TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பேரணியுடன் இன்று துவங்குகிறது செம்மொழி மாநாடு : ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் கோவையில் குவிந்தன

Go down

பேரணியுடன் இன்று துவங்குகிறது செம்மொழி மாநாடு : ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் கோவையில் குவிந்தன Empty பேரணியுடன் இன்று துவங்குகிறது செம்மொழி மாநாடு : ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் கோவையில் குவிந்தன

Post by ஜனனி Wed Jun 23, 2010 6:20 am

கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை "கொடிசியா' மைதானத்தில்
இன்று கோலாகலமாக துவங்குகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கவர்னர்
சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின்
உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
வரும் 27ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டினால், கோவையே விழாக்கோலம்
பூண்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள்
கோவையில் குவிந்துள்ளனர். "கொடிசியா' மைதானத்தில் இன்று காலை 10.30
மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்குகிறது. துணை முதல்வர்
ஸ்டாலின் வரவேற்கிறார். மாநாட்டு சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங்
பர்னாலா வெளியிட்ட பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி
பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு,
"கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கி கவுரவிக்கிறார்.பேராசிரியர்
அஸ்கோ பர்போலா ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ்
ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர்
வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி தலைமையுரையாற்றுகிறார்.
கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி
பிரதிபா பாட்டீல் தொடக்கவுரையாற்றுகிறார்.
மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழர் இலக்கியம்,
கலை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு
வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, அவினாசி ரோடு வழியாக சென்று,
மாநாட்டு வளாகத்தை அடைகிறது.அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பீளமேடு, கோவை
அரசு மருத்துவக் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில்
இருந்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர்
பார்வையிடுகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிநாட்டிலிருந்து
வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள்
பார்வையிட, அவினாசி சாலையில் பல இடங்களில் பார்வையாளர் மேடைகள்
அமைக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை வ.உ.சி.,
பூங்கா மைதானம் முதல் ஹோப் காலேஜ் வரை சாலையின் இரு பக்கங்களிலும் நின்று
கண்டுகளிக்கலாம்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்றிரவு கோவை வந்தார். கோவை சர்க்யூட்
ஹவுசில் தங்கியிருக்கும் அவர், இன்று காலை 10.30 மணிக்கு நடக்கும், மாநாடு
துவக்க விழாவில் கலந்து கொள்கிறார். துவக்க விழா, 11.40 மணிக்கு
முடிந்ததும், சர்க்யூட் ஹவுஸ் சென்று ஓய்வு எடுக்கிறார்.பின், மாலை 5.30
மணிக்கு, கோவை மருத்துவக் கல்லூரிக்கு வந்து, அங்குள்ள மேடையில் இருந்து,
"இனியவை நாற்பது' என்ற பெயரில் நடக்கும் மாநாட்டுப் பேரணியை கண்டு
களிக்கிறார். இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கோவை விமான நிலையம்
செல்கிறார். 7.25 மணிக்கு, விமானப்படை விமானம் மூலம் டில்லிக்கு
புறப்படுகிறார்.இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா,
கனடா, மொரீஷியஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள்
நேற்று காலை முதல் கோவை வரத்துவங்கினர். அவர்கள் தங்குவதற்கு நகரில் பல
ஓட்டல்கள் மற்றும் கல்லூரி விடுதிகளில், அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாநாட்டுக்கு முன்பே மக்கள் "படையெடுப்பு' : நேற்றே பல ஆயிரம்
மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து, மாநாட்டு வளாகத்தை பார்வையிட்டனர்.
அவினாசி சாலை முதல் மாநாட்டு மேடை அமைந்துள்ள பொது அரங்க வளாகம் வரை சாலை
நெடுகிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக நடந்து சென்று அலங்கார
வேலைப்பாடுகளுடன் கூடிய அரங்கங்களை பார்வையிட்டனர். மாநாட்டை முன்னிட்டு,
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலரும் குடும்பத்துடன்
வந்திருந்தனர். போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநாடு துவங்கும்
முன்பே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், வந்து சென்றுள்ளனர். இதனால்,
மாநாட்டின் போது பல லட்சம் மக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது'
என்றார்.
10 அடிக்கு ஒரு போலீஸ்:அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு செல்லும்
அவினாசி சாலையின் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 1,000 போலீசார்
நியமிக்கப்பட்டுள்ளனர். பத்து அடிக்கு ஒரு போலீஸ் வீதம் சாலையின் இரு
புறங்களிலும் நேற்று காலை முதலே நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி,
முதல்வர், துணை முதல்வர், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள் அணிவகுப்பை
பார்வையிடுவதற்கான மேடைகள் தோறும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமையில்
துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநாட்டு பொதுஅரங்க
வளாகத்தை அடுத்துள்ள, "கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்துக்கும் பலத்த
போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்குதான், ஆய்வரங்கம், முகப்பரங்க
பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும்
சிறப்பு பொழிவரங்க நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள்,
ஆய்வாளர்கள் உட்பட 4,600 பேர் பங்கேற்கின்றனர். இவ்வளாகத்துக்குள்,
பங்கேற்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தவிர பிறருக்கு அனுமதியில்லை.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐதராபாத்தில் இன்று துவங்குகிறது மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று நிறைவு
» உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கொண்டாடுவோரின் கவனத்திற்கு இச்செய்தியினை எடுத்துச்செல்லுங்கள்
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!
» நடப்பது செம்மொழி மாநாடு; மது எதற்கு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum