TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குஸ்புவின் மகா தத்துவம்

2 posters

Go down

குஸ்புவின் மகா தத்துவம் Empty குஸ்புவின் மகா தத்துவம்

Post by sakthy Thu Aug 11, 2011 9:09 pm

சக்தியின் துகிலுரிக்கும் படலம் 13 குஸ்புவின் மகா தத்துவம்

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

பெண்ணிலவே என்றே தான் மேடையிலே பேசிடுவார்,
பேதையவள் கண்ணீரை புறந்தள்ளி ஏசிடுவார்
எண்ணிலவள் கொடுந்துயரோ எம்மலையும் விஞ்சிடுமே
ஏமாந்த கதை சொல்ல எழுதுகோலு மஞ்சிடுமே.

வடிவேல் ஒரு படத்தில் தன் மனைவியை வெவ்வேறு கோணங்களில் ரசிப்பார். அத்துடன் நின்று விடாது மற்றவர்களையும் பார்க்கும்படி சொல்வார். இது நகைச்சுவை என்ற பேரில் சொல்லபட்டாலும் கூட, சினிமாவாவில் பல காட்சிகளும்,வசனங்களும் நம்மவர்கள் சிலரால் நிசமாக்கப்பட்டு, திசைமாறி போகிறது என்பதை சமூகத்தில் இன்று நாம் காணக் கூடியதாக இருக்கிறது.சினிமா பாணியில் கடத்தல், கொலை,காதல்,பாலியல் தொல்லைகள் என்று இது விஸ்வரூபமாகி,தன் மனைவியையே ஆபாச வீடியோவாக மாற்றி சிலரால் பணமாக்கப்படுவதையும் காண்கிறோம். உண்மையா இல்லையா?
ஆண், தான் திருமணம் செய்யும் பெண், கன்னியாக,கற்புக்கரசியாக இருக்க வேண்டும் என நினைக்கிறான்.இது நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் இதே கனவு தான். ஆனால் அந்த ஆணோ, காதலிக்கிறான், நிறைவேறா ஆசைகளை, கடற்கரையில், ஹோட்டலில் இப்படி பல இடங்களில் நிறைவேற்றிக் கொள்கிறான். இந்த நவீன காதல்,மனதோடு சேராது,உடலோடு சேர்ந்து, அத்துடன் முடிவடைந்து, புதிய கன்னியை,கற்புக்கரசியை தேட சென்று விடுகிறது. அவனால் சிதைக்கப்பட்டு கைவிடப்பட்டவள், வேறொரு வீட்டுக்கு செல்ல வேண்டியவள் என்பதையும், அவனைப் போலவே அதே கனவுடன் இன்னொருவன் வாழுகிறான் என்பதையும்,அந்த நாகரீகம் படைத்த மனிதன் எண்ணிப் பார்ப்பதில்லை. எல்லா ஆண்களும் பெண்களும் குஸ்புவின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை.இந்த குஸ்புவின் மகா தத்துவத்தை திருமணத்திற்கு முன் ஏற்றுக் கொள்ளும் மனிதன்,தன் திருமணத்தின் போதோ அதை கனவாக்கி விடுகிறான். இது நம் நாட்டில் மட்டுமல்ல, மேல்நாடுகளிலும் இதே தத்துவம் தான். உண்மை கசக்கத்தான் செய்யும்.ஆனாலும் இவை இன்று நடக்கிறதா இல்லையா?
தங்கள் குழந்தைகளையே, தத்தெடுத்தது போல் காட்டி,நம்மிடையே என்றும் Miss ஆக நடமாடி வரும் நடிகைகள் இல்லையா? குடிபோதையிலும், விபச்சாரத்திலும் ஈடுபட்டு நல்லவர்களாக நடித்து வாழும் நடிகைகளும் இருக்கிறார்களா இல்லையா? வெளிநாட்டவர்கள் நடிகர்களின் நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு, கை தட்டி விசில் அடித்து விட்டு செல்வதைப் போல் நடந்து கொள்ளாது,நாம் நடிகர் நடிகைகளை புனிதர்களாக்கி, கோயில் கட்டுகிறோமே ஏன்?
சமீப காலமாக தொலைக் காட்சிகளில் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்று போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சின்னஞ்சிறு மொட்டுக்களாக குழந்தைகள் போட்டிக்கு வருவார்கள். ஒவ்வொருவராக போட்டியில் இருந்து நீக்கப்பட்டு இறுதியில் ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுவார். அவர்கள் அப்படி நீக்கப்படும் போது பல குழந்தைகளின் கண்ணில் இருந்து முத்து முத்தாக கண்ணீர் உருளும். இந்த சிறு வயதில் இப்படி ஒரு ஏமாற்றத்தை கொடுக்க வேண்டுமா? குழந்தைகள் சில நாட்களில் அதை மறந்து விட்டாலும் கூட, ஏதோ ஒரு வலி அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் ஏற்படவே செய்கிறது. வீட்டிற்கு சென்றதும் கூட சில பெற்றோர்கள் அவர்களை குறைத்து சொல்வதும்,கடிந்து கொள்வதும் உண்டு. இது அவர்களை பாதிக்குமா என்று ஒரு சிறுவர் மனநல மருத்துவரை கேட்டேன்.நிச்சயமாக என்று அடித்துக் கூறுகிறார். பெற்றோர்கள் அதற்கு மருந்திடாது மேலும் புண்படுத்துவதை நிறுத்தினால் நல்லது என்றும் கூறினார். ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் வடு இருக்கத்தான் செய்கிறது என்ற அவர் கருத்து, ஈழத்து குழந்தைகள் நிலை பற்றி எண்ணத் தோன்றியது.
கல்வி கற்க பள்ளி போவோம்
பள்ளி மேலே குண்டு விழுந்தால் எங்கே போவோம்,
(செஞ்சோலையில் துடி துடித்து உடல் சிதறி பலியான பிஞ்சுகளும்,மொட்டுக்களும்)
மருந்து போட மருத்துவமனை போவோம்
மருத்துவமனையிலே குண்டு விழுந்தால் எங்கே போவோம்,
(இறுதி யுத்தத்தின் போது மருத்துவமனை மீது குண்டுகள் வீசி அழிக்கப்பட்டன. சமீபத்தய செய்தியின் படி மருத்துவ நிலையத்தில்,பாலியல் கொடுமை,நாக்கு வெட்டப்பட்ட போன்ற கொடூரங்கள் நடந்தது வெளியானது.)
தீங்கிழைத்தால் கோயில் போவோம்
கோயில் மீதே குண்டு போட்டால் எங்கே போவோம்.
(நவாலி தேவாலயத்தில் உடல் சிதறிப் பலியான குழந்தைகளும் பெரிவர்களும்)
என்ற கில்பட் அவர்களின் கவிதை வரிகள் என் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தது. அவர்களின் மனத்தில் ஆறாத வடுக்களாய் பதிந்த இவை மாறாத வடுக்களா? சின்னஞ்சிறு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது.இப்படி எத்தனை குழந்தைகள் வெவ்வேறு வழிகளில் மன உறுத்தலுக்கும்,மனச் சிதைவுக்கும் ஆளாகிறார்கள். இவை போன்றவை தான் பல கொடும் செயல்களுக்கு பின்னால் பலரை தூண்டுகிறதா?நம்மில் தவறுகளை வைத்துக் கொண்டு தண்டனைகளையும்,போதனைகளையும் கொடுக்கிறோமே, எண்ணிப் பார்த்தது உண்டா?
விவாகரத்துக்களால் குடும்பம் என்ற பல்கலைக்கழகம் பிரிகிறது.அன்பாய் இணைந்த ஜோடிகள் பிரிகின்றன. குழந்தைகள் இருந்தாலோ அவர்களும் பிரிகிறார்கள். பிரிந்த இந்த அப்பாவிக் குழந்தைகள் நிலை என்ன? சிந்தித்துப் பார்த்ததுண்டா? சிலர் அப்பாவிடமோ,அம்மாவிடமோ செல்கிறார்கள். சிலர் இனத்தவர்களால் அழைத்து செல்லப்படுகிறார்கள். ஆனால் வேறு சிலரோ, சில இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். வெளிநாடுகளிலோ சிலர் தத்தெடுத்துக் கொள்கிறார்கள். அநேகமான குழந்தைகள் இல்லங்களுக்கு செல்கிறார்கள். சமூக விரோத செயல்களுக்கும், மனநோய்க்கும் இந்த குழந்தைகள் ஆளாகின்றனர் என்கின்றனர் சமூக மனநிலை ஆய்வாளர்கள். தங்கள் வாழ்வே பெரிதேன எண்ணும் இந்த பெற்றோர்கள் என்றாவது குழந்தைகள் நலன்,வருங்கால வாழ்வு பற்றி சிந்தித்ததுண்டா? சாதி,மதம்,வரதட்சணை,தவறான நட்பு,கல்வி,பதவி என்று தொடங்கி சிறு விசயங்களுக்கு கூட பிரிந்து போகிறார்களே! வலிக்கவில்லை?
மருத்துவர் நம் உடம்பில் உள்ள நோயை மட்டுமே கண்டறிந்து குணப்படுத்துவார். பரீட்சைத் தாள்களை திருத்தும் ஆசிரியர் ஒருவர் அங்கே உள்ள தவறுகளை கண்டறிவார். அது போலவே நம் சமூகத்தில் உள்ள தவறுகளை கண்டறிந்து சமூகத்தின் முன்னால் வைப்பதால், அவற்றை திருத்திக் கொள்ள இந்த சமூகம் முயற்சிக்கும் என்ற ஒரு சிறு நப்பாசையே தவிர, சமூகத்தில் குற்றங்கள் தான் இருக்கின்றன,நல்லவைகள் இல்லை என்பது பொருளல்ல.
இன்று நம்மிடையே உள்ள பலவற்றை, மூட நம்பிக்கை என்று தூக்கி வீசுகிறோம். நிலவுக்கு சென்று கால் பதித்து விட்டான், நிலவை கடவுள் என்கிறாயே என்று கேலி செய்கிறோம்.ஆனால் ரஷ்ஸிய - சுவீடிஷ் ஆராய்ச்சியாளர்கள் மொகெஞ்சதாரோ பட எழுத்துக்கள் தமிழின் ஆரம்ப வடிவம் என்று நிரூபித்தும் கூட, ஏற்க மறுக்கும் சிலரை நாம் காண்கிறோம். இராமாயணம் பற்றி எத்தனை வரலாற்று ஆவணங்கள் நிரூபித்தும் கூட, இராமனை கடவுள் அவதாரம் என்று கட்டிப் பிடித்து நிற்கும் எத்தனை பக்த கோடிகளை காண்கிறோம். ஐயப்பனிடம் சென்றவர்களே அவன் முன்னாலேயே செத்து மடிந்தார்களே, எண்ணிப் பார்க்க மறுக்கிறோம்.இராம பக்தர்களோ, எங்கேயோ தொங்கிக் கொண்டு வேதம் ஓதுகிறார்கள். பாண்டியன் நீதி தவறிய போது கூட கண்ணகிக்கு உதவிட, கடவுள் அவதாரம் எடுக்கவில்லையே ஏன்? கற்புக்கரசி என்று போற்றப்பட்ட கண்ணகி தமிழிச்சி என்பதாலேயா?
பணம்,பதவி,போலிக் கௌரவம்,சிபார்சு கூடவே அராஜகம் அடக்குமுறையும் சமூகத்தை சின்னாபின்னப் படுத்திக் கொண்டிருக்கிறது. சொத்துக்காக பெற்றோரை கொலை செய்கிறான் மகன். கடவுளுக்கு கற்பக்கிரகம் அமைத்து விட்டு,இரண்டு பெண்களுடன் விபச்சாரம் செய்கிறான் பூசாரி.நாலு வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நாலு தமிழக UKG ஆசிரியைகள் மீது புகார் சுமத்தப்படுகிறது.சில தினங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் நடந்த பேச்சரங்கில்,ஒரு தாய் வெளியிட்ட கண்ணீர் கதை இதயத்தை பிழிந்தெடுக்கிறது.இதை எல்லாம் பார்த்தும் கேட்டும் நாம் இளைஞர்கள், சினிமா நடிகர்கள் பின்னும்,சாமியார்கள் பின்னும்,இணயத்தளங்களில் 24 மணி நேரமும் செலவாளிக்கிறோமே,நாம் எல்லாம் உணர்ச்சியற்ற ஜடங்களா? தற்செயலாக நடந்து விட்டது என்று தட்டிக் கழிக்க,இவை எல்லாம் எங்கோ ஒரு இடத்திலா நடந்திருக்கிறது?இவை எல்லாம் எங்கும் பெருகி நம்ப முடியாத அளவிற்கு போய் விட்டதே.
எது எதற்கோ செலவு செய்யும் அரசு, நீதித் துறையை பாராமுகம் காட்டி உள்ளது. தாங்களும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற பயமா? வழக்கறிஞர் தொகையோ அதிகம்.நீதிபதிகளோ மிகக் குறைவு, வருடக் கணக்காக வழக்குகள் இழுத்து செல்லப்படுகின்றன. பல வெளிநாடுகளில் வெகு சீக்கிரமே வழக்கை முடித்துக் கொள்கிறார்கள். வராது டிமிக்கி கொடுத்தாலோ, அவர் இல்லாமலே வழக்கை விசாரித்து தீர்ப்பளித்து விடுகிறார்கள். நம் நாட்டிலோ வாய்தாக்கள் தொடருகின்றன. எப்படியோ தவறாக மாட்டிக் கொள்ளும் அப்பாவியோ, குற்றம் செய்யாமலேயே வருடக் கணக்கில் சிறையில் தவிக்கிறான். தூண்டிவிட்டவர்கள் யாரோ,குற்றம் செய்தவர்கள் யாரோ?. குற்றம் செய்தவர்களும்,தூண்டி விட்டவர்களும் வாழ்க்கையை இன்பமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாட்டிக் கொண்டவர்கள், ராஜீவ் காந்தி குற்றவாளிகள் போல், ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள்..எது நீதி? எங்கே நீதி?
வெளிநாடுகள் பலவற்றை விட இந்தியா,இலங்கையில் குற்றச் செயல்கள் அதிகம். அதுவும் பாலியல்,கொலை,சிறுவர் பலாத்காரம் போன்றவை,மறைக்கப்பட்டாலும் கூட, மற்ற நாடுகளை விட அதிகமானதே. இலங்கையில் இராணுவ ஆட்சி, கேட்க நாதி இல்லை எல்லாமே நடக்கும்.ஆனால் இந்தியாவின் நிலை என்ன? பெண் பலாத்காரமும்,சிறுவர் பலாத்காரமும்,கொலையும் தலை விரித்து ஆடுகிறது. பல வெளிநாடுகளில் மனைவி விரும்பா விட்டால், கணவன் அவளை நெருங்கவும் முடியாது. அப்படி நெருங்கி முத்தம் கொடுத்தால் கூட அதை பாலியல் பலாத்காரமாக சட்டம் பார்க்கிறது. ஆனால் இங்கோ பலாத்காரம் நடந்தால் கூட தப்பி விட சட்டத்தில் ஓட்டை உண்டு. நீதி குறட்டை விட்டு தூங்குகிறது. அரசியல்வாதிகள் தலையிடுகிறார்கள்.வருடக் கணக்காக வழக்கு நீடித்து செல்கிறது. இவை எல்லாம் சட்டம் இயற்றும் அரசுக்கு தெரியவில்லையா? இல்லை சட்டம் இயற்றுபவர்களே குற்றம் செய்கிறார்களா? மதுரையில் ஒரு நேர்மையான பெண் காவல் துறை அதிகாரி துணிவுடன்,ரவுடி ஒருவனை கைது செய்து வண்டியில் ஏற்றுகிறார். அடுத்த நிமிடமே அரசியல்வாதி வந்து சேருகிறார். பொதுமக்கள் முன்னிலையிலேயே கண்டபடி திட்டித் தீர்த்து,ரவுடியை தன்னுடன் அழைத்து செல்கிறார். சட்டத்தை காக்கவும்,பொது மக்களுக்காக கடமையை செய்யவும் தயாராக இருக்கும் அதிகாரிகள், எதுவும் செய்ய முடியாமல் அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக மாறி இருக்கிறார்களா இல்லையா?
குற்ற செயல்களுக்கு பணம்,பதவி துணை போகிறது. வேறு சிலவற்றுக்கு சிபார்சு துணை போகிறது. யாருமே எண்ணிப் பார்க்காத சினிமா ஆடுகளத்திற்கு விருது. பலருடைய மனத்திலே,சில ஊடகங்களில் கேள்விக் குறியாய் இன்றும் இந்த விருது பற்றிய சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. எத்தனை நடிகர்கள்,படங்கள் இருந்தும் ஆடுகளத்திற்கும்,தனுசிற்கும் ஏன் விருது? சிலரை சிந்திக்க வைத்தது.சிலரை கேட்க வைத்தது. நேரிலேயே கேட்டு தொலைத்த பத்திரிகையாளருக்கு தனுசிடம் இருந்து கிடைத்த பதில், அவர்களிடமே கேட்டு தெரிந்து கோள்ளுங்கள், என்பது தான். விருது ரஜினியின் சிபார்சா?
எங்கும் கொடுமைகள், பேய்கள் போல் தலை விரித்து ஆடுகின்றன. கொடுமை ஒன்று செயலால் வருவது,இன்னொன்று சொல்லால் வருவது. நாம் இன்று இந்த இரண்டிலும் சிக்கி மீள முடியாது தவித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து எப்போது, எப்படி நமக்கு விடுதலை?
காணியும் காணியும் காணியும் காணியும் காணியும்கால்
காணியும் காணியும் காணியும் காணியும் காணிமுக்கால்
காணியும் காணியும் காணியும் காணியும் காணியும் நால்
காணியும் காணியும் காணியும் காட்டும் கழுக்குன்றமே.
இந்தப் பாடலுக்குப் பொருள் என்ன? உங்களுக்கு தமிழ் நன்றாகத் தெரிந்திருந்தால் ஒரே சொல்லில் பதில் சொல்லுங்கள்.இல்லையேல் தலையை பிய்த்துக் கொள்ளாதீர்கள்.

"கருவறுக்க பட்ட காயம் ஆறவில்லை,கடும் பசியும் சேர்ந்தென்னை வாட்டிக் கொல்ல,உருவிழந்தேன்,இன்றேனும் ஒருவாய்ச் சோறு உயிரிழைக்க அளிப்பாரோ அறியேன் ஐயா?”என்ற முட்கம்பி வேலிக்குள் முடங்கிப் போன, ஈழத்து ஏழை இளந்தாயின் கண்ணீருடன், மீண்டும் அடுத்த வாரம், தோஷத்தின் துகிலுரிக்க, வருகிறேன். எங்கேயும் போய் விடாதீர்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

குஸ்புவின் மகா தத்துவம் Empty Re: குஸ்புவின் மகா தத்துவம்

Post by Tamil Thu Aug 11, 2011 9:59 pm

அருமை யான பதிவு உள்ளதை உள்ளபடி சொன்னிர்கள் நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum