TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கிணறு தோண்டப்போய்...

Go down

கிணறு தோண்டப்போய்... Empty கிணறு தோண்டப்போய்...

Post by ஜனனி Wed Jun 16, 2010 6:49 am

Last Updated :



கிணறு தோண்டப்போய்... Editorialimg





விஞ்ஞான
வளர்ச்சி, மனிதனின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி
இருப்பதுடன், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிந்தித்துக்கூடப் பார்த்திராத
சாதனைகளைப் படைத்திருக்கிறது. வளர்ச்சி என்கிற பெயரிலும், நாகரிகம் என்கிற
போர்வையிலும், 21-ம் நூற்றாண்டு மனிதன் படைத்திருக்கும் சாதனைகள்
அளப்பரியது, சந்தேகம் இல்லை.ஆனால், விஞ்ஞான வளர்ச்சியும், நவநாகரிக
உலகின் மாற்றமும், சமீபகாலமாக இயற்கையைச் சீண்டி விளையாட முற்படுகின்றனவோ
என்று தோன்றுகிறது. இயற்கையின் சீற்றங்கள் தன்னை வென்றுவிட நினைக்கும்
மனிதகுலத்தின்மீது மட்டும் தாக்குதல் நடத்தினால் பரவாயில்லை. இந்த உலகில்
வாழும் இதர அப்பாவி உயிரினங்களையும் அல்லவா பழிவாங்கி விடுகிறது. அதுதான்
வேதனையளிக்கிறது.வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்களது வாழ்க்கை
வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகப் பல கண்டுபிடிப்புகளை விஞ்ஞானத்தின்
உதவியுடன் மேற்கொண்டு அதன் பயனையும் அனுபவிப்பதில் தவறில்லை. ஆனால்,
அவர்களது முயற்சிகளுக்குச் சம்பந்தா சம்பந்தம் இல்லாத பின்தங்கிய நாடுகள்
பலியாவது என்பது என்ன நியாயம்? ஆப்பிரிக்கக் கடற்கரைகள் இதுபோல அடிக்கடி
எண்ணெய்க் கசிவுகளால் அவதிப்படுவது வழக்கமாகிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளில்
நைஜீரிய நாட்டுக் கடற்கரைகள் 9,000 தடவைகள் இந்தப் பேராபத்தை
எதிர்கொண்டிருக்கின்றன. வெள்ளைக்கார நாடுகளில் வாழும் மக்களின் தேவைகளைப்
பூர்த்திசெய்ய கறுப்பர் இனமக்களின் வாழ்வாதாரங்கள் பரிசோதனைக் களனாகின்றன.கடந்த
ஏப்ரல் மாதம் 20-ம் தேதி மெக்சிகோ வளைகுடாவில் பிபி (ஆட) எரிசக்தி
நிறுவனத்தின் ஆழ்கடல் துளை இயந்திரம், எண்ணெய்க் கிணறு ஏதாவது கிடைக்கிறதா
என்பதற்காகத் துளையிடும்போது, கடலுக்கு அடியில் இருந்த எண்ணெய்க் கிணறு
ஒன்று வெடித்துச் சிதறியது. உள்ளே இருந்து கச்சா எண்ணெய் பீச்சி அடிக்கத்
தொடங்கிவிட்டது. ஆழ்கடலில் நடந்த இந்த விபரீதத்தால் கடலெல்லாம்
பிசுபிசுவென்று கச்சா எண்ணெய்.ஏறத்தாழ 60 நாள்களாகியும் இன்னும்
அந்த வெடித்துச் சிதறிய எண்ணெய்க் கிணற்றை முழுமையாக மூடி, கச்சா
எண்ணெய்க் கசிவைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவிக்கிறார்கள் தொழில்நுட்ப
வல்லுநர்கள். கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பிய கதையாகி விட்டிருக்கிறது
பிபி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணற்றுப் பேராசை!நாளொன்றுக்கு பத்து
லட்சம் கேலன்கள் கச்சா எண்ணெய் அந்தக் கிணற்றிலிருந்து கடலில் கலந்து
கொண்டிருக்கிறது. கடந்த முறை 1979-ல் இதே மெக்சிகோ வளைகுடாவில், எண்ணெய்க்
கிணற்றைக் கண்டுபிடிக்க நடந்த ஆழ்கடல் துளையிடும் முயற்சியால் ஒரு கிணறு
வெடித்துச் சிதறியதில் ஏறத்தாழ 140 மில்லியன் கேலன்கள் எண்ணெய் கடலில்
கலந்ததாகத் தெரிகிறது. எண்ணெய் வெளியேறுவதைத் தடுக்கப் பத்து மாதங்கள்
பிடித்தன என்று கூறுகிறார்கள்.இதனால் அந்த நிறுவனத்துக்கு ஏற்படும்
நஷ்டம், மக்களுக்கு ஏற்படும் அவதி போன்றவை எல்லாம்கூட இரண்டாம்பட்சம்.
கடல்வாழ் உயிரினங்களும், கடல்சார்ந்த பறவை இனங்களும் படும் அவதி இதயத்தைப்
பிழிகிறது. கடல் மட்டத்துக்கு 1,500 மீட்டர் கீழே வெடித்துச்
சிதறியிருக்கும் அந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து வெளியேறிக்
கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் கடல்மீது படர்ந்து, கரைநோக்கி நகர்ந்து, ஒரு
கச்சா எண்ணெய்க் கம்பளமே விரிந்துவிட்டிருக்கிறது.கடலில் வாழும்
டால்பின் மீன்களின் கண்களில் எண்ணெய் படர்ந்து முதலில் அவற்றைக்
குருடாக்குகிறது. மீன்களும் ஏனைய கடல்வாழ் பிராணிகளும் கண்களை
மூடித்திறக்க முடியாமல் போவதுடன், இந்த எண்ணெயிலிருந்து வெளிப்படும்
நெடியால் அந்த நுண்ணிய பிராணிகளின் நுரையீரல்களும் தாக்கப்பட்டு
மடிகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மடிந்துபோன டால்பின்களின் எண்ணிக்கையே
கணக்கிலடங்காது என்றால், இதர மீன்கள், நண்டுகள் போன்ற கடல்வாழ் பிராணிகள்
எந்த அளவுக்குப் பலியாகி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.பெலிகன்
என்கிற பறவை, அமெரிக்கக் கடற்கரை ஓரங்களில் மிகவும் அதிகமாகக்
காணப்படுபவை. இவை கடலில் வாழும் மீன்களை உண்டு உயிர் வாழ்பவை. எண்ணெய்ப்
படலம் இந்தப் பறவைகளைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது. கடற்கரை ஓரமாக
இருக்கும் சதுப்பு நிலங்களில் உள்ள புல்களில் முட்டையிட்டுக் குஞ்சு
பொரிப்பவை இந்தப் பெலிகன் பறவைகள். அங்கே எல்லாம் கச்சா எண்ணெய்
படர்ந்திருப்பது தெரியாமல் வந்து அமர்ந்துவிடும் பெலிகன் பறவைகளின்
இறகுகளில் எண்ணெய் அப்பிக்கொண்டு விடுகின்றன. பிறகு பறக்கவும் முடியாமல்,
நகரவும் தெரியாமல் பரிதவித்து உயிரை விட்டிருக்கும் பெலிகன் பறவைகள்
ஆயிரம் ஆயிரம் என்கிறது மெக்சிகோவிலிருந்து வரும் செய்திகள்.கடற்கரையிலிருந்து
ஒரு சில மைல்கள் தூரத்துக்கு எண்ணெய்ப் படலம் கடலில் காணப்படுகிறது. இதை
எதிர்கொள்ள அரசு நடத்தும் முயற்சிகள் எதுவும் பலித்ததாகத் தெரியவில்லை.
சில நூறு பெலிகன் பறவைகளைக் காப்பாற்றியதுதான் அதிகபட்ச சாதனை என்று சொல்ல
வேண்டும். அமெரிக்கா இதுவரை சந்தித்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு
இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.எங்கேயோ நடக்கிறது, நமக்கென்ன
கவலை என்று நாம் இருந்துவிட முடியாது. அடுத்தவர்களின் அனுபவத்திலிருந்து
படிப்பவன்தான் அறிவாளி. அதீத விஞ்ஞான வளர்ச்சியும், கட்டமைப்பு வசதிகளும்
மேலோட்டமாகப் பார்த்தால் பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் தருமே தவிர,
விபத்துகள், சோதனைகள் என்று ஏற்படும்போது அதன் விளைவுகள் விவரிக்க முடியாத
வேதனைகளாகவும் இருக்கும் என்பதை நாம் மறந்துவிட முடியாது.ஒருபுறம்,
மனித சமுதாயத்தின் வருங்காலத்தையே பூண்டோடு அழிக்கவல்ல அணுசக்தியுடன்
விளையாடி, நமது பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்து
கொள்ள விழைகிறோம். இன்னொருபுறம், நாளும் அதிகரித்துவரும் பெட்ரோலியத்
தேவைகளுக்காக ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி விடைகாண முயல்கிறோம்.முதலில்,
நமது பேராசைத் தேவைகளுக்காக அளவுக்கு அதிகமான முயற்சிகளை மேற்கொண்டு
அலைவதை நிறுத்த வேண்டும். மனித இனம் தனது எரிசக்தித் தேவைகளை எப்படிக்
குறைத்துக் கொள்வது என்பதை ஆராய்ந்து செயல்படத் துணியாவிட்டால், நாமும்
டால்பின்கள் மற்றும் பெலிகன்கள் படும் அவஸ்தைக்குத் தயாராக
வேண்டியிருக்கும். நாமாக இல்லையென்றால், நமது சந்ததியினர் அந்தத்
துன்பத்தைச் சந்திக்க நேரிடும்.விஞ்ஞானம் இதற்கும் ஒரு விடை
கண்டுபிடிக்கும் என்று அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டு மேலும் மேலும்
ஆபத்தின் தீவிரத்தை அதிகரிப்பதைவிட, விஞ்ஞானத்தை நமது அடிப்படைத்
தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதுடன் நிறுத்திவிட்டு, இயற்கையோடு இயைந்த
வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க முயல்வதுதான் புத்திசாலித்தனம். சுகங்களை
நாம் அனுபவித்துவிட்டு நாளைய சந்ததியினரை விபரீதங்களுக்கு உள்படுத்த
நமக்கு உரிமையில்லை!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum