TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கமல்ஹாசன் பாராட்டு விழா சர்ச்சை - கேரள நடிகர்களின் தைரியம்..!

Go down

கமல்ஹாசன் பாராட்டு விழா சர்ச்சை - கேரள நடிகர்களின் தைரியம்..!  Empty கமல்ஹாசன் பாராட்டு விழா சர்ச்சை - கேரள நடிகர்களின் தைரியம்..!

Post by ஜனனி Thu Aug 26, 2010 7:28 am

“மாமியாருக்கு தொடையில புண்ணாம்..
அடங்கொப்புரானே, மருமகன்தான் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ன்னாங்களாம்..” - அது
மாதிரியாயிருச்சு நம்ம உலக நாயகன் கமல்ஹாசனுக்கு.

கமலஹாசனின் நடிப்பு கேரியரின் துவக்கக் காலத்தில், அதாவது அவரது டீன் ஏஜ்
பருவத்தில் மலையாளப் படங்களில்தான் அவரது ‘கேரக்டருக்கே' ஏற்றாற்போல்
கேரக்டர்கள் கிடைத்தன.

'கன்னியாகுமரி', 'மதனோல்சவம்', 'விருதம்', 'வேளாங்கன்னி மாதா,' 'ஈடா',
'சத்தியவான் சாவித்திரி', 'ஓர் மகள் மரிக்குமோ,' 'டெய்சி', 'சாணக்கியன்'
என்று எனக்குத் தெரிந்த லிஸ்ட் குறைவுதான்.. ஆனாலும் ஸ்ரீதேவி, லட்சுமி,
சீமா, ஜெயபாரதி, ஷீலா என்று அண்ணனுக்கு ஜோடி கட்டிய நடிகைகள் எல்லாம்
பெரிய, பெரிய ஹீரோயின்கள்தான்.

கமல்ஹாசன் பாராட்டு விழா சர்ச்சை - கேரள நடிகர்களின் தைரியம்..!  Kamal-function

கேரளாவில் வருடந்தோறும் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு வார காலம்
மாநிலம் முழுவதும் விழாக்களை அந்த மாநில அரசே நடத்தும். அதில் ஒரு
பகுதியாக மலையாளப் படவுலகத்தின் மூலமாகப் புகழ் பெற்று தமிழ்த்
திரையுலகில் இன்னமும் சாதனை படைத்து வரும் நம்ம அண்ணன், உலக நாயகன்
கமலஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்தது கேரள அரசு.

இந்த விழாவில் மம்முட்டியும், மோகன்லாலும் கலந்து கொள்வார்கள் என்றும்
அறிவித்திருந்தார்கள். இந்த அறிவிப்பு வெளியாகி, ஒரு மாத காலம் கழித்து
நிகழ்ச்சி நடைபெறப் போகும் ஐந்து தினங்களுக்கு முன்பாக, கேரள மாநில
திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா' அமைப்பின் தலைவரும், நடிகருமான
இன்னசென்ட் இதனைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.

“கமலஹாசனைவிட சாதனை செய்தவர்கள் பலர் கேரளாவிலேயே இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் விட்டுவிட்டு கமல்ஹாசனுக்கு எதற்கு கேரளாவில் பாராட்டு
விழா..? நாங்கள் இதனை ஒத்துக் கொள்ளமாட்டோம்.. இந்த விழாவை 'அம்மா'
அமைப்பு புறக்கணிக்கிறது.. இதையும் மீறி தனிப்பட்ட முறையில் நடிகர்,
நடிகைகள் அந்த விழாவில் கலந்து கொண்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும்
இல்லை” என்று சொல்லிவிட்டார்.

இன்னசென்ட் சொன்னதுபோலவே, விழாவுக்கு ஒரு சுமாரான நடிகர்கூட
வரவில்லையாம்.. கமல் தற்போது நடித்து வரும் மலையாளப் படத்தின் ஹீரோவான
ஜெயராம்கூட வரவில்லை. வாழ்த்துரைப் பட்டியலில் இருந்த மோகன்லாலும்,
மம்முட்டியும் மரியாதைக்குக்கூட வெளிப்படையாக எந்தக் கருத்தையும்
தெரிவிக்கவில்லை. ஆனால் ரகசியமாக போனில் “ஸாரி” சொல்லிவிட்டதாக
கோடம்பாக்கத்து 'பட்சி'கள் தெரிவிக்கின்றன.

"அம்மா அமைப்பில் இருந்து பெரிய தலைகள் ஒருவராவது வருவார்கள்.. வர
வேண்டும்" என்று கேரளாவை ஆள்பவர்கள் மிகப் பிரயத்தனம் செய்தும் ‘அம்மா'
அமைப்பின் ஒற்றுமையைச் சிதைக்க முடியவில்லை.

இதனால் கடுப்பான கேரள முதல்வர் அச்சுதானந்தன் அந்த விழாவில் பேசும்போது,
“மலையாள நடிகர்கள் விளம்பரக் கலையைத்தான் விரும்புகிறார்கள். உண்மையான
கலையை மதிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இருந்திருந்தால் இன்றைக்கு
இங்கே வந்திருப்பார்கள்” என்று தாக்கிவிட்டார்.

இப்படி பேசியது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். இதற்காகவெல்லாம் ச்சும்மா
இல்லை ‘அம்மா' அமைப்பு.. இன்று அவசரமாகக் கூடிய அதன் நிர்வாகக் குழு
கூட்டத்தில் அச்சுதானந்தனை பரேடு எடுத்துப் பேசி முடித்துவிட்டு ஒரு
அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் “முதல்வர் அச்சுதானந்தனின் பேச்சு தற்போது கமல்ஹாசனின்
ரசிகர்களிடையேயும், தமிழர்களிடையேயும் எங்களை எதிரியாக்கி உள்ளது. நாங்கள்
கமல்ஹாசனுக்கு ஒருபோதும் எதிரியல்ல. முதல் மந்திரி தனது பேச்சைக்
கடுமையாக்கிக் கொண்டதால் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொதிப்பான
நிலைமை ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் கமல்ஹாசனின் சகோதரர்கள்.
எதிரிகள் அல்ல. கமல்ஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா குறித்து கேரள
அரசு, மலையாள நடிகர்களுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லை. மேலும்
விழாவிற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. இதனால்தான் புறக்கணிப்பு
செய்யப்பட்டது” என்று தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இதில் எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்திருக்கின்றன.

‘அம்மா' அமைப்பு, என்பது மாநிலத்தை ஆளும் அரசின் முடிவை எதிர்த்து,
முதலமைச்சரின் பேச்சைக் கண்டிக்கின்ற அளவுக்குத் தைரியமாக குரல்
கொடுக்கும் முதுகெலும்புள்ள கலைஞர்கள் சங்கமாக உள்ளது என்பது முதல்
விஷயம்.

இரண்டாவது, ஒரு சங்கத்தின் முடிவை அச்சங்கத்தில் உள்ள அத்தனை பேரும்
தங்களது சுய விருப்பு, வெறுப்புக்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதனைப்
பின்பற்றுவது.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது..? யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்கு ஒரு
சலாம் போட்டு, குல்லா வைத்து, குத்துப் பாட்டுக்கு நடிகைகளை ஆட வைத்து,
அவர் மனம் குளிர வைக்கின்ற அத்தனையையும் செய்கிறார்கள் நமது நடிகர்கள்.
ஸாரி கலைஞர்கள் என்று சொல்ல என் மனம் வரவில்லை.

ஆட்சியாளர்கள் சினிமாவுலகத்துக்கு நல்லது செய்கிறார்கள் அதனால்
வாழ்த்துகிறோம் என்கிறார்கள். வாழ்த்துங்கள் தவறில்லை. அதே சமயம்
கண்டிக்கின்ற நேரத்தில் கண்டிக்க வேண்டாமா..?

‘விருமாண்டி' படத்தின் டைட்டிலை மாற்றும்படி டாக்டர் கிருஷ்ணசாமி
வெட்டியாக போராட்டம் நடத்தியபோது, அதனை எதிர் நோக்கி கமல் மட்டுமே
கோட்டைக்குச் சென்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாதுகாப்பு கேட்க
வேண்டிய நிலைமை இருந்தது. உண்மையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய
அரசுதான் அன்றைக்கு ஓடோடி வந்திருக்க வேண்டும்.. ஆனால் வரவில்லை.
நடிகர்கள் சங்கம் அமைதி காத்தது.

‘பாபா' படத்தின் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடி பாட்டாளி மக்கள்
கட்சியினர் ரகளை செய்தபோது ரஜினிக்கு ஆதரவாக அறிக்கை விட்டதோடு சரி..
அந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் கையைக் கட்டி வேடிக்கை பார்த்த
காவல்துறையையும், அதன் தலைவரான ஜெயலலிதாவையும் கண்டிக்காமல் விட்டுவிட்டது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மரணமடைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு
அரசு மரியாதை வழங்கும்படி எழுத்துப்பூர்வமாக அந்தச் சூழலிலும் எழுதிக்
கேட்ட பின்புதான் ஆத்தா மனமிரங்கி அனுமதி தந்தார். அதான் அனுமதி
கிடைச்சிருச்சே என்ற நிலையில் நடிகர் சங்கமும் அமைதியானது. ஆனால் உடலை
அடக்கம் செய்ய இடம் கேட்டு கிடைக்காததால்தான் பெசன்ட் நகர் மயானத்தில்
எரித்தார்கள். இடம் கேட்டதற்கு வந்த பதில் “நாவலர் நெடுஞ்செழியனுக்கே
நாங்கள் நினைவாலயம் கட்ட இடம் தேடிக் கொண்டிருக்கிறோம்..” என்று
குறிப்பிட்டிருந்தார்கள். இதனைக் கண்டித்திருக்க வேண்டாமா..?



குஷ்பு கற்பு பற்றி
பேசியபோது, அவரது வீட்டு முன்பாக விளக்கமாறும், கையுமாக நின்று சில
அரசியல் ரவுடிகள் ரவுடித்தனம் செய்தபோது இதே நடிகர் சங்கம் முழு அமைதி
காத்தது. போதாக்குறைக்கு ஆளாளுக்கு கற்பு பற்றி லெக்சர் அடித்தது
தனிக்கதை..! ஒரு சக நடிகர் வரைமுறை மீறப்பட்டு தாக்கப்படுகிறார் என்கிற
போது அவருக்குப் பரிந்து பேசவோ, ஆதரவு தெரிவிக்கவோ, பின்னணியில் அமைதி
காக்கும் ஆட்சியாளர்களைக் கண்டிக்கவோ மனமில்லாமல் போய்விட்டது இந்த
நடிகர் சங்கத்திற்கு..!

எல்லாவற்றிற்கும் மேலாக மிகச் சமீபத்தில் முரசொலியில் தான் எழுதிய
கவிதையில் 'மூன்றாம் தர நடிகை..' 'குலுக்கல் ஆட்டம் ஆடியவர்..' 'ஜிகினா
டிரெஸ்ஸில் வந்தவர்..' என்றெல்லாம் நடிகை ஜெயலலிதாவைப் பற்றி கருணாநிதி
எழுதிய கவிதையைப் பற்றித் துளியும் கவலைப்படாத இந்த நடிகர்
சங்கத்தினர்தான், தினமலர் பத்திரிகை நடிகைகளைப் பற்றி எழுதிய அவதூறு
பற்றிச் சிலிர்த்து எழுந்தார்கள்..!



ஆளுக்கொரு நீதி
என்பதிலும்கூட ஆளும் கட்சியினரையோ, முதல்வரையோ குற்றம் குறை சொல்லி
எதையும் பேசிவிடக் கூடாது என்பதில் மட்டும் இப்போது வரை உறுதியுடன்
இருக்கிறார்கள்.

தமிழகமே அரிதாரம் பூசியவர்களின் மகிமையின் பின்னால் இருப்பதைப் புரிந்து
கொண்ட தி.மு.க. அரசு மட்டுமே, சினிமா கலைஞர்களின் பெரிய சங்கங்களில்
தங்கள் சார்பான ஆட்களை வைத்து சங்கத்தையே தன் வசம் இழுக்கும் தில்லாலங்கடி
வேலையில் ஈடுபட்டு அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டது.

நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி அ.தி.மு.க.வில் இருந்தாலும் அவரது
அம்மா மறைவுக்கு ஜெயலலிதா வராததை காரணம் காட்டியும், ஸ்டாலின வந்ததை
நினைத்தும் தாத்தாவிடம் சரண்டராகிவிட்டார். கமலும், ரஜினியும் தலைவர்
பதவியை விரும்பாததால், சரத்குமார் தனது கட்சியின் இமேஜிற்காகவும்,
தனக்காகவும் தலைவர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான
இராம.நாராயணனே மீண்டும் தலைவராகிவிட்டார். இயக்குநர் சங்கத்தில் பாரதிராஜா
தலைவர். அவருக்கான கலைஞர் டிவியின் ஸ்லாட் டைம் உறுதியான பிர்லா
சிமெண்ட்டில் கட்டப்பட்டுள்ளது. உடைத்தெறியவே முடியாது. தென்னிந்திய
திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான 'பெப்ஸி'யின் தலைவரான வி.சி.குகநாதன்,
கரை வேஷ்டி கட்டாத உடன்பிறப்பாகவே மாறிவிட்டார். ஆகவே,
ஆட்சியாளர்களுக்குக் கவலையில்லாமல் போய்விட்டது..

சமீபத்தில் நடந்த விழாவில் சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவரான விடுதலை,
“நீங்கள்தான் என்றென்றைக்கும் எங்களுக்குத் தலைவர்” என்று ஒத்து
ஊதிவிட்டார். பெப்ஸி தலைவர் குகநாதனோ, “அடுத்த முதல்வரும் நீங்கள்தான்.
கட்டி முடிக்கப்படும் அந்த நகரத்தையும் நீங்கள்தான் திறந்து வைக்கப்
போகிறீர்கள். நீங்கள் அங்கு வந்து எங்களோடு தங்குவதற்காக ஒரு வீடே
தனியாகக் கட்டப் போகிறோம்..” என்று உறுதியளித்துவிட்டார்.

ஆக மொத்தம்.. ஆளுகின்ற அரசுகளின் அறிவிக்கப்படாத துணை கழக அமைப்புகளாக,
கலையுலக சங்கங்களையும் மாற்றிவிட்ட கொடுமைதான் இங்கே நடந்து வருகிறது.

மலையாளப் படவுலகினர் இந்த அளவுக்காவது தைரியமாக இருக்கிறார்களே.. பரவாயில்லை. உண்மையான கலைஞர்களான அவர்களை நாமும் வாழ்த்துவோம்...!

உங்களுக்காக நம்ம அண்ணன் கமல்ஹாசன் நடித்த 'ஈடா' என்கிற மலையாளப் படத்தின் பாடல் காட்சி இங்கே..