TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பழிக்கு பழியானது பயங்கரவாதம்

Go down

பழிக்கு பழியானது பயங்கரவாதம் Empty பழிக்கு பழியானது பயங்கரவாதம்

Post by ஜனனி Tue May 03, 2011 7:22 am

உலக நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த
அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன்
சுட்டுக்கொல்லப்பட்டார். 2001ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான்
மலைப்பகுதிகளில் தலைமறைவாக இருந்த ஒசாமா மற்றும்அவரது பயங்கரவாத
இயக்கத்தினரைஅமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள்10 ஆண்டுகள் தேடி
வந்தன. இந்நிலையில்பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அமெரிக்க சிறப்பு
படையினரால் நேற்றுசுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்துசர்வதேச அளவில்
பயங்கரவாதியாக விளங்கியஒசாமாவுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
யார் இந்த ஒசாமா : ஒசாமா பின் லேடன், சவுதி அரேபியாவின் ரியாத்
பகுதியில் 1957ஆம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்தார். முழுப்பெயர், ஒசாமா
பின் முகமது பின் ஆவாத்பின்லேடன். தந்தை முகமது பின் ஆவாத் பின்லேடன் ஒரு
வியாபாரி. இவரது பத்தாவது மனைவிஹமீதாவிற்கு பிறந்த ஒரே மகன் ஒசாமா.
இவர்,இளவயதிலிருந்தே வகாபி என்ற இஸ்லாமியஇயக்கத்தின் மீது நாட்டம்
கொண்டிருந்தார்.
படிப்பில் குழப்பம்?ஒசாமா, பள்ளிப்படிப்பை முடித்தவுடன்
சவுதியில் உள்ள கீங் அப்துல்லாசிஸ் பல்கலைக்கழகத்தில்பொருளியல் மற்றும்
வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றார் என்றும், 1979ஆம் ஆண்டு சிவில்
இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றார் என்றும், 1981ஆம் ஆண்டு பப்ளிக்
அட்மினிஸ்டிரேஷனில் பட்டம் பெற்றார்என்றும் பல குழப்பங்கள் நிலவுகின்றன.
இதுதவிர அவர் மூன்றாம் ஆண்டுடன் படிப்பை
நிறுத்திவிட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 வயதில் திருமணம்: 1974ஆம் ஆண்டு, 17வது வயதில் நஜ்வா கனீம்
என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதன் பிறகு 3 திருமணங்கள் செய்தார். 25
குழந்தைகள் உள்ளனர்.
அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் மாற்றம்?பாகிஸ்தானில் பின்லேடனை
அமெரிக்க படைகள் வீழ்த்தியதன்காரணமாக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான்
நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில
நாட்களுக்கு முன், ரேமண்ட் டேவிஸ் என்ற அமெரிக்க சி.ஐ.ஏ., அதிகாரி,
பாகிஸ்தானில் பணியில் இருந்த போது இரண்டு பாகிஸ்தானியர்களை சுட்டுக்
கொன்றார். இவரை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்தது. பின், இந்த
விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டு இறந்த நபர்களுக்கு நிதியுதவி
செய்து டேவிசை மீட்டது. இச்சம்பவத்தால் இருநாடுகளுக்கு இடையே புகைச்சல்
ஏற்பட்டிருந்தது. பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ., அமைப்பை சேர்ந்த சில
அதிகாரிகள் ஒசாமாவை பிடிக்க உதவி புரிந்ததாக சில "மீடியா'க்கள் செய்தி
வெளியிட்டன. ஆனால் வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகள் இதனை மறுத்தனர்.
"இந்த தேடுதல் வேட்டைக்கு பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டன. மற்ற நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்க
பாதுகாப்பு படையில் உள்ள சிலருக்கு மட்டுமே தகவல்தெரியும்' என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
ஒசாமாவின் மரண அறிக்கையை வெளியிட்ட அதிபர் ஒபாமா,""அல்கொய்தாவிற்கு
எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் துணை நிற்க வேண்டும்,''
என்றார். தெளிவில்லாத ஆப்கன் போர்: ஒசாமாவின் மறைவு, பத்து ஆண்டுகளாக
ஆப்கனுக்கும் அமெரிக்க படைகளுக்கும் நடக்கும் போரில்மாற்றம் கொண்டு வருமா
என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை. ஒபாமாவின் உரையிலும் இது குறித்த
தகவல் தெரிவிக்கப்படவில்லை.அமெரிக்க படைகள், பாகிஸ்தானில் வைத்து தான்
ஒசாமாவைகொன்றன. இதனால் பயங்கரவாதிகளின் வெறுப்புக்கு பாகிஸ்தான் ஆளாக
நேரிடும். இது முடிவில், அமெரிக்க - பாக்., உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பின் விளைவை ஏற்படுத்துமா : அல்குவைதா அமைப்பின் தலைவராக இருந்த
பின்லேடன் இறந்ததால், அடுத்து அந்த இயக்கம் என்ன ஆகும்? யார் தலைமை
ஏற்பார்? சர்வதேச பயங்கரவாதத்தின் சூழ்நிலைகள் எப்படி மாறும் என்ற
கேள்விகள் எழுகின்றன.
அமெரிக்க மூத்த பத்திரிகையாளரான பீட்டர் பெர்கென், கூறும்போது, "" பயங்கரவாதிகள் மீதான போர் முடிவுக்கு வந்தது'' என்றார்.
ஆனால் மற்ற சில வல்லுநர்கள் இதை மறுக்கின்றனர்.2001ம் ஆண்டு
இருந்ததைவிட 2011ல் அல்குவைதா இயக்கம், புதிய தலைவர்கள் மற்றும் படைகளுடன்
வளர்ச்சியடைந்துள்ளது. ஒசாமாவிற்கு பின்எகிப்தில் பிறந்த அய்மேன் அல்
ஜவாஹிரி அல்குவைதாவிற்கு தலைவராக பொறுப்பேற்றார். இயக்கத்தின்
நடவடிக்கைகளையும் முன்னின்று கவனித்தார்.அரேபியாவில் செயல்பட்ட,
அல்குவைதாவின் அதிகாரப்பூர்வ குழுக்கள், ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையிலும்
தங்கள் பணியை மேற்கொண்டனர். " தலைவர்கள் இல்லாவிட்டாலும் அவர்களுடைய
கொள்கைகள் பரப்பப்படும்என்பதையே இது காட்டுகிறது' என முன்னாள் சி.ஐ.ஏ.,
அதிகாரி பார்பரா சூடே கூறினார்.
பல முறை வந்த தகவல் : இதற்கு முன், பின்லேடன் பதுங்கு குழியில்
இருக்கிறார், இறந்து விட்டார் என்று பல விதமான செய்திகள் வெளிவந்தன. ஆனால்
நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தது போல்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
*005
டிச.,11ல், அல் குவைதாவின் மூத்த உறுப்பினரான அதியா அப் அல் ரகுமான்,ஈராக்
போரின் போது ஜோர்டானியன் ராணுவத்தில் இருந்தஅபு முசாப் அல்
ஜார்குவாவிக்குகடிதம் அனுப்பினார். அதில் பாகிஸ்தானின் வஜிரிஸ்தான்
பகுதியில் ஒசாமா இருப்பதாகவும், அவரது படைகள் பலம் குன்றி இருப்பதாகவும்
குறிப்பிட்டிருந்தார்.
* 2009ஆம் ஆண்டு லாஸ் ஏன்ஜல்சில் உள்ள
கலிபோர்னியாபல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகுழுவினரான கிளெஸ்பிமற்றும்
அக்நியூ, சாட்டிலைட் உதவியுடன் நிலஇயல் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன்
இறுதியில் பாகிஸ்தானில் உள்ள பராச்சினர் என்ற நகரின் ஒசாமா இருக்கிறார்
என்று 3 இடங்களை சுட்டிக்காட்டினர்.
* மார்ச், 2009ல் பாகிஸ்தானின்சித்ரல் மாவட்டத்தில் பின்லேடன் படைகள் இருப்பதாக"நியூயார்க் டெய்லி நியூஸ்' செய்தி வெளியிட்டது.
*
டிசம்பர், 2009ல் பாகிஸ்தானில் தாலிபன் பிடியிலிருந்த ஒரு நபர்
ஆப்கானிஸ்தானில் பின்லேடன் இருப்பதாகவும் தான் பார்த்ததாக அறிவித்தார்.
பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் கிலானி இதை மறுத்தார்.
* 2010, ஜனவரி 15ல், எப்.பி.ஐ., "டிஜிட்டல்'முறையில் வயதான பின்லேடன் எவ்வாறுஇருப்பார் என்று போட்டோக்களை வெளியிட்டது.
*
2010, ஜூன் 7ல், குவைதிஅல் சியாசா என்ற அமைப்புஈரானின் வடகிழக்கு
பகுதியில் உள்ள சவ்ஷீவர் பகுதியில் உள்ள மலைகளில் பின்லேடன்
மறைந்திருப்பதாக தெரிவித்தது. ஜூன் 9ல் ஆஸ்திரேலியாவில் உள்ள "ஆன்லைன்'
பத்திரிகை இதே கருத்தை வெளியிட்டது.
* 2010, அக்டோபர் 18ல், நேட்டோ
படை அதிகாரிஒருவர், ""பின்லேடன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பாதுகாப்பாக
பாகிஸ்தானில் உள்ளார்'' என்றார். இதற்கு கருத்து தெரிவித்த பாகிஸ்தான்
அதிகாரி, ""பாகிஸ்தான் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது.எங்கள் அரசிற்கு
நெருக்கடி கொடுக்கப் படுகிறது.'' என தெரிவித்தார்.
தொடங்கியது எப்போது:1979: ஆப்கானிஸ்தானில்முஜாகிதீன் என்ற
பயங்கரவாத அமைப்பை எதிர்த்து சோவியத் யூனியன் போரிட்டது. இந்த பயங்கரவாத
அமைப்போடு பின்லேடனும் இணைந்து கொண்டார்.
1986-87: சோவியத் யூனியனுக்கு
எதிரான போரில், முஜாகிதீன் அமைப்பின் , நிதி நிர்வாகதலைவராக செயல்பட்டார்.
கொரில்லா படை தலைவராகவும் திகழ்ந்தார்.
1988: முஜாகிதீன்
அமைப்பிலிருந்து வெளியேறியவர்கள்மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் துணையுடன்
ஒசாமாபின்லேடன், அல்-குவைதா என்ற பயங்கரவாத அமைப்பை தொடங்கினார்.
1989:
சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப்
பெற்றுக்கொண்டது. பின்லேடனும்சவுதிக்கு திரும்பினார். அவரது தந்தையின்
கன்ஸ்ட்ரக்ஷன்நிறு வனத்தை பார்த்துக்கொண்டார். ஆப்கன் போரில் தனது
நெட்வொர்க் மூலம் நிதிஆதாரத்தை பெருக்கினார்.
1990 ஆக.7:
குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேற வலியுறுத்தி, ஈராக் படைகளுக்கு
எதிராக போரிடுவதற்கு சவுதிக்குள் நுழைய அமெரிக்க அரசு அனுமதி கேட்டது.
சவுதி அனுமதியை தொடர்ந்து அமெரிக்க படைகள் ஈராக் படைகளுக்கு எதிராக
போரிட்டது. சவுதியின் மெக்கா, மெதினா நகரங்களுக்கு அருகில் அமெரிக்க
படைகள் இருப்பதற்கு பின்லேடன் எதிர்ப்பு தெரிவித்தார்.
1991 : சவுதி
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஒசாமாவுக்கு குடியுரிமையை, சவுதி அரசு
ரத்து செய்தது. சூடானில் ஒசாமா தஞ்சம் அடைந்தார்.
1992, டிச. 29:
ஏமன் நாட்டிலுள்ள ஒரு ஓட்டலில் குண்டுவெடித்தது. இதில் இரண்டு ஆஸ்திரிய
சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இது பின்லேடன் மற்றும் அவரது அமைப்பின்
சார்பில் நடத்தப்பட்ட முதல் பயங்கரவாததாக்குதல் என அமெரிக்க உளவுத்துறை
குற்றம் சாட்டியது.
1993, பிப். 26: அமெரிக்காவின்நியூயார்க்கில்
உள்ள உலகவர்த்தக மைய கட்டடத்தின் மீதுதாக்குதல் நடத்தப்பட்டது.இதில் ஆறு
பேர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.
1995 கென்யா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் உள்ள
அமெரிக்க
தூதரங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. இதில் கென்ய அமெரிக்க தூதரக
தாக்குதலில் 213 பேர் பலி, 4,500 பேர் காயம். தான்ஜானியா அமெரிக்க
தூதரகத்தில் 11 பேர் பலி, 85 பேர் காயம்.
1996 : அமெரிக்கா மற்றும்
சவுதி ஆகிய நாடுகளின் வேண்டுகோளை அடுத்து சூடான்,ஒசாமாவை
வெளியேற்றியது.இதனால் பின்லேடன் தனது 3 மனைவி மற்றும் 10 குழந்தைகளுடன்
ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்தார். அமெரிக்காவுக்கு எதிராக "புனித போர்'
நடத்தப்போவதாகவும்அறிவிப்பு.
2000, அக். 12: ஏமனில் கப்பல் வழி தாக்குதல் நடத்தப்பட்டது. 17 பேர் பலி. அல்-குவைதா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
2001,
செப். 11: அல்-குவைதா பயங்கரவாத அமைப்பினர், அமெரிக்காவின் 4 விமானங்களை
கடத்தி, இரட்டை கோபுர கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில்
3000க்கும் மேற்பட்டோர் பலி. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்.
2001,
அக். 7: அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் இணைந்து ஒசாமா மற்றும்
அல்-குவைதா பயங்கரவாத அமைப்பை எதிர்த்து போராடுவதென முடிவெடிக்கப்பட்டது.
2004, அக். : இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக, முதல்முறையாக ஒசாமா பின்லேடன் அறிவிப்பு.
2011, மே 2: அமெரிக்க உளவுத்துறை நடத்திய தாக்குதலில் பின்லேடன் பலியானார் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தொடரும் புத்த பயங்கரவாதம்
» "காவி பயங்கரவாதம்' வார்த்தை : சிதம்பரத்திற்கு கட்காரி எதிர்ப்பு
» சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளியானது
» சிங்களத்தின் அரச பயங்கரவாதம்...புலத்தில் ஒரு உயிரைப் பலி வாங்கியது.
» "பயங்கரவாதிகள் சொன்ன பயங்கரவாதம்! பாலைவனமாகியது தமிழன் தேசம்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum