TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........?

Go down

தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........? Empty தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........?

Post by ஜனனி Mon Dec 13, 2010 1:49 pm

தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........?

தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........? Tamils-vanni_2009

எல்லோரும் எழுதுவோம்! சர்வதேச விசாரணை அமைய எழுதுவோம்!

முள்ளிவாய்க்கால், தமிழர் மனங்களை இன்றும் நிறைத்து நிற்கும் வடு. அந்த பேரவலத்திற்கு இன்னும் பரிகாரம் தேடுகின்றனர் ஈழத்தமிழ் மக்கள்.

தனது கடமையில் இருந்து தவறிக ஐ.நா சபையும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தொடர்ந்து எழுந்த அழுத்தம் காரணமான ஈற்றில் ஓராண்டின் பின்பு, இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை கடந்த யூன் மாதம் நியமித்தார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி டாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின்; பணிகள் நான்கு மாதங்கள் கழித்து கடந்த செப்ரெம்பர் 18 ஆம் நாளே தொடங்கியது.

இந்த நிபுணர் குழு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குப் பயணம் செய்த ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச இருவரும் விடுத்த கூட்டு அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள்; நடைமுறைபடுத்தப்பட்டனவா என்பது தொடர்பாக ஆராயவுள்ளது.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது பன்னாட்டுச் சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும்.

இந்தக் குழு உண்மை கண்டறியும் குழுவாக இருக்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள ஐ.நா. பேச்சாளர், செயலாளர் நாயகத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆலோசனை வழங்கும் உரிமை மட்டும் இதற்கு உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குழு அமைக்கப்படுவதைத் தடுக்க சிறீலங்கா அரசு பகீரத முயற்சிகள் செய்து பலத்த எதிர்ப்புக்கள் தெரிவித்த போதும் அதனை மீறி ஐ.நா. அவையின் செயலாளர் நாயகம் இந்தக் குழுவை அமைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இது இராசதந்திர மட்டத்தில் சிறீலங்கா அரசுக்குக் கிடைத்த படுதோல்வி ஆகும். தமிழர் தரப்புக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவை எதிர்த்து சிறீலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த யூலை மாத முற்பகுதியில் ஐ.நா.வின் கொழும்பு தூதுவராலயத்துக்கு முன் பௌத்த தேரர்கள் புடை சூழ சாகும்வரை உண்ணாநோன்பு இருந்தார். அவரது ஆதரவாளர்கள் ஐ.நா.தூதுவராலயத்தை நாள்கணக்கில் முற்றுகை இட்டு முடக்கினார்கள். இதனால் தூதுவராலய ஊழியர்கள் பாதுகாப்புக் கருதி அங்கிருந்து வெளியேற நேர்ந்தது.

இந்தக் குழு அமைக்கப்படுவதற்கு 118 அணிசேரா நாடுகளைக் கொண்ட அணிசேரா அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. பின்னர் அந்த எதிர்ப்பு கைவிடப்பட்டது. இந்த அணிசேரா நாடுகளின் அமைப்பில் சிறீலங்கா இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிபுணர் குழுவை எதிர்த்து ரஷ்ய வெளியுறவு அமைச்சு அறிக்கை விட்டது. அதில் ஐ.நா.பாதுகாப்பு அவை மற்றும் பொதுச் சபை இரண்டையும் மீறி பான் கீ மூன் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. .

சிறீலங்கா அரசு நிபுணர் குழு உறுப்பினர்கள் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடைபோட்டுள்ளது. இந்த குழுவுடன் எந்தவொரு தொடர்பையும் பேணப்போவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது..

இந்நிலையில் கடந்த செப்டம்பரில் கூடிய இக்குழு தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக வெளியில் இருந்து கருத்துக்களை பெறவிரும்பி ஒரு அறிவுறுத்தலை கடந்த ஒக்டோபர் 14ஆம் நாள் வெளியிட்டது. அதில் சில அறிவுறுத்தலிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துக்களை, முறைப்பாடுகளை செய்ய விரும்பும் முறைப்பாட்டாளர்கள் எழுத்து மூலம் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத முறைப்பாட்டை சமர்ப்பிக்கலாம் என்றும் ஒருவர் ஒரு முறைப்பாட்டை மட்டும் சமர்ப்பிக்கலாம் எனவும் குறிபிடப்பட்டுள்ளது.

இது ஒரு ஆவணம் பிரதி எடுக்க [ நன்றி தமிழ் நெற்]கருத்துக்களை, முறைப்பாடுகளை அனுப்பி வைப்போர் தமது தொடர்பு விபரங்களை தவறாது குறிப்பிடுமாறும் வேண்டப்பட்டுள்ளனர். முறைப்பாடு எந்த மொழியில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படாவிட்டாலும் ஆங்கில மொழியில் அனுப்புவதே சிறந்தது. ஆங்கிலம் தெரியாதோர் தமிழில் எழுதி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வசதியைப் பெற்று ஆங்கிலத்திலேயே அனுப்புதல் சிறந்தது.

யாரும், அவர் எந்த நாட்டையோ இனத்தையோ சார்ந்தவராக இருப்பினும் இங்கு தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம். சுயாதீனமான சர்வதேச நீதிவிசாரணையே இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த பேரவலத்திற்கு தீர்வாக அமையும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்துவதே இங்கு மக்கிய கருதுகோளாகும். சிறீலங்கா ஆட்சியாளர்களால் அமைக்கப்படும் எந்த விசாரணைக்குழுவும் அதற்கு பரிகாரமாக அமையாது என்பது பலதரப்பாலும் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிலும் உலகறிந்த தலைவர்கள் பலர் இக்கருத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் பின்வருவோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

  • Archbishop Desmond Tutu, chair of The Elders, David Cameron, British Prime Minister, Navaneetham Pillai, United Nations high Commissioner for human Rights, Kofi Annan, Former UN Secretary-General, Jimmy Carter, 39th President of the United States of America, Nelson Mandela, Former President of South Africa, Mary Robinson, Former Irish President and former UN high Commissioner for human Rights, Madame Louise Arbour, President and CEO, International Crisis Group, Fernando henrique Cardoso, Former President of Brazil, Kenneth Roth, Executive Director, human Rights Watch, Salil Shetty, Secretary General, Amnesty International, Martti Ahtisaari, Former President of Finland and international mediator, Lakhdar Brahimi, Former Algerian Foreign Minister and former UN envoy, Grafa Machel, Former Minister of Education and Culture in Mozambique.
இந்நிலையில் நாம் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் எழுதுகின்ற அதேவேளை ஏனையவர்களையும் எழுத வைக்கவேண்டும். யாரெல்லாம் எழுதலாம்.

  • அ) நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாமே எழுதலாம்

    ஆ) உறவுகள், நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்பில் எழுதலாம்

    இ) தமிழர் அமைப்புக்கள், ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் அமைப்புகள், புலம்பெயர்ந்த தமிழ் மாணவர் அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள், மகளீர் அமைப்புக்கள், தொழில்சார் வல்லுனர்கள் எனத் தமிழர்கள் அனைவரும், அமைப்க்களாகவும், தனிநபர்களாகவும் எழுதலாம்.

    ஈ) தமிழர் இல்லாதோர், அரச சார்பற்ற நாட்டு அல்லது பன்னாட்டு அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் புரியும் சகநண்பர்கள், சேர்ந்து கல்வி கற்கும் கச நண்பர்கள், கல்விமான்கள், தொழிற்சந்க வாதிகள் எனத் தமிழர் இல்லாதோர் அனவரையும் எழுத வைக்கலாம்.
ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம்.

அனுப்பவேண்டிய முகவரி - panelofexpertsregistry@un.org

இந்த மின்னஞ்சலை வேறு யாரும் பார்க்க முடியாது.


அனுப்பி வைப்பதற்கான காலக்கெடு: டிசெம்பர் 15, 2010
முறைப்பாட்டாளர்கள் விரும்பின் அந்தந்த நாட்டு தமிழ் அமைப்புகளுக்கு ஒரு பிரதியை அனுப்பலாம். கனடாவைத் தளமாகக் கொண்ட போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்திற்கு ஒரு படியை அனுப்பி (un@cwvhr.org ) வைக்கலாம்.

சிறீலங்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் முன் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் உறவினர்களும் பொது அமைப்புக்களும் தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்வது அவசியம். இந்தக் குழுவின் அதிகாரங்கள் சிறீலங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனிதவுரிமை மற்றும் போர் பற்றிய மானிட சட்ட மீறல்கள் பற்றி ஐ.நா அவையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் என மட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் அதன் பரிந்துரைகள் ஒரு முழு அளவிலான போர்க்க குற்ற விசாரணைக்கு வழிசமைக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

எனவே உங்கள் சமர்ப்பித்தல்களின் இறுதியில் நிபுணர் குழு கீழ்க்கண்டவற்றை ஐ.நா.அவைச் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கலாம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் பன்னாட்டு மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான குழுவை அமைத்தல்.

எனவே இந்த அரிய வாய்ப்பைத் தமிழ்மக்கள் நழுவ விடக்கூடாது. நாம் அனைவரும் எழுதுவதுடன் ஏனையவர்களையும் எழுத வைப்போம். சர்வதேச விசாரணை அமைய விரைந்து எழுதுவோம். உதவிகள் தேவைப்படின் 416-628-1408 என்ற தொலைபேசி இலக்கத்தில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்தை அழைக்கவும்.
தொடர்புபட்ட ஒலி,மற்றும் ஒளிப்பதிவுகளின் இணைப்புக்களையும் சேர்த்து அனுப்பவும்
மீண்டுமோர் காணொளி வெளிவந்துள்ளது.
உள ரீதியாக பாதிப்படையக் கூடியவர்கள் மற்றும் சிறுவர்கள் இக்காணொளியை பார்ப்பதை தவிர்க்கும்படி வேண்டுகிறோம்.
(முழுமையான காணொளி)
http://www.livestream.com/valarylive/video?clipId=flv_113661e2-e9e2-4c39-a2f9-534db641a029
(சனல் 4 இன் இது தொடர்பான செய்தி)
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum