TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையில் தமிழர்கள் சாவுக்கு தி.மு.க., தான் காரணம்: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு

Go down

இலங்கையில் தமிழர்கள் சாவுக்கு தி.மு.க., தான் காரணம்: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு Empty இலங்கையில் தமிழர்கள் சாவுக்கு தி.மு.க., தான் காரணம்: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு

Post by mmani Thu Jun 09, 2011 8:33 am

இலங்கையில் தமிழர்கள் சாவுக்கு தி.மு.க., தான் காரணம்: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு Jசென்னை : ""இலங்கைத் தமிழர்களை, இலங்கை ராணுவத்திடம் கருணாநிதி தான்
காட்டிக் கொடுத்தார். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்ததற்கு, முந்தைய
தி.மு.க., அரசு தான் காரணம்,'' என்று, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா
குற்றம் சாட்டினார்.
இலங்கைத் தமிழர்கள் மீது போர்க்குற்றம் புரிந்தவர்களை, போர்க்
குற்றவாளிகளாக அறிவிக்க, ஐ.நா.,வை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்,
இலங்கை மீது மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா பொருளாதார தடை விதிக்க
வேண்டும் என்று வலியுறுத்தி, சட்டசபையில் நேற்று முதல்வர் கொண்டுவந்த
தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து முடிந்ததும்,
முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது:கடந்த 2005ம் ஆண்டு
நவம்பர் மாதம், இலங்கை அதிபராக ராஜபக்ஷே பொறுப்பேற்றார். 2006ம் ஆண்டு மே
மாதத்தில், தமிழகத்திலும் துரதிருஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
கருணாநிதி தலைமையில், இங்கு மைனாரிட்டி அரசு பதவியேற்ற நிலையில்,
மத்தியிலும் தி.மு.க., அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, 2004
முதல் நடந்து வருகிறது. இந்த சூழலில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும்
போர்வையில், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை, இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட
ஆரம்பித்தது.
எல்லாம் தெரிந்த கருணாநிதி: கடந்த 2008ம் ஆண்டு ஆரம்பத்தில்,
இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு, அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம்,
ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும், இலங்கை ராணுவத்தினருக்கு
அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு
வழங்கியதாகவும், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர், இலங்கை
சென்று வந்ததாகவும் அப்போது செய்திகள் வெளிவந்தன. அப்போதைய முதல்வராக
இருந்த கருணாநிதிக்கு, இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும்.இந்தியாவிடம்
இருந்து, தனக்குத் தேவையான ராணுவ உதவிகளை பெற்றுக்கொண்ட இலங்கை ராணுவம்,
2008ம் ஆண்டு இறுதியிலும், 2009ம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத்
தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை
ஏற்படுத்த இலங்சை அரசை, மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என, மத்திய
அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., வலியுறுத்த வேண்டும் என்றும், இதற்கு
காங்கிரஸ் செவிசாய்க்கவில்லையெனில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை
தி.மு.க., திரும்பப்பெற வேண்டும் என்றும், நான் பல முறை வலியுறுத்தினேன்.
கருணாநிதியின் நாடகங்கள்: ஆனால், கருணாநிதி அதை செய்யவில்லை.
மாறாக, அனைத்துக்கட்சிக் கூட்டம், சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம்,
சட்டசபையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி,
எம்.பி.,க்கள் ராஜினாமா அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை தானே
பெற்றுக்கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என, பல்வேறு வகையான
நாடகங்களை கருணாநிதி நடத்தினார்.இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை
வீட்டில் முடித்துவிட்டு, தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென,
"போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்' என்று அறிவித்து, கடற்கரையில்
உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். மதிய உணவு வேளை வந்ததும், 12 மணிக்கு,
"விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை, இலங்கை அரசு
முடித்துக்கொண்டு விட்டது' என்ற செய்தியை, ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு,
அத்துடன் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு விட்டார். இதன்மூலம்,
உண்ணாவிரதம் எனும் அறப்போராட்டத்தை கேலிக்கூத்தாக்கினார் கருணாநிதி."போர்
நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது' என்ற, கருணாநிதியின் பேச்சைக் கேட்டு,
பாதுகாப்பாக பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித்
தமிழர்கள் வெளியே வந்தனர். இப்படி வெளிவந்த தமிழர்கள் மீது, இலங்கை
ராணுவம் கொத்துக் கொத்தாக இடைவிடாமல் குண்டுகளை வீசி, ஈவு இரக்கமின்றி
அவர்களை படுகொலை செய்தது.இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத்
தமிழர்கள், ராணுவ முகாம்களில் கம்பிகளால் ஆன வேலிகளுக்குப் பின்னால்
அடைத்து வைக்கப்பட்டதாகவும், முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள்,
ராணுவப் படையினரின் கண் முன்பே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக்
கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும்
செய்திகள் வந்தன.
எம்.பி.,க்கள் குழுவின் பொய்: ஆனால், கனிமொழி உட்பட ஐக்கிய
முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று, ராஜபக்ஷேவுடன்
சிரித்துப்பேசி, விருந்துண்டு, பரிசுப்பொருட்களை பெற்று சென்னை திரும்பிய
எம்.பி.,க்கள் குழுவோ, "இலங்கைத் தமிழர்கள் நலமாக இருக்கின்றனர்' என்று,
உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது. உண்மை நிலை என்னவெனில், போரால்
இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் மறுவாழ்வு பெறாமல் அவதிபட்டுக்கொண்டு
தான் இருக்கின்றனர்.
காட்டிக் கொடுத்தார் கருணாநிதி: "போர் நிறுத்தம்
ஏற்பட்டுவிட்டது' என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி, இலங்கைத் தமிழர்களை,
இலங்கை ராணுவத்திடம் கருணாநிதி காட்டிக்கொடுத்தார். "தமிழினப் பாதுகாவலர்'
என்று தன்னைத்தானே கூறிக்கொண்டு, தமிழின படுகொலைக்கு துணை போயிருப்பதை
பார்க்கும்போது, "உறவுபோல் இருந்து, குளவிபோல் கொட்டுவது' என்ற பழமொழி
தான் நினைவுக்கு வருகிறது. இலங்கைத் தமிழர்கள் உயிரிழப்பதற்கு, முந்தைய
அரசு காரணமாக அமைந்துவிட்டது.தி.மு.க., அரசின் சுயநலப்போக்கு மற்றும்
கையாலாகாத்தனம் காரணமாக, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், இலங்கை ராணுவத்தின்
குண்டு மழைக்கு பலியாகினர். குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி
மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம், இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது.
நிவாரணப் பொருட்கள் சென்றடைவதை, இலங்கை அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது.
உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக, ஏராளமான தமிழர்கள் மரணம்
அடைந்தனர். இதில், மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன.
இலங்கையை வழிக்கு கொண்டு வர வழி: இந்த காரணங்களுக்காகத்தான்,
இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மார்க்சிஸ்ட் உறுப்பினர் சவுந்திரராஜன்
பேசும்போது,"பொருளாதார தடையை கொண்டுவர வண்டும் என்ற வரிகளை
விலக்கிக்கொண்டால் என்ன?' என்ற ஒரு கருத்தை தெரிவித்தார். இதனால், தமிழ்
மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தையும் அவர் கூறினார்.இப்போதே,
இலங்கை அரசு, யாருக்கும் பணியவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு,
சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க
வேண்டுமென்று இந்தியா கூறினாலும், வேறு யார் கூறினாலும், அவர்கள் அதை
மதிக்கவில்லை. அதனால், அவர்களை வழிக்கு கொண்டுவர ஒரே வழி, பொருளாதார
தடைகள் தான். இது ஒரு தற்காலிகமான முறைதான். இந்திய அரசும், இன்னும் சில
நாடுகளும் இணைந்து, இலங்கை அரசு மீது பொருளாதார தடையை கொண்டுவந்தால்,
குறுகிய காலத்திற்குள், நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக
வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும்; வேறு வழியில்லை.தீர்மானத்தில் பேசிய
சில உறுப்பினர்கள், ஐ.நா., சபை, ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என்று
அறிவித்துவிட்டதாக தெரிவித்தனர். அது தவறு. ஐ.நா., சபை, அதுபோல்
அறிவிக்கவில்லை. ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ மூன், ஒரு குழுவை அமைத்து,
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி, ஒரு அறிக்கை
சமர்ப்பிக்க வேண்டும் என்றார். அக்குழு சமர்ப்பித்த அறிக்கையில்,
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்களை எல்லாம் தெரிவித்துவிட்டு,"இதை
இலங்கை அரசே விசாரிக்க வேண்டும்' என்று தான் சொன்னது. ராஜபக்ஷேவையோ,
மற்றவர்களையோ, போர்க் குற்றவாளிகளாக ஐ.நா., அறிவிக்கவில்லை.அதனால் தான்,
இந்த தீர்மானத்தில், போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள்
என இந்திய அரசு பிரகடனப்படுத்த வேண்டும்; இதற்கு, ஐ.நா.,வை வலியுறுத்த
வேண்டும் என்று, தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.எனவே, மனிதாபிமானமற்ற
முறையில், ஈவு இரக்கமின்றி இலங்கைத் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு
காரணமானவர்களை, போர்க் குற்றவாளிகள் என ஐ.நா., பிரகடனப்படுத்த, மத்திய
அரசு வற்புறுத்த வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு
அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தி, அனைத்து
குடியுரிமைகளையும் இலங்கை அரசு வழங்கும் வரை, மற்ற நாடுகளுடன் இணைந்து
இந்தியா, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா
பேசினார்.இதன்பின், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விலை ஏற்றத்திற்கு கடத்தல், பதுக்கல் தான் காரணம்: ஜெயலலிதா பகீர் குற்றச்சாட்டு
»  இந்திராகாந்தியும் ராஜீவ்காந்தியும் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தான் காரணம்! - பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு.
» இந்திய உளவுத்துறை மீது ராஜபக்சே பகிரங்க குற்றச்சாட்டு: சதி செய்து சரத் பொன்சேகாவை எதிரி ஆக்கி விட்டதாக புகார்
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நீடிக்கிறது: சீமான் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum