TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மழையில் 'கரைந்து' போனதா வாக்குறுதி?நிரந்தர வீடுகள் கிடைக்காததால் அவதி

Go down

மழையில் 'கரைந்து' போனதா வாக்குறுதி?நிரந்தர வீடுகள் கிடைக்காததால் அவதி Empty மழையில் 'கரைந்து' போனதா வாக்குறுதி?நிரந்தர வீடுகள் கிடைக்காததால் அவதி

Post by logu Mon Nov 08, 2010 7:26 am

கடந்த நவம்பர் மாதம், நீலகிரியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளின் போது,
தற்காலிக வீடுகளில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு, இதுவரை நிரந்தர வீடுகள்
கிடைக்கவில்லை; ஊட்டியில் இடத்தேர்வு செய்யப்பட்ட உடன், ரூ.59 கோடி
மதிப்பில் 1,968 வீடுகள் கட்டப்படும் என்ற உறுதிமொழியும் நிறைவேற்றவில்லை.
நீலகிரி மாவட்டத்தில், கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி முதல் 12ம்
தேதி வரை பெய்த கனமழையால், 51 பேர் பலியாயினர்; 1,900க்கும் மேற்பட்ட
வீடுகள் பாதிக்கப்பட்டன. ஊட்டி லவ்டேல் சந்திப்பு, தலையாட்டுமந்து
பகுதிகளில் 60 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. தவிர, பல கோடி ரூபாய்க்கான
விவசாய விளைப்பொருட்கள் சேதமடைந்தன. இதை நிவர்த்தி செய்யவும்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக, மத்திய,
மாநில அரசுகள் உறுதியளித்தன. எதிர்காலத்தில், இயற்கை இடர்பாடுகளில்
இருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலான ஆராய்ச்சிகள் மற்றும் திட்டங்களை
வகுக்க வேண்டிய ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது."நீலகிரி மாவட்டத்தில்
ஏற்பட்ட பல பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், எதிர்காலத்தில்
ஏற்படும் இன்னல்கள் மற்றும் இழப்புகளை தவிர்க்கும் வகையிலும், மலைப்பகுதி
மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பேரிடர் மேலாண் குறித்த சர்வதேச கருத்தரங்கு
நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; ஊட்டியில் நடத்தப்படும் கருத்தரங்கில்,
உலகின் பல பகுதிகளை சேர்ந்த சுற்றுச்சுழல் ஆய்வாளர்கள் பங்கேற்ற
உள்ளனர்,'' என, அப்போதைய நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆனந்த் பாடீல்
உறுதியளித்தார்.
சம்பவம் முடிந்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையிலும், கடந்தாண்டைய
நிகழ்வுகளின் போது அளிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகளும்,
திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் உள்ளது மட்டுமே மிச்சமாகி
உள்ளது.உதாரணமாக, கனமழையால் வீடிழந்தவர்களுக்கு, ஊட்டி மற்றும் கேத்தி
பகுதிகளில், கடந்தாண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக வீடுகள்
அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. முதற்கட்டமாக, கேத்தி பகுதியில், மாநில
வீட்டு வசதி வாரியம் மூலம் 50 தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டன. மந்தாடா,
ஊட்டி எல்க்ஹில், கோடப்பமந்து, கீழ் காந்திநகர், குன்னூர் காட்டேரி,
அம்பிகாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள், 44 வீடுகளில்
குடியமர்த்தப்பட்டனர். இதற்கான விழாவும், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 13ம்
தேதி அமர்க்களமாக நடத்தப்பட்டது. அப்போது,"இப்பகுதியில் இருந்து போதிய பஸ்
வசதி இல்லை; பணி மற்றும் பள்ளிக்கு சென்று வருவதில் சிக்கல் உள்ளது' என,
பலர் கோரிக்கை வைத்தனர்.பங்கேற்ற அமைச்சர்கள், "வீடுகள் தற்காலிகமாக
அமைக்கப்பட்டவை.
இன்னும் மூன்று மாதங்களில், 3 லட்சம் மதிப்பில், ஊட்டியில்
1,000த்துக்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு, இங்குள்ள அனைத்து
குடும்பங்களும், ஊட்டிக்கு அழைத்து செல்லப்படுவர்; அவசர காலத்துக்கு, இந்த
வீடுகளில் தங்கியிருங்கள்' என ஆறுதல் மொழி கூறினர். நம்பிக்கையை உறுதி
செய்யும் வகையில், கடந்த டிசம்பர் 30ம் தேதி, ஊட்டிக்கு வந்த துணை
முதல்வர் ஸ்டாலின், ""நீலகிரியில் 1993ம் ஆண்டுக்கு பின், 2009ம் ஆண்டு
தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் வீடிழந்தவர்களுக்கு
தற்காலிகமாக 50 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன; பாதிக்கப்பட்டவர்களுக்கு,
உடனடியாக நிரந்தர வீடுகள் கட்டித் தர மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நிரந்தர வீடுகள் கட்ட, 59 கோடி ரூபாய்க்கு நீலகிரி மாவட்ட கலெக்டர்
மூலம் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் மூலம்
இப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஊட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டவுடன்,
மொத்தம் 1,968 வீடுகள், தலா 3 லட்சம் மதிப்பில் கட்டப்படும். நீலகிரி
மாவட்டத்தை பாதுகாக்கும் வகையில், "மாவட்ட வளர்ச்சிக் குழு'
ஏற்படுத்தப்படும்' என, உறுதியளித்தார்.வாக்குறுதி அளித்ததை போல், எந்தப்
பணியும் இதுவரை துவக்கவில்லை. அதிரடியாக தேர்வு செய்யப்பட்ட, ஊட்டி
எச்.பி.எப்., அருகேயுள்ள 2 ஏக்கர் நிலப்பரப்பில் கூட பணிகள் துவக்கவில்லை;
அரசுத் துறைகளுக்குள் உள்ள சில பிரச்னைகள் தான் முக்கிய காரணம் எனக்
கூறப்படுகிறது. தற்போது, பருவமழை பெய்யத் துவங்கியுள்ளதால், கேத்தி,
மந்தாடா, தலையாட்டி மந்து உட்பட பல பகுதிகளில் வசிக்கும் மக்கள், மீண்டும்
அச்சத்தின் பிடியில் உள்ளனர்.
தஞ்சம் அடைந்தவர்கள் அவதி: கன மழையின் போது, தங்களின் வீடுகள்
தரைமட்டமாகியதால், தங்களின் உறவுகளை இழந்து, பொருட்களை தொலைத்து, சிறு
வயது முதல் வசித்த இடத்தை விட்டு, உயிரை பிடித்து வாழ வேண்டுமே என்ற
நோக்கத்துடனும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருதியும், கேத்தி பகுதியில்
உள்ள தற்காலிக வீடுகளில் தஞ்சமடைந்தவர்களின் நிலை, தற்போது பரிதாபமாக
உள்ளது. 3 மாதங்களுக்கு பின் நிரந்தர வீடுகள் கிடைக்கும் என்ற ஆர்வத்தில்,
ஒரே அறையில் குறைந்தபட்சம் 5 பேர் தங்கியுள்ள இவர்களை, ஓராண்டு கடந்தும்,
எந்த வி.ஐ.பி.,யும் சென்று பார்க்கவில்லை.கடந்த டிசம்பர் 13ம் தேதி, அங்கு
நடத்தப்பட்ட திறப்பு விழாவின் போது சென்றதோடு சரி.குடியிருப்புகளை சுற்றி
மழைநீர், கழிவுநீர் சூழ்ந்த நிலையில், தீவு போன்ற பகுதியில், போதிய
அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவிக்கும் மக்களின் மனக் குமுறல்கள்,
நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு கூட கேட்கவில்லை. தங்கள் பிரச்னைகளுக்கு
தீர்வு காண வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் முதல் ஆளுங்கட்சியினர் வரை
அனைத்துத் தரப்பினரையும் சந்தித்தும், பயன் தான் கிடைக்கவில்லை.
பெண்களின் நிலையை வார்த்தைகளால் விளக்க முடியாது, அவர்களின் துயரம்
வெளிப்படுகின்றன. தற்காலிக வீடுகளில் நிரந்தரமாக தங்க வேண்டி வருமோ? என்ற
அச்சமும், இவர்களை வாட்டி வருகிறது.நடப்பாண்டின் பருவமழையும் துவங்கி
விட்டது. குன்னூர், ஊட்டி உட்பட பல பகுதிகளில் மற்றும் 20க்கும் மேற்பட்ட
இடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பேரிடர் மேலாண் கூட்டங்கள்
நடத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால்,
கடந்தாண்டின் பாதிப்புகளுக்கு கூட இன்னும் முழுமையான நிவாரணம் கிடைக்காத
நிலையில், நடப்பாண்டின் பாதிப்புகள் குறித்து, இவர்கள் மேற்கொள்ளும்
ஆலோசனை, கூட்டங்கள், வெறும் கண் துடைப்பு நிகழ்வுகளாகவே மக்கள் மத்தியில்
நினைக்கத் தோன்றும்.எனவே, கடந்த நவம்பர் மாத மழையால் பாதிக்கப்பட்ட
அனைத்து மக்களுக்கும், செல்ல வேண்டிய அரசுத் திட்டங்கள், பயன்களையாவது
அவர்களிடம் சேர்க்க, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறினால், அதன் பாதிப்பு, மாநில அரசுக்கு தான் போய் சேரும்; இதன்
பாதிப்பு, வரும் தேர்தலிலும் எதிரொலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பாதிக்கப்பட்ட இடங்களில் அச்சம்:கடந்த நவம்பர் மாதம், குன்னூர்,
ஊட்டி பகுதிகளில் ஆபத்தான இடங்களில் வசித்த 500க்கும் மேற்பட்ட மக்கள், பல
பள்ளிகளிலும், சத்துணவுக் கூடங்களிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
மழை காலம் முடிந்த பின், அவரவர் வீடுகளுக்கு சென்றனர். இவர்களுக்கு,
வீடுகளை சீரமைக்க தேவையான தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேற்கூரை உட்பட
பிற பகுதிகளிலும், தற்காலிக சீரமைப்பை மேற்கொண்ட மக்கள், தற்போது
துவங்கியுள்ள பருவ மழையால், பீதியில் உள்ளனர். இத்தகையப் பகுதிகளை ஆய்வு
செய்து, மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள
வேண்டிய கட்டாயம், மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது.
வெளிவந்தது மனக்குமுறல் : சீனிவாசன்: எங்கள் வீடு ஊட்டியில்
இருந்த போது, அதிகாலை நேரத்தில் காய்கறி பாரம் ஏற்றும் பணிக்கு செல்வோம்;
தினமும் வேலை வாய்ப்போடு, எதிர்பார்க்கும் கூலியும் கிடைக்கும். கன
மழையால் வீடிழந்து, அரசின் வாக்குறுதியை நம்பி இங்கு வந்தோம். அதிகாலையில்
ஊட்டிக்கு பஸ் இயக்கப்படாததால், பணிகள் பாதிக்கப்படுகிறது. இதே பகுதியில்
கிடைக்கும் வேலைகளை நம்பி, வாழ்க்கையை நகர்த்த வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது; தினமும் வேலை கிடைப்பதும், அரிதாகத் தான் உள்ளது. இங்கு
வந்து, கடந்த காலங்களை விட மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்; பொருளாதார
நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்னை குறித்து கேட்க ஆளில்லை என்பது
தான் வருத்தம்.
ஆரம்மா: ஊட்டி கீழ் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தோம்;
அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு சென்று தினமும் பணிபுரிந்து வந்தோம்.
எங்கள் குழந்தைகளின் பள்ளித் தேவையும் சிரமமில்லாமல் இருந்து வந்தது. மழை
பாதிப்புக்கு பின், சில மாதங்கள் இங்கு தங்கியிருக்க வேண்டி வரும் என
உறுதிமொழி வழங்கியதால், குடியமர்ந்தோம். ஓராண்டு கடந்தும், வீடு
ஒதுக்கப்படவில்லை. இரவு 7.30க்கு பின், வாகனங்கள் வருவதில்லை. பணிக்காக
செல்லும் இளைஞர்கள் சிலர், தாமதமாக திரும்பும் போது, சந்தேகத்தின் பேரில்,
போலீசாரால் அழைத்து செல்லப்படுகின்றனர். இதனால், எங்கு சென்றாலும் இரவு
7.00 மணிக்குள் வீடு திரும்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
பிரச்னைகளில் இருந்து எங்களை விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
குறிப்பிட்ட மக்களுக்கு தான் என்றில்லாமல், வசிக்கும் 44
குடும்பத்துக்கும் பல பிரச்னைகள் தொடர்கின்றன. தாங்கள் வாழ்ந்த
பகுதிகளிலேயே, குடிசை மாற்றுத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை அரசு கட்டிக்
கொடுக்க வேண்டும் என்பதே, இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 10-8 அடி
அறையில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் வசிக்க வேண்டும் என்றால், நிலவும்
சிரமங்கள், பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து, அரசு அதிகாரிகளும்,
அரசியல்வாதிகளும் புரிந்துக் கொள்ள வேண்டும். எங்களின் நிலையறிந்து
கலெக்டர் வந்தால், அவர்களிடம் விளக்குவோம் என்று, பெண்கள் பலர் ஆதங்கம்
தெரிவிக்கின்றனர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: திருப்பூரில் ஜெ., வாக்குறுதி
» டெல்லியில் ஜெயலலிதாவுக்கு அதிகாரம் கிடைக்காததால் மகிழ்ச்சி அடையும் இலங்கை...
» பாஸ்போர்ட் கிடைக்காததால் "பறப்பது' கனவாகிறது:இரு ஆண்டுகளாக போராடும் நரிக்குறவர் இளைஞர்கள்
» மழையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 2.50 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு
» மருத்துவமனையில் மரத்துப் போனதா மனிதாபிமானம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum