TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக.........

3 posters

Go down

இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... Empty இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக.........

Post by KG.Balaji Tue Mar 22, 2011 12:16 pm


என் உள்ளே உள்ள குமுறல்கள் எத்தனை எத்தனையோ இலட்சங்கள், கோடிகள் என்றாலும் நான் அறிந்த உலகம் கடுகை விட சிறியது. இந்த பூமியில் தற்போது நடக்கும் பல எதிர் வினை செயல்பாடுகளின் பிரதிபலிப்பு தான் இந்த கட்டுரை. இது என்னை பெறாத இயற்கை அன்னையிடம் நான் வேண்டுவது.


இயற்கையே! மனிதன் என்கிற ஆறாவது அறிவை கொண்ட விலங்கை ஏன் படைத்தாய்? தனது தனது என சதா சர்வ காலமும் தான் என்கிற தலையான எண்ணம் மட்டுமே கொண்ட இந்த மனித மிருகங்களை ஏன் இன்றளவும் உலகில் உலவ விட்டுள்ளாய்? இந்த மிருகம், தான் நடக்கும் பாதையை தனக்காக மாற்றி அமைத்து தன்னுடைய அன்றாட தேவையை மிக மிக மிக மிக சுலபமாக பெற மற்றதையும் தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் அழித்த பெருமையை கொண்டவன். அன்றாட தேவையான உடுத்தும் ஓர் உடைக்காகவும், இரண்டு வேளை உணவிற்காகவும் உறங்க ஓர் இடத்திற்காகவும் இந்த பூமியை பிளந்து கொண்டிருப்பவன். நீ படைத்த இந்த மிருகத்திற்கு ஏன் ஆறாவது என்கிற அறிவை கொடுத்தாய்? பகுத்து அறிந்து கொள்ள வேண்டிய இந்த அறிவு தற்போது செய்து கொண்டிருப்பது எல்லாம் பிரித்து, தனித்து, அழித்து, முடிந்ததையெல்லாம் தனக்காக வ(செ)ழித்து கொண்டிருக்கிறது.
தனி மனித வாழ்க்கை, தனி மனித சுதந்திரம் என்று எல்லாவற்றையும் தனி தனியாக எடுத்து மற்ற மிருகங்களிடம் இருந்து தனியாக பிரிந்து பிளந்து நிற்கிறது இந்த மிருகம். தொன்று தொட்டு இந்த மிருகம் நீர், நெருப்பு, குளிர் போன்ற இயற்கையின் நிகழ்வை போதும் என்ற தேவைக்கு எடுத்து கொண்டு நிலத்தை மட்டும் போதாது, போதாது என்று சொல்லும் அளவிற்கு இன்றளவும் சுரண்டி கொண்டிருக்கிறது.

இயற்கையே! உன்னை அழைக்கின்றேன், உன்னிடம் மடிப்பிச்சை கேட்கிறேன், தாயே உன்னிடம் இதை வரமாகவும் கேட்கிறேன். இந்த மிருகங்களை (மிருகங்களான எங்களை) அழித்து விடு. சுய நல மனித மிருகம் தன்னை காத்துக் கொள்ள மற்றதை அழிக்கின்றது. அதில் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் செய்கின்றது. தனக்கு மட்டும் தான் உயிர் என்பது பொருந்தும் என்றும் மற்றது எல்லாம் தேவையில்லாமலும், தன்னால் அழிக்கப்படவே உருவானது போல் ஏகமிதப்பில் இந்த மிருகங்கள் உன்னை சூறையாடிக் கொண்டிருக்கின்றது. அறிவியல், விஞ்ஞானம், அதன் வளர்ச்சி, பொருளாதாரம் என்றெல்லாம் வர்ணணை பூட்டி உன் அழிவிற்கு பெயர் சூட்டுகிறார்கள், சில நூற்றாண்டுக்கு முன் தோன்றிய இந்த மானுடர்கள். உன்னுடைய பூமி என்னும் குடையின் கீழ் தஞ்சம் புகுந்து, நீ கொடுத்த பிச்சையில் வாழ்க்கை நடத்தும் இந்த மிருகம் உன்னை பதம் பார்த்து தன்னை சுகம் செய்து கொள்கிறது.


“காதறுந்த ஊசியும் வாராது காணும் கடை வழி போகையிலே” என்ற வாசகம் எத்தனை மனித மிருகங்களுக்கு தெரியும். என்ன கொண்டு வந்தாய், எதை இழந்தாய், எல்லாம்இங்கிருந்தது, இழந்ததெல்லாம் இங்கே முன்பே இருந்தது, எதை எடுத்தாலும் அதை இங்கேயே எடுத்தது என்ற சித்தாந்தத்தை ஏன் இந்த மானுடம் ஏற்க மறுக்கிறது. உன் உறைவிடத்தில் வாசம் செய்து உன்னை அழிக்கும் இந்த சர்வாதிகாரர்களை வதம் செய்து விடு தாயே வதம் செய்திடு.


பகுத்தறிவின் கூட்டத்தில் இவன் தன்னை பலவானாகவும், பெரியவனாகவும், உயர்ந்தவனாகவும், தனிதன்மைகள் கூடிய தலைவனாகவும் காட்டிக்கொள்ள தன்னுள்ளே உள்ள தந்திரங்களாலும், துரோகசெயல்களாலும், சுயநலக் கொள்கையினாலும், செய்த, செய்வித்த இன்றளவும் செய்து கொண்டிருக்கின்ற கொடுமைகளும் அழிவுகளும் தான் எத்தனை எத்தனை.... மனம் என்ற ஓன்று இருக்குமானால் அதில் நேயம் செயல்படுமானால் நமது கண்களில் கண்ணீர் அல்ல செந்நீர் அல்லவா வெளிப்பட வேண்டும்.

இன்றளவும் சில நேரம் மறைமுகமாகவும் பல நேரம் நேர்முகமாகவும் தொடரும் ஏகாதிபத்திய வன்முறைகள் தான்
எத்தனை எத்தனை... பூமி என்பது ஓன்றே இதில் நாம் என்ன செய்தாலும், அழித்தாலும் நேர்வது என்னவோ நமக்கு தான். இதில் தங்களை மேலும் காத்து வேறு இடத்தில் தஞ்சம் புகுத்தி கொள்ள நிலவில் ஓர் ஆராய்ச்சி வேறு.

துரோகம், சூழ்ச்சி, தந்திரம், வஞ்சகம், சுயநலம் இதற்கெல்லாம் மற்றொரு பெயர் அரசியல் எனலாம். கண்கட்டி வித்தையில் மக்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மாக்கள் கடைசியில் இழந்து நிற்பது தனது அன்றாட தேவையான உடுப்பும், உணவும், உறைவிடமும் தான். எதற்காக எதையெல்லாம் அழித்தானோ அதை அது (மனித குலம்) முடிவில் இழந்து நிற்கிறது.
தன்மானம், சுயகௌரவம் என்பதெல்லாம் எதற்கு? இங்கே தேவை ஓற்றுமை, அமைதி, அன்பு, மனிதநேயம், தர்மம், விட்டு கொடுத்தல். சொல்லப் போனால் காலம் போகும் போக்கில் இந்த வார்த்தைக்கெல்லாம் இனி மேல் ஓர் விளக்க உரை, கட்டுரை, கதை எல்லாம் சேர்த்து புத்தகம் தேவைபடும். ஏனென்றால் இந்த சொற்களும் அதன் அர்த்தங்களும் மறந்து விடும் அல்லது அகராதியில் இருந்து கூட அகற்றபட்டு விடும் அபாயம் உள்ளது.


“கலி” என்ற பெயர் கொண்ட காலமே நீ இந்த யுகத்தை “கழிப்பது” எப்போது?



காத்துக்கொண்டிருக்கிறேன்.........



உன் வழி பார்த்து விழி வைத்திருக்கிறேன்






Last edited by KG.Balaji on Wed Mar 23, 2011 1:43 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப் பிழை)
avatar
KG.Balaji
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 26/07/2010

Back to top Go down

இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... Empty Re: இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக.........

Post by ஜனனி Tue Mar 22, 2011 4:17 pm

அருமை நண்பரே .தங்களை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையா இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... Empty Re: இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக.........

Post by KG.Balaji Wed Mar 23, 2011 9:42 am

அன்பு சகோதரி,
பகிர்ந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை தாங்கள் இந்த வலை தளத்தில் தெரிவிக்கலாம். நன்றி...
avatar
KG.Balaji
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 26/07/2010

Back to top Go down

இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... Empty Re: இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக.........

Post by அருள் Wed Mar 23, 2011 10:19 am

இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... 917304 இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... 917304 இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... 917304
KG.Balaji wrote:அன்பு சகோதரி,
பகிர்ந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை தாங்கள் இந்த வலை தளத்தில் தெரிவிக்கலாம். நன்றி...

இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... 695262 இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... 695262 இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... 695262 இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... 695262
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக......... Empty Re: இயற்கையே உனக்காக எழுதுவது ஏற்பாயாக.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum