TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


'புலிகள் சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகளல்லர்' உறுதியுடன் கூறும் அவுஸ்ரேலிய பேராசிரியர்.

Go down

'புலிகள் சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகளல்லர்' உறுதியுடன் கூறும் அவுஸ்ரேலிய பேராசிரியர். Empty 'புலிகள் சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகளல்லர்' உறுதியுடன் கூறும் அவுஸ்ரேலிய பேராசிரியர்.

Post by மாலதி Tue May 10, 2011 9:31 pm

'புலிகள் சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகளல்லர்' உறுதியுடன் கூறும் அவுஸ்ரேலிய பேராசிரியர்.

'புலிகள் சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகளல்லர்' உறுதியுடன் கூறும் அவுஸ்ரேலிய பேராசிரியர்

"என்னைப் பணியிலிருந்து விலக்கவேண்டும் என Ceylon கல்லூரி மருத்துவர்கள்
அவுஸ்திரேலியக் கல்லூரி மருத்துவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை
விடுத்திருந்தனர். இவ்விடயம் உண்மையில் என்னைப் பெருமையில்
ஆழ்த்தியுள்ளது" என பேராசிரியர் Whitehall கூறுகிறார்.

இவ்வாறு Sydney Morning Herald ஊடகத்தின் இணையத்தளத்தில் Tim Elliott
எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக
[www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது,

'பயங்கரவாதிகளின் செயற்பாட்டாளர், தந்திரமான பரப்புரைக்காரர், மூளைச் சலவை
செய்யப்பட்டஒருவர்' எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இவர் அவுஸ்திரேலிய
காவற்துறையால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன், கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய
உயர் நீதிமன்றால் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டதாக
பழிசுமத்தப்பட்டார்.

மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவத்துறை பேராசிரியர்
JohnWhitehall க்கு [University of Western Sydney's foundation chair of
paediatrics and child health]
விடுதலைப் புலிகள் தொடர்பாக மறைப்பதற்கு எதுவுமில்லை. 'மக்கள் அவர்களை
பயங்கரவாதிகள்' என அழைக்கிறார்கள் 'ஆனால் விடுதலைப் புலிகள் ஒரு
சுதந்திரப் போராளிகள், அத்துடன் அவர்கள் என்னுடைய மாணவர்கள், நான் அவர்களை
நேசிக்கிறேன். இவற்றை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்' என
பேராசிரியர் Whitehall கூறுகிறார்.

Teaching Tamil Tiger medical students in Sri Lanka in 2005.

அந்த மாணவர்களில் குறைந்தது ஒன்பது பேர் வரையிலானோர், இலங்கைத்தீவின்
வடக்குக் கிழக்கை அரசாங்கத்திடமிருந்து பிரித்தெடுப்பதற்காக
மேற்கொள்ளப்பட்ட இறுதியுத்தத்தின்போது கொல்லப்பட்டுவிட்டார்கள்.

இந்த யுத்தம் இரு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்தபோதிலும் 68 வயதான
பேராசிரியர் கடந்த இரு ஆண்டுகளாக சிறிலங்காவின் தலைமைத்துவம்; தமிழர்கள்
மீது மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கம்
நடவடிக்கை எடுக்கத் தூண்டும் விதத்தில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும்
ஊடகங்களில் அழுத்தங்கொடுத்து வருகிறார்.

'சிறிலங்கா இராணுவம் பலவற்றுக்குப் பதில் சொல்லவேண்டும்' என அண்மையில்
ஐ.நாவால் வெளியீடு செய்யப்பட்ட சிறிலங்கா நிலவரம் தொடர்பான அறிக்கையை
மேற்கோள்காட்டி பேராசிரியர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் இந்த அறிக்கையானது சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள்
ஆகிய இரு தரப்பினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுளள்தாகத்
தெரிவிக்கின்றது.

"தாய் தந்தையற்ற சிறுவர்கள் பராமரிக்கப்பட்ட இல்லங்கள், பாடசாலைகள் மீது
இலங்கை அரசாங்கம் வான்தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்துடன் இன்றுவரையும்
பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இரகசிய முகாங்களில்
தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தொடர் துன்பியலாக உள்ளதுடன் இதுவரை
யாரும் இவ்வாறான குற்றங்களுக்குப் பதிலளிக்க முன்வரவில்லை" என Whitehall
கூறுகிறார்.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்ரிபயோற்றிக், வென்ரிலேற்றர்
[antibiotics and ventilators] போன்ற மருந்துகளை வழங்குவதற்காக
முதன்முதலில் Whitehall 2005ல் சிறிலங்காவுக்கான பயணத்தை
மேற்கொண்டிருந்தார்.

ஓராண்டு காலத்தின் பின்னர், யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று
கொண்டிருந்த மருத்துவ பீட மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக மீண்டும் அவர்
சிறிலங்காவுக்கு வந்தார்.

"மூன்று வாரங்களின் பின்னர் எனது மாணவர்களில் விடுதலைப் புலிகளின்
மருத்துத்துறையைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்கியிருப்பதை அறிந்துகொண்டேன்.
இம்மாணவர்களில் பலர் யுத்தத்தில் ஈடுபடும் வீரர்கள். பலரது உடலில் போர்
வடுக்கள் காணப்பட்டன. அவை சிலருக்கு மிகப் பாரதூரமானதாகவும் இருந்தன.
இதில் மூவர் தமது சொந்தக் கால்களை இழந்து செயற்கைக் கால்களைப்
பொருத்தியிருந்தனர்.

எறிகணைத் தாக்குதல்களின் மத்தியில் ஒளிர்விளக்குகளின் (torchlight)
உதவியுடன் மட்டும் மிகப் பெரியதும் ஆபத்தானதுமான சத்திரசிகிச்சைகளை
மேற்கொள்வதிலிருந்து எல்லாவிதமான களமருத்துவ நுட்பங்களையும் இந்த மருத்துவ
மாணவர்கள் நன்கறிந்திருந்தனர். இவர்கள் தமது மருத்துவக்கற்கையைப் பூர்த்தி
செய்வதற்கு குழந்தை மருத்துவத்தையும் கற்கவேண்டியிருந்தது" என பேராசிரியர்
Whitehall தெரிவிக்கிறார்.

"அதன் பிறகு AFP யைச் சேர்ந்த இருவர் என்னை செவ்வி கண்டபோது, நோயாளிச்
சிறார்களைக் குணப்படுத்த எவ்வாறான மருத்துவத்தைச் செய்யவேண்டும் என்பதை
மட்டுமே நான் புலிகளுக்குக் கற்பித்தேன் எனக் கூறினேன்" என Whitehall
கூறுகிறார்.

விடுதலைப் புலிகளுடன் கழித்த மூன்று மாதகாலப்பகுதியில் Whitehall
[நேர்மையான விவேகமான ஈடுபாடுடைய கல்விமானான] புலிகளின் அரசியற்பொறுப்பாளர்
சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன் காட்டில்
அமைக்கப்பட்டிருந்த புலிகளின் மருத்துவமனையையும் பார்வையிட்டிருந்தார்.

களமருத்துவம் தொடர்பான அனுபவங்களை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட போரும்
மருத்துவமும் [War and Medicine] என்ற நூலை வெளியிடுவதில் தனது மருத்துவ
மாணவர்களுக்கு Whitehall உதவினார்.

அவுஸ்திரேலியா, சிறிலங்கா ஆகிய இரு நாடுகளிலும் வாழும் சிங்கள சமூகம்
மத்தியில் Whitehall இன் இவ்வாறான புலி ஆதரவுச் செயற்பாடுகள்
காழ்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.

"என்னைப் பணியிலிருந்து விலக்கவேண்டும் என Ceylon கல்லூரி மருத்துவர்கள்
அவுஸ்திரேலியக் கல்லூரி மருத்துவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை
விடுத்திருந்தனர். இவ்விடயம் உண்மையில் என்னைப் பெருமையில்
ஆழ்த்தியுள்ளது" என பேராசிரியர் Whitehall கூறுகிறார்.

'சிறிலங்காவுக்கான சமாதானம், ஒற்றுமை மற்றும் மனித உரிமைக்கான அமைப்பு'
[SPUR -Society for Peace, Unity and Human Rights for Sri Lanka] என
அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவில் வாழும் சிங்கள மக்களிற்கான அமைப்பின்
பேச்சாளர் நிமால் லியனகே Nimal Liyanage, 'Whitehall ஒரு
முதிர்ச்சியில்லாதவர், மோசடிக்காரர்' என குற்றஞ்சாட்டியுள்ளார்.

'Whitehall இலங்கையிலிருந்த காலப்பகுதியில் கொழும்பிற்கு தற்கொலைக்
குண்டுத்தாக்குதல்களுக்கு அனுப்பப்பட்ட புலிகளின் ஒரு குழுவிற்கும்
மருத்துவக் கல்வியை வழங்கியுள்ளார். தமிழ் மக்கள் துன்பப்படுகிறார்கள்
எனப் பார்க்கும் Whitehall 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூந்துகள்,
புகையிரதங்கள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தெருக்கள், மற்றும்
தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் போன்றவற்றில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட
கொலைகளை கண்டுகொள்ளமால் விட்டதற்கான காரணம் என்ன?' எனவும் பேச்சாளர் Nimal
Liyanage கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், இவர் சுய விருப்பத்துடன் குற்றத்திற்கு துணைபோனவர். 'நல்ல
பயங்கரவாதிகள்' என்ற கொள்கையுடன் புலிகளுக்கு மருத்துவத்தைப்
பயிற்றுவித்துள்ளார். புலிகளின் பயங்கரவாதமானது நல்லதொரு நோக்கங்கருதியதே
என்பதை தனது சுய விருப்புடன் ஏற்றுக்கொண்டு செயற்பட்டுள்ளார். சில ஆயிரம்
புலிகள் மூலம் 20 மில்லியன் வரையான இலங்கையர்களின் உயிர்கள்
பறிக்கப்பட்டதை அவர் சரியாகவே பார்க்கின்றார்' எனவும் பேச்சாளர் Nimal
Liyanage மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களுக்கான சரியான நியாயமான தீர்வைத் தொடர்ந்தும்
தேடிக்கொண்டிருக்கும் Whitehall ஐ.நா அறிக்கை தொடர்பாக எதிர்மறைப் பார்வை
கொண்டவராகவே உள்ளார்.

"தமிழர்களின் நிலைப்பாடு தொடர்பாக சரியான தீர்வைத் தரக்கூடிய நிலையில்
ஐக்கிய நாடுகள் சபை தற்போது இல்லை. ஆகவே ஒக்ரோபரில் Perth இல் நடைபெறவுள்ள
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு சிறிலங்கா
அதிபர் மகிந்தவால் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள
அழைப்பை நிராகரித்தல் போன்ற ஏதாவது அரசியல் நடவடிக்கைகளை சிறிலங்கா
அரசாங்கத்திற்கெதிராக அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

முகாங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் தமது சொந்த
இடங்களுக்குச் செல்வதற்கான ஒழுங்குகள் சிறிலங்கா அரசாங்கத்தால்
மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன், முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள
விடுதலைப் புலி உறுப்பினர்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சந்தித்துக்
கலந்துரையாட சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்கவேண்டும். இவை
நிறைவேற்றப்படும்வரை, அவுஸ்திரேலியா, சிறிலங்கா சார் நடவடிக்கைகள்
எவற்றையும் முன்னெடுக்கக் கூடாது" என பேராசிரியர் Whitehall மேலும்
தெரிவித்துள்ளார்.

http://www.puthinapp...?20110508103807


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  விடுதலைப்புலிகள் சுதந்திரப் போராளிகள், ஒழுக்கமானவர்கள் - ஐ.நா அறிக்கை! ஏற்க மறுக்கும் அரசு
» "தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததனாலேயே புலிகள் உருவாகினர்! ஹத்துருசிங்கவுக்கு யாழ். பேராசிரியர் பதிலடி"
» விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடிய துணிச்சல் மிக்க போராளிகள்: நேபாள மாவோயிஸ்ட் தலைவர்
» கொலை செய்வதில் மட்டுமல்ல..... கொல்லப்பட்டவர்களை அடக்கம் செய்வதிலும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள், உலகின் மிகச்சிறந்த போராளிகள் எ
» அவுஸ்ரேலிய தொலைக்காட்சியான எஸ்.வீ.எஸ் இல் ஒளிபரப்பான விபரணப் பெட்டகம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum