TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 9:59 am

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Sani_bagavaan
நிகழும் சுபஸ்ரீ கர வருடம் ஐப்பசி மாதம் 29ம் தேதி (
15,11. 2011) செவ்வாய்க் கிழமை அமரபட்ச சதுர்த்தி திதி நாள், நாழிகை 6,
விநாடி 40, பின்பு பஞ்சமி திதி , திருவாதிரை நட்சத்திரம் நா. 10. வி.11க்கு
( காலை மணி 10, நிமி 15க்கு ) சனி பகவான் கன்னி ராசியை விட்டு தனது உச்ச
வீடான துலாத்துக்கு பெயர்ச்சியாகிறார்.



சனி இம்முறை மூன்று முறை வக்கிரமாக சஞ்சரிப்பதால் வழக்கமாக இரண்டரை
ஆண்டுகள் ஒரு ராசியில் உலவும் சனியானவர் மூன்றாண்டுகள் துலாத்தில், தன்
உச்ச ராசியில் உலவப் போவதால் பொதுவாக சுப பலன்களே அதிகம் உண்டாகும்.



இந்த சனிப்பெயர்ச்சியில், விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது .
ஏற்கெனவே, கன்னி ராசிக்கும், துலா ராசிக்கும் ஏழரைச் சனி
நடந்துகொண்டிருக்கிறது. இது தவிர, மீன ராசிக்கு அஷ்டம சனியும், மேஷ
ராசிக்கு கண்ட சனியும் ஆரம்பமாகப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் சனி
பகவானின் திருத் தலங்களுக்குச் சென்று, சனிபகவானுக்குரிய வழிபாடுகளையும்,
பரிகாரங்களையும் முறையாகச் செய்தால், சுபயோகம் ஏற்படும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:00 am

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை


மேஷம்:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Mesam


இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்தார்.
நற்பலன்களைக் கொடுக்கவேண்டிய யோகம்தான் என்றாலும் குருவின் மாறுபட்ட
நிலைகளால், நற்பலன்களை நீங்கள் முழுதுமாக அனுபவிக்க முடியாமல்,
இருந்தீர்கள். குருவின் நல்ல நிலைகள்கூட உங்களுக்கு சாதகமாக அமையவில்லை.
குரு அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்ததால், உங்களால், எந்த நற்பலனையும்
முழுதுமாக அடைய முடியாமல்தான் போனது. இப்போது, இந்த சனிப் பெயர்ச்சியில்
உங்கள் ராசிக்கு 10, 11-ஆம் இடங்களுக்குரிய சனி 7-ஆமிடத்தில் உலவுகிறார்.
இது கண்டகச் சனியின் காலமாகும். சனி 10-ஆம் வீட்டோனாகி, 10-க்கு 10-ஆமிடமான
7-ல் தன் உச்ச ராசியில் உலவுவதால் தொழிலில் விசேடமான வளர்ச்சியைக்
காணலாம். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும்.
வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணம் ஈடேறும். பகுதி நேரத்
தொழிலில் ஈடுபட்டு வருமானம் பெற வாய்ப்புக் கூடிவரும்.


சரராசிக்கு அதிபதியான சனி மற்றொரு சர ராசியில் உலவுவதால் வெளிநாட்டுத்
தொடர்புடன் செய்யும் தொழிலில் விசேடமான ஆதாயம் கிடைக்கும். சனி காற்று
ராசியில் இருப்பதால் ஆகாயம் சம்பந்தப்பட்ட இனங்களாலும் ஆதாயம் கிடைக்கும்.
பயணம் பயன்படும். சொத்துக்கள் சேரும். காப்பீட்டுத் தொகை, ஓய்வூதியம்
மற்றும் எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு
அதற்கான வாய்ப்புக் கூடிவரும். சனி 11-ஆம் இடமான பாதக ஸ்தானத்துக்கு
உரியவராகி 7-ல் உலவுவதால் கணவன் மனைவியிடையே சலசலப்புக்கள் ஏற்படும்.
நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து செல்லவும்
நேரலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம்
அவர்களால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் மீளலாம். அணுகுமுறையைச் சரிப்படுத்திக்
கொள்வது அவசியமாகும்.


16-5-2012 முதல் 25-6-2012 வரை சனி கன்னியில் வக்கிரமாக சஞ்சரிப்பதால்
பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். செய்தொழிலும் சீராக இருக்கும்.
எதிர்ப்புக்கள் குறையும். திறமைக்குரிய பயன் கிடைக்கவே செய்யும்.


26-6-2012 முதல் 4-11-2013 வரை வெளிநாட்டுத் தொடர்பால் அதிகம் நலம்
உண்டாகும். போக்குவரத்துச் சாதனங்கள், ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள், தோல்
பொருட்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல மாற்றத்தைக்
காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதியவர்கள் அறிமுகமாகி,
உங்களுக்கு நலம் புரிவார்கள். குறுக்கு வழிகளில் திடீர்ப் பொருள்வரவு
உண்டாகும்.


5-11-2013 முதல் 1-11-2014 வரை புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
தொலைதூரப் பயணத்தின் மூலம் பயன் பெறுவீர்கள். பொருளாதார நிலையில்
அபிவிருத்தி காணலாம். மகன் அல்லது மகளின் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய
வேண்டிவரும். குழந்தைகள் வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ வாய்ப்புக்
கூடிவரும். ஆன்மிகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும். நீதிபதிகள்,
சட்ட வல்லுனர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.


மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக்காலத்தில் தொழில் ரீதியாக
முன்னேற்றம் காண்பீர்கள். ஏதேனும் பாதிப்புகள் நேரிடினும், அதனின்று
மீள்வதற்கு கிரகங்கள் குறிப்பாக ராகு கேதுக்கள் அனுசரணையாக செயல்படுவதால்,
சனியின் தாக்கம் தற்காலிக பாதிப்பாக இருக்குமேயன்றி, பெரிதாக அமையாது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:00 am

ரிஷபம்:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Risabam


இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான்
இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் அதாவது துலா ராசியில் சஞ்சரிக்கப்
போகிரார். இந்த ஆறாமிடத்து சனி பகவான் உங்களுக்கு பல நன்மைகளை செய்யப்
போகிறார். பல ஆதாயங்கள் கிடைக்கும் நேரமிது. எதிரிகளை வெல்வீர்கள்.
வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனோபலம் கூடும். தன்னம்பிக்கை
பெருகும். நோய்நொடி உபத்திரவங்கள் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து
சேரும். தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். கடன் உபத்திரவம்
நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொது நலப்பணியாளர்கள்,
அரசியல்வாதிகள், கலைஞர்கள் ஆகியோர் வெற்றி நடைபோடுவார்கள். புனிதப் பயணம்
மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு
ஆகியவை கிடைக்கும்.


15-11-2011 முதல் 10-10-2012 வரை நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால்
ஆதாயமோ கிடைக்கும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.
விவசாயிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். பொது நலப்பணியாளர்களுக்கு
வரவேற்பு கூடும். வழக்கில் வெற்றி கிட்டும். வாழ்க்கைத்துணைவரின்
நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரலாம்.


16-5-2012 முதல் 25-6-2012 வரை எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட
வாய்ப்புக்கள் கூடிவரும். தாய் நலம் சிறக்கும். மக்களால் அனுகூலம்
உண்டாகும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபடுவீர்கள்.


26-6-2012 முதல் 4-11-2013 வரை உடல்நலம் சீராகும். வாழ்க்கை வசதிகள்
கூடும். நூதனமான பொருட்களின் சேர்க்கை நிகழும். நவீன விஞ்ஞானத்துறைகளைச்
சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள்
கூடும். பயணம் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். கறுப்பு நிறமுள்ளவர்
உங்களுக்கு உதவுவார்.


5-11-2013 முதல் 1-11-2014 வரை எதிர்பாராத பொருள் சேர்க்கை நிகழும்.
நல்லவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு
உண்டாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.


சனி பகவான் கீழே குறிப்பிட்டுள்ள தருணங்களில் மூன்று முறை வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார். அந்தக் காலக் கட்டத்தின் சிறப்புப் பலன்கள்:


1. 9.2.12.முதல், 24.6.12வரையில் 4 மாதம், 15 நாட்கள்(சனி வக்கரம்) :


இந்தக் காலகட்டத்தில் தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. நிலம், வீடு,
வாகனம் வாங்குவது, விற்பதை தள்ளீப் போடவும். காரியத் தடைகள் ஏற்படலாம்.
சுற்றத்தாரிடம் கவனமாக உறவாடவும். பயணங்களைத் தவிர்க்கவும் அல்லது தள்ளிப்
போடவும்.


2. 16.2.2013 முதல் 12.7.13 வரையில் 4 மாதம் 26 நாட்கள்( சனி வக்கிரம்):


இந்தக் காலக் கட்டத்தில் நல்ல அற்புதமான பலன்களாக நிகழும். எதிரிகள்
அனைவரும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். எடுக்கும் காரியங்கள்
அனைத்திலும் வெற்றி ஏற்படும். வசூலாகாத பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும்.
புதிய கடன்கள் அனைத்தும் நன்மையைத் தரும். நோய்கள் இருந்த இடம் தெரியாமல்
போய்விடும். உடல் நலம் சிறப்படையும். பங்காளித் தகறாறுகள் நல்ல முறையில்
தீர்வடையும்.


3. 3.3. 2014 முதல்,23.7.14 வரையிலான 4 மாதம் 20 நாட்கள்( சனி வக்கிரம் ):


இந்தக் காலத்தில் 19.6.2014 வரையில் வாக்கு வன்மை ஏற்படும். பணம் வரவு
இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் உண்டாகும்.
கல்வி சிறப்படையும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம்
ஏற்படும். செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம் கூடும். சொல்வாக்கும்
சிறப்படையும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் நலம் உண்டாகும். பூர்விகச்
சொத்துக்கள் கிடைக்கும்.


இந்தக் காலத்தில் கடைசி 23.7. 14 வரையில் எதிலும் காரியத் தடைகள்
ஏற்படும். முயற்சிகள் பலனடையாது. தோல்விகள் ஏற்படும். வேலைக்காரர்களிடம்
மனஸ்தாபம் ஏற்படலாம். சகோதரர்களிடம் வீண் சண்டைகள் வரும். தைர்யம்,
தன்னம்பிக்கை குறையும். பொன்னாபரணங்கள் வாங்குவதிலும் விரயம் ஏற்படும்.
உத்தியோகம், இடமாற்றம் போன்றவைகளால் வருத்தம் ஏற்படும்.


எந்த காரியத்தை எடுத்தாலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால்,
அமைதியோடு வாழலாம். இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு யோகமானதே. வக்கிர
காலங்களைத் தவிர மீதி காலங்கள் சிறப்பான பலன்களையே தரும்.


இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு யோகமானதே. வக்கிர காலங்களைத் தவிர மீதி காலங்கள் சிறப்பான பலன்களையே தரும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:01 am

மிதுனம்:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Mithunam


இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான்
இப்போது ராசிக்கு ஐந்தாமிடத்தில் பிரவேசிக்கப் போகிறார். இவ்வாறு ராசி மாறி
வரும் சனிபகவான், முன்போல கடுமையான பலன்களைக் கொடுக்க மாட்டார்.ஓரளவுக்கு
நற்பலன்களையே கொடுப்பார்.தற்போதுள்ள சனிப் பெயர்ச்சியில் உங்களுடைய
பொருளாதார நிலையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லையென்றாலும்
செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். நகை நட்டு, வீட்டுக்குத்
தேவையான பொருட்களையும் வாங்க முடியும். அது மட்டுமல்ல. வீடு மனை வாங்கவோ
அல்லது சொந்தமாக வீடு கட்டவோ கூட முடியும். இருக்கும் இடத்தைப் பழுது
பார்த்து வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளவும் முடியும்.


15-11-2011 முதல் 10-10-2012 வரை பொருளாதார நிலை உயரும். திடீர்
அதிர்ஷ்ட வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காணலாம்.


குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பிரச்னைகள் குறையும். குழந்தைகளுக்கு சுப காரியங்கள் நிகழும். கடன் உபத்திரவம் குறையும்.


16-5-2012 முதல் 25-6-2012 வரை உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
தாயாராலும், உற்றார்-உறவினர்களாலும் பிரச்னைகள் சூழும். சொத்துக்கள்
சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.


11-10-2012 முதல் 4-11-2013 வரை எதிரிகள் விலகுவார்கள். நூதனமான
பொருட்களின் சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள்
அதில் வளர்ச்சி காண்பார்கள். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி
செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும்.


முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூட இப்போது உங்களுக்கு உதவுவார்கள்.
மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு
ஏற்படும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும்.


5-11-2013 முதல் 1-11-2014 வரை செல்வாக்கும் மதிப்பும் உயரும். பொருள்
வரவு அதிகமாகும். பெரியவர்கள், ஞானிகள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரது
ஆசிகளையும் ஆதரவையும் பெறுவீர்கள். மக்கள் நலம் பாதிக்கும் என்றாலும் தெய்வ
அருளால் சீராகிவிடும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.
தந்தையாலும், தந்தை வழி உறவினராலும் நலம் உண்டாகும்.


அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் லாபம்
கிடைக்கும். சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ
வாய்ப்புக் கூடிவரும். அலைச்சலும் உழைப்பும் இந்த நேரத்தில் அதிகரிக்கும்.
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும்.


மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு உண்டாகும்.


பரிகாரம்:


1. சனியின் குருவான பைரவருக்கு, அஷ்டமி திதியில் ஹோமம் மற்றும் பூஜைகளை மேற்கொண்டு, சாந்தி செய்துகொள்வது நல்லது.


2. குடும்பப் பெண்கள் அஷ்ட லட்சுமிகளும் கூடிய உருவப் படத்தை வைத்து,
விளக்கேற்றி, காலை 6.00 மணியளவிலும், நவக்கிரக மாக்கோலமிட்டு, துளசி
மற்றும் முல்லை, நந்தியாவட்டைசெண்பக பூக்களால், லக்ஷ்மி அஷ்டோத்ரத்தைப்
பாராயணம் செய்து பால் பாயசம் நைவேத்தியம் செய்வது நல்லது.


3.இவை தவிர சனிபகவானுக்குரிய வழிபாட்டு ஸ்தலங்களான குச்சானூர்,
திருநள்ளாறு முதலிய தலங்களுக்குச் சென்று உரிய வழிபாடுகளை முறைப்படி
செய்து வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.


4. சனிக்கிழமைதோறும், காக்கைக்கு அன்னமிடல், நவக்கிரக கோவிலுக்குச்
சென்று சனீஸ்வரனுக்கு எள்ளுதீபம் ஏற்றுதல், முதலியவை தொல்லைகளையும்
குழப்பங்களையும் தீர்க்கும் . வாழ்க வளமுடன்!


சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 15-11-2011 முதல் 2-11-2014 வரை
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:02 am

கடகம்:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Kadakam


களத்திர ஈன ஸ்தானாதிபதியான சனீஸ்வர பகவான், சுகஸ்தானத்தில் உச்ச
நிலையில் பெயர்ந்து, ஜீவனத்தில் நிற்கும் வக்கிர குருவை பார்க்கவும்,
குருவும் சனியை மறுபார்வை செய்யவும், அர்த்தாஷ்டம சனியாய் செயல்படுகிறார்.
மேலும் தன் பார்வையால், சத்ரு ஸ்தானத்தையும் ஜென்ம ராசியையும்
பார்வையிடுகிறார். இதனால், உங்களுக்கு சனியினால் அதிகமாக நன்மைகள்
கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் சோதனைகளை சந்திக்க
வேண்டியிருக்கும். சுகபங்கம் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள்,
வழக்குகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.


இருப்பிட மாற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் பாதிக்கும்.
கால்நடைகளால் அதிகம் ஆதாயமிராது. வீண் விரயங்கள் ஏற்படும். மாணவர்கள்
படிப்பில் முழுமையான கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும்.
அலட்சியப் போக்கு அடியோடு கூடாது. எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது.
சனிக்கு 8-ஆம் வீட்டு ஆதிபத்தியமே வலுப்பெறுவதால் துன்பம், துயரம் ஆகியவை
உண்டாகும். முக்கிய நண்பர்கள், உறவினர்களை விட்டுப் பிரிய நேரலாம். சிலர்
மனதுக்குப் பிடிக்காத இடத்தில் வசிக்க வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்பு
கூடாது. சனிப் பிரீதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.


15-11-2011 முதல் 10-10-2012 வரை எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.
ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால்
பாக்கியம் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் நலம் கூடும். செய்துவரும்
தொழிலில் அபிவிருத்தி காணலாம்.


இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். சகோதரரால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது ஈடேறும்.


11-10-2012 முதல் 4-11-2013 வரை பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும்.
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் நலம் தரும். எதிரிகள் அடங்கிப்
போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும்.
முக்கியஸ்தர்களது தொடர்பால் நலம் பெறுவீர்கள்.


23-12-2012 முதல் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களால்
பிரச்னைகள் உண்டாகும். முக்கிய உறவினரையோ, நண்பரையோ பிரிய வேண்டிவரும்.
இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தாய் நலனில் அக்கறை தேவை.
சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். 31-5-2013 முதல் சுபச்
செலவுகள் கூடும். புதிய நிலம், மனை, வீடு, வாகனச் சேர்க்கை நிகழும். கடன்
தொல்லை குறையத் தொடங்கும். சங்கடங்களும் விலக ஆரம்பிக்கும்.


5-11-2013 முதல் 1-11-2014 வரை புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு சிலருக்கு உண்டாகும். மாணவர்கள்
வளர்ச்சிகான மார்க்கத்தைக் காண்பார்கள். பிதுரார்ஜித சொத்துக்கள்
கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். எதிரிகள்
அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை
கிடைக்கும்.


மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் கெடுபலன்களே அதிகம்
உண்டாகும் என்பதால், உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.
எதிலும் கவனமும் எச்சரிக்கையும் மிகமிக அவசியம்.


பரிகாரம்:


1. பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் சிவ பெருமானுக்கு காராம் பசுவின் பாலினால் அபிஷேகம் செய்யவும்.


2. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு எள் தீபமேற்றி இயன்ற அளவு தான தருமம் செய்க.


3. நான்கு திசை கணபதி ( நாகை ), ஸ்ரீவைகுண்டம் சனீஸ்வரர்,
திருக்கடையூர் அம்மன், அமிர்தகடையேஸ்வரர், யோக நரசிம்மர், கிருஷ்ணர்,
தேரெழுந்தூர், சதூர்கல பைரவர் திருவீச்சநள்ளூர், பஞ்சமுக ஆஞ்சநேயர்-சிவகாசி
காளி, விசாலாட்சி, சுடலேஸ்வரர், ஜாம்பவான், ஆகர்ஷண பைரவர் ஐந்து
கடவுள்களும் ஒன்றாக இணைந்த விருதுநகர் ஸ்ரீ ஜாம்பவான் சுவாமிகள் ஆலய
பௌர்ணமி தரிசனம் இதன் ஆலயங்களுக்கு சென்று குறிப்பாக அர்ச்சனை, ஆராதனை,
அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, திங்கள் கிழமைகளில் வழிபடுவது மிக
உத்தமம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:02 am

சிம்மம்:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Simmam


இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்துவந்த சனிபகவான் இப்போது நடைபெற
இருக்கும் சனி பெயர்ச்சியில் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில்
சஞ்சரிக்கப் போகிறார். இந்த பெயர்ச்சியின் இரண்டரை ஆண்டு காலமும்
உங்களுக்கு ஏற்றமானதாக இருக்கும். முதலாவதாக உங்கள் ஆரோக்கியம்
அபிவிருத்தி அடையும். நோய் நொடிகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் குணமாகும்.
உள்ளத்திலும் ஊக்கமும் ஏற்பட்டு புதிய எழுச்சியுடன் காணப்படுவீர்கள்.
முயற்சியில் வேகமும் செயலில் தீவிரமும் கூடும். உழைக்கும் ஆற்றல்
உங்களுக்கு அதிகமாவதால், கடினமாக உழைத்து பல சாதனைகளைப் புரிவீர்கள்.
எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலையாட்கள்
அமைவார்கள். சமுதாய முன்னேற்றப் பணிகளில் ஈடுபடுவீர்கள். நிலபுலங்கள்
சேரும். மேலதிகாரிகள், முதலாளிகளின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாகி, உயர்
பதவியைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். குடும்பத்தில்
சுப காரியங்கள் நிகழும்.


தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். 6-ஆம் வீட்டோன் 3-ல் தன் உச்ச
ராசியில் இருப்பதால் எதிர்பாராத தனப்பிராப்தியைப் பெறுவீர்கள். 7-ஆம்
வீட்டோன் வலுத்திருப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். பங்கு
வர்த்தகம் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம்
உண்டாகும்.


சிறுசிறு பயணங்களை அடிக்கடி மேற்கொள்ளவும் அதனால் அனுகூலம் பெறவும்
வாய்ப்பு உருவாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பிற மொழி, மத,
இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். பொது ஜனத்தொடர்பு வலுக்கும்.
உயர்பதவிகள், பொறுப்புகள் தேடிவரும்.


சனிபகவானின் பார்வை பலம்தான் அவரது சஞ்சார பலத்தைவிட சக்தி வாய்ந்தது.
சனிபாகவான் தன்னுடைய 3,7, 10ம் பார்வயால், உங்களுடைய பூர்வ புண்ணிய
ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், விரய ஸ்தானம் ஆகிய ஸ்தானங்களைப் பார்க்கிறார்.
இந்தப் பார்வை நல்ல பார்வை என்பதால், உங்களுக்கு யோக பலன்கள் அதிக அளவில்
நடைபெறும்.


15-11-2011 முதல் 10-10-2012 வரை புதிய சொத்துக்கள் சேரும். பெற்றோரால்
நலம் பல பெறுவீர்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.


எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
உடன்பிறந்தவர்கள் நலம் கூடப் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பால் அனுகூலம்
உண்டாகும். 16-5-2012 முதல் 4-8-2012 வரை சனி வக்கிரமாக இருப்பதால்
குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட
இனங்களில் விழிப்புத் தேவை.


கண், வாய், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உடல்நலனில் கவனம்
தேவைப்படும். அதன்பிறகு சனி துலாத்துக்கே திரும்பி வந்துவிடுவார். துலாம்
சர ராசி என்பதாலும் உபசய ராசி என்பதாலும் சுக்கிரனின் ராசி என்பதாலும்
வெற்றி வாய்ப்புக்கள் தேடிவரும். சுபபலன்கள் தொடரும்.


11-10-2012 முதல் 4-11-2013 வரை புதியவர்களது நேசம் கிடைக்கும்.
அயல்நாட்டு வர்த்தகம் பெருகும். போக்குவரத்து, ஏற்றுமதி-இறக்குமதி, தோல்,
கறுப்பு நிறப்பொருட்கள் ஆகியவற்றின் மூலம் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி
பாட்டனாரால் நலம் பெறுவீர்கள். பயணம் செய்வதில் ஆர்வம் கூடும்.
வெளிநாட்டுப் பயணத்திட்டம் சிலருக்கு இந்த நேரத்தில் கைகூடும். சூதாட்டம்,
பங்கு மார்க்கெட், மற்றும் ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம் பெரும் பணம் கைக்கு
வந்து சேரும். குறுக்கு வழிகளில் செல்வம் சேரும் நேரமிது. ரேடியோ, வீடியோ,
டி.வி., பத்திரிகை போன்ற தகவல் தொடர்பு இனங்கள் மூலமாகவும் ஆதாயம்
பெருகும். நூதன கண்டுபிடிப்புகளின் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள்.


5-11-2013 முதல் 1-11-2014 வரை மகப்பேறும் மக்களால் பாக்கியமும் பெறும்
நேரமிது. ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும்.


புத்திசாலித்தனம் பளிச்சிடும். மந்திர-தந்திர-யந்திர சாஸ்திரங்களில்
ஈடுபாடு உள்ளவர்கள் வருமானம் கூடப் பெறுவார்கள். திடீர் அதிர்ஷ்ட
வாய்ப்புக்களும் உண்டாகும். பி.எஃப், பென்ஷன், உயில் போன்ற இனங்களால்
ஆதாயம் கிடைக்கும்.


செல்வச் செழிப்புக் கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்
கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள்
தேடிவரும். சுப காரியச் செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும்
தொழிலாளர்களுக்கும் பதவிச் சிறப்பு உண்டாகும். ஊதிய உயர்வு, இடமாற்றம்
ஆகியவை கிடைக்கும். அரசுப்பணிகள் லாபம் தரும்.


மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் வெற்றி மேல் வெற்றி
பெறுவீர்கள். வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும். இந்த நல்ல நேரத்தைச்
சரிவரப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:03 am

கன்னி:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Kanni


இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான
துலா ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். ஏழரைச்சனியின் கடைசி இரண்டரையில்
அடியெடுத்து வைக்கிறீர்கள். இதுவரை நடந்துவந்த ஜென்ம ராசியில் நீங்கள்
பட்ட கஷ்டங்களும் , அனுபவித்த தொல்லைகளும் உங்களுக்கு மட்டும்தான்
தெரியும். இப்போது வரப் போகும் சனிப் பெயர்ச்சி அந்த அளவுக்கு வாட்டி
எடுக்காது என்றாலும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கலாம் என்பது போலவும்
இருக்கும். இவ்வாறு ராசி மாறிவரும் சனி பகவானை முழுமனதுடன் வரவேற்க
முடியாவிட்டாலும், ஓரளவு நிம்மதியுடன் வரவேற்கலாம். இதுவரை ஜென்ம
ராசியிலிருந்த சனி பகவான் இனி பாதச்சனியாக சஞ்சரிக்கப் போகிறார். இது
ஏழரைச் சனியின் மூன்றாவது பகுதியும் இறுதிப் பகுதியுமாகும்.


மக்களால் அனுகூலமும் உண்டாகும். பங்கு மார்க்கெட், ஸ்பெகுலேஷன்,
கொடுக்கல்-வாங்கல் மூலம் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு
பயன்படும். பிற மொழி, மத, இனக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சனி 6-ஆம்
வீட்டுக்கு அதிபதியாகி 2-ல் உலவுவதால் குடும்பத் தேவைகளைச் சமாளிக்கக் கடன்
வாங்க வேண்டிய நிலை ஏற்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். கண், முகம், வாய், பல்
மற்றும் வாயு சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும்.


15-11-2011 முதல் 10-10-2012 வரை முயற்சி வீண்போகாது. கடுமையாக
உழைப்பதன் மூலம் வருமானம் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். உடல்நலம் சீராகும். குடும்பத்தாரால்
அனுகூலம் உண்டாகும். 17-5-2012 முதல் செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக்
காணலாம். வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மகப்பேறு அல்லது மக்களால்
பாக்கியம் பெறுவீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கணவன் மனைவி உறவு
நிலை திருப்திகரமாக இருந்துவரும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும்.
ஆகஸ்ட் 2012 முதல் குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும்.


பணம் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சகோதர நலம்
பாதிக்கும். உங்களுடைய ஆரோக்கியத்திலும் கவனம் தேவைப்படும். கண், வாய்,
பல், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். வீண் வம்பு, வழக்குகளைத்
தவிர்க்கவும்.


11-10-2012 முதல் 4-11-2012 வரை பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள்
உங்களுக்கு உதவும் காலகட்டமிது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். தோல்,
போக்குவரத்து, ஏற்றுமதி-இறக்குமதி, நவீன விஞ்ஞானத்துறை, ஆராய்ச்சி
சம்பந்தப்பட்ட இனங்களால் வருமானம் பெருகும். அயல்நாட்டுப் பயணத்திட்டம்
ஈடேறும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். 23-12-2012 முதல் குடும்ப
நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம்.
பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். விஷத்தாலும் விஷ
ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட
வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை.


5-11-2013 முதல் 1-11-2014 வரை புதிய சொத்துக்கள் இந்த நேரத்தில்
சேரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும்.
கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். குடும்ப நலம் சீராகும். சுகானுபவம்
உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும். செய்து வரும் தொழில் லாபம் தரும்.
நோய்நொடி உபத்திரவங்கள் குறையும். 19-6-2014 முதல் முயற்சி வெற்றி தரும்.
மகன் அல்லது மகளால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். செல்வச் செழிப்புக்
கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம்
ஆனவர்களுக்கு இல்வாழ்க்கை சிறக்கும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும்
புகழும் பொருளும் பெறுவார்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு
சென்று பொருள் திரட்ட வாய்ப்பு உருவாகும். சொத்துக்களால் வருமானம்
கிடைக்கும். 12-7-2014 முதல் அலைச்சல் அதிகரிக்கும்.
வாழ்க்கைத்துணைவராலும், கூட்டாளிகளாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு
விலகும்.


மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் துன்பங்கள்
மலிந்திடினும், பாதிப்புகள் அதிகம் தோன்றா நிலையிலும், நன்மைகளே அதிகம்
இடம்பெறுவதால், ராசிக்காரர்கள் நிம்மதி காண்பார்கள். சனிப் பிரீதி,
பரிகாரங்களைத் தொடர்ந்து செய்துவரவும்.


பரிகாரம்:


1. பிரதி சனிக்கிழமை விஷ்ணு ஆலயம் சென்று அங்குள்ள பெருமாளையும்,
தாயாரையும் பக்தி சிரத்தையுடன் வணங்கியபின்பு சக்கரத்தாழ்வாரை துளசிமாலை
சாற்றி உள்ளன்புடன் வழிபட உள்ளக் கவலைகள் விலகும்.


2. தினசரி காக்கைக்கு அன்னமிடவும்.


3. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றவும்.


4. சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாற்றி வன்னி இதழ்களால் அர்ச்சனை செய்க.


5. திருநள்ளாறு சென்று அங்குள்ள நவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்,
சரஸ்வதி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், அம்ச தீர்த்தம் என்னும் ஐந்து
வகை தீர்த்தங்களில் நீராடி, சனீஸ்வரரை தரிசித்து, , இயன்ற அளவு பரிகார
வழிபாடுகளை செய்து வரவும்.


7. குச்சானூர் சனிபகவானை தரிசித்தல் நலம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:03 am

துலாம்:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Thulam


இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான்
இப்போது ஜென்மஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதற்குமுன்
விரயஸ்தானத்தில் இருந்தபடி உங்களுக்கு கடுமையான பலன்களைக் கொடுத்த சனி
பகவான் இனி இரண்டாவது இரண்டரையில் அதாவது ஜென்ம ஸ்தானத்தில் பிரவேசிப்பது
எப்படியிருக்கும் என்பதைப் பார்க்கலாம்.


இதுகாறும், குடும்பத்திற்காகவும், தன்னை அண்டியிருக்கும் பெற்றோர்,
சகோதர சகோதரிகளுக்காகவும், மாமன், அத்தை, பாட்டி. தாத்தா இவர்களுக்காகவும்
ஏதோ ஒரு வகையில் விரயம் செய்து , கடன் காட்சி என்று அவஸ்தையுற்றிருந்தால்,
இவற்றுக்கு ஒரு விமோசன காலம் பிறந்துவிட்டது. கடன்கள் பைசலாகும். நஷ்டங்கள்
மறைந்து தன வரவுகள் பெருகி கடன் நிவாரணம் கிடைத்து நிம்மதி காண்பீர்கள்.
வருவாய் பெருகி சொத்துக்களின் மேல் உள்ள கடன்களைத் தீர்த்து பத்திரங்களை
மீட்பீர்கள். தன வரவு தாராளமாகக் கிடைத்து உங்களை பெருத்த மகிழ்ச்சியில்
ஆழ்த்தும்.


வீண் விரயங்கள் இனிமேல் இருக்காது. உடல்நலமும் சீராகும். மன பலம்
கூடும். சுகானுபவம் உண்டாகும். உற்சாகமாக நடைபோடுவீர்கள். நல்ல இடமாற்றம்
உண்டாகும். தொழிலிலும் மாற்றத்தைக் காண்பீர்கள். பயணம் செய்வதில் ஆர்வம்
கூடும். அயல்நாட்டுத் தொடர்பால் பயன் பெறுவீர்கள். கலைஞானம் உண்டாகும்.
வெளிநாட்டுப் பயணத்திட்டம் சிலருக்குக் கைகூடும். சொத்துக்கள் சேரும்.
மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். மகன் அல்லது மகளுக்கு
வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அலைச்சலும் உழைப்பும்
அதிகமானாலும் கூட அதனால் பயனும் அதிகமாகும்.


15-11-2011 முதல் 10-10-2012 வரை அந்தஸ்தும் மதிப்பும் செல்வாக்கும்
உயரும். செல்வ நிலையில் அபிவிருத்தி காணலாம். குடும்பத்தில் குதூகலம்
உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். கணவனால் மனைவிக்கும் மனைவியால்
கணவருக்கும் நலம் பெருகும். கூட்டாளிகள் உதவுவார்கள். நிலபுலங்களால்
வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும்.
முக்கியப் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். மந்திர-தந்திர-யந்திர
சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெரியவர்கள்,
தனவந்தர்கள் ஆகியோரது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். 16-5-2012 முதல்
4-8-2012 வரையிலும் உள்ள காலத்தில் சற்று எச்சரிக்கை தேவை. எதிர்பாராத
செலவுகள் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாகும்.
மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மருத்துவச்
செலவுகளும் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. அதன்பிறகு நிலைமை
சீராகும்.


11-10-2012 முதல் 4-11-2013 வரை அந்நிய மொழி, மத, இனக்காரர்களால்
அனுகூலம் பெற வாய்ப்பு உண்டாகும். பயணத்தால் முக்கியமான காரியங்கள்
நிறைவேறும். திடீர்ப் பொருள்வரவுக்கு இடமுண்டு. வெளிநாட்டுத் தொடர்புடன்
செய்யும் தொழில் மேன்மை அடையும். சிலருக்கு வெளிநாட்டு வேலை இந்த நேரத்தில்
கிடைக்கும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு
முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். 23-12-2012 முதல் அலைச்சல் சற்று
அதிகரிக்கவே செய்யும். கூட்டாளிகளால் பிரச்னைகள் ஏற்படக் காரணம் உண்டு;
விழிப்புடன் இருக்கவும். வாழ்க்கைத்துணை நலன் கவனிக்கப்பட வேண்டிவரும்.

31-5-2013 முதல் உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் விசேடமான நன்மைகளை
எதிர்பார்க்கலாம். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். முயற்சி வீண்போகாது.
தெய்வப் பணிகள் நிறைவேறும். பெரியவர்கள் உங்களுக்கு ஆசி புரிவதுடன்,
ஆதரவும் தருவார்கள். உடல்நலம் சீராகவே இருந்துவரும். மதிப்பும் அந்தஸ்தும்
உயரும். தொலைதூரப் பயணம் ஆக்கம் தரும்.


5-11-2013 முதல் 1-11-2014 வரை முக்கியமான எண்ணங்கள் இப்போது
நிறைவேறும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். உழைப்பு வீண்போகாது.
எதிர்ப்புக்கள் இருக்குமென்றாலும் சமாளிப்பீர்கள். உடல்நலம் அவ்வப்போது
கவனிக்கப்பட வேண்டிவரும். தேவைகளைச் சமாளிக்கச் சிலர் கடன்வாங்க
வேண்டிவரும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும், பங்குதாரர்களாலும்
பிரச்னைகள் சூழும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன்
ஈடுபடவும். குறுக்கு வழிகளில் பிரவேசிக்கலாகாது. செய்து வரும் தொழிலில்
முழுக்கவனம் தேவை. பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள், முதலாளிகள்
ஆகியோருடன் சுமுகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். இல்லையென்றால் அவர்களது
கோபத்துக்கு ஆளாகி, சங்கடப்பட நேரும். பணம் கொடுக்கல்-வாங்கலில்
எச்சரிக்கை தேவை.


மொத்தத்தில் ஜென்ம சனியாக வரும் சனி பகவான் கஷ்டங்களைக் கொடுக்காமல்
போக மாட்டார். ஆனாலும் நியாயவாதியான சனி பகவான், நம்முடைய செயல்பாடுகளைப்
பார்த்துத்தான் நமக்குரிய பலன்களைக் கொடுக்கின்றார், என்பதை நாம்
மறந்துவிடக்கூடாது. ஆத்மார்த்தமான சனி வழிபாட்டின் மூலம் எதையும் தாங்கி
சமாளித்துவிடலாம்.


பரிகாரம்:


1. வழிபாடுகள் வகையில் மகாலட்சுமி பூஜை, சங்கடஹர சதுர்த்தி, வைகாசி
விசாக வழிபாடு, அருட்பெருஞ்சோதி வள்ளல் பெருமாள் வழிபாடு, பிரதோஷம்,
தேய்பிறை அஷ்டமி, பைரவர்,காளி வழிபாடு உகந்தது.


2. பாபனாசம் 108 சிவலிங்க வழிபாட்டு ஸ்தலம் திருவாரூர் தசரத
சக்கரவர்த்தி வழிபட்ட சனீஸ்வரர், இங்குள்ள ராஜதுர்க்கை புதுக்கோட்டை
புவனேஸ்வரி, பஞ்சமுக ஆஞ்சனேயர் தில்லை காளி இவர்களின் ஸ்தலங்களுக்கு சென்று
குறிப்பாக அர்ச்சனை, ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, வெள்ளிக்
கிழமைகளில் வழிபடுவது உத்தமம்.


3. ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், திருநாராயணபுரம் ஆகிய இடங்களில்
எழுந்தருளிய உடையவரையும், தாயாரையும், நாராயணனையும் தரிசிக்கவேண்டும்.


4. மடப்பள்ளி , மங்கலகிரி( விஜயவாடா) பாகை நரசிம்மரை தரிசிக்கவேண்டும்.


5. இவை தவிர பிரசித்தி பெற்ற சனீஸ்வரனின் திருத் தலங்களான குச்சானூர்,
திருநள்ளாறு, திருவண்ணாமலை- வேலூர் சாலையில் அமைந்துள்ள ஏரிக்குப்பம் ஆகிய
இடங்கலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து வரவும்.


6. தினசரி காக்கைக்கு அன்னமிடல், சனிக்கிழமைதோறும் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றுதல் இவைகளையும் விடாது செய்து வரவும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:04 am

விருச்சிகம்:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Viruchigam


இதுவரை உங்கள் ராசிக்கு பதினோராம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி
பகவான் இப்போது உங்களுடைய விரய ஸ்தானமான பனிரண்டாமிடத்தில்
சஞ்சரிக்கிறார். இதையே ஏழரைச் சனி என்று குறிப்பிடுவர். பனிரண்டாமிடம்
என்பது விரய ஸ்தானமாகும். அங்கு சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்
உங்களுக்கு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. மன மகிழ்ச்சி இருக்காது .
படுத்தல்கள் இருக்கத்தான் செய்யும். விரயச் சனியானவர் உங்களைஅலைக்கழித்து
தொல்லைப்படுத்துவார். மக்களால் சில பிரச்னைகள் சூழும். வாழ்க்கைத்துணைவரின்
உடல்நலனில் கவனம் தேவை.


வீண்விரயம் ஏற்படும். தேவையில்லாத, அனாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி
வைத்துக் கொள்வதும் அவசியமாகும். மேலும் இந்தச் சனிப் பெயர்ச்சிக்
காலத்தில் ரிஷபத்திலும், கடகத்திலும் குரு உலவும் நிலை அமைவதாலும்,
பெரும்பாலான காலம் சனி குருவின் பார்வையைப் பெறுவதாலும் நற்பலன்களும்
உண்டாகும் என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் ஜனன கால ஜாதகப்படி இந்த
நேரத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானாலும்
கவலைப்படத் தேவையில்லை. என்றாலும் சனிப் பிரீதி அவசியம் செய்யவேண்டும்.


15-11-2011 முதல் 10-10-2012 வரை செல்வ நிலையில் அபிவிருத்தி காண
வாய்ப்பு உண்டாகும். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிராது. சுப
காரியங்கள் நிகழும். வாழ்க்கைத்துணைவரால் நலம் பெறுவீர்கள். மக்கள்
நலனுக்காகச் செலவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக
இருப்பார்கள். பொறியியல் துறை லாபம் தரும். 17-5-2012 முதல் குரு 7-ஆமிடம்
மாறுவதால் பொருள்வரவு கூடும். வாழ்க்கைத்துணைநலம் சீராகும். கூட்டுத்
தொழிலில் அபிவிருத்தி காணலாம். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். 26-6-2012
முதல் நீண்ட நாளைய எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். காரியத்தில் வெற்றி
கிட்டும்.


11-10-2012 முதல் 4-11-2013 வரை அலைச்சல் அதிகமாகும். உடல்
ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பயணத்தின்போதும், வண்டி, வாகனங்களைப்
பயன்படுத்தும்போதும் எச்சரிக்கை தேவை. பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.
23-12-2012 முதல் கால் பாதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும்.
பயணத்தின்போது பொருள் காணாமல் போகும். வீண்செலவுகளும் இழப்புகளும் கூடும்.
கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகும். தூக்கம்
கெடும். மனதில் ஏதேனும் பயம் இருக்கும். தொழிலில் விரும்பத்தகாத இடமாற்றம்,
நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். 31-5-2013 முதல் எதிர்பாராத அதிர்ஷ்ட
வாய்ப்புகள் கூடிவரும். மக்களால் மன அமைதி கெடும். இருப்பிடத்தில் மாற்றம்
செய்து கொள்வீர்கள். அந்த மாற்றமும் திருப்திகரமாக அமையாது. குரு, சனி,
ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.


5-11-2013 முதல் 1-11-2014 வரை பண வரவு அதிகரிக்கும் நேரமிது.
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். விருந்து, உபசாரங்களில் பங்கு
கொள்வீர்கள். மக்கள் நலம் சீராகும். நூதன கண்டுபிடிப்புகளின் மூலம் புகழும்
பொருளும் கிடைக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். 19-6-2014 முதல்
தொலைதூரத் தொடர்பால் அதிகம் நலம் உண்டாகும். மகப்பேறு அல்லது மக்களால்
பாக்கியம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
சொத்துக்கள் சேரும். மதிப்பு உயரும். முயற்சி வீண்போகாது. ஸ்பெகுலேஷன்
துறைகள் லாபம் தரும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கறுப்பு, கருநீல நிறப்பொருட்களால்
ஆதாயமிராது. தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து இனங்களைச்
சேர்ந்தவர்கள், சுரங்கப் பணியாளர்கள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றி
வருவது நல்லது. 12-7-2014 முதல் ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும்.
அந்நிய மொழி, மதக்காரர்களால் நலம் உண்டாகும். குறுக்கு வழிகளில் பணம்
சேரும். மக்களால் சில பிரச்னைகள் தலைதூக்கும் என்றாலும் சமாளித்து
விடுவீர்கள்.


மொத்தத்தில் விரயச்சனி காலத்தில் பொருள் நஷ்டம், பண நஷ்டம் ஏற்படுவதைத்
தடுக்க முடியாது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது
அவசியமாகும். வீண் விவகாரங்களில் தலையிடவேண்டாம். புதிய முயற்சிகளைத்
தவிர்க்கவும். சனிக்குரிய பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வரவும்.


பரிகாரம்:


1. சனியால் ஏற்படும் தொல்லைகள் தீர சனியின் குருவான கால பைரவருக்கு அஷ்டமி திதிக்களில் உளுந்து வடைமாலை சாற்றி வணங்கிடவும்.


2. மகுடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று தோஷ பரிகாரங்களை உரிய முறையில் செய்து கொள்ளவும்.


3. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு 9 முறை வலம் வந்து வணங்கவும்.


5. திருநள்ளாறு, குச்சானூர், ஏரிக்குப்பம் முதலிய இடங்கலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரரை தரிசித்து பரிகார வழிபாடுகளைச் செய்யவும் .
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:08 am

தனுசு:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Thnusu


இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருந்து
பதினோராமிடத்துக்கு மாறி வருகிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல மாற்றமே. இந்த
மாற்றத்தை நீங்கள் இருகரம் நீட்டி வரவேற்கலாம். ஏனென்றால் பதினோராமிடம்
என்பது லாபஸ்தானம் ஆகும். பதினோராம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான்
உங்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களை அள்ளிக் கொடுத்து உங்களை ஆனந்தத்தில்
ஆழ்த்துவார். உங்கள் வாழ்க்கைத் தரத்தை சனி பகவான் உய்ர்த்திக் காட்டுவார்.
இந்த இரண்டரை ஆண்டுக் காலமும் உங்களுக்கு யோகமான பலன்களாக நிகழப் போகிறது.


பொருளாதாரச் செழிப்பு உண்டாகும். பல வழிகளில் வருமானம் கிடைக்கும்.
குடும்ப நலம் சிறக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இளைய சகோதர,
சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும்
கூடும். தகவல் தொடர்பு, கொடுக்கல்-வாங்கல், கலைத்துறை, சட்டத்துறை,
கல்வித்துறை ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் தங்கள் நிலை உயரப்
பெறுவார்கள்.


கறுப்பு, கருநீலநிறப்பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், இரும்பு, எஃகு
பொருட்கள், பழைய பொருட்கள், பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும்
பொருட்கள், கரி, ஆகாய மார்க்கம், காற்று சம்பந்தப்பட்ட இனங்கள் ஆகியவற்றால்
ஆதாயம் கிடைக்கும். சமுதாய நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். உயர்பதவி,
பட்டங்கள் தேடிவரும். பொதுஜனத் தொடர்பு வலுக்கும். சனி சர ராசியில்,
சுக்கிரனின் வீட்டில், தன் உச்ச ராசியில் இருப்பதால் வெளியூர்,
வெளிநாட்டுத் தொடர்புகளால் அதிகம் பயன் கிடைக்கும். அழகுப் பொருட்கள்
சேரும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும். பல வழிகளில்
ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். சகோதரர்
வெளிநாடு செல்வார். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அடிவயிறு
சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.


15-11-2011 முதல் 10-10-2012 வரை பொருளாதார நிலை உயரும். பல வழிகளில்
ஆதாயம் வந்து சேரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். ஸ்பெகுலேஷன்,
கொடுக்கல்-வாங்கல் இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் பயன்பெறுவார்கள்.
இயந்திரங்கள் லாபம் தரும். இஞ்சினீயர்களது எண்ணம் நிறைவேறும். மந்திர
சித்தி சிலருக்கு உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.
திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும்.
எதிர்பாராத செலவுகளும் ஏற்படும் என்பதால் சிக்கனத்தைக் கையாள்வது நல்லது.
சிலருக்கு இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். 16-5-2012 முதல்
4-8-2012 வரை சகோதர நலனில் கவனம் தேவைப்படும். தொழிலில் முன்னேற்றம் காணக்
குறுக்கீடுகள் முளைக்கும். மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதன்பிறகு பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும்.
உடன்பிறந்தவர்களின் நலம் சீராகும்.


11-10-2012 முதல் 4-11-2013 வரை வெளிநாட்டுத் தொடர்பால் அதிகம் நலம்
உண்டாகும் நேரமிது. வேற்று மத, மொழி, இனக்காரர்கள் உங்களுக்குப் பெரிதும்
உதவுவார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்ட
வாய்ப்புக்கள் கூடிவரும். புதையல் போன்ற பெரும் தனம் கிடைக்கும். குறுக்கு
வழிகளிலும் ஆதாயம் பெறுவீர்கள். ராகுவும் சனியும் 23-12-2012 முதல் லாப
ஸ்தானத்தில் உலவும் நிலை அமைவதால் வீடு மாற்றம், தொழில் மாற்றம் ஆகியவை
உண்டாகும். பல வழிகளிலும் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணத்திட்டம்
கைகூடும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். போக்குவரத்து,
ஏற்றுமதி,இறக்குமதி, தோல், எலக்ட் ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கொரியர், தகவல்
தொடர்பு, நவீன விஞ்ஞானக் கருவிகள், கறுப்பு, கருநீலநிறப்பொருட்களால் ஆதாயம்
பெருகும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். மக்களாலும் சில
இடர்ப்பாடுகள் உண்டாகும். காது, கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு
ஏற்படும்.


5-11-2013 முதல் 1-11-2014 வரை. செல்வாக்கும் மதிப்பும் உயரும். நிலம்,
மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும்
இப்போது கிடைக்கும். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். தாய் நலம் சீராகும்.
சுகானுபவம் கூடும். உடல் நலம் திருப்தி தரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவ
முன்வருவார்கள். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண
வாய்ப்புக்கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை
கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். திருமணம்
ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். வாழ்வில் முன்னேற்றம், காண
நல்ல வாய்ப்புகள் கூடிவரும். விவசாயிகளும் தொழிலாளர்களும்
உத்தியோகஸ்தர்களும் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். அயல்நாட்டுத்
தொடர்பு வலுக்கும்.


மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் சுபிட்சம் கூடும்.
எல்லா விஷயங்களிலும் வெற்றி உங்களுக்குத்தான் என்ற நிலை ஏற்படும்.
குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வாழ்க்கைத்தரம்
உயரும்.


பரிகாரம்:


1. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாற்றி வன்னி இதழ்களால் அர்ச்சித்து வணங்கவும்.

2. குருப் பிரதோஷம், சனிப் பிரதோஷம். சோமப் பிரதோஷமாகிய காலங்களில் சிவாலயத்தில் காராம் பசுவின் பாலினால், அபிஷேகம் செய்க.

3. சனீஸ்வரரின் திருத் தலங்களான திருநள்ளாறு, குச்சானூர், ஏரிக்குப்பம்
முதலிய ஸ்தலங்களுக்கு சென்று சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்து
வழிபடவும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:09 am

மகரம்:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Makaram


இதுவரை உமது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான்
இப்போது உமது ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். சனி தன் உச்ச
ராசியில் இருப்பதால் நலமே உண்டாகும். எடுத்த காரியங்கள் நிறைவேறும்.
அந்தஸ்தும் மதிப்பும் உயரும். புதிய முயற்சிகள் கைகூடும். செல்வ நிலையில்
விசேடமான வளர்ச்சி காணலாம். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடமுண்டு.
குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பதவிச் சிறப்பு உண்டாகும். தலைமை
தாங்கும் தகுதியைப் பெறுவீர்கள். உடல்நலம் சீராகும். மன பலம் கூடும். பொது
நலப்பணிகளில் ஈடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள். பூமியால் லாபம் உண்டாகும்.
புதிய சொத்துக்களும் சேரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் நிச்சயம்
கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் நலனில் கவனம் தேவை. பெற்றோருக்கும்
மக்களுக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப்
பழகுவது அவசியமாகும். தொழில் ரீதியாகச் சிலர் இடமாற்றம் பெறுவார்கள். சனி
சுக்கிரனின் வீட்டில், சர ராசியில், தன் உச்ச ராசியில் இருப்பதால் சட்டம்,
கலை, வாக்கு, பொருள் கொடுக்கல்-வாங்கல், சுரங்கம், இரும்பு, எஃகு, எண்ணெய்
வகையறாக்கள், பழைய பொருட்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றால் வருமானம் கூடப்
பெறலாம். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். அதனால் ஆதாயமும்கிடைக்கும்.


15-11-2011 முதல் 10-10-2012 வரை புதிய பொருட்களும் சொத்துக்களும்
சேரும். மாணவர்களது நிலை உயரும். இயந்திரங்கள் லாபம் தரும். மூத்த சகோதர,
சகோதரிகளால் சிறுசிறு பிரச்னைகள் சூழும். குறுக்கு வழிகளில் ஈடுபடலாகாது.
17-5-2012 முதல் மக்கள் நலம் சீராகும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.
சகோதர நலம் சீராகும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறச் சந்தர்ப்பம்
உருவாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மக்கள் நல
முன்னேற்றப்பணிகளில் ஈடுபடுவீர்கள். மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் ஆக
வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு மந்திர சித்தி ஏற்படும். தொலைதூரத் தொடர்பு
பயன்படும்.


11-10-2012 முதல் 4-11-2013 வரை பயணம் செய்வதில் நாட்டம் கூடும்.
பயணத்தால் அனுகூலமும் பெறுவீர்கள். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள்
இந்த நேரத்தில் பெரிதும் உதவி புரிவார்கள். போக்குவரத்துச் சாதனங்களால்
லாபம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும்.
ஏற்றுமதி-இறக்குமதி இனங்களைச் சேர்ந்தவர்கள் அதிக ஆதாயம் பெறுவார்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளால் வருமானம் கிடைத்துவரும். வேலையாட்களால்
அனுகூலம் உண்டாகும். தோல் பொருட்கள் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்கள் புகழ்
பெறுவார்கள். புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம் செய்து வரும் தொழிலில்
அபிவிருத்தி காண்பீர்கள். அரசு விருதும் பாராட்டுகளும் கிடைக்கும்.
மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவீர்கள். நவீன விஞ்ஞானத்துறைகளில் ஈடுபாடு
உண்டாகும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தொழில் ரீதியாக ஒரு
மாற்றம் ஏற்படும்.


5-11-2013 முதல் 1-11-2014 வரை உடன்பிறந்தவர்கள் உதவி புரிய
முன்வருவார்கள். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
வெளிநாட்டு வேலை சிலருக்கு இந்த நேரத்தில் கிடைக்கும். மக்களால் சில
இடர்ப்பாடுகள் உண்டாகும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் மற்றும் நவீன
விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். ரேடியோ,
வீடியோ, டி.வி., பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்புக்
கூடும். மாணவர்களது நிலை உயரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும்.
நல்லவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். 19-6-2014 முதல் செல்வ வளம்
மேலும் கூடும். கணவன் மனைவி உறவு நிலை சிறக்கும். கூட்டாகத் தொழில்
செய்பவர்கள் லாபம் கூடப் பெறுவார்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக்
கூடிவரும். செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். தெய்வப் பணிகள் நிறைவேறும்.
புனித நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும். பெரியவர்கள், தனவந்தர்கள்,
சித்தர்கள் ஆகியோரது ஆசிகளைப் பெறுவீர்கள். த்யானம், யோகா ஆகியவற்றில்
ஈடுபடுவீர்கள். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.


மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் ஓரளவுக்குச் சிறப்பானதாக
அமையும். பொருளாதார நிலை அபிவிருத்தி அடையும். குடும்பத்தில் ஒற்றுமையும்
மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:09 am

கும்பம்:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Kumbam


இந்த சனிப் பெயற்சி மூலம் உங்களுக்கு அஷ்டம சனியிலிருந்து விடுதலை
கிடைத்திருக்கிறது. இதுவே பெரிய நன்மைதான். சனியின் அசுப பலன்கள் அமையாமல்
இருந்தாலே பெரிய நன்மைதான்.


தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்திலிருந்து
ஒன்பதாமிடத்திற்கு மாறப் போகிறார். ஒன்பதாமிடத்திற்கு பாக்கிய ஸ்தானம்
என்றும் மகாலட்ஸ்மி ஸ்தானம் என்றும் பெயருண்டு. உமது ராசிநாதனான சனி பகவான்
ஒன்பதில் உச்சம் பெறுவது மிகவும் விஷேஷம். இதனால், ஓரளவு யோகத்தையும்
தரும். தெய்வ காரியங்களிலும் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத்
தொடர்பு பயன்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். மன பலமும் கூடும். 12-ஆம்
வீட்டோன் 9-ல் இருப்பதால் தந்தையால் செலவுகள் ஏற்படும். தந்தையை விட்டுப்
பிரிந்திருக்க வேண்டிவரலாம். சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தாரால் சில
குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும்.


15-11-2011 முதல் 10-10-2012 வரை மனதில் துணிவும் தன்னம்பிக்கையும்
கூடும். எதிரிகள் அகலுவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும்.
செய்து வரும் தொழிலில் முழு ஈடுபாடு கொண்டு வளர்ச்சி காண்பீர்கள். பண
நடமாட்டம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும். தெய்வ காரியங்களை
நிறைவேற்றிக் கொள்வீர்கள். சொத்துக்கள் சேரும். 16-5-2012 முதல்
குடும்பத்தில் சலசலப்புக்கள் உண்டாகும். பொருள் கொடுக்கல்-வாங்கலில்
விழிப்புத் தேவை. வீண்வம்பு கூடாது. மக்கள் நலனில் கவனம் தேவை. தொழில்
ரீதியாகச் சில மாற்றங்கள் உண்டாகும். என்றாலும் திருப்திகரமாக அமையாது.
4-8-2012 முதல் நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு
பயன்படும்.


11-10-2012 முதல் 4-11-2013 வரை அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும்
தொழில் லாபம் தரும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் நிறைவேறும். புதியவர்கள்
நண்பர்களாவார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். போக்குவரத்துத்
துறை லாபம் தரும். செய்தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதனால் ஏற்றமும்
உண்டாகும். வீடு மாற்றமும் சிலருக்கு இந்த நேரத்தில் அமையும். எதிர்பாராத
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். 23-12-2012 முதல் தொலைதூரத்
தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் பாதிக்கும். ஆன்மிகத்தில்
ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தாரால் பிரச்னைகள்
சூழும். 31-5-2013 முதல் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும்.
பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். தந்தை நலம் சீராகும்.
மதிப்புக்குக் குறைவிராது. மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும்.


5-11-2013 முதல் 1-11-2014 வரை குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.
பேச்சாற்றல் வெளிப்படும். செல்வ வளம் பெருகும். பல வழிகளில் வருமானம் வந்து
சேரும். தன, லாபம் பெருகும். அரசியல், நிர்வாகம், ஆன்மிகம், சட்டம்,
மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள்
முன்னணிக்கு உயருவார்கள். உயர் பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும்.
19-6-2014 முதல் சோதனைகள் அதிகரிக்கும். எதிலும் யோசித்து ஈடுபடவும்.
பொருளாதார சிக்கல் உருவாகும். கடன் தொல்லை உண்டாகும். குடும்பத்தாராலும்,
பிற மொழி, மதக்காரர்களாலும் பிரச்னைகள் சூழும். வீண் வம்பு வேண்டாம்.
உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பயணத்தால் அனுகூலமிராது. எதிலும்
வேகத்தைக் குறைத்துக் கொள்ளவும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல்
இருப்பது நல்லது.


மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் சுமாரானது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by ஜனனி Mon Nov 14, 2011 10:10 am

மீனம்:

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Meenam


இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருந்து வந்த சனி பகவான் இப்போது
எட்டாமிடத்துக்கு அஷ்டம சனியாக வரப் போகிறார்.அஷ்டம சனியின் காலம்
சிறப்பாகாது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது
அவசியமாகும். குறுக்கு வழிகளில் ஈடுபடலாகாது. நேரான பாதையில் செல்வதன்
மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் மீளலாம். வீண் வம்பு, வழக்கு; சண்டை,
சச்சரவுகளைத் தவிர்க்கவும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தண்டச்
செலவுகள் ஏற்படும். செய்யாத குற்றத்துக்கு நீங்கள் தண்டனையைப் பெற நேரலாம்.
கெட்டவர்களின் தொடர்பை அறவே விட்டு விலகுவது அவசியமாகும். தொழிலில்
முன்னேற்றம் காண்பது அரிது. விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை
உண்டாகும். பொருள் களவு போகும். எடுத்த காரியத்தை முடிக்க அரும்பாடுபட
வேண்டிவரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் பாதிக்கும்.
சொத்துக்களை இழக்க வேண்டிவரலாம். பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். நீண்ட
நாள் நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.
உடன்பிறந்தவர்களின் நலம் பாதிக்கும். தந்தையால் அதிகம் அனுகூலமிராது. அரசு
தண்டனை பெறவோ, அரசு அபராதம் கட்டவோ வேண்டிவரும்.


பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. மக்களால் மன அமைதி
குறையும். செய்தொழில் எதுவானாலும் அதில் அதிகம் கவனம் செலுத்தி, அயராது
பாடுபடுவது அவசியமாகும். உங்களுடைய பொறுப்புகளை மற்றவர்களிடம்
ஒப்படைக்கலாகாது. அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்பார்கள். இதனால் எதிலும்
எச்சரிக்கை தேவை. ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி,
அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. இறைவழிபாட்டிலும், கிரக
வழிபாட்டிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபடவும். அதன்மூலம் சங்கடங்களைக்
குறைத்துக்கொள்ள முடியும். ஹனுமன் சாலீசா படியுங்கள்; கேளுங்கள். சனிக்கு
நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள். கோளறு பதிகம் சொல்லுங்கள்.


15-11-2011 முதல் 10-10-2012 வரை எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும்.
குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். பேச்சால் ஜீவனம்
செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கடன் உபத்திரவம் குறையும். தந்தையால்
ஓரளவு நலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் முழு ஈடுபாடு இருந்தால்
வளர்ச்சி காணமுடியும். 17-5-2012 முதல் பொருளாதாரப் பிரச்னை உண்டாகும்.
பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். செய்தொழில் எதுவானாலும் அதில் முழுக்கவனம்
தேவை. விரும்பத்தகாத இடமாற்றமோ, நிலைமாற்றமோ உண்டாகும். தேவைகளைச்
சமாளிக்கக் கடன்பட நேரலாம். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
பொறாமைக்காரர்களாலும் போட்டியாளர்களாலும் தொல்லைகள் பெருகும்.
யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. யாருக்கும் ஜாமீன்
கொடுக்கவேண்டாம். உங்கள் கடமைகளை நீங்களே ஆற்றி வருவது அவசியமாகும்.


11-10-2012 முதல் 4-11-2012 வரை தொலைதூரத் தொடர்பு ஓரளவு நலம் தரும்.
பெற்றோரால் அளவோடு அனுகூலம் உண்டாகும். புதியவர்கள் உதவி புரிய
முன்வருவார்கள். 23-12-2012 முதல் பயணத்தால் சங்கடத்துக்கு ஆளாக நேரலாம்;
எச்சரிக்கை தேவை. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். வண்டி
வாகனங்களில் செல்லும்போது விழிப்புடன் இருப்பது நல்லது. ஆகாயம், காற்று
சம்பந்தப்பட்ட இனங்களால் சங்கடங்கள் உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். தோல்,
பல், கண், வாய், குடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். ஃபுட் பாய்ஸன்
ஆகலாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை. எதிலும் வேகம்
கூடாது.


5-11-2013 முதல் 1-11-2014 வரை பிரச்னைகள் சற்று குறையும். செய்து
வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பண நடமாட்டம் சற்று
அதிகரிக்கும். ஆன்மிக ஈடுபாடு மன அமைதியைத் தரும். நிலம், மனை, வீடு,
வாகனங்கள் சேரும். சொத்துக்களால் அளவோடு ஆதாயமும் கிடைத்துவரும். 19-6-2014
முதல் எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். மக்கள் நலம் சீராகும். வெளியூர்,
வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.
தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும். புத்திசாலித்தனத்தால்
எதையும் சமாளிப்பீர்கள். தெய்வானுகூலம் உண்டாகும்.


மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலம் சோதனையானது.
இறைவழிபாட்டின் மூலமும் கிரக வழிபாட்டின் மூலமும் மட்டுமே அமைதி
பெறமுடியும். ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். தர்ம நியாயப்படி
நடப்பவர்களைச் சனி எப்போதும் தண்டிக்கமாட்டார் என்பதால் நேர்வழியில்
ஈடுபடுங்கள். பெரியோர்களது அறிவுரைகளைக் கேட்டு அதன்படி செயல்படுங்கள்.
நல்லதே நடக்கும்.


பரிகாரம்:


1. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி வழிபட நன்று.


2. அஷ்ட கணபதி, மற்றும் சனீஸ்வரர் மகன் மாந்தி வழிபட்ட ஆலயம், நர்த்தன
பள்ளியறை கொண்ட மணக்குல வினாயகர், பாண்டி, எட்டு கைகளுடன் கூடிய துர்க்கை,
எமகண்டீஸ்வரம் பிரம்மஸ்தான ஆஞ்சனேயர்., சுவாமிமலை முருகன் இதன்
ஸ்தலங்களுக்கு சென்று அர்ச்சனை, ஆராதனை , சனி, வியாழக் கிழமைகளில்
வழிபடுதல் நலம்.


3. சுயம்பு லிங்கமாகக் காட்சி தரும் குச்சானூர் சனீஸ்வரர், ஆரணி
ஏரிக்குப்பத்தில் எழுந்தளியுள்ள எந்திர வடிவிலான சனீஸ்வரர், கோளாறு
நீக்கும் திருநள்ளாறு சனீஸ்வரர் இவர்களைத் தரிசித்து தகுந்த பரிகாரங்களை
செய்து வரவும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் Empty Re: சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum