TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:22 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Yesterday at 10:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 25, 2024 12:46 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"சூப்பர் பக்' கிருமி: மேற்கத்திய நாடுகளின் அபாண்டம்

Go down

"சூப்பர் பக்' கிருமி: மேற்கத்திய நாடுகளின் அபாண்டம்  Empty "சூப்பர் பக்' கிருமி: மேற்கத்திய நாடுகளின் அபாண்டம்

Post by logu Sat Aug 14, 2010 7:23 am

"இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் மருத்துவ சிகிச்சை
பெற்று வருபவர்களிடம் இருந்து, "சூப்பர் பக்' என்ற பயங்கரமான
உயிர்க்கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவுகிறது' என, பிரிட்டன் உள்ளிட்ட
மேற்கத்திய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது சர்வதேச அளவில் தகவல்களை
பரப்பி வருகின்றனர்.
இந்த பொய் பிரசாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின்
சுகாதாரத்துறை, "சுற்றுச்சூழல் மாறுபாட்டால் "சூப்பர் பக்' எனப்படும்
புதிய நோய் கிருமி இயற்கையாகவே உற்பத்தியாகி, சர்வதேச அளவில் பரவி
வருகிறது' என கூறியுள்ளது. இயற்கையாகவே உற்பத்தியாகியுள்ள ஒரு விஷக்
கிருமியை, ஏதோ இந்தியாவில் இருந்து தான் பரவுகின்றன என்ற ஒரு விஷமப்
பிரசாரத்தை மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா (மெடி-டூரிசம்)
வேகமாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள தரமான மருத்துவமனைகள், பிரமிக்க
வைக்கும் சுற்றுலா தலங்கள் வெளிநாட்டினரை கவர்ந்துள்ளன. கடந்த ஆண்டு
மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சை பெற
இந்தியா வந்துள்ளனர். நோயாளிகளின் வருகை ஆண்டிற்கு 15 சதவீதமும், இந்திய
மருத்துவ சுற்றுலா வளர்ச்சி ஆண்டிற்கு 30 சதவீதமும் அதிகரித்து வருகிறது.
சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட சில முக்கிய நகரங்கள் மருத்துவ
சுற்றுலாவிற்கு பெயர் பெற்றுள்ளன. சமீபத்தில், சென்னையில் நடந்த ஒரு
விழாவில் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்தி செல்வன்,
""தற்போது மருத்துவ சுற்றுலா மூலம் அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்
வருவாய் கிடைக்கிறது. இது அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடியாக உயரும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மருத்துவ சுற்றுலாவிற்கு தனி
பேக்கேஜ் அமைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. சென்னையில்
உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஆறு நோயாளிகளில் ஒருவர்
வெளிநாட்டினர் என்ற நிலை தற்போது உள்ளது. அதுவும் மருத்துவ வசதி இல்லாத
ஆப்ரிக்க நாடுகள் மட்டுமல்லாது, அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட
வளர்ந்த நாடுகளில் இருந்தும் சிகிச்சைக்காக இந்தியா வருகின்றனர். சர்க்கரை
நோய்க்கு சிகிச்சை எடுக்க ஆண்டிற்கு நான்காயிரம் வெளிநாட்டு நோயாளிகள்,
சென்னை மருத்துவமனைகளை தேடி வருகின்றனர். இந்த அளவிற்கு வெளிநாட்டினர்
இங்கு வருவதற்கு, அனுபவம் வாய்ந்த நிபுணர்கள், நவீன மருத்துவ உபகரணங்கள்,
குறைந்த செலவு, உடனடி கவனிப்பு ஆகியவையே காரணம்.
சென்னையில் உள்ள ஒரு கண் மருத்துவமனை, ஜப்பான் டாக்டர்களுடன் இணைந்து,
கார்னியாவில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, நோயாளிகளிடம் இருந்து செல்களை
உருவாக்கி, சிகிச்சை அளிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது.
உலகில் முதன் முறையாக இந்த சிகிச்சை முறை இங்கு கண்டறியப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிற்கு நிகராக சென்னையில் உள்ள
மருத்துவமனை ஒன்றில் நவீன முறையில் "பிளாஸ்டிக் சர்ஜரி' செய்யப்படுகிறது.
எலும்புகள் பாதிக்கப்பட்ட இடத்தில் திசுக்களை வைத்து, எலும்புகளை
உருவாக்குகின்றனர் இந்திய மருத்துவர்கள். சென்னையில் உள்ள மற்றொரு மல்டி
ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, மாற்று
ரத்தப்பிரிவு கொண்ட சிறுநீரகத்தையும் பொருத்த முடியும் என
நிரூபித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக
காத்திருப்போர் பட்டியலை வெகுவாக குறைக்க முடியும்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவ பல்கலைக் கழகமும், தனியார்
மருத்துவமனைகளும் தற்போது ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து
வருகின்றன. வெளிநாட்டில் இருந்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளை கவரும்
வகையில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் சிகிச்சை முறைகளை வகுத்துள்ளன. இதில்,
விமான நிலையம் முதல் மருத்துவமனை வரை பெட் கார், இன்டர்நெட் வசதியுடன்
கூடிய அறை, தனி சமையல்காரர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருகிறது.
மருத்துவ சிகிச்சையுடன், பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச்
செல்வது மற்றொரு திட்டம். சென்னை கார்ப்பரேட் மருத்துவமனைகள் இதய நோய்,
இதயவியல் அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று
அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை ஆகிய துறைகளில் சிறந்து
விளங்குகின்றன. பேக்கேஜ் திட்டத்தில் பல்வேறு சிறப்பு சிகிச்சைகளும்
அடங்குகின்றன. நரம்பியல், முடநீக்கியல், கண் மருத்துவம், காது, மூக்கு,
தொண்டை மருத்துவம், குழந்தைகள் நலம், பொது நல மருத்துவம்
உள்ளிட்டவைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு, மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும்
இந்தியாவின் மீது ஒரு புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில்
சிகிச்சை பெற்று திரும்பிய ஒரு பெண்ணுக்கு, என்.டி.எம்.1 என்ற விஷக்கிருமி
தாக்கியதாகவும், இக்கிருமியை அழிக்கும் வகையிலான "ஆன்டிபயாடிக்' மருந்து
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர் ஒருவர்
கூறியுள்ளார். மேலும், "மெடிக்கல் டூரிசம்' உச்சத்தில் உள்ளதால், இந்த
விஷக்கிருமி மிக வேகமாக உலகம் முழுவதும் பரவ வாய்ப்புகள் அதிகம் என்றும்
அச்சுறுத்தியுள்ளார்.
இப்பிரச்னையின் உண்மை நிலை என்ன என்பது குறித்து பிரபல டாக்டர்கள் சிலரை கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
சென்னை, மியாட் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மோகன்தாஸ்:
இங்கிலாந்தில் உள்ள லண்டன் பத்திரிகை ஒன்று, இந்தியாவில் அறுவை சிகிச்சை
செய்யும் வெளிநாட்டினருக்கு "சூப்பர் பக்' எனப்படும் கிருமி தொற்றுகிறது
என்று ஒரு வதந்தியை பரப்பி வருகிறது. வெளிநாட்டினர் இந்தியாவில் மருத்துவ
சிகிச்சைக்கு தேடி வரும் நிலையில், இதுபோன்ற அனாவசியமான வதந்தியை பரப்பி
வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கலான
அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ள இந்தியா வருகின்றனர். இப்படி
வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு அதிகமான அளவில் சிகிச்சைக்கு வருவதால்,
வெளிநாடுகளில் அறுவை சிகிச்சைகள் குறைந்துவிட்டன. சர்வதேச அளவில் நடந்த
அறுவை சிகிச்சை அரங்கேற்றத்தில், இங்கிலாந்திலிருந்து அறுவை சிகிச்சை
செய்து கொள்ள அதிகமானோர் இந்தியா வருவதும், இதன் மூலம் அங்குள்ள பல
மருத்துவமனைகள் இழுத்து மூடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல், "மெத்திலியன் ரெசிஸ்டென்ஸ் ஸ்பாபிலோ காகஸ் ஆர்லஸ்'
என்ற கிருமி, இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடம் இருந்து
பரவியது. இதனால், இங்கிலாந்தில் பல மருத்துவமனைகள் இழுத்து
மூடப்பட்டுள்ளன. இந்த பிரச்னை இங்கிலாந்தில் மட்டும் அல்ல. அமெரிக்கா,
ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளிலும் நிலவுகிறது. இதுவரை இந்தியாவில் இக்கிருமி
இல்லை.
தற்போது பரபரப்பாக பேசப்படும் "சூப்பர் பக்' கிருமி கூட, ஒருவேளை
வெளிநாட்டிலிருந்து இங்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் கொண்டு வந்தவைகளாக
இருக்கலாம். இங்கிலாந்தில் உள்ள லண்டன் பத்திரிகை, இந்தியாவில் கிருமி
தொற்று அதிகம் என்று கூறுவது குறும்புத்தனமாகும். அதுமட்டுமல்ல நம் மீதான
பொறாமையால் பரப்பப்பட்ட தகவல் இது. சீனா, இந்தியாவில் ஐ.டி., துறை வேகமாக
வளர்ந்துவிட்டது. சீனாவை விட இந்தியாவில் மருத்துவ துறை அதிவேகமாக
முன்னேறி வருகிறது. இதுவே இதுபோன்ற பொய்யான வதந்திகளை பரப்ப காரணம்.
பேராசிரியர் தியாகராஜன், ஆராய்ச்சித் துறை இயக்குனர், சென்னை, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழகம்:
எல்லா நாடுகளில் இருந்தும் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியாகின்றன. ஒரு
நாட்டில் இருந்து வருபவர்களிடம் புதிய நோய் கிருமியை கண்டுபிடித்தால்,
அந்த நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ செயல் பாடுகளும் மோசமானவை என்று
கருத்து வெளியிடுவது நெறிமுறையல்ல. இந்த "சூப்பர் பக்' பாக்டீரியாவிற்கு
"நியூடில்லி மெட்டல்லோ பேட்டா லேக்டமஸ்' (என்.டி.எம். -1) என்று நாட்டின்
தலைநகர் பெயரை சூட்டியிருப்பது முற்றிலும் தவறானதாகும். அமெரிக்காவில்
இருந்து எய்ட்ஸ் கிருமி பரவியது; மேற்கத்திய நாடுகளில் இருந்து ஸ்பைன்
ப்ளு பரவியது; இன்னும் எத்தனையோ விஷக் கிருமிகள் ஒவ்வொரு நாட்டில்
இருந்தும் உலக நாடுகளுக்கே பரவியுள்ளது. இதற்காக அந்தந்த
பாக்டீரியாக்களுக்கு, அந்தந்த நாடுகளின் பெயரை சூட்டவில்லை. மேலும், இந்த
ஆய்வின் புள்ளிவிவரம் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கும் வகையிலானது என
கருத முடியாது. ஆராய்ச்சியாளர்கள், நாட்டிலுள்ள சில மருத்துவமனைகளை
தேர்ந்தெடுத்து, ஆய்வு நடத்தியிருந்தால், ஒரு குறிப்பிடத்தக்க முடிவு
கிடைத்திருக்கும். ஆராய்ச்சிபூர்வமான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது
புள்ளிவிவரம் அதிக முக்கியத்துவத்தை பெறும். மருத்துவமனைகள், மருத்துவமனை
நோய் தொற்று கண்காணிப்பு குழு வகுத்துக் கொடுத்த சர்வதேச வழிமுறைகளை
பின்பற்றினால், இதுபோன்ற பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்க முடியும். இதன்
மூலம் நாட்டின் மருத்துவ சுற்றுலா வளர்ச்சி எந்த வகையிலும் பாதிக்காது.
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப்.சி.ரெட்டி: இந்த
விஷயத்தில் நம் நாட்டையும், அதுவும் குறிப்பாக ஒரு ஊரையும் இணைத்து பெயர்
சூட்டியது ஏற்க முடியாதது. புதுடில்லி பெயரை இணைத்தது விஞ்ஞான
முடிவுகளுக்கு ஒவ்வாதது. மேலும், பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல. இது மருத்துவ
சுற்றுலாவை பாதிக்குமானால், அது மேலைநாடுகள் திட்டமிட்டு செய்யும்
பிரசாரம் ஆகும்.இது குறித்து மருத்துவ வல்லுனர்கள், நிபுணர்கள் ஆய்வு
செய்து தகுந்த பதில் அளிப்பர். மேலும், "சூப்பர் பக்' என்று கூறப்படும்
ஆன்டிபயாடிக் அதிகரிப்பால் ஏற்படும் பிரச்னைக்கு மற்றொரு ஆன்டிபயாடிக்
கண்டுபிடித்தால் போதுமே.இவ்வாறு தலைசிறந்த மருத்துவர்கள் கருத்து
தெரிவித்தனர்.
ஆராய்ச்சிக்கு உதவி: துணைவேந்தர் சென்னை பல்கலை துணைவேந்தர்
திருவாசகம் கூறியதாவது: சென்னை பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்
கார்த்திகேயன், "சூப்பர் பக்' கிருமியை கண்டுபிடித்துள்ளார்.
கார்த்திகேயனிடம், "எவ்வளவு ஆராய்ச்சி உதவித்தொகை கிடைக்கிறது' என
கேட்டேன். "கடந்த 2006ம் ஆண்டு இந்த ஆராய்ச்சியை துவங்கியபோது,
யு.ஜி.சி.,யிலிருந்து மாதம் 8,000 ரூபாய் உதவித்தொகை கிடைத்தது. அத்தொகையை
தான் பெற்று வருகிறேன்' என கார்த்திகேயன் கூறினார். அவருக்கு உரிய
உதவித்தொகை வழங்கப்படும். அவர் கேட்டுக் கொண்டால், தொடர்ந்து ஆராய்ச்சிப்
பணியில் ஈடுபட தனி ஆய்வுக் கூடம் அமைத்துத் தரப்படும். வெளிநாடுகளுக்கு
சென்று ஆராய்ச்சியில் ஈடுபட நினைத்தாலும், அதற்கான பணிகளையும் சென்னை
பல்கலை செய்யும்.இவ்வாறு திருவாசகம் கூறினார்.
வெளிநாட்டினரின் "சர்ட்டிபிகேட்': சென்னை, பெங்களூரு, மும்பை
உள்ளிட்ட நகரங்களில் சர்வதேச தரத்திலான அனைத்து மருத்துவ வசதிகளும்
கிடைக்கின்றன. வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது, இங்கு மருந்துவ செலவு
குறைவாகவே உள்ளது. வெளிநாடுகளில் 50 லட்சம் ரூபாய் செலவாகும் மூட்டு
மாற்று அறுவை சிகிச்சைக்கு, சென்னையில் 13 லட்சம் ரூபாய் மட்டுமே
செலவாகிறது. இதய அறுவை சிகிச்சைக்கு வெளிநாடுகளில் 18 லட்சம் ரூபாய்
செலவாகும் நிலையில், சென்னையில் இரண்டரை லட்சம் ரூபாய் மட்டுமே செலவு.
கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு வெளிநாடுகளில் இரண்டு கோடி ரூபாய் செலவாகும்.
சென்னையில் 20 லட்சம் ரூபாய் மட்டுமே. இதுபோன்று, அனைத்து நோய்
சிகிச்சைக்கும் வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது, செலவு இந்தியாவில்
மூன்றில் இரண்டு மடங்கு குறைவாக உள்ளது. கட்டணம், உடனடி கவனிப்பு, தொடர்
கண்காணிப்பு, நோயை குணமாக்க மருத்துவர்களின் அயராத உழைப்பு ஆகியவற்றில்
மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா சிறப்பாக உள்ளதாக வெளிநாட்டினரே கருத்து
தெரிவிக்கின்றனர்.
அசத்தும் "வெற்றி' சதவீதம்!: மருத்துவ துறையில் வளர்ந்த நாடுகளை
மிஞ்சும் அளவிற்கு கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அசுர வளர்ச்சியடைந்து
வருகிறது. அதுவும் மெட்ரோ நகரங்களில், குறிப்பாக சென்னையில் மருத்துவ வசதி
உலகத் தரத்திற்கு அமைந்துள்ளது. ஆண்டுதோறும் 7,000 இதய அறுவை சிகிச்சைகள்
இங்கு நடக்கின்றன. இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி சதவீதம், தரம் ஆகியவை
அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் அதிகம். இதய
பாதிப்பு, சிறுநீரகம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை,
ரத்தக்குழாய் அடைப்பு உள்ளிட்ட பல நோய் பாதிப்புக்களுக்கு இந்தியாவில்
தரமான சிகிச்சை கிடைக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில்,
ஆண்டிற்கு ஒன்றரை லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவில் சிகிச்சை பெற
வருகின்றனர். இதில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், சென்னைக்கு
வருகின்றனர்.
பெயருக்கு கடும் எதிர்ப்பு! குறிப்பிட்ட விஷக்கிருமிக்கு "நியூ
டில்லி மெட்டலோ பேட்டா லாக்டமஸ் (என்டிஎம்-1)' என இந்தியாவின் தலைநகரை
குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டதற்கு, சுகாதாரத்துறை தனது கடும்
எதிர்ப்பை தெரிவித்துள்ளது. "இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயல்.
மருத்துவ சுற்றுலா மூலம் இந்தியாவிற்கு கிடைக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்
வருமானத்தை தடுக்கும் வகையில் தான் "சூப்பர் பக்' கிருமிக்கு என்.டி.எம்-1
என்று பெயரிட்பட்டுள்ளது. கிருமிகளை பரிசோதிக்காமலே, இங்கிலாந்து
ஆய்வாளர்கள் கருத்து கூறுவது கேலிக்கூத்தானது' என்று சுகாதாரத்துறை
விமர்சனம் செய்துள்ளது. "இதேபோன்ற சூப்பர் பக் கிருமிகள், அமெரிக்கா,
இஸ்ரேல், கிரீஸ் மற்றும் ஸ்காட்லாந்து என உலகின் பல்வேறு நாடுகளிலும்
உள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் உள்ள பிரபல மருந்து தயாரிப்பு
கம்பெனிகளான வெல்கம் டிரஸ்ட் மற்றும் வேத் என்ற இரண்டு நிறுவனங்களும்
இணைந்து, இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகின்றன என்றே கருத
வேண்டியுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
சுற்றுலா வருவாய் பாதிக்கும்! இந்தியாவில் ஏராளமான கலைநயம்
மிக்க பண்டைய கட்டடங்களும், நினைவுச் சின்னங்களும், கோவில்களும், இயற்கை
எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலங்களும், வரலாற்றுச் சின்னங்களும் உள்ளன.
குறிப்பாக, பழமையான கலாசார சின்னங்கள் தமிழகத்தில் அதிகம். வெளிநாட்டு
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல இடங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. ஒவ்வொரு
ஆண்டும் இந்தியாவிற்கு வரும் லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்,
தமிழகத்திற்கும் வந்து செல்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை
கவர்வதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழக
சுற்றுலா தலங்களுக்கு ஆண்டிற்கு மூன்று கோடியே 35 லட்சம் உள்நாட்டு,
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் மூலம்
இரண்டாயிரத்து 556 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. "மெடிக்கல் டூரிசம்'
பாதிக்கப்பட்டால் இந்த வருவாய் கிடைக்காது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum