TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


'பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம்

Go down

'பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம் Empty 'பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம்

Post by ஜனனி Fri Feb 12, 2010 6:54 am

''பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம்

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காகப் 'பச்சை வேட்டை' என்கிற பெயரில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு.

மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில் ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த
45,000 துணை ராணுவப் படைகளோடு மேலும் 30,000 வீரர்கள் சென்ற இரு
மாதங்களில் இதற்காக இறக்கப்பட்டுள்ளனர். 18-பெடாலியன் மத்திய ரிசர்வ்
போலீஸ் படை இதில் அடக்கம். நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கென சிறப்புப்
பயிற்சி அளிக்கப்பட்ட 'கோப்ரா' கமாண்டோக்கள், இப்படியான நடவடிக்கைகளுக்கென
மாநில அளவில் பயிற்சிபெற்ற 'சிறப்பு நடவடிக்கை போலீஸ் பிரிவுகள்(SAG)'
ஆகியனவும் இந்தத் தாக்குதல் படைகளில் உள்ளடக்கம்.

இவர்களைக் கொண்டு மேற்கு

வங்கத்தில் லால்கரைச் சுற்றியுள்ள பங்குரா, புருலியா மற்றும் மேற்கு
மெதினிபூர் மாவட்டங்கள், ஒரிசாவில் நாராயண பட்ணாவை உள்ளடக்கிய கோராபுட்
மாவட்டம், சட்டிஸ்கரில் தாண்டேவாடா, மகாரஷ்டிர எல்லையிலுள்ள கட்சிரோலி
முதலிய பகுதிகளில் ஏற்கெனவே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.

'மிகப்பெரிய உள்நாட்டு ஆபத்து' என வெளிப்படையாக அறிவித்து, பிரதமர்
மன்மோகன்சிங்கும் உள்துறை அமைச்சர் சிதம்பரமும் தொடங்கியுள்ள இந்தத்
தாக்குதலால் இப்பகுதிகள் எல்லாமே முழுமையான போர்ப் பகுதிகளாகவே
காட்சியளிக்கின்றன. வெளியார்கள் யாரும் அங்கே நுழைய முடியாது. மனித
உரிமைப் போராளிகளோ, அல்லது ஹிமான்சு குமார் போன்ற காந்தியவாதிகளோகூட
இப்பகுதிகளில் செயல்பட முடியவில்லை.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக தாண்டேவாடா மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்துப்
பழங்குடி மக்கள் மத்தியில் சேவை செய்துவரும் ஹிமான்சு குமார், நக்சலைட்
வன்முறைகளையும் கண்டிக்கத் தவறாதவர். தொடர்ந்து வந்த அரசுகளால் முற்றாகப்
புறக்கணிக்கப்பட்ட தாண்டேவாடா பகுதியில், பழங்குடி மக்கள் உவந்தளித்த
துண்டு நிலத்தில் ஓலைக் குடிசை ஒன்றை அமைத்துப் பணியைத் தொடங்கியவர்கள்
ஹிமான்சு தம்பதியர். இன்று அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டுமென
எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எச்சரித்தவர்கள் யார்? 'சல்வாஜுடும்' என அழைக்கப்படும் கூலிப் படையினர்.
மாநில காவல் துறையால் ஆயுதமும், அரசாங்க கஜானாவிலிருந்து ஊதியமும்
வழங்கப்பட்டு ஆளும் பாரதீய ஜனதா கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ்
இரண்டின் ஆசியுடன் இயங்கும் இந்தச் சட்ட விரோதக் கூலிப்படையின்
செயல்பாடுகளை தேசிய மனித உரிமை ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவை
கண்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 'சல்வா ஜுடும்' மாடலில்,
மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகள் அனைத்திலும் இதுபோன்ற கூலிப் படைகள்
உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒரிசாவில் இப்படி உருவாக்கப்பட்ட -'சாந்தி
குழு' என்கிற அமைப்பு, சென்ற மாதம் இப்பகுதியில் என்ன நடக்கிறது என்று
கண்டறியச் சென்ற முழுக்கப் பெண்களை உள்ளடக்கிய உண்மை அறியும் குழு ஒன்றைத்
தாக்கி விரட்டியுள்ளது. சென்னையிலிருந்து சென்றிருந்த பேராசிரியர் மதுமிதா
தத்தா, சுவேதா நாராயணன் ஆகிய மனித உரிமைப் போராளிகள் தாக்கப்பட்டவர்களில்
அடக்கம்.

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவது என்கிற பெயரில் இப்படி அரசாங்கங்களே சட்ட விரோதக் கூலிப் படைகளை நடத்துவதை என்ன சொல்வது?

160 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் வேரூன்றி உள்ளதாக அரசாங்கமே ஒப்புக்
கொள்கிறது. வட கிழக்கே மேற்கு வங்கத்தின் லால்கர் மற்றும் பீகார்
பகுதிகளில் தொடங்கி, ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கரின் செறிந்த காட்டுப்
பகுதிகளின் ஊடாகவும், பழங்குடியினர் மிகுந்துள்ள ஒரிசாவின் கொராபுட்
மற்றும் மல்கன்கிரி பகுதியின் ஊடாகவும், கீழிறங்கி தெற்கே ஆந்திர
மாநிலத்தின் முனை வரை உள்ள இப்பகுதி, 'சிவப்பு நடைவழி'(Red Corridor)
என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் பழங்குடியினர், தலித்துகள், அரசியல்
வலுவற்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோர் வசிக்கும் இப்பகுதிகளில் எந்த
அடிப்படை வசதிகளும் இன்றுவரை கிடையாது. மின்சாரம், குடிநீர், பள்ளி,
மருத்துவமனைகள் என்று எதுவுமே கிடையாது. அவர்களது மொழியில் வானொலி,
தொலைக்காட்சிகூட இயங்குவதில்லை. 'இரவானால் உன் கையை நீயே பார்க்க
முடியாது' என்பது இப்பகுதியில் பேசப்படுகிற ஒரு புகழ்பெற்ற சொலவடை. அந்த
அளவுக்குக் குறைந்தபட்ச வசதிகள்கூட இல்லாத இப்பகுதிகளில்தான் இந்தியாவின்
இன்னும் தோண்டி எடுக்கப்படாத கனிம வளங்கள் ஏராளமாகப் புதையுண்டு
கிடக்கின்றன.

உலகமயப் பின்னணியில் பழங்குடி மக்களுக்குப் பாரம்பரிய உரிமையுள்ள
இந்நிலங்களில் இருந்து, நீர் மற்றும் கனிம வளங்கள் ஆகியவை பெரும்
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வாரி வழங்கப்படுகின்றன. எந்த அடிப்படை
வளர்ச்சியையும் சந்தித்திராத இம்மக்களின் அனுமதியின்றியே இப்படி
நடக்கும்போதும், தமது இடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக இடம்
பெயர்க்கப்படும்போதும் அவர்கள் போராடுகின்றனர். சென்செக்ஸ் குறியீடு,
ஷாப்பிங் மால்கள், 8.9 சதவிகித பொருளாதார வளர்ச்சி இவை பற்றியெல்லாம்
காதாலும் கேட்டிராத இம்மக்களின் கோரிக்கைகள் 'குடிநீர், மருத்துவம்,
கல்வி, தமது நிலங்களில் தமக்குள்ள உரிமை' ஆகியவைதான்.

இவற்றுக்காக இம்மக்கள் போராடும்போது இவர்களுக்கு ஆதரவாக நிற்பது
மாவோயிஸ்டுகள் மட்டுமே. -'தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில்
வளர்ச்சி அடிப்படையில் மாற்றங்கள்' என்கிற தலைப்பில் இது குறித்து ஆய்வு
செய்து அறிக்கை அளிக்க, மத்திய அரசின் திட்டக்குழு இரண்டாண்டுகளுக்கு முன்
குழு ஒன்றை அமைத்தது. மேற்கு வங்க அரசின் முன்னாள் அரசுச் செயலர்
பண்டோபாத்யாயா, பல்கலைக்கழக மான்யக் குழு தலைவர் சுக்தியோ தோரத்,
புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் பாலகோபால் ஆகியோர் அடங்கிய
இக்குழு, 2008-மார்ச் மாதம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. 'வளர்ச்சி
இல்லாமையே தீவிரவாதத்திற்குக் காரணம்' என்பதைச் சுட்டிக்காட்டிய இக்குழு,
'மாவோயிஸ்ட் பிரச்னையை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகவும்,
பாதுகாப்புப் பிரச்னையாகவும் பார்க்காமல், அவர்களை ஒரு அரசியல் சக்தியாக
அங்கீகரித்துப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்' என்று பரிந்துரைத்தது.

ஆனால், அரசு அதற்குத் தயாராக இல்லை. கடுமையான அடக்குமுறை ஒரு புறம். சிறிய
அளவில் அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் நடவடிக்கைகளை(ameliorative measures)
மேற்கொள்வது இன்னொரு புறம் என பிரச்னையை எதிர்கொள்வதே கடந்த காலங்களில்
மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளாக இருந்துள்ளன.

நவீன ஆயுதங்கள், கண்ணிவெடி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுள்ள மாவோயிஸ்டுகள்,
ஆயுதப் போராட்டத்தினூடாக இதை எதிர்க்கின்றனர். போலீஸ்காரர்கள்,
கூலிப்படையினர், துணை ராணுவப் பிரிவினர், இவர்களுக்கு உளவு சொல்வதாகச்
சந்தேகப்படக்கூடிய சாதாரண மக்கள் ஆகியோரைக் கொல்வது தவிர எதிர்ப்பைக்
காட்டுவதற்காக பள்ளிக்கட்டிடங்கள், ரயில் போக்குவரத்து முதலிய வளர்ச்சிப்
பணிகளையும் தாக்குகின்றனர்.

'தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைப்போல' அரசு இன்று செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது. அதாவது, வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகவே கருதி
இன்று போரைத் தொடங்கியுள்ளது. பிரச்னை என்னவெனில், யாரை எதிர்த்து இவர்கள்
போர்

நடத்தப் போகிறார்கள்? என்பதே. மாவோயிஸ்டுகளையும் பழங்குடியினரையும்
படையினரால் பிரித்தறிய முடியாது. ஏற்கெனவே ஆயிரக்கணக்கான
கிராமங்களிலிருந்த லட்சக்கணக்கான பழங்குடியினர் வெளியேற்றப்பட்டு
உள்நாட்டிலேயே அகதிகள் முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர். அங்கே பொய்க்
கைதுகள், போலி மோதல்கள், ஆட்கள் காணாமல் போவது, சித்ரவதைகள் என்பவை
குறித்து ஏராளமான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

'உள்ளூர் போலீஸ், துணை ராணுவம், கூலிப்படையினர் ஒன்றாக இணைந்து
மேற்கொள்ளும் இக்கொடுமைகளை நேரில் வந்து பாருங்கள்' என சிதம்பரத்தை,
ஹிமான்சு குமார் வேண்டியபோது, அவர் வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால்
வரவில்லை. மாறாகப் படையினர்தான் வந்தனர். ஹிமான்சு குமார் நாடெங்கும்
சுற்றிப் பிரசாரம் செய்தார். உண்ணாவிரதமிருந்தார். அடுத்து என்ன
செய்வதென்று அறியாமல் திகைத்து நிற்கிறார் இந்தக் காந்தியவாதி. நல்லவேளை
காந்தி இன்று இல்லை. இருந்திருந்தால் அவருக்கும் இந்தக் கதிதான்.

மாவோயிஸ்டுகளும் சரி, அரசும் சரி. தமது உச்சபட்ச நிலைப்பாடுகளிலிருந்து
இறங்கி வரவேண்டும். மாவோயிஸ்டுகள், 'பேச்சுவார்த்தைக்குத் தயார்' எனச்
சொல்லியுள்ளனர். ஆனால், 'அது தனக்குத் தெரியாது' என்கிறார் சிதம்பரம்.
'போரெல்லாம் ஒன்றுமில்லை. பத்திரிகைகள் பெரிதுபடுத்துகின்றன' என்றும்
கூறியுள்ளார். கூலிப்படையினர் தவிர 75,000 துணை ராணுவம் நிறுத்தப்பட்டு,
லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டு அகதிகள் முகாம்களில்
அடைக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் உள்ளே
நுழைய முடியவில்லை. ஆக, இது போர் இல்லை என்றால், வேறு என்ன பெயர்?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் இந்து தீவிரவாதம் ஆரம்பம்
» போராளிகளும் நாய்களும் - கருணாநிதியின் பச்சை வேட்டை
» காங்கோ உள்நாட்டுப் போர்: இந்திய படையினர் செய்த பாலியல் லீலைகள் பற்றி விரைவில் தீர்ப்பு
» ஆஸி., வேட்டை ஆரம்பம்! இன்று ஜிம்பாப்வேயுடன் மோதல்
» வேட்டை ஆரம்பம் - தேசத்தை நேசிக்கும் ஒரு பாரதியனுக்கு மட்டுமே இந்த துணிவு இருக்கும் !!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum