TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் சினிமாவை மிஞ்சும் சண்டை காட்சிகள்!!

Go down

நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் சினிமாவை மிஞ்சும் சண்டை காட்சிகள்!! Empty நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் சினிமாவை மிஞ்சும் சண்டை காட்சிகள்!!

Post by ஜனனி Fri Feb 24, 2012 10:26 am

நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் சினிமாவை மிஞ்சும் சண்டை காட்சிகள்!! Bank_thef

சினிமாவை மிஞ்சும் சண்டைக்
காட்சிகள்போல கொள்ளையர்களை போலீசார் சுட்டுக் கொன்ற பரபரப்பான தகவல்கள்
வெளியாகியுள்ளன. வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனின் படத்தை போலீஸ்
கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர்
சண்முகராஜேஸ்வரன் ஆகியோர், கொள்ளையனின் புகைப்படத்தையும், வீடியோவையும்
வெளியிட்டனர்.

அதில், கொள்ளையனின் புகைப்படம் தமிழ்முரசு பத்திரிகையிலும்,
போஸ்டரிலும் வெளியாகியிருந்தது. இதை நேற்று முன்தினம் இரவு பார்த்த
வேளச்சேரி நேருநகர் நேதாஜி சாலை, ஏ.எல்.முதலி 2வது தெருவில் வசிக்கும்
முருகன் என்பவர் தமிழ் முரசு பத்திரிகையை வாங்கி, தனது அக்கா பார்வதியிடம்
காட்டியுள்ளார்.

பத்திரிகையில், அவர்களது வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் ஒருவனின் படம்போல இது இருந்தது. உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அப்போது
போலீசார் கொள்ளையர் களை பிடிப்பது குறித்து விசாரணை நடத்திக்
கொண்டிருந்தனர். அவர்களிடம், முருகன் தகவல் தெரிவித்ததும், கொள்ளையர்களைப்
பிடிப்பது குறித்து திட்டம் வகுக்கப்பட்டது.

அதில் கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டின் வரைபடம் வரையப்பட்டு, யார்
எங்கு செல்வது, எப்படிச் செல்வது என்று திட்டம் தீட்டினர். மேலும்
நள்ளிரவு ஒரு மணிக்குச் சென்று பிடிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஏனெனில் அப்போதுதான் கொள்ளையர்கள் நன்றாக தூங்குவார்கள் என்றும் போலீசார்
கருதினர்.

அதன்படி நேராக வீட்டுக்குச் சென்று கதவை வெளிப்பக்கமாக
பூட்டினர். கதவு பூட்டும் சத்தம்கேட்டதும், யார் கதவை பூட்டுவது என்று
கேட்டுள்ளனர்.

ஆனால் பதில் இல்லாததால், வீட்டு உரிமையாளரின் செல்போனை தொடர்பு கொண்டு,
யார் கதவை பூட்டுவது. வெளியில் யாரோ நிற்கிறார்கள், அவர்கள் யார்?
எதற்காக கதவை பூட்டுகிறார்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் வீட்டு
உரிமையாளரோ எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறோம்
என்று தெரிவித்தனர்.

அப்போது வீட்டுக்குள் துப்பாக்கியில் குண்டு
மாட்டும் சத்தம் கேட்டது. இதனால் கொள்ளையர்கள் தாக்குவார்கள் என்று கருதிய
போலீசார் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, போலீசார் வந்திருப்பதாகவும் சரணடைய
வேண்டும். அருகில் பொதுமக்கள் ஏராளமாக வசிக்கிறார்கள். அவர்களுக்கு எந்த
பாதிப்பும் வரக்கூடாது. அதனால் சரண் அடையுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அவர்களோ போலீசாரை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதனால்
போலீசாரும், ஜன்னல் வழியாக சுட்டனர். பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே
சென்று கொள்ளையர்களை சுட்டுக் கொன்றனர். அதில் சம்பவ இடத்திலேயே 5 பேரும்
இறந்தனர்.

காலையில் தப்ப திட்டம் தீட்டிய கொள்ளையர்கள்


இந்த
வீட்டுக்கு கடந்த டிசம்பர் மாதம் வந்து 5 பேரும் தங்கினர். ஒரு மாதம்
தங்குவதற்கு வாடகை கொடுத்தனர். தாங்கள் வியாபாரம் செய்வதாக தெரிவித்தனர்.

பின் ஒரு மாதம் பல இடங்களுக்கும் சென்று வங்கிகளை ஆய்வு செய்தனர். பின்
ஊருக்கு புறப்பட்டுச் சென்று விட்டனர். கடந்த மாதம் மீண்டும் வந்துள்ளனர்.
அப்போது ஒரு மாதம் தங்குவதற்கு வாடகையை கொடுத்தனர். அந்தச்
சமயத்தில்தான், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி வங்கியில் கி25 லட்சத்தை
கொள்ளையடித்தனர்.

அடுத்த இரு நாட்களில் சொந்த ஊருக்குச் செல்வதாக
கூறி விட்டு 5 பேரும் சென்றனர். சொந்த ஊருக்குச் சென்று ரூ.25 லட்சத்தை
கொடுத்து விட்டு சில நாட்கள் அங்கு தங்கியிருந்தனர். பின் இந்த மாதம்
ஆரம்பத்தில் மீண்டும் வந்து அந்த வீட்டில் தங்கி, ஒரு மாதத்துக்கான வாடகையை
கொடுத்துள்ளனர்.

காலையில், சென்று விட்டு இரவில் வீட்டுக்கு வருவார்கள். பின் நேற்று
காலையில் அவர்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டு அடுத்த மாதம் வருவதாக
திட்டமிட்டனர். அதனால், கொள்ளையர்கள் நேற்று காலையில் ரயிலில் சொந்த
மாநிலங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். அதற்குள் போலீசில் சிக்கிக்
கொண்டனர்.

அதிகாலையில் குவிந்த கூட்டம்

வேளச்சேரி
நேரு நகர், நேதாஜி ரோடு ஏஎல் முதலி 2,வது தெரு இப்போது பிரபலமாகி
விட்டது. வங்கிக் கொள்ளையர்களை போலீசார் என்கவுன்டர் செய்த தகவல்
பரவியதும் அதிகாலை முதல் ஏராளமானோர் இந்த தெருவில் உள்ள அந்த வீட்டு
முன்பு திரண்டனர்.

சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் என்கவுன்டர் நடந்த இடத்தை
பார்க்க ஆர்வத்துடன் ஓடி வந்தனர். தெருவின் முகப்பில் போலீசார் தடுப்பு
வேலிகள் அமைத்து யாரையும் உள்ளே விடவில்லை. பொதுமக்கள் திரண்டதால் அந்த
பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இனிப்புடன் சந்தோஷம்

தமிழ்நாடு
நாடார் மக்கள் இயக்க தலைவர் ஸ்டீபன் என்பவர் பொதுமக்களுக்கு இனிப்பு
வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘எனது வீடு
கீழ்கட்டளையில் உள்ளது. எங்கள் பகுதி வங்கியில்தான் கொள்ளையர்கள் பணத்தை
கொள்ளையடித்து சென்றுள்ளனர். பயங்கர கொள்ளையர்களை போலீசார் சுட்டுக்
கொன்றது மகிழ்ச்சியான விஷயம். தொடர் கொலை, கொள்ளைகளால் போலீஸ் மீது மக்கள்
அதிருப்தியில் இருந்தனர். இப்போது இந்த என்கவுன்டரால் மக்கள் மத்தியில்
சென்னை போலீசாரின் மதிப்பு உயர்ந்துள்ளது’ என்றார்.

23ல் தொடங்கி 23ல் முடிந்தது

பெருங்குடி
பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் கடந்த மாதம் 23,ம் தேதி பட்டப்பகலில்
கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் 25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளை கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 20,ம் தேதி கீழ்கட்டளை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். சென்னை
மக்களை பீதியில் ஆழ்த்திய கொள்ளையர்கள் 5 பேரையும் 23,ம் தேதி
தொடக்கத்திலேயே போலீசார் சுட்டுக் கொன்று விட்டனர். கொள்ளையரின் ஆட்டம்
23,ம் தேதி தொடங்கி 23,ம் தேதியே முடிந்து விட்டது.

வங்கிக் கொள்ளையர் யார் யார்?

1. வினோத் குமார், (கொள்ளை கும்பல் தலைவன்) தந்தை மாத்னாத்ஷா, ராய்புரா, பத்துக்கா மாவட்டம், பாட்னா, பீகார்.
2. சந்திரிகா ராய், தந்தை கிரிபாலிராய், மாஜூபூர், பத்துக்கா மாவட்டம், பாட்னா, பீகார்.
3. ஹரிஷ் குமார், தந்தை பாஞ்ச்ராய், புருஷேத்தம்பூர் டவுன், ரகோப்பூர் மாவட்டம், வைஷாலி, பீகார்.
4. வினய் பிரசாத், தந்தை ஜாமுன் பிரசாத், பஹாபர், நாளந்தா மாவட்டம், பீகார்.
5. அபய்குமார், தந்தை விஜய் சிங், ஜிடி ரோடு, சிப்பூர், ஹவுரா, மேற்கு வங்காளம்.

ரூ.24 லட்சம் எங்கே?

கடந்த
மாதம் 23ம் தேதி பெருங்குடியில் உள்ள வங்கியில் ரூ.24 லட்சம்
கொள்ளையடிக்கப்பட்டது. இந்தப் பணத்தை அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு கொண்டு
சென்று கொடுத்து விட்டு மீண்டும் சென்னை வந்துள்ளனர். இதனால் அந்தப் பணம்
யாரிடம் உள்ளது? அதை மீட்க போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? என்ற
விபரம் தெரியவில்லை. ஆனாலும், அந்தப் பணம் முழுவதும் மீட்கப்படும் என்று
ஒரு போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

சுட்டதில் 4 பேர் கமாண்டோ படை

சென்னை
போலீசார் கொள்ளையர்களை பிடிக்க துப்பாக்கியுடன் சென்றனர். அப்போது
அதிநவீன துப்பாக்கிகளை கையாளும் கமாண்டோ படையைச் சேர்ந்த 4 பேரை அழைத்துச்
சென்றனர். அவர்கள்தான் இந்த ஆபரேஷனை கையாண்டுள்ளனர். அவர்கள்,
கொள்ளையர்களை குறிபார்த்து சுட்டதால், 5 பேரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு
விழுந்து இறந்தனர்.

‘எங்க வீட்டு பக்கத்தில் இப்படி ஒரு பயங்கர கொள்ளையரா...?’

என்கவுண்டர்
நடந்த வேளச்சேரி நேரு நகர் பகுதி மக்கள் இன்னும் பீதியில் இருந்து
மீளவில்லை. பலர் நேற்று வேலைக்கு செல்லவில்லை. பிள்ளைகளையும் பள்ளிக்கு
அனுப்பவில்லை. கொள்ளையர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில்
வசிக்கும் யசோதா: 5 பேரும் யாரிடமும் பேச மாட்டார்கள். வாரத்துக்கு 2
நாட்கள் மட்டுமே வீட்டில் இருப்பார்கள். இரவு முழுவதும் போனில் பேசிக்
கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் இந்தியில் பேசியதால் எனக்கு எதுவும்
புரியவில்லை. ஒருவன் மட்டும் பல்சர் பைக் வைத்திருந்தான். அதையும் அதிகம்
பயன்படுத்தவில்லை. நள்ளிரவில் குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டதும்
பயந்து போய் கதவை திறந்து எட்டிப் பார்த்தேன். ஏராளமான போலீசார்
நின்றிருந்தனர். வெளியே எட்டிப் பார்க்கக் கூடாது என்று போலீசார்
கூறிவிட்டனர். பயத்தில் கதவை பூட்டிக் கொண்டேன். எனது குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்பவில்லை.

எதிர் வீட்டில் வசிக்கும் பரமேஸ்வரி: இரவு 11 மணி
வரை சீரியல் பார்த்துவிட்டு கதவை பூட்ட வந்தேன். எதிர் வீட்டை போலீசார்
முற்றுகையிட்டு நின்றனர். வெளியே வர முயன்ற என்னை போலீசார் உள்ளே
செல்லும்படி எச்சரித்தனர். இதனால், பயத்தில் கதவை பூட்டி விட்டேன். ஒரு மணி
நேரத்துக்கு பிறகு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. பயத்தில் வெளியே
வரவில்லை. காலை 5 மணிக்கு வந்து பார்த்தேன். எங்கள் வீட்டுக்கு எதிரிலேயே
இவ்வளவு பெரிய கொள்ளையர்கள் தங்கி இருந்தது நெஞ்சை படபடக்க வைத்துள்ளது.
நானும் கணவரும் வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளையும் பள்ளிக்கு
அனுப்பவில்லை.

பின் வீட்டில் வசிக்கும் மகேஷ்: சொந்த ஊர் வேலூர். 4
மாதம் முன்புதான் இங்கு வந்து குடியேறினோம். 5 பேரில் கொள்ளை கும்பல்
தலைவன் மட்டும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டே இருப்பான். என்கவுண்டருக்கு
முந்தைய நாள் மாலை பத்திரிகையில் வெளிவந்த கொள்ளை கும்பல் தலைவன்
புகைப்படத்தை பார்த்தபோது எனது வீட்டின் பக்கத்தில் வசிப்பவர் முகம் போல்
இருந்தது. நமக்கு ஏன் வீண் வம்பு என்று தூங்கி விட்டேன். காலையில் வெளியே
வந்து பார்த்த போதுதான் கொள்ளையர்களை போலீசார் சுட்டுக் கொன்றது தெரிந்தது.
இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நள்ளிரவில் நடந்த பயங்கரம்! சுட்டுக் கொல்! சந்திரபாபு நாயுடு பகிரங்க உத்தரவு!- ஆந்திர அதிரடிப்படை வாக்குமூலம்!
» இலங்கையில் நடந்த போர்க்குற்ற கொடூரக் காட்சிகள்-முழுமையாக வெளியிடுகிறது சேனல் 4
» ஜப்பானில் நடந்த சுனாமி வரும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவு
» " லண்டனில் உள்ள சினி வேர்ல்ட் சினிமாவை ஈழத் தமிழர்கள் ஒரு உலுப்பு உலுக்கியுள்ளனர்"
» சண்டை + சண்டை = சுயநலம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum