TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொங்கல் சிறப்பு சர்வீஸ் என்ற பெயரில் அடாவடி கட்டணம்

Go down

பொங்கல் சிறப்பு சர்வீஸ் என்ற பெயரில் அடாவடி கட்டணம் Empty பொங்கல் சிறப்பு சர்வீஸ் என்ற பெயரில் அடாவடி கட்டணம்

Post by ஜனனி Tue Jan 18, 2011 7:57 am

பொங்கல் பண்டிகை சிறப்பு சர்வீஸ்கள் என்ற பெயரில், ஆம்னி
நிறுவனங்களுக்கு இணையாக அரசு பஸ்களிலும், நூதன முறையில் கூடுதல் கட்டணம்
வசூலிக்கப்பட்டுள்ளது, பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (எஸ்.இ.டி.சி.,), மாநகர
போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி.,), தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின்
(டி.என்.எஸ்.டி.சி.,) விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, கோவை,
மதுரை, சேலம் ஆகிய ஏழு கோட்டங்கள் என, மொத்தம் எட்டு போக்குவரத்துக்
கழகங்கள் இயங்குகின்றன. இப்போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 20 ஆயிரம்
பஸ்கள் இயக்கப்பட்டு, அதில் நாள்தோறும் இரண்டு கோடியே 11 லட்சம் பேர்
பயணிக்கின்றனர்.
தற்போது, அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில்
சிக்கி தத்தளித்து வருகின்றன.இதில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்,
அதிக நஷ்டத்தில் சிக்கியுள்ளது. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் மாநகர
போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் போக்குவரத்துக் கழகம், லாபமும்,
நஷ்டமும் இல்லாமல் இயங்குகின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தில், சாதாரண
பஸ்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும், "எல்லோ லைன், புளூ லைன்,
எக்ஸ்பிரஸ்' பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
மாதந்தோறும் பவுர்ணமி நாளில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்
கிரிவலம் மற்றும் அமாவாசை நாளில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
ஊஞ்சல் உற்சவ நாட்களில், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் அதிகளவில்
சிறப்பு பஸ்களை இயக்குகிறது.அத்தகைய நேரங்களில், சிறப்பு பஸ்களில்
பயணிகளுக்கு, "சீட்' ஒதுக்குவதற்கு, தனியாக ஐந்து ரூபாய் டோக்கன் கட்டணமாக
வசூலிக்கப்படுகிறது. அதேபோல சிறப்பு பஸ்களில் பயணிப்பவர்கள், எந்த
நிறுத்தத்தில் இறங்கினாலும் கடைசி நிறுத்தத்திற்கான டிக்கெட் வாங்க
வேண்டும் என்ற நடைமுறையும் கறாராக கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரு
நடைமுறைகள் தான் மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம்
போக்குவரத்துக் கழகம் நஷ்டம் இல்லாமல் இயங்குவதற்குக் காரணம் என
தெரிந்துள்ளது.
நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் மற்ற போக்குவரத்துக் கழகங்களும் இதே
நடைமுறையை தற்போது பின்பற்றத் துவங்கியுள்ளன. பொங்கல் பண்டிகையை ஒட்டி,
மாநகர போக்குவரத்துக் கழகத்தைத் தவிர மற்ற போக்குவரத்துக் கழகங்கள் மூலம்
சிறப்பு பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டன.இதற்காக, மற்ற டிப்போக்களில் வேறு
ரூட்களில் இயங்கிய பஸ்கள், சென்னைக்கு எடுத்து வரப்பட்டு, கடந்த 13ம்தேதி
முதல் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக அரசு விரைவு போக்குவரத்துக்
கழகத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் திருச்சி செல்ல 175 ரூபாயும், "ஏசி'
பஸ்சில் செல்ல 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அல்ட்ரா டீலக்ஸ்
பஸ்சில் மதுரை செல்ல 240 ரூபாயும், "ஏசி' பஸ்சில் 400 ரூபாயும் கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. திருச்செந்தூர் செல்ல அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் 246
ரூபாயும், "ஏசி' பஸ்சில் 500 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மதுரை, திருச்செந்தூர் செல்லும்
அல்ட்ரா டீலக்ஸ், "ஏசி' சிறப்பு பஸ்களில் திருச்சி சென்றவர்களிடமும் கடைசி
நிறுத்தத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது.இதேபோல மற்ற போக்குவரத்துக்
கழகங்களிலும் மறைமுக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், டிக்கெட்
கட்டணத்திற்கு கூடுதல் பணம் செலவிட வேண்டிய நிலைக்கு பயணிகள்
தள்ளப்பட்டனர். நேற்று, பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பிய
பயணிகளிடம், இதே நடைமுறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக,
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் தான் விமான
கட்டணத்திற்கு இணையாக பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், அரசு
போக்குவரத்துக் கழகங்கள், கட்டணம் உயர்த்தாவிட்டாலும், நூதன முறையில்
பயணிகளிடம் கட்டண வசூலில் ஈடுபடத் துவங்கியுள்ளன.இது பயணிகள் மத்தியில்
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பஸ்களையே நம்பியிருக்கும்
லட்சக்கணக்கான பயணிகளின் நலன் கருதி, இப்புதிய நடைமுறையை தவிர்ப்பதற்கு,
போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்னி பஸ்களில் திடீர் ரெய்டு: அதிகாரிகள், "கண்துடைப்பு' நாடகம் :
சென்னை, கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில், ஆர்.டி.ஓ., அதிகாரிகள்
நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதையடுத்து, அங்கிருந்த புரோக்கர்கள் ஓடி
ஒளிந்தனர். சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில்,
வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து
புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட
பண்டிகை தினங்களில் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட பல மடங்கு
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆம்னி பஸ் நிலையங்களில் புரோக்கர்களின் தொந்தரவும் அதிகமாக
இருந்து வருகிறது. கமிஷன் கிடைப்பதால், ஆம்னி பஸ்களில் கூட்ட நெரிசல்
நிலவுவதைப் போல தோற்றத்தை உருவாக்கி, கட்டண உயர்வுக்கு காரணமாக
இருக்கின்றனர் என்றும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆம்னி பஸ்கள்
தொடர்பாக தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, கோயம்பேடு போலீசார் சில
தினங்களுக்கு முன் திடீர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில், ஐந்து
புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும், ஆம்னி பஸ்களில் கட்டண
உயர்வும், புரோக்கர்கள் தொல்லையும் குறையவில்லை.இந்நிலையில், அயனாவரம்
ஆர்.டி.ஓ., தாமோதரன் தலைமையிலான சிறப்பு படையினர், நேற்று திடீரென
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் ரெய்டு நடத்தினர். அங்கு, பஸ்களின்
ஆவணங்களை வாங்கி பார்த்து ஆய்வு செய்தனர். பஸ் நிலையத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த பஸ்களிலும் அதிகாரிகள் ஏறி சோதனை நடத்தினர்.ஆர்.டி.ஓ.,
அதிகாரிகளின் சோதனையைப் பார்த்ததும், அங்கிருந்த புரோக்கர்கள் ஓட்டம்
பிடித்தனர். இந்த சோதனையில் அதிக கட்டணம் தொடர்பாக எந்த ஆவணமும்
சிக்கவில்லை. மேலும் ஒரு புரோக்கரும் பிடிபடவில்லை.
காலியாக இருந்த பஸ்சில் ரெய்டு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 13,
14ம் தேதிகளில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்ல அதிக கூட்டம்
இருக்கும். பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், தற்போது பிற ஊர்களிலிருந்து
சென்னை வரும் பஸ்களிலேயே அதிக கூட்டம் இருக்கும்.ஆனால், ஆர்.டி.ஓ.,
அதிகாரிகள் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் தற்போது
ஆய்வு நடத்தியது, வேடிக்கையாக இருந்தது. இதற்கு பதிலாக,
வெளியூர்களிலிருந்து சென்னை வரும் பஸ்களில் ரெய்டு நடத்தியிருந்தாலாவது,
ஏதாவது சிக்கியிருக்கும் என பயணிகள் கூறினர்.மேலும், ஆம்னி பஸ்கள்
எதிலும், பஸ் கட்டணத்திற்கான ரசீது வழங்கப்படுவதில்லை. பல பஸ்களில்
பயணச்சீட்டிற்கு பதிலாக டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், ஆம்னி
பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணமாக எவ்வளவு வசூலிக்கின்றனர் என்பதை கண்டறிய
எந்த வழியும் இருப்பதில்லை என பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum