TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்னைக்கு தீர்வு

Go down

திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்னைக்கு தீர்வு Empty திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்னைக்கு தீர்வு

Post by ஜனனி Fri Jul 29, 2011 9:02 am

சென்னை: திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் சுத்திகரிப்பில் புதிய
தொழில்நுட்பத்தைப் பின்பற்றத் தேவையான, 200 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக
வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், குஜராத்தில் பின்பற்றப்படும்
நானோ தொழில்நுட்பத்தை அறிய, அதிகாரிகள் தலைமையில் குழு செல்லும் எனவும்
முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில்,
திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப்
பிரதிநிதிகள், முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தனர். இதைத் தொடர்ந்து,
சாயப்பட்டறை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தமிழக அரசு எடுத்துள்ள முக்கிய முடிவுகள் குறித்த விவரம்:

*
திருப்பூர் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவு நீர்
வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை எட்டுவதற்கான புதிய தொழில் நுட்பத்தை,
தமிழ்நாடு நீர் முதலீட்டுக் கழகம் இயக்கி வரும் அருள்புரம் பொது கழிவு நீர்
சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தற்போது
பெறப்படும் 20 சதவீதம் கழிவு நீரை மீண்டும் சுத்திகரிப்பு செய்து, உப்பு
நீரை மீண்டும் தொழிற்சாலையிலேயே உபயோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம், வேறு எங்கும் கடைபிடிக்கப்படவில்லை. எனவே, இந்த
புதிய தொழில்நுட்பத்தை, எல்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும்
கடைபிடிக்க இயலுமா என்பது இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தான் தெரியும்.
*
குஜராத் மாநிலம் பாரூச் என்ற இடத்தில் 20 சதவீதம் கழிவு நீர், நானோ
தொழில்நுட்பத்தின் மூலம் 7 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இந்த நீர்
ஆவியாக்கப்பட்டு, குளிர்விக்கப்பட்ட நீரும், பெறப்படும் உப்பும் மீண்டும்
தொழிற்சாலையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை திருப்பூரில்
கடைபிடிக்க இயலுமா என்பதை ஆராய, மாசு கட்டுப்பாடு வாரியம், கைத்தறி
மற்றும் துணி நூல் துறை மற்றும் திருப்பூர் சாயப் பட்டறை உரிமையாளர்கள்
சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு, இந்த வாரத்தில் குஜராத்
செல்லும்.
* பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில், புதிய இரண்டு
தொழில் நுட்பங்களில் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தைக் கடைபிடிக்க, ஒவ்வொரு
சுத்திகரிப்பு நிலையத்திற்கும் 10 கோடி ரூபாய் தேவைப்படும். மொத்தமாக, 200
கோடி ரூபாய் தேவைப்படும். இந்த தொகையை வட்டியில்லா கடனாக தமிழக அரசு
வழங்கும்.
* குஜராத் மாநிலம் மற்றும் அருள்புரம் ஆகியவற்றில் சோதனை
முறையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் இரண்டு மாத காலமாகும்.
எந்த தொழில்நுட்பத்தைக் கடைபிடிப்பது என்பது குறித்து இரண்டு மாதத்திற்குள்
முடிவெடுக்கப்பட்டு, அதற்கான கூடுதல் சுத்திகரிப்பு உபகரணங்கள் நிறுவத்
தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும்.
அதன் பின், சோதனை முறையில் மூன்று
மாதங்கள் இயக்கிய பின், சென்னை ஐகோர்ட் கண்காணிப்புக் குழுவின்
பரிந்துரையின் அடிப்படையில், இதற்கு தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி
வழங்கும்.
* திருப்பூர் பகுதி சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள்
தடையின்றி இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில், விவசாயிகளின்
நலனும் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது கழிவு நீரை வெளியேற்ற
கடைபிடிக்கப்படும் முறையில் பூஜ்ஜிய நிலை எட்டுவதால், விவசாயிகளின்
உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும்.
* சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி,
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், ஒரத்துப்பாளையம் அணையை
சுத்தப்படுத்தவும், 49 கோடியே 29 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதில்,
37 கோடியே 11 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரத்துபாளையம்
அணையை சுத்தப்படுத்த பொதுப்பணித் துறைக்கு, 6 கோடியே 77 லட்சம் ரூபாய்
வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 17,758 விவசாயிகளுக்கு, 11 கோடியே 96
லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
* இதில் மீதமுள்ள தொகை 18
கோடியே 38 லட்சம் ரூபாய். இழப்பீடு இன்னும் வழங்கப்படாத விவசாயிகளின்
எண்ணிக்கை 10,838. விவசாயிகள், ஐகோர்ட் உத்தரவு பெற்ற பின் தான் இந்த
இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இருப்பினும், விவசாயிகளின் நலன் கருதி, 18
கோடியே 38 லட்சம் ரூபாயை அரசே வழங்கும்.
* சென்னை ஐகோர்ட்
உத்தரவின்படி, 62 கோடியே 37 லட்சம் ரூபாய் அபராதத் தொகையாக
வசூலிக்கப்பட்டு, வட்டியுடன் அந்த தொகை 67 கோடியாக உள்ளது. இதில், 25 கோடி
ரூபாய் சென்னை ஐகோர்ட்டிலும், 42 கோடி ரூபாய் மாவட்ட கலெக்டரிடமும் உள்ளது.
இந்த தொகை, சென்னை ஐகோர்ட் உத்தரவை பெற்று, விவசாயிகளுக்கு இழப்பீடாகவும்,
பாதிக்கப்பட்ட நிலம் மற்றும் நீர் ஆதாரங்களை சீர் செய்யவும்
பயன்படுத்தப்படும்.
* கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின்
மூலம் பாதிக்கப்பட்ட நிலங்களில் மண் பரிசோதனை செய்து, அந்த நிலங்களில்
விவசாயிகள் என்ன பயிர் செய்யலாம் என்பது குறித்து அறிவுரை வழங்கவும் தமிழக
அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த நடவடிக்கைகள் மூலம், நீண்ட காலமாக
தீர்க்கப்படாமல் உள்ள திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வாக
அமையும். இவ்வாறு தமிழக அரசு எடுத்துள்ள முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாயப்பிரச்னை: திருப்பூர் முதல் சென்னை வரை...!

திருப்பூர்
சாயப் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள
முடிவு செய்துள்ளது. திருப்பூர் பகுதியில் 754 சலவை மற்றும் சாயத்
தொழிற்சாலைகள் அமைந்துள்ளன; இவற்றில், 502 தொழிற்சாலைகள், 20 பொது
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம், கழிவு நீரை சுத்திகரிக்கிறது.
எஞ்சிய 252 தொழிற்சாலைகள் தனித்தனியே சுத்திகரிப்பு நிலையங்களை வைத்துள்ளன.
இவைகளிலிருந்து சராசரியாக நாளொன்றுக்கு, 87 ஆயிரத்து 250 கிலோ லிட்டர்
கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, நொய்யல் ஆற்றில் விடப்பட்டு வந்தது.
திருப்பூர் பகுதி சாயப்பட்டறைகளால், விளை நிலங்களும், நீராதாரங்களும்
மாசடைவதால், அதை நிறுத்தக் கோரி, கரூர் தாலுகா நொய்யல் கால்வாய் விவசாயிகள்
சங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில், "96ம் ஆண்டு ஒரு வழக்கை தாக்கல்
செய்தது. அனைத்து சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகளும் சுத்திகரிப்பு
நிலையங்களை அமைக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் "98ம் ஆண்டு உத்தரவிட்டது.
சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்னரும், வெளியேற்றப்படும்
கழிவுநீரால் பாதிப்பு ஏற்பட்டதால், 2003ம் ஆண்டு, நொய்யல் ஆறு பாசனதாரர்கள்
பாதுகாப்பு சங்கம், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை ஐகோர்ட் வெளியிட்ட தீர்ப்பில்,
2007 ஜூலை 31க்குள் சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள், கழிவுநீர்
வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை அடைய வேண்டும்; அவ்வாறு அடையப்படவில்லை
எனில், சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என
உத்தரவிட்டது. சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம், தொழிற்சாலைகள் மூடப்பட
வேண்டும் என்ற ஆணைக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தடையுத்தரவு பெற்றது. சுப்ரீம்
கோர்ட், 2009 அக்டோபர் மாதம் வழங்கிய தீர்ப்பில், சென்னை ஐகோர்ட் வழங்கிய
தீர்ப்பை உறுதி செய்து, 3 மாத காலத்துக்குள் கழிவுநீர் வெளியேற்றத்தில்
பூஜ்ஜிய நிலையை அடைய வேண்டும் என தீர்ப்பளித்தது.
கழிவுநீர்
வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலை எட்டப்படாததால், சென்னை ஐகோர்ட்டில்
அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, கடந்த ஜனவரி 28ம் தேதி நாளிட்ட சென்னை
ஐகோர்ட் தீர்ப்பின் படி, திருப்பூர் பகுதியில் உள்ள 754 சலவை மற்றும் சாயத்
தொழிற்சாலைகள், பிப்., 1ம் தேதி முதல் மூடப்பட்டன.
திருப்பூர்
பகுதியில் உள்ள சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால்,
திருப்பூர் பகுதி ஜவுளித் தொழில் முடங்கிப் போனது. ஜவுளித் தொழிலை
நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்; தமிழகத்தின் ஜவுளி
ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலை
அடைந்தால், ஜவுளித் தொழில் பாதுகாக்கப்படுவதோடு, விவசாயிகளின் நலனும்
பாதுகாக்கப்படும்.
எனவே, சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகளால்,
விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள்
இயக்கப்பட்டால் தான், ஜவுளித் தொழில் வளர்ச்சி அடைய இயலும்; அப்பகுதி
பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்; வேலை வாய்ப்பு ஏற்படவும் வழி வகுக்கும்.
இந்நிலையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "திருப்பூர் சாயக் கழிவு
பிரச்னையை பரிசீலித்து, அதன் கழிவுகளை சுத்திகரிக்கத் தேவையான
தொழிற்நுட்பத்துடன், விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம்
உருவாக்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தமிழக
முதல்வரின் ஆணைக்கிணங்க, தொழில்கள் துறை அமைச்சர் தலைமையில், கடந்த மே 27,
30, ஜூன் 17, 20 ஆகிய நாட்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
பின்,
திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும்
விவசாயப் பிரதிநிதிகள், தமிழக முதல்வரை சந்தித்தனர். இதன் பின்,
திருப்பூர் சாயப்பட்டறை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பல்வேறு
நடவடிக்கைகள் மேற்கொள்ள, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கக் கடன் வரம்பு பிரச்னைக்கு சுமுகத் தீர்வு
» கடலோரகாவல் படை இனி கண்காணிக்கும்: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு புது தீர்வு
» ''ஐ.நா.சபையால் இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது''
» சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: திருப்பூரில் ஜெ., வாக்குறுதி
» தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum