திட்டா - பம்பை -
சபரிமலை 228 கி.மீ
2, திருநெல்வேலி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் -
கொட்டாரக்கரை-சாலக்கயம் - பம்பை - சபரிமலை 329
கி.மீ


மதுரையிலிருந்து....

மதுரையிலிருந்து
பஸ்சில் எருமேலியை அடையும் வழிகள்.
1. மதுரை - நாகர்கோவில் - திருவனந்தபுரம் -
- கொட்டாரக்கரா - பந்தளம் - எருமேலி 474 கி.மீ
2. மதுரை - குற்றாலம் -
செங்கோட்டை - அச்சங்கோவில் - ஆரியங்காவு - குளத்துப்புழை-எருமேலி 385 கி.மீ
3.
மதுரை - கம்பம் - குமுளி - வண்டிப்பெரியார் - காஞ்சிரப்பள்ளி - எருமேலி 253
கி.மீ
எருமேலியிலிருந்து பம்பைக்கு ரான்னிவழி - 80 கி.மீ
எருமேலியிலிருந்து
காட்டுவழி (பெரியபாதை) காளகட்டி, அழுதா, கரிமலை, பம்பை, சபரிமலை வரை 56 கி.மீ
5.
பம்மை - சபரிமலை 5 கி.மீ
6. மதுரையிலிருந்து பம்பைக்கு நாள்தோறும் அரசு விரைவு
போக்குவரத்து கழக பஸ்கள் செல்கிறது.

ரயில் வழி....
1.
மதுரையிலிருந்து சபரிமலை சென்றடைய நேரடி ரயில் வசதி இல்லை. இரவு 8 மணிக்கு
சென்னையிலிருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும்
.அந்த ரயிலில் செங்கோட்டை சென்று அங்கிருந்து சபரிமøக்கு செல்லலாம்.
2.
மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு காலை 6.30 மணி, 11 மணி, மாலை 5 மணிக்கு பாசஞ்சர்
ரயில் உள்ளது. அந்த ரயிலில் செங்கோட்டை சென்று அங்கிருந்து சபரிமøக்கு செல்லலாம்.


கேரள பஸ் சர்வீஸ்

சபரிமலை சீசன் ஆரம்பமானதும்
திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம் திட்டா, பந்தளம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம்,
எருமேலி போன்ற இடங்களிலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும். வழக்கமான
கட்டணத்திலிருந்து 30 சதவீதம் கூடுதலாக
வசூலிக்கப்படும்.

சபரிமலைக்கு முக்கிய வழிகளும்
தூரமும்


கோட்டயம் வழி
1. கோட்டயம் - கோழஞ்சேரி
- ரான்னி - பம்பை - 119 கி.மீ
2. கோட்டயம் - கொடுங்கூர் - மணிமல - பம்பை - 105
கி.மீ
3. கோட்டயம் - மணிமலை - அத்திக்கயம் - பம்பை - 103 கி.மீ
4. கோட்டயம் -
பொன்குன்னம் - எருமேலி - பிலாப்பள்ளி - பம்பை - 90 கி.மீ

எருமேலி
வழி

5. எருமேலி - ரான்னி - வடசேரிக்கரை - பம்பை - 76 கி.மீ
6.
எருமேலி - கண்ணமலை - பம்பை - 56 கி.மீ
7. எருமேலி - அத்திக்கயம் - பெருநாடு -
பம்பை - 64 கி.மீ
8. எருமேலி - செத்தோங்கரை - அத்திக்கயம் - பம்பை - 69
கி.மீ

பந்தளம் வழி
9.பந்தளம்- பத்தனம்திட்டா -
வடசேரிக்கரை - பம்பை - 84 கி.மீ

செங்கோட்டை வழி:
10.
செங்கோட்டை - புணலூர் - பத்தனம்திட்டா - பம்பை - 170 கி.மீ
11. குமுளி - வண்டி
பெரியாறு - எருமேலி - பம்பை - 180 கி.மீ
12. நாகர்கோவில் - திருவனந்தபுரம் -
பத்தனம்திட்டா - வடசேரிக்கரை - பம்பை - 225 கி.மீ
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அருள் தரும் வரலாறு Empty அவசர உதவி் - முக்கிய டெலிபோன் எண்கள்

Post by Tamil Fri Jan 08, 2010 7:38 am

அவசர உதவி் - முக்கிய டெலிபோன் எண்கள்
சபரிமலை சன்னிதானம்

எஸ்டிடி கோடு 04735

தலைவர், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு - 202 034

சிறப்பு கமிஷனர் - 202 015

தேவஸ்வம் கமிஷனர் - 202 004

லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.பி. - 202 081

லஞ்ச ஒழிப்புஅதிகாரி (கோயில்) - 202 058

செயல் அலுவலர் - 202 028

உதவி செயல் அலுவலர் - 202 019

நிர்வாக அலுவலகம் - 202 026

காணிக்கை தனி அதிகாரி - 202 017

மாளிகைப்புறம் கோயில் - 202 022

விருந்தினர் மாளிகை (கெஸ்ட்ஹவுஸ்) - 202 056

அறைகள் பதிவு அலுவலகம் - 202 049

செய்தித்துறை அதிகாரி - 202 048

புக் ஸ்டால் - 202 053

நிர்வாக அதிகாரி - 202 038

தனலட்சுமி பாங்க் - 202 065

அரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 101

அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரி - 202 102

அரசு ஹோமியோபதி ஆஸ்பத்திரி - 202 843

அரசு இதய நோய் மையம் - 202 050

கன்ட்ரோல் ரூம் எஸ்.பி. - 202 029

டி.ஐ.ஜி. முகாம் - 202 076

போலீஸ் ஸ்டேஷன் - 202 062

போலீஸ் வயர்லஸ் ஸ்டேஷன் - 202 033

போஸ்ட் ஆபீஸ் - 202 130

பம்பை

தினமலர் தகவல் மையம் - 202 377

டெலிபோன் எக்சேஞ்ச் - 202 198

தேவஸ்வம் போர்டு விருந்தினர்
விடுதி தலைவர் - 202 466

நிர்வாக அதிகாரி - 202 442

பெட்ரோல் பங்க் - 202 046

உதவி மக்கள் தொடர்பு அதிகாரி - 202 339

டோல்கேட் (சாலக்கயம்) - 202 522

அரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 318

தனலட்சுமி பாங்க் - 202 465

கேரள அரசு போக்குவரத்து கழகம் - 202 445

மின்சார வாரியம் - 202 424

தீயணைப்பு நிலையம் - 202 333

போஸ்ட் ஆபீஸ் - 202 330

போலீஸ் ஸ்டேஷன் - 202 412

போலீஸ் கன்ட்ரோல் ரூம் - 202 324
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அருள் தரும் வரலாறு Empty சபரி காலண்டர்

Post by Tamil Fri Jan 08, 2010 7:40 am

சபரி காலண்டர்

அருள் தரும் வரலாறு 1



அருள் தரும் வரலாறு Sabarimalai-2010


அருள் தரும் வரலாறு 2

அருள் தரும் வரலாறு 3







Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அருள் தரும் வரலாறு Empty Re: அருள் தரும் வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum