TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தீகாரை அதிர வைத்த சோப்ராஜ்

Go down

தீகாரை அதிர வைத்த சோப்ராஜ் Empty தீகாரை அதிர வைத்த சோப்ராஜ்

Post by sakthy Fri Nov 25, 2011 4:53 pm

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

தீகாரை அதிர வைத்த சோப்ராஜ்

2G ஊழலில் குற்றம் சுமத்தப்பட்ட கனிமொழி அக்கா உட்பட்டவர்களை நிரப்பி வைத்திருக்கும், இந்தியாவிலேயே மிகப் பெரிய சிறை என சொல்லப்படும் திகார் சிறைச்சாலை, 5000 வரை தடுத்து வைக்கக் கூடிய இந்த சிறையில் 12,000 கைதிகள் வரை உள்ளனர். இந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்துவதெல்லாம் சுலபமானதல்ல என சிறை அதிகாரிகள்,காவலர்கள் தெரிவித்த போதிலும்,அங்கு கைதிகளை நல்வழிப்படுத்தும் பல நல்ல திட்டங்கள் நடைமுறைத்தப் படுவதாக உயர் அதிகாரிகள் கூறினாலும்,அவற்றில் ஓரளவு உண்மை இருந்தாலும், உயர் அதிகாரிகள் கூட நம்ப முடியாத பல சம்பவங்கள்,உலகெங்கும் உள்ள எல்லா சிறைகளிலும் நடந்தாலும் கூட,இங்கு நடைபெறுவது சற்று அதிகமே என்பதை உயர் அதிகாரிகள் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.

மழை பெய்தால் வெள்ளக்காடாக இருப்பதையும்,அதே சமயம் எலிகள்,பூச்சிகள் கைதிகளை விட சுதந்திரமாக திரிவதையும்,கைதிகளிடையே நடக்கும் தாக்குதல்கள், தங்களுக்கு உடந்தையாக இல்லாத கைதிகள் அடித்து தாக்கப்படுவது,அதிகாரிகளுக்கு வேண்டியவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்,கைத் தொலைபேசி பாவனை,போதை வஸ்த்து பாவனை,விரும்பிய உணவு, லஞ்சம்,ஊழல், தன்னிச்சையாக எங்கும் செல்ல உரிமை இப்படி சொல்லிக் கொண்டே போகக் கூடிய பல சம்பவங்கள், சலுகைகள், தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

கைதிகளில் எட்டு வீதமானோர் HIV யால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
சிலர் அறைகளுக்கு வெளியே வர முடியாத நிலை,வர விரும்பாத சிலர், கைதிகளை பார்க்க வரும் உறவினர்களின் பொருட்கள் கடுமையான சோதனைக்கும்,சிலரின் பொருட்கள் சோதனை இன்றியும் உலா வருவது ஒன்றும் பெரிய விசயமல்ல.கைதிகள் சிலர் சிறைவாசத்தை அனுபவித்து மகிழ்வுடன் செல்வதையும்,சிலர் மன நோயாளிகளாக அலைவதையும் காண முடிகிறது.இந்த திகார், 9 சிறைகளாக பிரிக்கப்பட்டும்,அதில் முதல் ஐந்தும் பழைய திகார் சிறையாகவும் மிக மோசமான நிலையில் அசுத்தத்திற்கு இருப்பிடமாகவும் இருக்கிறது.ஆனாலும் உயர் அதிகாரிகள் வரும் இடங்களும்,சில அரசியல் கைதிகள் இடங்களும் நன்றாகவே வைத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
தான் குற்றவாளியே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த ரேமண்ட் ,5 வீதமான வக்கீல்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் பணத்திற்காக எதையும் செய்கிறார்கள், மாற்றுகிறார்கள்,மாறுகிறார்கள் என்கிறார்.
பல வெளிநாட்டவர்கள் போதை பொருள் கடத்தல்களில் கைதாகி தண்டனை அனுபவித்துக் கொண்டும், சிலர் பல வருடங்களாக விசாரணை இல்லாது தடுப்பில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.இன்னொருவர் மூன்று வருடங்களாக எந்த விசாரணையும் இல்லை என்றும்,எந்த நாடு,எத்தனை வயது என்ற இரண்டே கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். அரசியல் காரணமாக அமெரிக்க நாட்டில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட ஒருவர் 10 வருடங்களாக விசாரணை எதுவும் இல்லை என்கிறார்.வெளிநாட்டு இளைஞர் ஒருவர், 10 ஆண்டுகளின் பின் உயிருடன் போவாரா என்ற சந்தேகத்தில்,அரை சாமியாராகி, தியானத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.இப்படி மாறியவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்றாலும்,அடிக்கடி வரும் பலர், சிறை பற்றி கவலையே இன்றி,ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட நாள் விசாரணை இன்றி இருப்பதற்கு, அதிகாரி ஒருவர்,விசாரணை தாமதம் தான் காரணமென்கிறார்.
ஒரு சமயம் ஒருவருக்கு ஐந்து வருடங்களே தண்டனை கிடைத்தால் ,அல்லது யாரோ திட்டமிட்டு செய்த ராஜீவ் கொலைக்கு, யாரோ சிறையும் தூக்குத் தண்டனை கைதியாக சிறையில் இருப்பது போல்,குற்றமற்றவர் என தீர்ப்பு கிடைத்தால் சிறையில் இருந்த காலம், மிகுதி ஐந்து வருடங்கள் நிலை என்ன?விசாரணை தாமதத்தால்,10 ஆண்டுகள் சிறையில் இருந்து இறுதியில் குற்றமற்றவர் என தீர்ப்பு தரப்பட்டால் அவர் நிலை என்ன,வாழ்வு தான் என்ன? ஒரு குற்றமற்றவன் பெறும் தண்டனை மிகக் கொடுமையானது என்பதை சட்டம் புரிந்து கொள்ளுமா?

திகாரை இத்துடன் நிறுத்தி சோப்ராஜ் பக்கம் திருப்பினால்,உங்களுக்கு தெரிந்த இந்த சோப்ராஜ், Hatchand Bhaonani Gurumukh Charles Sobhraj, Charles Sobhraj,serial killer,the serpent ,Bikini killer இப்படி பல விதமாக அழைக்கப்படும் இவர்,இந்திய தந்தைக்கும் வியட்நாம் தாய்க்கும் 1944 ல் பிறந்து,அவர்களுக்கிடையில் பிரிவு வந்ததும் , தாயின் புதிய நண்பரான ஒரு பிரஞ்சுக்கார இராணுவ அதிகாரி,சோப்ராஜிற்கு வளர்ப்புத் தந்தையானார். தாய்க்கும் புதிய தந்தைக்கும் குழந்தைகள் பிறக்கவே, சோப்ராஜ் தனிமைப் படுத்தப்பட்டதும்,பிரான்சிற்கு அடிக்கடி போய் வந்ததும்,அவரின் இளம் வயதை திசை மாற்ற, கோபக்காரனாக, சண்டைக்காரனாக, போதை, கொலை, கடத்தல், திருட்டு என பல செயல்களை செய்ய தூண்டப்படவே, அவர் மேல் சுமத்தப்படாத குற்றங்களே இல்லை எனலாம்.

திகார் சிறையில், 1976 – 1997 வரை, சிறையில் இருந்து தப்பியதற்குமான தண்டனையையும் சேர்த்து, 20 வருட சிறைத்தண்டனை,சிறையில் இருந்த இவரைப் பற்றி எல்லாம் எழுத வேண்டுமா என்று எண்ணினாலும் திகாரைப் பற்றியாவது சிறிது தெரிந்து கொள்ளலாமே என்பதால் எழுத ஆரம்பித்தேன்.
கொலை செய்வதே ஒரு தில்லு என்று நினைத்த இவர், 12 முதல் 24 வரையிலான கொலைகளுக்கு சொந்தக்காரர். போதை,கடத்தல்,வழிப்பறி,பாரிசின் பாதாளக் குளுவுடன் தொடர்பு, பெரிய இடங்களுடன் தொடர்பு கொண்டு ஊழல் லஞ்சம்,கார் திருட்டு,பல இடங்களிலும் வாகனங்களை திருடி இந்தியாவிற்குள் கொண்டு வந்து விற்பனை,கடத்தல்,சூது,போதைப் பொருள் கடத்தல் போன்ற பல, இவருக்கு கை வந்த கலை.இவரை தேடாத நாடுகள் ஆசியாவிலும்,ஐரோப்பிய நாட்டிலும் இல்லை எனலாம்.

பாரிசில் 1963 ல் இவரின் முதல் 8 மாத சிறையில்,ஆசிய நாட்டவர் என்ற காரணத்தால் அதிகாரிகளாலும்,மற்றக் கைதிகளாலும் பிரச்சனைகளை சந்தித்த சோப்ராஜ்,அங்கேயே சில தோழர்களையும்,லஞ்சம் மூலம் சலுகைகளையும், எதிர்த்தவர்களுடன் மோதவும் கற்றுக் கொண்டான்.பின் சந்தால் என்ற பிரெஞ்சுப் பெண்ணை மணந்து கொண்டு,கடத்தல்,போதை பொருள், பெரிய இடத்து தொடர்புகளாலும் கைதாகக் கூடிய நிலை ஏற்பட்டதால்,போலி ஆவணங்களுடன் 1970 ல் பாம்பாய்க்கு வந்த சோப்ராஜ், கார் கடத்தலில் பணத்தை அள்ளிக் கொண்டிருந்த சமயத்தில்,சூதாட்டம் அவன் பணத்திற்கு எதிரியானது.இதற்கான தீர்வுக்கு, பணக்காரனாக ஒரு பிரான்ஸ் நாட்டவன் வழி காட்டவே, டில்லி அசோகா ஹோட்டல் நிலத்தில் துளை போட்டு உள்ளே இறங்கி துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளை அடித்தான்.அத்துடன் டெல்லியில் இருந்து மும்பாய் போக விமான நிலையம் சென்ற போது சாத்தான், போலீஸ்,சுங்க வடிவில் வந்ததால் வெறுங்கையுடன் மும்பாய் வந்து கைது செய்யப்பட்டு,தந்தையின் உதவியால், பிணை பெற்று காபூலுக்கு ஓடினார்.

10 ற்கு மேற்பட்ட கடவு சீட்டு பயண ஆவணங்களுடன் ஐரோப்பா, மத்திய கிழக்கு என்று ஓடிக் கொண்டிருந்ததால்,மனைவி சந்தாள் பிரான்சிற்கு திரும்ப வேண்டியதாயிற்று.இந்த சமயத்தில் சோப்ராஜ் தனது கடைசி தம்பி அண்ட்ரூ வை கூட்டாளியாக்கி தொழிலில் ஈடுபட்டு துருக்கி,கிரீஸ் இடங்களுக்கும் செல்லவே, கிரீஸ் ஏதென்ஸ் ல் பயண கடவு சீட்டு காரணமாக கைது செய்யப்பட்டதும்,சோப்ராஜ் தப்பித்து விட அவர் தம்பி 18 வருட சிறைத் தண்டனையை அண்ணன் அளித்த பரிசாக பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. தப்பித்து விட்ட சோப்ராஜ் முன்னாள் பிரெஞ்ச் கூட்டாளிகள்,சில பெண்கள்,போதைப் பொருள் காரணமாக தொடர்பை ஏற்படுத்திய லேவ்ரெக் என்ற கனடியப் பெண்,இவளை பின்னர் திருமணம் செய்து கொண்டார், மற்றும் அஜய் சௌத்ரி என்பவரையும் சேர்த்துக் கொண்டு கிரிமினல் குடும்பமாகி கொலைகளுக்கும் வித்திட்டார்கள்.

இவர்களின் கொலைகளுக்கு இரையானவர்கள் பெண்களே அதிகம். அவர்களில் பலர் ஆசிய நாடுகளுக்கு ஊர் சுற்றி பார்க்க வந்த உல்லாசப் பயணிகளும், மாணவர்களுமாவார்கள்.இவர்கள் கொல்லப்பட்ட போது உள்ளாடைகளுடனும்,நீச்சல் உடையுடனும், நஞ்சூட்டப்பட்டும்,போதைப் பொருள் அதிகரிப்பினாலும், எரிக்கப்பட்டும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.மேல்நாடுகளில் இருந்து வரும் உல்லாசப் பயணிகள் போதைப் பொருளை பயன்படுத்தி உல்லாசமாக இருக்க நினைப்பதன் காரணமாக, போதைப் பொருள் விற்பனை, கடத்தல் போன்றவை சோப்ராஜ் கிரிமினல் குடும்பத்திற்கு ஆர்வத்தையும் அதனால் பணம் பெறவும் வசதியை கொடுத்தது. சோப்ராஜினால் கொல்லப்பட்டவர்கள் உலகின் பல பாகங்களை சேர்ந்தவர்களாயும், அவர்கள் கடவு சீட்டு மூலம், லேவ்ரெக் என்ற கனடிய பெண்ணுடன், ஒரே இடத்தில் இருந்து தன்னை போலீசாரிடம் ஒப்புவிக்க விரும்பாமல் இந்தியா, மலேசியா, நேபால், தாய்லாந்து, பிரான்ஸ் என்று எங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.தன் கொலைகளுக்கு காரணம், மேல் நாடுகளில் இருந்து ஆசிய நாடுகளுக்கு வந்தவர்களின் ஏகபோக உரிமைகளை எதிர்த்ததால் தான்,என்று காரணத்தையும் குறிப்பிட்டான்.

பின் இந்தியாவிற்கு திரும்பிய சோப்ராஜ்,வேறு மூன்று மேல்நாட்டுப் பெண்களுடன் 1976 ஜூலையில், தங்களை உல்லாசப் பிரயாணிகளை சுற்றிக் காட்டும் கைட் ஆக மாற்றி, போதை மருந்து நஞ்சுகளை பிரான்ஸ் நாட்டு மாணவர்களுக்கு கொடுத்து கொலை செய்ய முயற்சித்த போது, அவர்களில் ஒருவர் மயக்க நிலயை அடைய, மற்ற மாணவர்கள் நிலைமையை உணர்ந்து போலீசாரிடம் பிடித்துக் கொடுக்கவே,அந்த நால்வரும் திகார் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.
வழக்கு விசாரணைக்கு முன்னரே மேரி எல்லன் என்ற பெண் திகாருக்குள் தற்கொலை முற்சி செய்ததும்,லேவ்ரெக் என்ற பெண், குற்றவாளி ஆக்கப்பட்டதும்,பின் அவர் புற்று நோய் காரணமாக கனடாவிற்கு திரும்பி 1984 ல் இறந்ததும்,சோப்ராஜ்ஜின் சிறை வாழ்க்கை முடிவில், எங்கேயும் அவரை திருப்பி அனுப்ப முடியாத நிலையில் பிரான்சிற்கு செல்ல இந்தியா அனுமதித்ததும் நடந்து முடிந்தவை.
சோப்ராஜ் அங்கிருந்து பின்னர் நேபாளத்திற்கு வந்த சமயத்தில் காத்மண்டுவில் காட்டிக் கொடுக்கப்பட்டு,1975 ல் நடந்த கொலை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு 2003 ல் காத்மாண்டு நீதிமன்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.பின் அவரின் மேன்முறையீட்டில், மேன்முறையீட்டு நீதிமன்றம் 20 வருட சிறையும்,சொத்து பறிமுதலும்,2000 ரூபா போலி கடவு சீட்டிற்கான தண்டனையையும் வழங்கியது.
2008 ல், 20 வயதான Big Boss5 என்ற TV நிகழ்ச்சியில் பங்கு கொண்ட நேபாளத்தை சேர்ந்த நிகிர்தாவை, 64 வயதான சோப்ராஜ் திருமணம் செய்து கொண்டார். அதே சமயம் முதல் மனைவி சந்தால், சோப்ராஜ் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர் என்றும்,அவருக்காக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று பிரான்ஸ் நாட்டு அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளார்.
திகாருக்குள் என்ன நடந்தது?

கொலைக் குற்றத்திற்காக 20 வருட சிறைத்தண்டனை,தப்பி ஓடியதற்குமான தண்டனையையும் சேர்த்து, பெற்ற சோப்ராஜ், திகாருக்குள் அடைக்கப்பட்டார். அவர் இருந்த எல்லா சிறைகளிலும் லஞ்சத்தை கொடுத்து சிறை காவலர்கள் அதிகாரிகளை தன் வசமாக்கியதைப் போல் திகாரிலும் அவர் கடத்தி சென்ற வைரங்களை வைத்து அதிகாரிகளை தன் வசமாக்கிக் கொண்டார். காவலர்களையும்,சக கைதிகளையும் தன் வசமாக்கிக் கொண்டதால் அவருக்கு தொலைக்காட்சிப் பெட்டி,தனியான உணவு,கைத்தொலைபேசி,அவர் விரும்பிய எந்த நேரத்திலும் வெளியே போய் வர வசதி,பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு,போதைப் பொருள் போன்ற சலுகைகளை பெற்று சிறையில் ராஜபோக வாழ்வு நடத்தினார். எல்லாமே சுமூகமாக நடந்து வந்தது..1986 ல் அவரது 10 வருட சிறை வாழ்க்கையை கொண்டாட திகாரில் சிறைக் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் விருந்தும், கூடவே போதை பொருளையும் கொடுத்து மயங்க வைத்து கோவாவிற்கு தப்பி ஓடினார். ஆனால் அங்கே அவர் மும்பாய் போலீஸ் அதிகாரியால் மீண்டும் கைது செய்யப்பட்டு மிகுதி 10 ஆண்டுகளையும் சிறையில் கழிக்க வேண்டி வந்தது.

திகார் சிறையில், எலிகள் பற்றி பயம், காத்திருந்து வரிசையில் உணவு, குழாயில் தண்ணீர் இவை எது பற்றியும் சோப்ராஜ் கவலைப்படவில்லை.மற்ற வெளிநாட்டு சிறைகளில் துருக்கி,பிரான்ஸ்,கிரீஸ்,ஆப்கான்,நேபாளம், போன்ற இடங்களில் பணத்தால் அதிகாரிகளை விலைக்கு வாங்கியதால் இந்திய நிலமையை நன்கு அறிந்திருந்த அவருக்கு உடலில் மறைத்து வைத்திருந்த வைரங்கள் உதவிக்கு வந்தது.ஆனாலும் 1970 இந்திராகாந்தியின் அவசரநிலைக்குப் பின், அதிகமான அரசியல் கைதிகளும், சிறையில் அதிக கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் இருந்து வந்ததால்,சோப்ராஜிற்கு முதல் இரண்டு வருடங்கள் சிரமத்தை தந்தது.ஆனாலும் அந்த இரண்டு வருடங்களின் பின் திகாருக்குள் ராஜாவாக பவனி வந்தான் சோப்ராஜ்.இரண்டு வருட சிறையின் பின் நடந்த விசாரணையில்,
திகார் சிறையே பெரிய தண்டனை என சோப்ராஜ் வாதாடியதாகவும்,அதனால் அவனுக்கு 8 வருட சிறை தண்டனை கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. எப்படி? கொலைக்காக மரண தண்டனை பெற்ற சோப்ராஜ், மேல் விசாரணையில் இவ்வளவு குறைக்கப்பட்டது, லஞ்சமா என்ற கேள்வியை எழுப்பத்தான் செய்கிறார்கள்.

"When I was a young man, I wanted to change the world. I found it was difficult to change the world, so I tried to change my nation. When I found I couldn't change the nation, I began to focus on my town. I couldn't change the town and as an older man, I tried to change my family. Now, as an old man, I realize the only thing I can change is myself.............. என்று யாரோ ஒருவர் நேரம் கடந்து சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. நம்மை நாமே திருத்திக் கொண்டால் நாடு தானே திருந்தும். இதையே, உன்னையே நீ எண்ணிப் பார் என்ற சாக்கிரட்டீசின் சிந்தனைத் துளியும் சொல்கிறது. நாட்டைத் திருத்த எண்ணும் போதனையாளர்கள் முதலில் தங்களை திருத்தட்டும்.

கனிமொழி அக்காவிற்கு ஜாமீன் கிடைத்தால், அக்கா பார்த்த திகாரை,செல்வி அக்கா 3 ஜி காரணமாக பார்ப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

மீண்டும் அடுத்த வாரம்...................................நன்றியுடன் சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum