TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கீரைகள் படங்கள்

Go down

கீரைகள் படங்கள்   Empty கீரைகள் படங்கள்

Post by அருள் Sun Aug 29, 2010 4:26 pm

8
[You must be registered and logged in to see this image.]
அகத்திக் கீரை


[You must be registered and logged in to see this image.]
பசலைக் கீரை


[You must be registered and logged in to see this image.]
அரைக் கீரை


[You must be registered and logged in to see this image.]
முருங்கை இலை


[You must be registered and logged in to see this image.]
மணதக்காளிக் கீரை


[You must be registered and logged in to see this image.]
முளைக் கீரை


[You must be registered and logged in to see this image.]
பொன்னாங் கண்ணிக் கீரை - சிவப்பு வகை


[You must be registered and logged in to see this image.]
பொன்னாங் கண்ணிக் கீரை - பச்சை வகை


[You must be registered and logged in to see this image.]
பருப்புக் கீரை


[You must be registered and logged in to see this image.]
சிறு கீரை


[You must be registered and logged in to see this image.]
முடக்கத்தான் கீரை


[You must be registered and logged in to see this image.]
வெந்தயக் கீரை


[You must be registered and logged in to see this image.]
கொத்தமல்லிக்கீரை


[You must be registered and logged in to see this image.]
புரோக்கோலி


[You must be registered and logged in to see this image.]
முட்டைக்கோசு


[You must be registered and logged in to see this image.]
வெங்காயத்தாள்


[You must be registered and logged in to see this image.]
போக் சொய்


[You must be registered and logged in to see this image.]
சிவரிக்கீரை (செலரி)


[You must be registered and logged in to see this image.]
புரோக்கலி
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கீரைகள் படங்கள்   Empty Re: கீரைகள் படங்கள்

Post by அருள் Sun Aug 29, 2010 4:46 pm

அகத்திக் கீரை

"அகர முதல எழுத்தெல்லாம்" என்று வள்ளுவர் குறளைத் துவங்குகிறார். கீரைகளைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது அகரத்தில் தொடங்கும் முதல் கீரை "அகத்திக் கீரையாகும்." அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். ஆகவே கீரைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்குவதற்கு முதல்கீரையாக விளங்குவது அகத்திக் கீரையே ஆகும்.

அகத்திக் கீரை இந்தியாவில் எங்கும் ஏராளமாக வளரக் கூடியது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயி¡¢டப் படுகிறது. இருப்பினும் இதன் இருப்பிடம் மலேசியா எனக் குறிப்பிடுகிறார்கள்.

இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர்.

அகத்திக்கு, அகத்தியம், அச்சம், நுனி, கா£ரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் வடமொழியில் வழங்கப்படுகிறது. வானத்தில் அகத்திய முனிவா¢ன் நட்சத்திரம் தோன்றுகின்ற காலகட்டத்தில் அகத்திமரம் பூக்கத் தொடங்குகின்ற காரணத்தினால் இதற்கு அகத்தியம் என்றும் முனிவிருட்சம் என்றும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. அன்றியும் இதன் பூவானது வளைந்து கோணலாக, வக்கா¢த்து, அ¡¢வாள் போல் காணப்படுவதினால் இதற்கு "வக்ரபுஷ்பம்" என்னும் பெயரும் வழங்கப்படுகிறது.

அகத்தியில் சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற மூன்று அகத்திகளும் உணவுக்காகப் பயன்படுத்தப் படுவதில்லை. உண்ணும் அகத்தியில் இரண்டு அகத்திகளே உள்ளன. ஒன்று வெள்ளை நிறப் பூக்களை உடையது. இதனையே பொதுவாக அகத்தி என்ற பெயரால் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென அழைப்பார்கள். பொதுவாக அகத்தியும், செவ்வகத்தியுமே உணவாக, மருந்தாகப் பயன்படுகின்றன.

அகத்தி மரம்போன்று 6 முதல் 9 மீட்டர் (20 அடி முதல் 30 அடி) உயரம் வளர்ந்த போதிலும் இது செடியினைத்தைச் சேர்ந்ததே ஆகும். மிக விரைவில் வளரக்கூடிய பயிர் வகையைச் சார்ந்தது இச்செடி. ஆயினும் நீண்ட நாட்கள் வாழக்கூடிய தன்மை பெற்றதில்லை.

பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் இச்செடியில் வெற்றிலைச் கொடிக்கால்களில் வெற்றிலைக்கு நிழல் தருவதாகவும் வெற்றிலைக் கொடிக்குக் கொழு கொம்பாக உதவவும் பயிர் செய்கிறார்கள்.

அகத்திக் கீரை உணவாகப் பயன்படுகிறது. இக்கீரையை வேகவைத்து பொ¡¢யலாகச் செய்துண்பர். கீரையுடன் தேங்காயைச் சேர்த்துக் தாளிதம் செய்து உண்ணலாம். மற்றும் பருப்புடன் சேர்த்து வேகவைத்து உண்பதும் உண்டு. இதனைக் குழம்பாகவும், மிளகு நீர் செய்தும் உண்ணலாம்.

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்களும் மருத்துவ நூலாகும் கூறியிருக்கின்றனர். பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாகத் தென்னாட்டிலும் விரதம் இருப்பது ஒரு கோட்பாடாக கைக்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு விரதம் இருந்து முடிப்பவர்கள் உண்ணும் உணவில், முதல் ஒரு கைப்பிடி அளவிலேயே நூறுவிதச் சத்துக்கள் அடங்கிய உணவை உண்ணவேண்டும் என்று வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு கைப்பிடி உணவில் நூறுவிதச் சத்துக்களை பெரும் வழியை மருத்துவ நூல்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றன:

1. அகத்திக் கீரை - 63 சத்துக்கள்
2. சுண்டைக்காய் - 20 சத்துக்கள்
3. வாழைக்காய் - 2 சத்துக்கள்
4. கொத்தவரை - 1 சத்து
5. அ¡¢சிச் சோறு - 1 சத்து
6. பருப்பு - 1 சத்து
7. நெய் - 1 சத்து
ஆக மொத்தம் - 100 சத்து

இந்த ஏழு உணவுப் பொருட்களிலும் நூறுவிதச் சத்துக்களும் அடங்கி விட்டதைக் காணலாம். அகத்திக் கீரை முதல் கீரையாக நின்று அறுபத்து மூன்று வகைக் சத்துக்களைப் பெற்று விளங்குவதைக் காணலாம்.

இக்கீரை கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் நல்ல தீவனமாகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு, கோழி உணவோடு காய்ந்த அகத்திக் கீரையைச் சேர்த்து தீவனமாகக் கொடுத்தால் குஞ்சுகள் நன்கு வளர்ச்சி பெறுகின்றன.

கால்நடைகளுக்கு இக்கீரையத் தீவனமாகக் கொடுத்தால் அதிகமாகப் பால் கறக்கிறது என நம்பப்படுகிறது. ஆனால் இது ஒரு தவறான கருத்து என விஞ்ஞான ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

அகத்திக் கீரையைத் தானமாகக் கொடுப்பது மிகவும் சிறப்புடைய செய்கையாகக் கருதப்படுகிறது. அதிலும் பசுக்களுக்குக் கொடுத்தல் பூர்வ-கர்மவினைகள் யாவும் விலகும் என்பர். ஆனால் இக்கீரையைத் தின்று கொண்டிருக்கும் கறவை மாட்டின் பாலில் உடலுக்கு நன்மை தரும் அனேக நற்குணங்கள் நிரம்பி இருக்கும். இப்பாலைச் சாப்பிடுவதால் அகத்திக் கீரையை உண்பதால் உண்டாகும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச்சிறந்த புரமாகக் கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

அகத்திக் கீரையில் 73 விழுக்காடு நீரும் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும் 2.1 விழுக்காடு தாதுப்புக்களும் இருக்கின்றன. இதில் 2.2 விழுக்காடு நார்ச்சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 விழுக்காடு இந்தக் கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் இக்கீரையில் அதிகம் இருப்பதைக் காணலாம். 93 கலோ¡¢ சக்தியைக் கொடுக்கவல்லது. நூறு கிராம் கீரையில் 1,130 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 80 மில்லிகிராம் மணிச்சத்தும் 3.9 மில்லிகிராம் இரும்புச் சத்தும் அடங்கி இருக்கின்றன.

இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். உயிர் சத்தான வைட்டமின் A, நூறு கிராம் கீரையில் 9, 000 உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லிகிராலும், ரைபோ· பிளேவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் C 169 மில்லி கிராம் இருக்கின்றன.

அகத்தியின் இளம்பூவும், மொட்டுக்களும் உணவாகச் சமைக்க உதவுகின்றன. பொதுவாக இப்பூவை தனியாகச் சமைத்து உண்பதில்லை. ஆனால் வடநாட்டில் பூவையே தனியாகச் சமைத்துண்கின்றனர்.

இதன் காயையும் கறி சமைத்து உண்ணலாம். அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன.

அகத்திக்கீரை பொதுவாக சிறு கைப்பு ருசி உடையது. இக்கைப்புச் சுவை குடலில் உண்டாகும் நச்சு நீர்களை முறித்து வெளியேற்றும் குணமுடையது; குடலில் தேங்கும் மலம் மற்றும் நிணநீர் ஆகிய அசுத்தங்களைச் சுத்தம் செய்யும் ஆற்றல் பெற்றது மலர்ச்சிக்கலை நீக்கி மலத்தை உடைத்து வெளியேற்றும் தன்மை பெற்றது.

இக்கைப்புச் சுவை பித்தச் சூட்டையும் தணிக்க வல்லது. குடல்புண், அ¡¢ப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு, உட்காங்கை என்னும் குட்டின். நோய் ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும். இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்குட்டை சமன்படுத்தும் இயல்புடையைது.

வெய்யிலில் சுற்றி அலைபவர்கள், தேயிலை, காப்பி போன்ற பானங்களைப் பருகிப் பித்தம் அதிகப்பட்டவர்கள், மலச்சிக்கல் உள்ளோர் அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை உண்பது நல்லது.

இடு மருந்துகளின் வேகம் தணிய வயிற்றைவிட்டு இடுமருந்துகள் கழியவும் இந்த அகத்தி மிகவும் பயன்படுவதாக நம்பப்படுகிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கீரைகள் படங்கள்   Empty Re: கீரைகள் படங்கள்

Post by அருள் Sun Aug 29, 2010 4:47 pm

அகத்திக் கீரை

செடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு.

பொதுவாக அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிவப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என்று அழைக்கப்படுகிறது.

சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடம் செய்யும்.

இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.

காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.

சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.

இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.

இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கீரைகள் படங்கள்   Empty Re: கீரைகள் படங்கள்

Post by அருள் Sun Aug 29, 2010 4:50 pm











[You must be registered and logged in to see this image.]












பசலைக் கீரை


பசலைக்
கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக
இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை
வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். குத்துப் பசலை
என்பது குத்துச் செடியாக வளர்ந்து இலை சற்றுப் பெரி
தாக பசுமை நிறமுடையதாக இருக்கும். இதற்குச் சிறுபசலை, பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு.

மூன்றாவது வகையான தரைப்பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ்சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.

கொடிப்பசலை
30 மீட்டர் வரை வளரும். பல ஆண்டுகள் வாழும். இந்தக் கீரையைப்
பருப்புடனும், பாசிப்பயறுடனும் வேக வைத்து உண்ணலாம். கடையலாகவும் செய்து
உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.


பொதுவாக அனைத்து வகையான பசலைக் கீரைகளிலுமே வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

பசலைக் கீரை இரத்த விருத்தியை உண்டாக்கி உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கொத்துப் பசலை சிறுநீர்க்கடுப்பு, நீரடைப்பு, ருசியின்மை, வாந்தி ஆகிய நோய்களைக் குணப்படுத்துகிறது. மலத்தை இளக்குகி றது.

இலையை
நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால்
அவை குணமாகும். இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால்
உண்டான தலைவலி நீங்கும்.


கொடிப்பசலை கீரையைப் பருப்புடனும், பாசிப் பயறுடனும் வேக வைத்துக் கூட்டு செய்து உண்ணலாம். கடையலாகவும் செய்து சாப்பிடலாம்.

கொடிப்பசலைக்
கீரை தாகத்தையும் சூட்டையும் தணிக்கிறது. இது மலத்தை இளக்கக்கூடியது
என்பதைல் கர்ப்பிணிப் பெண்கள் இந்தக் கீரையைச் சாப்பிட்டால் மலச்சிக்கல்
வராமல் தடுக்கலாம். இந்தக் கீரை சூட்டைத் தணித்து உடலுக்குக்
குளிர்ச்சியைக் கொடுக்கிறது. வெயில் அதிகமாக இருக்கும்போது இந்தக் கீரயை
அரைத்துத் தலையில் வைத்துக் கட்டினால் சூடு தணியும்.


இந்தக் கீரையை வதக்கி வீக்கம் கட்டி ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டினால், சீழ் வெளியறிப் புண் ஆறும்.

கொடிப்பசலைக் கீரையைத் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு போன்றவற்றுடன் சமைத்து உண்பதால் பித்தம், நீர்த்தாரை தொடர்பான வெட்டை நோய்கள், தோல் நோய்கள், மேகம், சீதபேதி ஆகியவை குணமாகும்.

சிறு
குழந்தைகளுக்குப் பசலைக் கீரையின் சாற்றைக் கொடுத்தால் சீரண சக்தி
அதிகரிக்கும். இந்தக் கீரைச் சாற்றுடன் கற்கண்டு சேர்த்து ஒரு தேக்கரண்டி
அளவு குழந்தைகளுக்கு ஊட்டினால் சளி, நீர்க்கோவை போன்றவை விலகும்.


இந்தக்
கீரை சளியை அதிகரிக்கும். எனவே, சளித் தொல்லையுடையவர்கள் இஞ்சி, மிளகு,
சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து இந்தக் கீரையை உண்ணுவது நல்லது.


கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கும், கால்களில் ஏற்படும் நீர்வீக்கம் மாறுவதற்கும் இந்தக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

கொடிப்பசலைக் கீரை தாதுவைக் கெட்டிப்பிடித்து ஆண், பெண் உறவில் திருப்தியை ஏற்படுத்தும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கீரைகள் படங்கள்   Empty Re: கீரைகள் படங்கள்

Post by அருள் Sun Aug 29, 2010 4:53 pm

பக்கவாதத்தை முழுமையாக முன்கூட்டியே தவிர்க்க முற்றிலும் நிரூபிக்கப்பட்ட புதிய முறை ஒன்று அறிமுகமாகியுள்ளது. அது என்ன?
1998ஆம் ஆண்டு ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தைச் சேர்ந்த
பேராசிரியர் ஆல் பிரட்டோ ஆஸ்ஸிரியோ என்பவர் 44000 பேர்களின் ஒரு வருட
உணவு முறையை ஆராய்ந்து பட்டியலிட்டார்.
இவர்கள் ஓராண்டு சாப்பிட்ட 136 வகையான உணவு வகைகளைச் சொல்லச்
சொன்னார். பொட்டாசியம் உப்பு அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டவர்கள்
மட்டும் இரத்தக்கொதிப்பு, இதய நோய் முதலியவை இன்றி சுகமாக வாழ்ந்து
வந்ததைக் கண்டுபிடித்தார். இவர்களின் நரம்பு மண்டலமும் சிறப்பாக இருந்ததை
உறுதிப்படுத்திக் கொண்டார்.
இரத்தக்கொதிப்பு, சோம்பல், நெஞ்சுவலி என்று சில சமயங்கள்
பாதிக்கப்பட்டவர்களின் ஒரு வருட உணவுப் பட்டியலைப் பார்த்தபோது பழங்கள்,
காய்கறிகள், தானியங்கள் அடிக்கடி இடம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி
செய்யப்பட்டது.
எனவே, ஒரு மனிதனுக்குத் தினசரி தேவை ஒரு கிராம் பொட்டாசியம் உப்பு. இதை எளிதில் பெறவும் அவரே ஒரு யோசனையைச் சொல்லியுள்ளார்.
”தினமும் இரண்டு தக்காளியை பச்சையாகச் சாப்பிடுங்கள். பகல் உணவில் ஒரு
கரண்டி பசலைக்கீரை சேர்த்து வாருங்கள். ஒரு கிராம் பொட்டாசியம் உப்பு
இவற்றின் மூலம் எளிதில் கிடைத்துவிடும்.”
பசலைக் கீரை கிடைக்காத போது வேறு கீரைவகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பொட்டாசியம் உப்பு குறைந்திருப்பதை எப்படி அறிந்து கொள்வது?
அதிக சோம்பல் வந்து நாளைக்கு வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று
மனதைச் சமாதானம் செய்துவிட்டுப் படுத்தால், பொட்டாசியம் அளவு குறைவாக
இருக்கிறது என்று பொருள். வயிற்றுப் போக்கு, கை, கால்களின் படபடப்பு,
உள்ளங்கைகள், கால் பாதங்கள் ஜில்லென்று இருப்பதும் இதன் மற்ற
அறிகுறிகளாகும்.
வாழைப்பழம், ஆரஞ்சு முதலியவற்றிலும் ஒரு நாள் தேவைக்கான பொட்டாசியம்
இருக்கிறது. இந்த உணவு வகைகளில் மக்னீசியம் உப்பும் இருப்பதால்
இரத்தக்கொதிப்பு பக்கவாதம், திடீர் ஹார்ட் அட்டாக், மனக்குழப்பம்,
நரம்புக்கோளாறு முதலியவையும் தடுக்கப்படும்.
பொறுப்புடனும் பரப்பரப்பாகவும் விரைந்து வேலை செய்யும் நிலையில்
உள்ளவர்கள். தினமும் இரண்டு தக்காளி, பசலைக்கீரை ஃபார்முலாவை தொடர்ந்து
பின் பற்றுவது நல்லது.
பொட்டாசியம் உப்பிற்காக தினை மாவு, பீன்ஸ், வாழைப்பழங்கள்
முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உண்டு வந்தாலும் ஸ்டிரோக்
அபாயத்தை தவிர்க்க முடியும். போனஸாக சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக
இயங்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் சோர்வு தலை காட்டாமல் இருக்கத் தினமும் இரண்டு தக்காளித் திட்டத்தைப் பின்பற்றவும்.
பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் தினம் இரண்டு தக்காளி மற்றும் ஏதாவது
ஒரு கீரையைச் சேர்த்து வந்தால், அறிவுத்தெளிவுடன் படிப்பார்கள். ஸ்டிரோக்
மற்றும் இதயநோய், சிறுநீரக நோய் முதலிய நோய்கள் உடலில் நுழைய விடாமல்
உறுதியாகப் பாதுகாத்துக் கொள்வதுடன் எதிர்காலத்திலும் நலமுடன் வாழ
தக்காளி துணைபுரியும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கீரைகள் படங்கள்   Empty Re: கீரைகள் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோடைக்கு ஏற்ற கீரைகள்!
» ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!
» தைராய்டு பிரச்னை தீர்க்கும் கீரைகள்-Thyroid problem solving greens
» அமெரிக்க ராணுவ வீராங்கனைகளின் அரை நிர்வாண படங்கள் வெளிவந்தன[படங்கள்]
» சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட போராளிகளின் போர்குற்ற படங்கள்! (படங்கள் இணைப்பு) பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்கவும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum