TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மனிதனை உணவாக்கும் மனிதன்.

2 posters

Go down

மனிதனை உணவாக்கும் மனிதன். Empty மனிதனை உணவாக்கும் மனிதன்.

Post by sakthy Sun Nov 13, 2011 4:19 pm

சமூகத்தின் குறைகள் - மனிதனை உணவாக்கும் மனிதன்.

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

Cannibalism
காலையில் அம்மாவின் அன்பான தொலைபேசி அழைப்பில் துயில் முடித்துக் கொண்ட எனக்கு தந்த செய்தியோ அதிர்ச்சி. சினிமா படங்களை பார்த்து விட்டு வரும் பக்கத்து வீட்டு பையன்கள் அந்த சண்டைக் காட்சிகளை அரங்கேற்றினார்கள். அந்தக் காட்சியின் உச்ச கட்டமாக பக்கத்து வீட்டுப் பையன் வீட்டின் கூரையில் இருந்து குதித்து கால்களை உடைத்துக் கொண்டான் என்பது தான். தொலைக்காட்சி,வீடியோக்களில் காமெராக்களைக் வைத்து நம் கண்களை ஏமாற்றலாம்.பக்கத்து வீட்டுப் பையன்கள் ஏமாந்தார்களா,அல்லது விளையாட்டுத்தனத்தின் வேகமா? நாம் பலரும் பார்த்து ஏமாறும் மற்றொன்று WWE,RAW போன்ற மல்யுத்த,Wrestling, நிகழ்ச்சியாகும்.இதில் 50 வீதம் உண்மையும்,50 வீதம் பொய்யாக இருந்தாலும், கண்டு பிடிக்க முடியாத அளவு நிகழ்ச்சியை நடத்தி கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். இவர்களின் அதி திறமை என்னவென்றால் நேரில் பார்க்கும் இரசிகர்களைக் கூட தந்திரமாக ஏமாற்றி நம்ப வைப்பது தான்.அதற்காக அவர்களுக்கு நிச்சயம் சபாஷ் போட்டுக் கொள்ளலாம். பாய்ந்து அடிக்கும் நாம் சினிமாக்களிலும், இப்படி உண்மை என நம்ப வைக்கும் அளவுக்கு காட்சிகளை அமைக்கலாமே!

என் சிறு வயதில் பென்சில் சீவும் போது, கைவிரலில் பட்ட சிறு காயத்தை கண்டு என் அம்மா துடித்த துடிப்பு இன்றும் மனதில் ஓடுவது தெரிகிறது. தமிழ் நாட்டில் தலையை எடுப்பதெல்லாம் ஒரு பொம்மையின் தலையை குழந்தை கழற்றி மீண்டும் பொருத்தி பார்ப்பது போல் ,அவ்வளவு சுலபமாக அமைதியாக நடந்து வருகிறது.பணத்திற்காக,நகைகளுக்காக,காதலுக்காக, என்று எதற்கும் உயிரை எடுக்க மனிதன் தயாராகி விட்டான். உணவுக்காக ஆடு கோழி என்று வெட்டும் மனிதன், அப்போது உருகும் மனநிலை கூட, மனிதனின் தலையை சீவும் போது உருகுவதில்லை,கண்ணீர் வடிப்பதில்லை, துடிப்பதில்லை, கவலைப்படுவதில்லை. ஏன்?

அன்பு கருணையை போதித்த புத்தன் வாழும் திசையில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று யாரையும் பார்க்காது கருணையின்றி படுகொலை செய்து, ஈழத்தில் குருதி வெள்ளம் ஓட செய்தான்,இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.இதற்கிடையில் தங்கள் சாதனைகளை ஜயலலிதா வந்து பார்க்கட்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் ராஜபக்சே. அவர் செய்த சாதனை என்ன என்று காட்டப் போகிறார். கலாச்சார பண்பாட்டு சீரழிவுகளையா, அவற்றை முன் நின்று நடத்தும் இராணுவத்தையா, ப்த்துக்கு மேற்பட்ட இரகசிய சித்திரவதை முகாம்களையா, உரிமை,சுதந்திரம் கேட்ட மக்களை அடைத்து வைத்து விட்டு, தங்கக் கூட்டில் அடைத்து கிளிக்கு உணவளிப்பது போல்,காலில் விழுந்தவர்களுக்கு ராஜா மரியாதை கொடுக்கும் சிங்களத்தின் விந்தையையா, உதவி கொடுத்த நாடுகளின் உதவிகளை சிங்களப் பகுதிகளுக்கு கொடுத்து சொர்க்க பூமியாக மாற்றி விட்டு இது தான் தமிழர் வாழும் பகுதி என்று காட்டவா, தமிழர் நிலங்களையும்,வளங்களையும் அபகரித்து தங்கள் குடும்ப சொத்தாக்கியதையா, தமிழர் நிலங்களில் சிங்களைரை குடியேற்றி விட்டு இது தான் ஈழத் தமிழர்கள் என்று சொல்லவா, வன்னியில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களை இவர்கள் தான் நான் குடியேற்றிய தமிழர்கள் என்று வீர வசனம் பேசவா, மீள் குடியேற்றப் படாத மக்களை காட்டாது மறைத்து விட்டு, குடியேற்றம் முடிந்து விட்டது என்று கொக்கரிக்கவா எதை சொல்லப் போகிறார்,எதை காட்டப் போகிறார்.

ராஜீவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலையில் தன்னை மாற்றிக் கொண்டது போல் ஜெயலலிதா இரட்டை வேடமும்,அன்றைய ஜே தான் இவர் மாறவில்லை என்பதை ராஜபக்சே தெரிந்து கொண்டுதான் இந்த அழைப்பை விடுத்தாரா?
இன்றைய உலகில் எது உண்மை எது போய் என்று பிரித்தறிய முடியாத அளவில், நம்ப முடியாத அளவில் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபகாலமாக நடந்துவரும் அம்மா ஆட்சியின் அதிரடிகள்,இப்படியும் நடக்குமா என்று எண்ணுமளவிற்கு நடந்த கலைஞர் அய்யா ஆட்சி ஊழல்கள், எதையும் நம்ப முடியாது தவிக்கிறார்கள் மக்கள்.

ராஜபக்சே தமிழர்களின் இரத்தத்தை குடித்து உடலை உணவாக்கிக் கொண்டது போல்,வேறு காரணங்களுக்காக மனிதன் உடலை உணவாக்கிய சில சம்பவங்கள் தான் இவை.மனிதனின் உடலை உணவாக்கிய படங்களை பார்த்திருபீர்கள். ஜப்பானில் மனிதனை விருந்தாக படைக்கும் உணவு விடுதிகள் கூட உண்டு. தலையில் கையை வைக்காதீர்கள்.அவை மனித உடல் போல் உருவாக்கப்பட்ட மிருக இறைச்சி. ஆனாலும் அப்படி உண்பது ஆச்சரியத்தை தருகிறதா இல்லை வன்முறையை தூண்டுகிறதா தெரியவில்லை.
1972 அக்டோபர் 13 ல் உருகுவே இல் இருந்து சிலி நாட்டிற்கு ஒரு விளையாட்டுக் குழு விமான மூலம் சென்றது.சிலி - ஆர்ஜெந்தினாவிற்கு இடைப்பட்ட மலைப் பகுதியில் விமானியின் தவறினாலும் பனி காற்றினாலும் விமானம் மோதுண்டது.மூன்று குளுக்களாக 11 நாட்கள் தேடுதல் நடத்தி கண்டு பிடிக்க முடியாமல், பயணித்த 45 பயணிகளும் இறந்து விட்டதாக கருதினார்கள்.ஆனாலும் ஒரு மலை உச்சியில் இரண்டு மாதங்களாக கடும் குளிர் பனி,உணவில்லாது தவித்த 16 பயணிகள் மீட்கப்பட்டனர். ஆனால்............... அந்த இரண்டு மாதங்களும் உணவின்மையால், இறந்த தங்கள் சகாக்களை உணவாக்கி கொள்ள வேண்டிய கட்டாயத்தின் பேரில்..........

2001 ளில் ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஆர்மின் மைவெஸ், தான் உணவாக்கிக் கொள்ள 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட திடகாத்திரமுள்ள ஒருவர் தேவை என இணையத்தளத்தில் விளம்பரம் செய்தார்.அவரே நம்ப முடியாதபடி ஒரு நாள் Bernd Jurgen Brandes ,43, என்பவர் அவருக்கு பதில் கொடுத்தார். கிறிஸ்மஸ் தினத்தன்று இருவரும் சந்தித்து சில வீடியோ படங்கள் எடுத்துக் கொண்டனர்.பின் ஆர்மின் அவனை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பேட்டியில் வைத்திருந்தான்.2002 ளில் கைது செய்யப்பட போது 20 கிலோ வரை உணவாக உட்கொண்டதாக ஒப்புக் கொண்டான். எல்லாம் முடிந்தது. ஆர்மின் கைது செய்யப்பட்டு 2006 ளில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்று, தற்போது ஜேர்மன் சிறையில் அதை கொண்டாடி வருகிறார்.ஆனால் என்ன அவருக்கு உண்பதற்கு மனிதன் எவனும் கிடைக்கவில்லையே.

உக்ரயினை சேர்ந்த அண்ட்ரே சிகட்டிலோ என்பவன் 50 ற்கு மேற்பட்ட கொலைகளையும்,கற்பளிப்புகளையும் செய்து வந்த தொடர் கொலைக் குற்றவாளி, 1944 பெப் 14 ல் கொல்லப்பட்டான். இவனால் கொல்லப்பட்டவர்களை உணவாக்கிக் கொண்டதே பெரும் குற்றமாக கண்டு ரஸ்சியாவின் தேடுதல் வேட்டையில் இறுதியில் கண்டு பிடிக்கப்பட்டான்.

இஸ்செய் சகாவா, என்ற ஆங்கில இலக்கியம் படிக்க வந்த ஜப்பானிய மாணவன் பாரிஸ்ஸில் படித்துக் கொண்டிருந்த போது,அவன் சந்தித்த சக மாணவனை 1981 ஜூன் 11 ல் கொலை செய்து இரண்டு நாட்களாக உணவாக்கி வந்த போது, பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.ஆனாலும் அவன் ஒரு மன நோயாளி என்ற போர்வையில் வழக்கு நடத்த முடியாது ஜப்பானுக்கு திருப்பி அனுப்பப்பட்டான்.ஒரு வருட மனநல மருத்துவத்தின் பின் தற்போது அவன் விடுதலை அடைந்து விட்டான்.

1990 ல் லைபி‌ரியாவின் உதவி பெற்ற சியாராலியோன் ஆயுதக் குளு ஒன்று தங்கள் எதிரிகளையும்,ஐ நா மற்றும் சமாதானப் படையினரையும் கொலை செய்து உணவாக்கி வந்தனர்.அதற்கு அப்போது அவர்கள் கூறிய காரணம் மனித இறைச்சி மிகப் பலத்தைக் கொடுக்கும் என்பதாகும்.

மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த ஜோஸ் லூய்ஸ் கால்வா தன் பெண் நண்பியான 30 வயதுடைய அலெக்ஸான்த்ரா கலஜெயானவை கொலை செய்து கால் கைகளை குளிர்சாதன பேட்டியில் வைத்திருந்ததையும்,கரங்களை சமைத்து வைத்திருந்ததையும், அவன் கைது செய்யப்பட போது போலீசார் கண்டு பிடித்தனர்.

எல்லாம் எங்கோ நடக்கிறது, இன்றும் காட்டுமிராண்டிகள் வாழவே செய்கிறார்கள் என்று நாம் நல்லவர்களாக காலரை தூக்கி விட்டுக் கொண்டு சென்றாலும், மனத்தில் ஏதோ ஒன்று உதைக்கவே செய்கிறது. காசிக்கு போன சன்னியாசிகள், அகோரிகள் என்ற பெயருடன் உலாவி, எரியும் பிணங்களை சுவைக்கும் இந்த நாகரீக செயல்களும் அஹிம்சைக் கொடியுடன் தலை நிமிர்ந்து நிற்கும் நம் நாட்டில் தான் நடந்து வருகிறது. நம் நாட்டை வேண்டுமானால் இந்து நாடு என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, அகிம்சை நாடு என்று சொல்லி பெருமைப்பட எந்த இந்தியனாலும் முடியாது.

பிணம் தின்னும் அகோரிகளை, இந்துமத வேதம் சொன்னபடி வாழ்கிறார்கள் என்று கண்ணை மூடிக் கொள்வதையோ,சத்திஸ்காரில் படுகொலை செய்தது காந்தி காட்டிய அகிம்சா நெறி என்று மார் தட்டுவதையோ,ஈழத்தில் அப்பாவி தமிழர்களை இனப்படுகொலை செய்ய துணை போனதை சிறீலங்காவை காப்பாற்ற செய்த தற்காப்பு நடவடிக்கை என்று சொல்வதையோ இராட்சகர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.

நான் இந்துவாக பிறக்காமல் தமிழன் மதமாக பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன்.
ஆரிய இந்துமதம் நரமாமிசத்தையும் வன்முறையையும் ஏற்றுக் கொள்வதும்,கிறிஸ்தவம் கூட Leviticus 26-29,Deuteronomy 28.53, நரமாமிசம் உண்பதை ஆதரிப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அதே போல் Al-Kortoby என்ற நூலில், இஸ்லாம் நரமாமிசம் உண்பதை ஏற்றுக் கொள்கிறது என்ற மத நூல் ஆய்வாளர்களின் கீழ்கண்ட வாதத்தையும் புறந்தள்ள முடியாது.
Mohammad said, “Breaking the bones of a dead body is like breaking the bones of a live body. Al-Shafie said, “One may eat the flesh of a human body. It is not allowed to kill a Muslim nor a free non-Muslim under Muslim rule (because he is useful for the society), nor a prisoner because he belongs to other Muslims. But you may kill an enemy fighter or an adulterer and eat his body”. எதிரிகளைக் கொன்று உணவாக்கலாம்.
மேற்சொன்ன கருத்தை இமாம் El Shefie வலியுறுத்தினாலும் கூட, surah 2.173; 16.15 அதிகாரங்களில், He hath only forbidden you dead meat, and blood, and the flesh of swine, நரமாமிசம் பற்றி நேரடியாக குறிப்பிடப்பட்வில்லை என்பதை ஏற்றுத் தான் ஆக வேண்டும்.

இவை எல்லாம் சரியா தவறா என்பதையிட்டு வாதிடுவதை விட, மதங்கள் என்ன சொல்கிறது என்பதை விட, மனித நேயம் என்ன சொல்கிறது என்பதை புரிந்து கொண்டால் நாம் மனிதர்களாக வாழ முடியும் என எண்ணுகிறேன்.
உங்களுக்கு தெரியுமா?
Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukupokaiwhenuakitanatahu ,
நியூ சீலாந்தில் Porangahau விற்கு அருகில் உள்ள 305 மீற்றர் உயரமான மலைக்குன்றின் பெயர் இது. 85 ஆங்கில எழுத்துக்களை கொண்ட இந்த குன்றை Taumata என்று சுருக்கி அழைக்கிறார்கள்.ஐயோ பாவம் இந்த மலைக்குன்று.

மீண்டும் அடுத்த வாரம்.................................நன்றியுடன் சக்தி.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

மனிதனை உணவாக்கும் மனிதன். Empty Re: மனிதனை உணவாக்கும் மனிதன்.

Post by Tamil Sun Nov 13, 2011 4:28 pm

மனிதனை உணவாக்கும் மனிதன். 135634 மனிதனை உணவாக்கும் மனிதன். 135634
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum