TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Tamil Eelam

Go down

Tamil Eelam Empty Tamil Eelam

Post by Tamil Fri Jan 29, 2010 5:51 pm

கடந்த 50
நாட்களாக தேர்தல் தொடர்பாக பல்வேறுபட்ட
தமிழ் மக்கள் தலைவர்கள்
, புத்துஜுவிகளாலும்,
மற்றும் பல்வேறு தமிழர்தரப்புகளாலும் வெளிவிடப்பட்டுவந்த
பல்வேறுகருத்துக்களை நேரடியாகவும் ஊடகங்களினூடாகவும்
அறிந்து அவற்றை முழுமையாக ஆராய்ந்து
வெளிவிடப்படுகின்ற கருத்து இது.




எம் உறவுகளே நம்புங்கள். எங்கள்
தலைவர் பிரபாகரன் உயிருடன்
இருக்கிறார். தலைவர் மீண்டும் வருவார். எம் தமிழீழம்
மீட்டுத்தருவார்.
மாவீரர் கண்ட கனவுகள் ஒருநாள் நனவாகும். சிங்களம் சிதறும். அந்தச் சிதறலில் இருந்து எம்
தமிழீழம் மலரும்.

தேசியத்தலைவர் பிரபாகரன் 2008 மாவீரர் நாள் உரையிலே புலம்பெயர்ந்த தமிழர்களிடம்
போராட்டத்தை கையளிப்பதாக தீர்க்கதரிசனத்துடன் அறிவித்தார்.
தலைவர் மீண்டும் வந்து பொறுப்பேற்கும்வரை,
புலம்பெயர்ந்த தமிழர்களால் மட்டுமே எந்தவித பயமோ,
நிர்ப்பந்தமோ இல்லாமல் கருத்துக்கூறவோ
வழிகாட்டவோ
முடியும்
என்பது இன்று நிதர்சனமாகியுள்ளது. பல்வேறு நிர்ப்பந்தங்களிற்கும்
அடிபணிந்து சம்பந்தர்
ஐயாவின் தலைமையும் சதாசிவம் எம்.பியும்
வழிகாட்டிக்கொண்டிருப்பதை பலரும் அறிவீர்கள்.




சிங்கள சிறீலங்காவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழரின் வாக்குபலம் தமிழ் இனத்திற்கு பலம்
சேர்க்காமல் தமிழினத்தை
பலவீனமாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்தத் தேவையில்லாத தேர்தலால்
தமிழர்களைப் பிரித்துவிடாதீர்கள். எமது
இன்றைய தேவை எம் இனத்தின் ஒற்றுமை ஒன்றுதான்;. இந்தத்தேர்தல் மிகக் குழப்பமானது. இந்தத்தேர்தலிற்காக எந்தக்கட்சியையும்
உடைத்துவிடாதீர்கள்.




எங்கள் கருத்து: தமிழரின் முதல்
வாக்கு இனமானத்தமிழன்
சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கப்படவேண்டும். முதல்
சுற்றிலே தமிழர்கள் தங்கள்
வாக்கு பலத்தால் மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா இருவரையும் ஐம்பதுவீதம் எடுக்கவிடாமல் தடுத்து தோற்கடிக்கவேண்டும். உங்கள்
விருப்புவாக்கை
தேர்தலில்
நிற்கின்ற சிங்கள வேட்பாளர்களில் அனைத்துத்தமிழர்களாலும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே சிங்கள நண்பன் கலாநிதி
விக்கிரமபாகு
கருணாரட்ணவிற்குப்
போடப்படவேண்டும்
;.




சரத்பொன்சேகாவின் வெற்றி சில
உடனடிச் சலுகைகளைத் தந்தாலும் இறுதியில் சர்வதேசத்துணையுடன் ஈழத்தில் தமிழினத்தைக்
கூண்டோடு அழிக்கும்.




மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி
சிலவருடங்களிற்கு ஏழரைச்சனியாகத்
தொடர்ந்தாலும் விரைவில் சர்வதேசத்துணையுடன்
ஈழத்தமிழர்க்கு ஒரு தமிழீழத்தை
ஒத்த ஒரு நிரந்தரத்தீர்வைத் தரும்.




உணர்ச்சிவசப்பட்டு சிந்திக்காமல்
அறிவுபூர்வமாகச்சிந்திக்க
வேண்டும் எனச் சொல்லி, மானங்கெட்டுப்போய் மகிந்தவிற்கு வோட்டுப்போடச் சொல்ல நாம் ஒன்றும் ஈனப்பிறவியில்லை. நாம் மானமுள்ள
மறத்தமிழர்.




அதாவது முடிவாகச்சொன்னால், இந்தத்தேர்தலில் வோட்டுப்போடாமல்விட்டு பகிஸ்கரித்துவிடாதீர்கள். மாறாக
இந்தத்தேர்தலில்
வோட்டுப்போட்டு
இரு சிங்களவெறியர்களையும் பகிஸ்கரித்துவிடுங்கள்.




எமது இந்த முடிவிற்கான
காரணங்கள்:




மகிந்த ராஜபக்ஷ சீனாவினதும் ஈரான்
போன்ற இஸ்லாமிய நாடுகளினதும் அணியை
சேர்ந்தவர். அதனால் இந்தியாவிற்கு மகிந்தவுடன்
தொடர்ந்து நட்பைப்பேண
முடியாது எனப்புரிய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவினதும்
மேற்குலக
அரசுகளிற்கும்
இந்தியாவிற்கும் இலங்கையிலே சீனாவின்
ஆதிக்கத்தைக்கட்டுப்படுத்த மகிந்தவை ஒழிக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவினதும்
மேற்குலகும் மகிந்தவை
போர்க்குற்றவாளியாக்கியோ,GSP Plus சலுகைரத்து போன்ற பொருளாதாரத்தடைகளாலோ கட்டுப்படுத்த
விரும்புகிறார்கள். மகிந்தவை
போர்க்குற்றவாளியாக்கும் விடயம் இந்தியாவிற்கும்
சங்கடத்தைத்தரும் விடயம்.
தேர்தலில் சரத்பொன்சேகா வெற்றிபெற்று சீன சார்பு மகிந்த தோற்கடிக்கப்பட்டால்
அமெரிக்காவும் மேற்குலகும் இந்தியாவும் இணைந்து
, சீனா மீண்டும் புகுவதற்கு இடமளிக்காதபடி சரத்பொன்சேகாவை இறுகப்பிடித்துக்கொள்வார்கள்.
இலங்கை அரசின் மேல் அமெரிக்க மற்றும்
மேற்குலக அரசுகளால் ஏற்படுத்தப்பட்டு வரும் அனைத்து
நிர்ப்பந்தங்களும்
சர்வதேச விசாரணைகளும் உடனடியாக நிறுத்தப்படும். சர்வதேச விசாரணைகளை சிங்களவர்கள்
விரும்பமாட்டார்கள். அதனால் சரத்பொன்சேகா விரும்பமாட்டார்.
அதனால் அமெரிக்காவும் மேற்குலகும் இந்தியாவும்
விரும்பாது. ஆதலால்
தமிழரின் உடனடித் தேவைகளுக்கான கனவுகள் மட்டுமல்ல தமிழீழக்கனவுகளும் முற்றாக
சிதறடிக்கப்படும்.




இந்திய அரசின் சதிவலையில் இணைந்து,
எம் உறவுகளை கொன்றொழித்து எம்மை அனாதைகளாக்கியவர்கள்
தான் மகிந்த ராஜபக்ஷவும் சரத்பொன்சேகாவும். அவர்களில்
ஒருவரான பொன்சேகாவை ஆதரிக்கத் துடிக்கும்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்
மும்மூர்த்திகளும், கடந்த மே மாதத்தில் இறுதிப் போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, தேசியத் தலைமையின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து இந்திய
அரசை சந்திக்கச்சென்றதன்மூலம்
, அமெரிக்கா
தலைமையிலான
சர்வதேசத்தின்
தலையீட்டைத் தடுத்துநிறுத்தி
, அதன்மூலம்
வன்னியில்
சிக்குண்டிருந்த
அப்பாவித்தமிழ் மக்களிற்கும் அவர்களுடன் இருந்த
தமிழினத்தின் காவல்தெய்வஙகளிற்;கும் பேரழிவை ஏற்படுத்திய நால்வரும், கொலைவெறியன் மகிந்தவை கட்டியணைத்து பிறந்தநாள்
வாழ்த்துக்கூறியவர்களும்
, மகிந்தவுடன்
துணைபோக தயாரானவர்களும் என
, தமிழ்த்தேசிய
கூட்டமைப்பினர்
pல் சிலர் துரோகத்திற்கு
துணைபோக தயாராகியபோது
, அவற்றைத்
தடுத்து
நிறுத்துவதற்காக,
தனக்கு இருந்த உயிர் ஆபத்தையும்
பொருட்படுத்தாது
இலங்கைக்குத் திரும்பிச்சென்றவர் சிவாஜிலிங்கம்.
ஏற்கனவே 4 தமிழ் எம்.பி களைக் கொன்றவர்களால் சிவாஜிலிங்கம்
அவர்களின்
உயிருக்குக்
குறிவைக்கப்பட்டுவிட்ட செய்தியை அடுத்து நாட்டைவிட்டு
வெளியேறி வெளியில் இருந்து சேவை செய்யுமாறு
நிர்ப்பந்திக்கப்பட்டதால்
இந்தியாவிற்கு சென்றவர் சிவாஜிலிங்கம்.




மகிந்த ராஜபக்ஷவா? சரத் பொன்சேகாவா?
மகிந்த ராஜபக்ஷ சர்வதேச நீதிமன்றத்தின்
குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தப்பட்டுத், தூக்கிலிட்டுக்
கொல்லப்படவேண்டிய கொலைவெறி பிடித்த
மிருகம் என்பதில் எந்தத்தமிழருக்கும் மாறுபட்ட கருத்து
இருக்கமுடியாது.




சிங்கள அரசுகளின் கசாப்புக்கடையிலே,
பல வருடங்களாகவே சேவைபுரிந்து, நாதியற்றிருந்த தமிழர்களை பிடித்துப்பிடித்து
கழுத்துக்களை
அறுத்துக்கொட்டிக்கொண்டிருந்தவர்
சரத் பொன்சேகா. செம்மணிப்புதைகுழியில்
எலும்புகளை புதைத்துக்கொண்டிருந்தவரும் இதே
பொன்சேகாதான். உயர் பாதுகாப்பு
வலயங்களில் இருந்து இராணுவம் வெளியேறமாட்டாது என்று
சொல்லி
வெளியேற்றப்பட்ட
மக்களின் மீள்
;குடியேற்றத்திற்கும்
மக்களின் இயல்பு
வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கும் தடையாக இருந்தவர்தான் இந்த சரத் பொன்சேகா. அதன்மூலம்
விடுதலைப்புலிகளிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும்

இடையிலான பேச்சுவார்த்தையின்
முறிவிற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்
இந்த பொன்சேகா. போர்முடிவடைந்தபின்புகூட,
தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகமேலும் 1 லட்சம் சிங்களவரை படையில் சேர்த்து வடக்குக்கிழக்கில் நிறுத்தப் போவதாக கூறியவரும் இதே
பொன்சேகாதான். சிறீலங்கா சிங்களவர்கட்கு மட்டுமே
உரியநாடு என பேட்டியளித்த இனவெறியனும் இதே
பொன்சேகாதான். தமிழின
அழிப்புப்போரிலே பல வருடங்களாக பொன்சேகா பழம் தின்று
கொட்டை
போட்டுக்கொண்டிருந்த
போது
, வெறுமனே 4 வருடங்களின் முன் சிங்களக்கசாப்புக்கடைக்கு அதிபராய் வந்தவர்
மகிந்த ராஜபக்ஷ.




சம்பந்தர் ஐயா, மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பிகள்
மூவரும்
சிங்களக்கசாப்புக்கடைக்குச்சென்று
, தமிழர்களை
அறுக்காமல் தம்மிடம்
மீளத்தருமாறும் தமிழர்களை இனிமேல் அறுப்பதேயில்லை என உத்தரவாதம் தருமாறும் கேட்டு ஒரு கோரிக்கை
லிஸ்ட்டோடு போனார்களாம். கசாப்புக்கடையின் அதிபர்
மகிந்தவும், கீழிருந்து அறுத்த பொன்சேகாவும் இருவருமே திட்டவட்டமாக மறுத்துவிட்டார்களாம். எழுதிய
லிஸ்ட்டை கீழிருந்து அறுத்தவன் கைக்குள்
தாமாகவே திணித்துவிட்டு வந்திருக்கிறார்களாம். மகிந்தவை
மாற்றி கீழிருந்து
அறுத்த பொன்சேகாவை கசாப்புக்கடை அதிபராக்கினால் அவர் இனி தமிழர்களை அழிக்கமாட்டாராம். எங்களுக்கும்
ஏதாவது எலும்புத்துண்டுகள் கிடைக்க ஒரு
சந்தர்ப்பம் இருக்கிறதாம். டக்ளஸ், கருணா, பிள்ளையானுக்கும் எலும்புத்துண்டு கிடைக்கவிடாமல் தடுத்து ஒரு நல்ல பாடம்
புகட்ட முடியுமாம்.




தொண்டைமானும் டக்ளஸ்சும் நடத்திவரும்,
நக்கிப்பிழைக்கும் அரசியல் வழியிலே, இன்று எம் தலைவர் சம்பந்தர் ஐயாவும் ஏனைய
மூவரும் ஒட்டுமொத்த
தமிழினத்தையும் அழைத்துச்சென்;று பொன்சேகாவுக்கு ஆதரவாக வோட்டுபோட வைத்து தமிழீழத்திற்கு நிகராக, ஒரு மிகப்பெரிய எலும்புத்துண்டை அடைய எடுத்த முயற்சிகளை, அதாவது தமிழினத்திற்கு கிடைத்த மிகவும் அப+ர்வமான
ஒரு
சந்தர்ப்பத்தை,
சிவாஜிலிங்கம் அவர்கள்
குழப்பியடித்துவிட்டாராம்.
சிவாஜிலிங்கம் தமிழினத்துரோகி ஆகிவிட்டாராம்.




இப்போது சொல்கிறார்கள் ஆட்சி
மாற்றம்தான் தமிழனின் விடிவிற்கு ஒரே
வழியாம். தேசியத்தலைவர் சென்ற 2005 ஜனாதிபதித்தேர்தலில் காட்டிய வழி தவறானதாம். சென்ற
தேர்தலை பகிஸ்கரித்திருக்காவிட்டால் தமிழினத்தின் அழிவு
தடுக்கப்பட்டிருக்குமாம். மாற்றுக்கருத்துச்சொல்பவர்களெல்லாம் துரோகத்திற்கு துணை
போபவர்களாம்.
தமிழரைக் கொன்ற
இருவருக்கும்
வாக்களிக்கக்கூடாது
என்று சொன்ன சிவாஜிலிங்கம் மகிந்தவிற்கு
விலை
போய்விட்டாராம். இந்திய அரசிற்கும் அதன்
உளவு அமைப்பு
ரோவிற்கும் சிம்மசொப்பனமாகவும் தமிழகத்திலே தமிழின
எழுச்சியின்
எரிமலையாகவும் விளங்கிவரும் இயக்குனர் சீமான், நெடுமாறன் ஐயா, தொல்.திருமாவளவன், வை.கோ போன்றவர்களுடன் ஒன்றாக இருந்து இந்தியா முழுவதும் எழுச்சிக்குரல் கொடுத்த சிவாஜிலிங்கம், தேர்தலில் போட்டியிடும் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக, கௌரவமான நிலைவில் இருந்தும் கூட, லண்டனில் இருந்து வரும் வழியில் இரண்டு நாட்கள் இந்தியாவிற்குள்
நுழைவதற்கு நுழைவுவிசா
மறுக்கப்பட்ட சிவாஜிலிங்கம,; இந்திய உளவுத்துறை ரோவிற்கு விலை போய்விட்டாராம். மாறாக, சிவாஜிலிங்கம் மீது குற்றம் சாட்டுபவர்களான சம்பந்தர், சேனாதி, சுரேஸ் மூவருக்கு மட்டுமன்றி, ஆயுதம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அண்மையில் விசாரிக்கப்பட்ட செல்வம் அடைக்கலநாதனுக்குக்கூட, டெல்லிக்குப்போவதற்கு விசா எடுப்பதிலே, “ரோஅமைப்பிடம் இருந்து எந்த தடையும் இருக்கவில்லை. இவர்கள்
சொல்கிறார்கள்
சிவாஜிலிங்கம் ரோவிற்கும் மகிந்தவிற்கும் விலை போய்விட்டாராம். தமிழினத்தின் ஒற்றுiமையை குலைத்துவிட்டாராம்.




சம்பந்தர், சேனாதி, சுரேஸ், சிவசக்தி, அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம்
இவர்களெல்லாம்
யார்
? இவர்கள் நடந்துவந்த பாதை எது?




தேசியத்தலைவர் பிரபாகரனின்
அனுசரணையினால்தான் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பு ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆதரவைப்பெற்று 22
எம்.பி களின் பலத்துடன் இருந்தது.




தமிழர் தேசியக்கூட்டமைப்பிலே 22
எம்.பிக்கள் இருக்கின்றபோதும், டிசெம்பரில் (December) கூடியபோது சம்பந்தர், சேனாதி, சுரேஸ்,
சிவசக்தி, என வெறுமனே 4 பேர் மட்டுமே பொன்சேகாவை ஆதரிக்க விரும்பினார்கள். வேறு எவரும் அக்கருத்தை ஆதரிக்கவில்லை. 5
பேர் தேர்தலை பகிஸ்கச்சொன்னார்கள். 7
பேர், அதாவது ஒப்பீட்டளவிலே பெரும்பான்மையானவர்கள் தமிழர் ஒருவரை
தேர்தலில்
நிறுத்தச்சொன்னார்கள்.
மிகப்பெரும்பான்மையானவர்கள் மகிந்தவிற்கோ
, பொன்சேகாவிற்கோ வாக்களிக்கக்கூடாது, வாக்குக்கேட்டு மக்களிடம் போகவும்முடியாது என்ற கருத்துடன் இருந்தார்கள்
என்பதில் யாருக்குமே
சந்தேகம் இருக்கவில்லை. தாங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியாத காரணத்தால்,
பெரும்பான்மையான எம்.பி களின்
விருப்பத்தை இறுதிமுடிவாக ஏற்கமறுத்தார்கள்.
பெரும்பான்மையான எம்.பி களின் விருப்பமான
தமிழரைத் தேர்தலில்
நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க சதித்திட்டம் தீட்டினார்கள். நியமனப்பத்திரம்
தாக்குதல் செய்யும்
; நாள்வரை எந்த
முடிவும் எடுக்காமலே
வியன்னாவிற்கு சென்றதன்மூலம், தமிழர்கள் நினைத்தால்கூட வேட்புமனு தாக்கல் செய்யமுடியாத நலையை ஏற்படுத்த முயன்றார்கள். சிவாஜிலிங்கம்
nதுர்தலில் நின்றதால் 4 பேர் தீட்டிய சதித்திட்டம் தோல்வியடைந்தது.
இப்போது சிவாஜிலிங்கம் மேல்
வீண்பழிபோட்டு தேசியக்கூட்டமைப்பை உடைக்க முயல்கிறார்கள் தமிழினத்தைப் பிரிக்க
முயல்கிறார்கள்.




சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழர்
தேசியக்கூட்டமைப்பின் கூட்டத்திலே
பிடிவாதமாக இருக்காமல், ஏனையவர்களின் தெரிவிற்காக, ஏற்றுக்கொள்ளக்கூடிய எத்தனையோ கருத்துக்களை மிகத்தெளிவாக
முன்வைத்திருந்தார். தமிழர் ஒருவரை
தேர்தலில் நிறுத்தி முதல் சுற்று வாக்களிப்பிலே மகிந்த,
பொன்சேகா இருவருமே தோற்கடிக்கப்படவேண்டும் என்றார். தமிழர்கள்
அவர்கள் இருவரது செயல்களையும்
ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார்கள் என்பதை உலகத்திற்கு
உணர்த்தவேண்டும்
என்றார். தமிழரைக் கொன்றவர்களிற்கு மகுடம் சூட்ட சிங்களவர்களிடையே நடக்கும் போட்டியை
தமிழர் ஆதரிக்கக்கூடாது என்றார். மிகச்சாணக்கியமான
ஒருசெயலாக, சதாசிவம் கனகரட்ணம் எம்.பி அவர்களை தேர்தலில் நிறுத்தச்சொன்னார். அதன்மூலம்
மக்கள் பிரதிநிதிகளைக்கூட அநியாயமாக
சிறையிலே வாட்டி வதைக்கும் கொடுமையை சர்வதேசத்தின் முன் கொண்டுவரச்சொன்னார். அல்லது
சம்பந்தர் ஐயாவை தேர்தலில் நிற்கச்சொன்னார்.
அல்லது யாராவது ஒரு தமிழரை தேர்தலில் நிறுத்தச்சொன்னார்.
அவர் தன்னை
தேர்தலில்
நிறுத்தச் சொல்லிக்கேட்கவில்லை. சிங்களத்தலைவர்களிலே
, தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டவரும் சென்ற வருடம்
தமிழ்மக்கள்மீதான
போரும் போர்க்குற்றங்களும் நடந்துகொண்டிருந்தபோது நடைபெற்ற சர்வதேச மாநாட்டிலே, 50 சர்வதேச தொழிலாளர் அமைப்புகளின் கையெழுத்துடன் தமிழர்களுக்கு எதிராக
மகிந்த
, பொன்சேகா இருவரும்
நடத்திய போரை
நிறுத்துமாறு,
தீர்மானம் நிறைவேற்றவைத்தவரான கலாநிதி
விக்கிரமபாகு
கருணாரட்ண
அவர்களை ஆதரித்ததன் மூலம் தமிழர்களாகிய நாங்கள் இனவெறியர்கள்

அல்ல எனக்கூறவிரும்பியவர் சிவாஜிலிங்கம்.
மகிந்த ராஜபக்ஷவோ
, சரத் பொன்சேகாவோ, எமது சில அடிப்படைக்கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக
எழுத்துமூலம்
உறுதியளித்தால்
அவர்களை ஆதரிக்கலாம் எனக்கூறினார். தமிழர்
தேசியக்கூட்டமைப்பின் கூட்டத்திலே இதைவிட
தெளிவான ஒரு கருத்தை வேறுயாரும்
வைத்திருக்கமுடியாது.




தேசியத்தலைவர் சென்ற 2005 ஜனாதிபதித்தேர்தலில் காட்டிய வழி தவறானதாம். சென்ற தேர்தலை
பகிஸ்கரித்திருக்காவிட்டால் தமிழினத்தின் அழிவு
தடுக்கப்பட்டிருக்குமாம். 2001 December தேர்தலின்பின், எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தலைப்பட்சமாக 2001ல் நத்தார் தினத்திலே போரை நிறுத்தி, இரண்டுமாதங்களின்பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் போர்
நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு
வருடங்களாக நோர்வேயின் அனுசரணையுடன்
பேச்சுவார்த்தை
நடாத்திக்கொண்டிருந்தபோது, சர்வதேசத்தின்
துணையுடன் புலிகளுக்கு எதிரான
ஒரு போருக்காக இலங்கை அரசு தன்னை தயாராக்கிவந்தது. பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி
போருக்குத்தேவையான ஆயதங்களை வாங்கிக்குவித்துக்கொண்டிருந்தார்
சரத் பொன்சேகா. சுமூகமான
பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகளின் அடிப்படை
கோரிக்கையான மக்களின் இயல்பு வாழ்க்கையை
ஏற்படுத்தப்பட வேண்டும் உயர்
பாதுகாப்பு வலயங்களில் இருந்து இராணுவம்
வெளியேறமாட்டாது என்று சொல்லி
வெளியேற்றப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கும்
மக்களின் இயல்பு
வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கும் தடையாக இருந்தவர்தான் இந்த சரத் பொன்சேகா. ரணிலின் துரோகத்தால்
துரோகி கருணா புலிகள் அமைப்பை உடைத்தான். வழமைபோலவே
நம்பவைத்துக் கழுத்து அறுக்கும் U.N.P
பாணியிலேயே ரணிலும்
துரோகம் புரிவதை
புரிந்துகொண்டதாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் போர்
நிச்சயம் என்பதை தெளிவாகத் தெரிந்துகொண்டதாலும்;
தமிழ் மக்கள் தேவையில்லாமல் மீண்டும் குழப்பமடையக்கூடாது
என்பதற்காக தேர்தலைப்
பகிஸ்கரிக்கச் சொன்ன தீர்க்கதரிசி எங்கள் தேசியத்தலைவர்
பிரபாகரன். இன்று
புரிந்திருக்கும் தேர்தலில் ஒரு தரப்பான ரணில் - பொன்சேகா தரப்பை ஆதரிக்க நீங்கள் எடுத்த முடிவால்
தமிழ் மக்களின் ஒற்றுமை தேவையில்லாமல்
உடைக்கப்படுகிறது என்பது.




தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
நன்றி வணக்கம்.




டாக்டர் செல்லத்துரை கனகராஜா தயாபரன்,
நியூயோர்க், அமெரிக்கா.
தமிழீழ மக்கள் வழிகாட்டிகள்




Dr.Sellathurai Kanagarajah Dhayaparan, MD, FAAP,
MBBS(Colombo), MBBS(Madras),
Member of American
College of Emergency
Physicians(ACEP).
Member of American College of Physicians(ACP)
Member of American
Academy of
Pediatrics(AAP)




Founder, People’s Guides of Tamil Eelam (1984)
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum