TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழக மீனவர்களின் மூச்சும் கிருஷ்ணாவின் பேச்சும்

Go down

தமிழக மீனவர்களின் மூச்சும் கிருஷ்ணாவின் பேச்சும் Empty தமிழக மீனவர்களின் மூச்சும் கிருஷ்ணாவின் பேச்சும்

Post by leona Fri Aug 13, 2010 2:17 pm

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும், இப்படிப்பட்ட தாக்குதல்களை நிறுத்துமாறு சிறிலங்க அரசிற்கு இந்தியா எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ள பதில், உண்மையை மறைப்பதாகவும், பிரச்சனையை திசை திருப்புவதாகவும் உள்ளது.

“இந்திய இலங்கை கடல் எல்லையை மதிக்க வேண்டும் என்றும், தங்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு எல்லையைக் கடந்த சென்று மீன் பிடிக்காதீர்கள் என்றும் நமது மீனவர்களுக்கு உணர்த்த வேண்டும். குறிப்பாக சிறிலங்க அரசு அச்சுறுத்தல் நிறைந்த பகுதி என்று கருதும் கடல் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்” என்று அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவுரை கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சிறிலங்க அரசிற்கு கடிதங்களை எழுதியுள்ளதாகவும், ஆனால் இந்திய மீனவர்கள் மீது தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று பதிலளித்துள்ளதாகவும், மீனவர்கள் சர்வதேச எல்லையை மீறி செல்லும்போதுதான் (சிறிலங்க கடற்படையினரால்) சுடப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்!

இந்திய இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லையைக் கடந்து செல்லும் போது இந்திய மீனவர்கள் மீது தாங்கள் துப்பாக்கியால் சுடுவதை சிறிலங்க அரசு இந்திய அரசிடம் ஒப்புக்கொண்டுள்ளது கிருஷ்ணா கூறிய வார்த்தைகளில் இருந்தே புலனாகிறது. இந்த இடத்தில் இரண்டு கேள்விகள் எழுகிறது.

ஒன்று, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையைக் கடந்து சென்று மீன் பிடிக்கும் இந்திய (தமிழக) மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை துப்பாக்கியால் சுடுவது நியாயம்தானா?

இரண்டு, அவர்கள் எல்லை மீறி சிறிலங்க கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றபோதுதான் சுடப்பட்டார்கள் என்று சிறிலங்க அரசு கூறுவதைக் கேட்டுக் கொண்டு இந்திய அரசு உறுதி செய்கிறதா?

சிறிலங்க மீனவர்களை நமது கடற்படை சுடாதது ஏன்?

இந்தியா, இலங்கை இடையே, மன்னார் வளைகுடா பகுதியிலும், வங்க விரிகுடா கடலிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட (1974ஆம் ஆண்டு கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தின்படி) கடல் எல்லையைத் தாண்டிச் சென்று மீன் பிடித்த இந்திய மீனவர்கள் மீது தான் துப்பாக்கியால் சுட்டோம் என்று சிறிலங்க அரசு கூறுவதை ‘நியாயமான நடவடிக்கை’ என்று இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதென்றால், அதே எல்லையைக் கடந்து வந்து இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க வரும் சிங்கள மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் ஒருமுறை கூட சுடாதது ஏன்?

தமிழக (இந்திய) மீனவர்கள் எல்லையைக் கடந்து சென்று மீன் பிடிக்கும் போதுதான் சுடப்படுகிறார்கள் என்று அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா மட்டுமல்ல,. இதற்கு முன்பு அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியும் சொல்லியிருக்கிறார். இவர்கள் அனைவருமே எல்லைக் கடந்து சென்று மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களைத் தான் சிறிலங்க கடற்படை சுடுகிறது என்று கூறுவதோடு மட்டுமின்றி, எப்போதெல்லாம், அது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டாலும் இதே பதிலைத் தான் கூறுகிறார்கள். “நமது மீனவர்களை எல்லைக் கோட்டை கடந்த சென்று மீன் பிடிக்காதீர்கள்” என்று அறிவுரை கூறுமாறு பிரணாப் முகர்ஜி கூறினார். இப்போது எஸ்.எம். கிருஷ்ணா கூறுகிறார். வித்தியாசம் அவ்வளவே.

இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக உறுப்பினர் கனிமொழி, எல்லைத் தாண்டி வந்து மீன பிடிக்கும் சிறிலங்க மீனவர்கள் நாம் சுடுவதில்லையே, கெளரவாக நடத்துகிறோமே. அதுபோல் நமது மீனவர்களை ஏன் சிறிலங்க கடறபடை துப்பாக்கியால் சுடாமல் கெளரவமாக நடத்துவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நேரிடையாக பதில் சொல்லாத அமைச்சர் கிருஷ்ணா, விரைவில் இலங்கை செல்லப்போவதாகவும் அப்போது அதுபற்றிப் பேசுவதாகவும் கூறி மழுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்ல, சிறிலங்க கடற்படையினரால் ஒவ்வொரு முறையும் தாக்கப்படும் தமிழக மீனவர்கள், கரை திரும்பி முறையிடும் போதெல்லாம், இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி வந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று சிறிலங்க கடற்படையினர் மீது புகார் அளித்துள்ளார்கள். ஆனால் அது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படுவதில்லை. இதுவரை நடக்கவில்லை.

இதுகுறித்து ஒரு பொது நல வழக்கை வழக்கறிஞர் பா.புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்து, அது விசாரணைக்கு (மார்ச் 10, 2010இல்) வந்தபோது, மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில்
நேர் நின்ற வழக்கறிஞ்சர் எம். இரவீந்திரன் என்ன கூறினார் தெரியுமா?


“சர்வதேசக் கடற்பரப்பில் சென்று மீன் பிடிக்கும் போது தாக்கப்பட்டால் எதுவும் செய்ய முடியாது. இதற்காக சிறிலங்கா மீது படையெடுக்கவா முடியும்?” என்று ஏளமான கேட்டார். இந்தச் செய்தி வழக்கு நடந்த அன்றே தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தி்ல் வெளியிடப்பட்டது.

மத்திய அரசு வழக்கறிஞர் இவ்வாறு கூறியபோது தலையிட்ட, பா.புகழேந்தி சார்பில் நேர் நின்ற மூத்த வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஏன் நீதிமன்ற விசாரணை நடத்தப்படவில்லை என்றுதான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறினார். இதுதான் இந்திய மீனவர்களைக் காப்பாற்றும் டெல்லி அரசின் யோக்கிதை!

ஐ.நா.வின் சர்வதேச கடல் சட்டம் கூறுவதென்ன?

இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையைத் தாண்டுபோதுதான் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது (He said firing was done only when they crossed the international maritime border of Sri Lanka) என்று அமைச்சர் கிருஷ்ணா கூறுகிறாரே, அப்படியானால் அது உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையா?

மீனவர்களின் தொழில் மற்றும் பாரம்பரிய மீ்ன் பிடி உரிமை, நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைக்கோடு, அது சார்ந்த வணிக நடைமுறைகள் ஆகியன குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அளிக்கும் ஐ.நா.வின் கடல் சட்டம் (UN Law on Sea) என்ன கூறுகிறது?

கடல் எல்லையைத் தாண்டிச் செல்வது சமூக பொருளாதாரக் (civil economic offence) குற்றம்தான். ஆயினும் (அதன் பிரிவு 146இன் படி), இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் படைகள், மனித (மீனவர் என்று கொள்க) வாழ்வை பாதுகாக்கக் கூடிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு்ம் என்று கறுகிறது (Crossing the maritime boundary is a civilian economic offence. Article 146 of the U.N. Law of the Sea stipulates that ``measures will be taken to ensure effective protection of human life'').

எல்லையைக் கடந்து வந்து மீன் பிடிக்கும் அயல் நாட்டு மீனவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை அதே சட்டத்தின் பிரிவு 73 இவ்வாறு கூறுகிறது: “எல்லைக் கடந்து வந்து மீன் பிடிக்கும் மீனவர்களின் படகுகளில் இறங்கலாம், சோதனையிடலாம், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுகுக உட்படுத்தலாம் (Article 73 mentions that coastal states can take measures ``including boarding, inspection, arrest and judicial proceedings to ensure compliance with the laws and regulations'') என்று கூறுகிறது.

இதன்படியா சிறிலங்க கடற்படை நடந்துகொள்கிறது? “மீன் கிடைக்கும் இடத்திற்கு மீனவர் செல்வர்” (Fishermen go where the fish is) என்று அந்த சர்வதேசச் சட்டம் சொல்கிறது. இதை (எம்.கே.நாராயணன் அவரைச் சந்தித்தபோது) ராஜபக்ச கூட குறிப்பிடுகிறார்! “நான் மீன் வளத் துறை அமைச்சராக இருந்துள்ளேன், எனக்கு மீனவர்களின் நிலை தெரியும்” என்றும் கூறினார்.

இதனை என்றைக்காவது இந்தியா சிறிலங்க அரசிடம் கூறி, தமிழக மீனவர்களை ஏன் சுடுகிறாய் என்று கேட்டுள்ளதா? ஏன் கேட்கவில்லை. இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது தமிழக அரசிற்கோ புத்தியில்லை என்பதாலா? அல்லது தமிழ் மீனவர்களுக்கு என்று டெல்லி தனி ‘நியாயம்’ வகுத்துள்ளதா?

ஐ.நா.வின் கடல் சட்டத்திற்கு இணங்கவே எல்லையைத் தாண்டி மீன் பிடித்து மாட்டிக் கொள்ளும் இந்திய மீனவர்களை துன்புறுத்தாமல் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கிறது. பாகிஸ்தான் மீனவர்கள் எல்லைத் தாண்டி வரும் போது கைது செய்யும் இந்திய கடலோர காவற்படை அவர்களை கெளரவமாக நடத்துகிறது. அதே நேரத்தில் இந்திய கடல் பகுதிக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் போது அவர்களை நமது கடலோர காவற்படை பாதுகாக்கவும் செய்கிறது. இதில் தமிழக மீனவருக்கு மட்டும் என்ன விதிவிலக்கு? ஏன் தமிழக மீனவன் மட்டும் சுடப்பட்டால் மட்டும் சிறிலங்க குரலில் இந்தியாவின் அயலுறவு அமைச்சர்கள் பேசுகிறார்கள்?

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்காமல் நழுவி விடலாம். ஆனால் தமிழக மக்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு டெல்லி பதில் கூறியே ஆக வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நெருப்பை நெஞ்சில் கட்டிக்கொண்டு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவனுக்கு இந்த விவரங்கள் எல்லாம் இன்றைக்குத் தெரியாமல் இருக்கலாம். நாளை தெரியவரும்போது கொந்தளிப்பான். அப்போது, தமிழக மீனவனின் கடல் சார் உரிமைகளை ஒப்பந்தம் போட்டு அடகு வைத்த டெல்லியின் துரோகத்திற்கு ஒட்டுமொத்தமாக பதில் கிடைக்கும்.


-- யாகூ தமிழ் செய்தியில் இருந்து...
leona
leona
உதய நிலா
உதய நிலா

Posts : 38
Join date : 13/05/2010
Location : Tuticorin

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum