TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நடுக்கம் தருகிறது

Go down

நடுக்கம் தருகிறது Empty நடுக்கம் தருகிறது

Post by ஜனனி Mon Apr 11, 2011 9:12 am

Last Updated :



நடுக்கம் தருகிறது Editorialimg





நிலநடுக்கத்தாலும், ஆழிப்பேரலையின் தாக்குதலாலும் ஜப்பான் அடைந்த துன்பம்
மறக்கமுடியாத அனுபவங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது. ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா
அணுஉலைக்கூடம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு, அணுக்கதிர் வீச்சு பரவியதும், அதைத்
தொடர்ந்து அணுஉலைக் கூடங்கள் குறித்த சிந்தனை மறுஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும்
என்ற விவாதங்களும் இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக இன்னொரு அதிர்ச்சித்
தகவலைத் தருகிறது இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்.
பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசீதர் ரெட்டி அளித்துள்ள
பேட்டியில் குறிப்பிட்டுள்ள, இந்தியாவின் 38 முக்கிய நகரங்கள் நிலநடுக்கத்தால்
மிதமாகவும், அதிகமாகவும் பாதிக்கப்படும் பகுதிகளில் அமைந்துள்ளன என்கிற தகவலும்,
இந்தியாவில் உள்ள எந்தக் கட்டடமும் நிலநடுக்கத்தைத் தாங்கும் தொழில்நுட்பத்தால்
அமைக்கப்படவில்லை என்ற விவரமும் விஷயம் புரிந்தவர்கள் அனைவருக்கும்
அதிர்ச்சியானதுதான்.
ஏற்கெனவே 2001 ஜனவரி 31-ம் தேதி குஜராத் மாநிலம், கட்ஜ் பகுதியில் நேரிட்ட
நிலநடுக்கத்தால் 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1,67,000-க்கும்
அதிகமானோர் காயமடைந்தனர். 4 லட்சம் வீடுகள் தரைமட்டமா யின. 6 லட்சம் மக்கள் வாழிடம்
இல்லாமல் வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். ஆயிரம் கோடிக்கும் அதிகமான பொருளாதார
இழப்பு ஏற்பட்டது. இந்தத் துயரச் சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் கழிந்த பிறகும்கூட,
நிலநடுக்கத்தைத் தாங்கிநிற்கும் வலிமையுள்ள கட்டடங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை
இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றால், இந்த மெத்தனத்தை என்னவென்பது.
தற்போது பேரிடர் மேலாண்மை ஆணையம் குறிப்பிடும் 38 நகரங்களில் பெருநகர்களான
மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை ஆகியனவும் உள்ளன. இங்கெல்லாம் எவ்வளவு விரைவாகக்
கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன என்பதும், இடநெருக்கடி காரணமாக, அனைத்துக்
கட்டடங்களுமே பல அடுக்கு மாடிகளாக அமைவதையும் காண முடிகிறது. இங்கே மிகச் சிறிய
அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதன் இழப்பு எத்தகையதாக இருக்கும் என்பதை
நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஐஐடி-மும்பை தலைமையில் நாட்டில் உள்ள 6 ஐஐடி கல்வி நிறுவனங்களில்
நிலநடுக்கத்தைத் தாங்கிநிற்கும் கட்டடங்கள் குறித்த தொழில்நுட்பங்கள்
விவாதிக்கப்பட்டு, 10 வகையான கட்டடங்களையும் அதற்கான தொழில்நுட்பத்தையும்
வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
நிலநடுக்கத்தைத் தாங்கிநிற்கும் தொழில்நுட்பத்தில் கட்டடங்களை அமைப்பதைக்
கட்டாயமாக்கும் அதிகாரம் மாநில அரசின் பட்டியலில் இருப்பதால், பேரிடர் மேலாண்மை
ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் இது தொடர்பாகக் கடிதம் அனுப்பியதாகவும், அந்தக்
கடிதத்துக்குக் குறிப்பிடும்படியான பதில் ஏதும் கிடைக்கவில்லை என்பதையும்
அறியும்போது, மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பதைக் காண முடிகிறது.

இந்தியாவில் உள்ள 200-க்கும் அதிகமான மாவட்டங்கள் நிலநடுக்கத்தில் 4-வது
5-வது நிலையில் (ஆபத்தான இடம் என்பதற்கான அடையாளம்) இருப்பதாகப் பேரிடர் மேலாண்மை
ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், நிலநடுக்கத்தைத் தாங்கிநிற்கும்
தொழில்நுட்பத்தை மட்டுமே கட்டடங்களில் கையாள வேண்டும் என்று மத்திய அரசே நேரடியாக
ஏன் கட்டளை பிறப்பிக்கக்கூடாது? இத்தகைய மிக முக்கியமானதொரு முடிவை எதற்காக மாநில
அரசு செய்தால் செய்யட்டும் என்கிற பாணியில் விட்டு வைக்கவேண்டும்?
நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவோம் என்று உணர்ந்து, மக்களுக்கும்
பயிற்சிகள் கொடுத்திருக்கிறது ஜப்பான். அப்படியாக நிலநடுக்கத்தை எதிர்பார்த்துக்
காத்திருக்கும் ஒரு நாட்டுக்கே, நிலநடுக்கம் ஒரு பெரிய துயரமாக இருக்கும்போது,
எந்தவிதமான தயாரிப்புகளும், முன்னெச்சரிக்கைகளும், பயிற்சியும் இல்லாத இந்தியாவில்
நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு எப்படி இருக்கும்?
ஜப்பான், பிலிப்பின்ஸ், இந்தோனேஷியா, மலேசியா வரை பாதிப்புகளை
ஏற்படுத்தியுள்ள நிலநடுக்கம் இந்தியாவில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது
என்பதைப் புரிந்துகொண்டு, புதிய கட்டடங்கள் அனைத்தும் நிலநடுக்கத்தைத் தாங்கும்
தொழில்நுட்பத்தில் மட்டுமே அமைய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
அதேவேளையில், இதற்கான தொழில்நுட்பங்கள் கட்டுமானத் துறைக்கு எளிதில் கிடைக்கவும்,
இது குறித்த பயிற்சிகளை கட்டடப் பொறியாளர் முதல் மேஸ்திரிகள் வரை அளிக்கவும்
வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை மாநகரம் நிலநடுக்கத்துக்கு இலக்காகும்
பகுதியாக உள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியன
மிதமான நிலநடுக்க வாய்ப்புள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. இந்தியாவில் உள்ள 20 அணுஉலைக்
கூடங்களும் நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமைகொண்ட தொழில்நுட்பத்தால் அமைக்கப்பட்டவை
என்று அணுஉலை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனாலும், எல்லாமும் நன்றாகச் செல்லும்வரை
எல்லாமும் நல்லதுதான். ஏதாவது துயரம் நடந்துவிடும்போதுதான் பல உண்மைகள்
அம்பலப்படுகின்றன.
மத்திய அரசு மெத்தனம் காட்டினாலும், தமிழக அரசு ஒரு முன்மாதிரி மாநிலமாக,
நிலநடுக்கம் தாங்கும் கட்டடத் தொழில்நுட்பத்தைக் கட்டாயமாக்குவது அவசியம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum