TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரவு?

Go down

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரவு? Empty இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரவு?

Post by ஜனனி Sun Mar 18, 2012 3:57 pm


இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரவு? Pm





புது
தில்லி, மார்ச் 17: தமிழக அரசியல் கட்சிகளின் தீவிர நெருக்கடிக்குப்
பணிந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு
எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிய
வந்துள்ளது.மத்திய அரசு தனது நிலையை நாடாளுமன்றத்தில், வரும் வாரம் தெளிவுபடுத்தும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தப்
பிரச்னையில் தெளிவான நிலை எடுக்காமல் காலம் தாழ்த்தினால், அது
தமிழ்நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமரிடமும்
காங்கிரஸ் தலைவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசி
விளக்கி வருவதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில்
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அளித்த விளக்கம் சரியல்ல என்ற நிலையை
தமிழக மக்களின் உணர்வாக உள்துறை அமைச்சர் பிரதிபலித்து வருவதாகவும் தெரிய
வந்துள்ளது. சில திருத்தங்களுடன் ஆதரவு?: இதையடுத்து, இலங்கைக்கு
எதிரான தீர்மான விவகாரத்தில் மத்திய அரசு எடுக்க வேண்டிய நிலை, அந்தத்
தீர்மானத்தில் சில திருத்தங்களைச் செய்து ஆதரவு அளிப்பது போன்ற
முயற்சிகளைத் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக
வெளியுறவு அமைச்சக வட்டாரம் உறுதி செய்துள்ளது. இந்தியாவிடம்
இருந்து கட்டமைப்பு, பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் அதே வேளை,
இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும்
கைகோத்துக் கொண்டு வலம் வரும் இலங்கையின் போக்கு இந்தியாவுக்கு அதிருப்தியை
அளித்துள்ளதாகத் தெரிகிறது.மேலும், இந்தியாவின், வலிய வந்து
செய்யும் உதவிகளுக்கு உரிய மரியாதையும் மதிப்பையும் இலங்கை கொடுப்பதில்லை
என்ற தகவலும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.இலங்கைக்கு எச்சரிக்கை
சமிக்ஞை: இந்நிலையில், இலங்கைக்கு எதிரான திருத்தப்படும் தீர்மானத்தை
ஆதரிப்பதன் மூலம் அந்நாட்டுக்கு ஒரு "எச்சரிக்கை சமிக்ஞை' அனுப்பவும்
மத்திய அரசு முடிவு செய்துள்ளது. "இந்தத் தருணத்தில், இலங்கைக்கு
எதிரான கடுமையான நிலையை இந்தியா எடுக்க வேண்டும். அது, ராஜீய ரீதியாக
இந்தியாவின் செல்வாக்கைச் சர்வதேச சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள
உதவுவதுடன், உள்நாட்டில் சரிந்து வரும் தமது செல்வாக்கையும் சரி செய்து
கொள்ள உதவும்' என்ற சிதம்பரத்தின் வாதத்தை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும்
பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோனி ஆகிய மூத்த அமைச்சர்கள்
ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.ஒருபுறம், ரயில் பயணக் கட்டணத்தை
உயர்த்திய விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டும்
என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நெருக்கடி கொடுத்து
வருகிறார்.மறுபுறம், இலங்கை விவகாரத்தில் அந்நாட்டுக்கு அனுசரணையான
நிலையை இந்தியா கடைப்பிடித்தால், அது உள்நாட்டு அரசியலில் மேலும்
நெருக்கடியைத் தரும் என்றும் சிதம்பரம் விளக்கியதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இந்த முன்னேற்றங்களின் பலனாக, ஐ.நா. மனித உரிமைகள்
கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தில்
சில திருத்தங்களுடன் இந்தியா ஆதரவு அளிக்க களம் தயாராகி வருவதாக அரசு
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 23-ல் வாக்கெடுப்பு: இலங்கையில்
விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு சண்டையின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி
மக்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். போரின் போதும், போருக்குப் பிந்தைய
காலத்திலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசித்து வந்த தமிழர்கள்
உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் மீது இலங்கை ராணுவத்தினர் பலவிதமான
அடக்குமுறை, மனித உரிமை மீறல்களைக் கட்டவிழ்த்து சித்ரவதை செய்தனர். போர்க்குற்றங்களுக்குக்
காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெனீவாவில் நடைபெற்று
வரும் ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானத்தை
முன்மொழிந்துள்ளது. அத்தீர்மானத்தின் நகல் 47 உறுப்பு நாடுகளுக்கு
அனுப்பப்பட்டுள்ளது. அதில் திருத்தம் தேவைப்பட்டால் அவை மேற்கொள்ளப்பட்டு
மார்ச் 22ம் தேதி தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படும். மார்ச் 23ம் தேதி
தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்தத் தீர்மானத்தை
இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க., இடது சாரிக்
கட்சிகள், விடுதலைச் சிறுத்தைக் கட்சி ஆகியவை குரல் கொடுத்துள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அந்தக் கோரிக்கைக்கு ஆதரவு
தெரிவித்துள்ளது.இலங்கைக்கு எதிரான கடுமையான நிலையை இந்தியா எடுக்க வேண்டும். இது ராஜீய ரீதியாக இந்தியாவின் செல்வாக்கை சர்வதேச சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள உதவுவதுடன் உள்நாட்டில் சரிந்து வரும் தமது செல்வாக்கையும் சரி செய்து கொள்ள உதவும் என்ற சிதம்பரத்தின் வாதத்தை பிரதமர், பிரணாப் முகர்ஜி, அந்தோனி ஆகியோர்ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு; தீர்மானம் வெற்றி
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு
»  ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்: முழிக்கிறது காங்கிரஸ் கட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum