TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கோவை அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா உரை

Go down

கோவை அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா உரை Empty கோவை அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா உரை

Post by அருள் Tue Jul 13, 2010 6:17 pm

Last Updated :



கோவை அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா உரை Jj





கோவை,
ஜூலை 13- விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க
வலியுறுத்தி கோவையில் அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற கண்டன
ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா உரையாற்றினார்.
அவரது பேச்சு விபரம்:
கடந்த நான்கு ஆண்டு கால, தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாடு வளர்ச்சி
அடையவில்லை; தமிழ்மொழி வளர்ச்சி அடையவில்லை; தமிழர்களும் வளர்ச்சி
அடையவில்லை. "தமிழை வழக்காடு மொழியாக்கு" என்று கூறுபவர்கள், சிறையில்
அடைக்கப்படுகிறார்கள். கட்சி கொடி ஏற்றும் அதிமுகவினர் சிறையில்
அடைக்கப்படுகின்றனர். இது தான் தமிழ் நாட்டினுடைய இன்றைய நிலைமை.
இது தேர்தல் ஆண்டு. எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தலுக்கான அறிவிப்பு
வெளியிடப்படலாம். தமிழக மக்களாகிய நீங்கள், உங்களுடைய ஜனநாயகக் கடமையை
ஆற்ற இருக்கிறீர்கள். அது தான் உங்களது வாக்குரிமை. சரியான
வேட்பாளர்களுக்கு, சரியான அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கிறோமா, என்பதை
உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உணவு சமைப்பதற்குத் அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், மசாலா பொருட்கள்,
காய்கறிகள் தேவைப்படுகின்றன. இவற்றை சமைப்பதற்கு மண்ணெண்ணெய் அல்லது
சமையல் எரிவாயுவும் தேவைப்படுகிறது. இந்தப் பொருட்களின் விலைகள் எல்லாம்,
கடந்த நான்கு ஆண்டுகளில், இரண்டு முதல் மூன்று மடங்கு வரை ஏறிவிட்டன.

விவசாய
உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது ஏன்? பாசனத்திற்கு தண்ணீர் இல்லை. அண்டை
மாநிலங்களில் இருந்து நமக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. சில இடங்களில்
நிலத்தடி நீர் கிடைக்கின்றது. ஆனால், அந்த நிலத்தடி நீரை பம்பு மூலம்
இறைக்க மின்சாரம் இல்லை. மொத்தத்தில் விவசாயப் பணிகள் குறைந்துவிட்டன.
இதனால் விவசாய உற்பத்தியும் குறைந்துவிட்டது. விலைவாசியும் விஷம் போல்
ஏறிக் கொண்டே போகிறது.
விலைவாசி உயர்வதற்கு இரண்டாவது காரணம், பதுக்கல் தான். அத்தியாவசிய
உணவுப் பொருட்களின் விலையை ஏற்ற வேண்டும் என்பதற்காகவே, செயற்கை
பற்றாக்குறையை ஏற்படுத்துவதற்காக, இரக்கமற்றவர்கள் பதுக்கல்
நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது விலைவாசி உயர்விற்கு இரண்டாவது
முக்கிய காரணம் ஆகும். இவர்கள் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி,
கிடங்குகளில் சேமித்து வைக்கிறார்கள். இதன் விளைவாக, செயற்கை பற்றாக்குறை
ஏற்படுகிறது.
இதன் காரணமாக, அந்தப் பொருட்களின் விலைகள் உயர்கின்றன. இவ்வாறு விலை
உயரும் போது, பதுக்கி வைத்திருந்த பொருட்களை விற்பனை செய்து,
பதுக்கல்காரர்கள், மிகப் பெரிய லாபம் சம்பாதிக்கிறார்கள். இது போன்ற சமூக
விரோதச் செயல்களை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் திமுக-வைச்
சேர்ந்தவர்கள்.
மூன்றாவது பெரிய பிரச்சினை, ஆன்-லைன் வர்த்தகம். சில பணக்காரர்கள்,
கம்ப்யூட்டர் மூலம், பெருமளவிலான அத்தியாவசியப் பொருட்களை
வாங்குகிறார்கள். ஒரு சிறிய தொகையை முன்பணமாகக் கொடுத்து, ஐந்து முதல்
பத்து மடங்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களை, சேர்த்து வைத்துக்
கொள்கிறார்கள். சந்தை விலை உயர்ந்தவுடன், தங்கள் வசம் உள்ள பொருட்களை,
அதிக லாபத்திற்கு விற்று விடுகிறார்கள்.
அடிக்கடி பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த, மத்திய அரசு முடிவு
எடுப்பதில், திமுக மத்திய அமைச்சர்களுக்கும் பங்கு இருக்கிறது. பெட்ரோல்
மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்துவது, என முடிவு எடுக்கப்பட்ட,
மத்திய அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு, பேட்டி அளித்த மத்திய
பெட்ரோலியத் துறை அமைச்சர், இதற்கான கூட்டத்தில், திமுக அமைச்சர் மு.க.
அழகிரி கலந்து கொண்டார் என்றும், இந்த விலை உயர்விற்கு தி.மு.க. ஒப்புதல்
அளித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இன்று சென்னையைத் தவிர, தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளும், பல
மணி நேர மின்வெட்டிற்கு ஆளாக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் போதுமான அளவுக்கு
மின்சாரம் இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி, அவர்கள் கவலைப்படுவதே
இல்லை. இதன் விளைவாக, விவசாய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சிறிய
மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.
சிறிய, நடுத்தர தொழில்களே முடங்கி, நசுங்கிவிட்டன. இதனுடைய தாக்கம்,
திருப்பூர் ஜவுளித் தொழில் முதல், சிவகாசி அச்சுத் தொழில் வரை தெளிவாகத்
தெரிகிறது. வீட்டு வேலைகளை மேற்கொள்வதில், இல்லத்தரசிகளுக்கு மிகுந்த
சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகளால் படிக்க முடியவில்லை. இப்படி பல
உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
போலி மற்றும் காலாவதியான மருந்து விநியோக ஊழல் குறித்து, நீங்கள்
அறிவீர்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 42,000 மருந்துக் கடைகள் உள்ளன. இந்த
மருந்து கடைகளில் உள்ள இருப்புகளை கண்காணிக்க, அரசு சார்பில், வெறும் 52
மருந்து ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.
கோவை மாவட்ட மக்களின், முக்கிய கோரிக்கைகளான, கொப்பரைத் தேங்காய்க்கு
உரிய விலை, நூல் விலை உயர்வு பிரச்சினை, பஞ்சாலைத் தொழிலாளர்கள் பிரச்சினை
ஆகியவை குறித்து, அதிமுக ஆட்சி அமைந்தவுடன், உடனடியாக நடவடிக்கை
எடுக்கப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது உரையின்போது குறிப்பிட்டார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 160 அதிமுக வேட்பாளர்கள்: ஜெயலலிதா அறிவித்தார்
» 29-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» கொங்கு இளைஞர் பேரவைக்கு அதிமுக அணியில் ஓர் இடம்: ஜெயலலிதா
» அதிமுக கூட்டணி 135 இடங்கள்; அதிமுக மட்டும் 131 தொகுதிகள்; தனித்தே ஆட்சியமைக்கிறது அதிமுக!!
» அதிமுக கூட்டணி 165 இடங்கள்; அதிமுக மட்டும் 157 தொகுதிகள்; தனித்தே ஆட்சியமைக்கிறது அதிமுக!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum