TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வயிற்றுவலி… ஏன் வருகிறது… எப்படி சரிசெய்வது?

Go down

வயிற்றுவலி… ஏன் வருகிறது… எப்படி சரிசெய்வது? Empty வயிற்றுவலி… ஏன் வருகிறது… எப்படி சரிசெய்வது?

Post by Tamil Sun Jun 05, 2016 8:56 pm

வயிற்றுவலி… ஏன் வருகிறது… எப்படி சரிசெய்வது?
வயிற்றுவலி
நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். அந்த வகையில், தொடர்ந்து நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்துவரும் ‘நோய்நாடி’ பகுதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் எதிர்கொண்டு வரும் வயிற்றுவலி பிரச்னை குறித்த மருத்துவ விளக்கங்களை நம்மிடம்
பகிர்ந்துகொள்கிறார், சென்னை, அப்போலோ மருத்துவமனையின் ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ரவீந்திரன் குமரன்.
‘‘உணவுக்குழல் முதல் ஆசன வாய் வரை உள்ள பகுதியை ஜீரண மண்டலம் என்றும் வயிற்றுப் பகுதி என்றும் சொல்லலாம். இதில் உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், ஆசனவாய் போன்ற முக்கிய உறுப்புகளும்… கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற சார்ந்த உறுப்புகளும் இருக்கின்றன. இவை தவிர சிறுநீரகம், பெண்களுக்கு கர்ப்பப்பை, சினைமுட்டைப்பை போன்றவையும் இருக்கும். சாப்பிட்ட உணவை ஜீரணித்து வெளியேற்றுவது மட்டும்தான் வயிற்றின் வேலை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதைத் தாண்டி, உடலில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருப்பது, தேவையற்ற பொருட்களை உடலுக்குள் தங்கவிடாமல் கழிவாக மாற்றி வெளியேற்றுவது உள்ளிட்ட இன்னும் பல வேலைகளும் அதன் பொறுப்பு. அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அதை வெளிப்படுத்தும் அறிகுறியே வயிற்றுவலி என்பதால், அதை கவனிக்காது விட்டுவிடாமல் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்’’ என்ற வலியுறுத்தலுடன் விளக்கங்களைத் தொடர்ந்தார் டாக்டர்.

சாதாரண வயிற்றுவலி… சிக்கலான வயிற்றுவலி!
“சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும், எப்போதும் வயிற்றுவலி வரலாம். அது சாதாரண வலியா, உடனடியாக கவனிக்க வேண்டிய அளவுக்கு ஆபத்தானதா என்பதை, சம்பந்தப்பட்டவர் முதற் கட்டமாக தன் உடலின் சுயமதிப்பீட்டால் அறிந்து கொள்ளலாம். சாதாரண வயிற்றுவலி எனும்போது, சாப்பிடாமல் இருப்பது, நேரத்துக்குச் சாப்பிடாதது, கெட்டுப்போன உணவை சாப்பிடுவது, அதிகமாக சாப்பிடுவது, பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வருவது… என வயிற்றுவலிக்கான காரணம் நமக்கே தெரியும். ஆனால், இப்படி எந்தக் காரணத்தையும் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாத சூழலுடன், வயிற்றுவலி பொறுக்க முடியாததாகவும், காய்ச்சல், வாந்தி என அதனுடன் மற்றும் சில பிரச்னை களும் சேர்ந்து வெளிப்பட்டால், அது ஆபத்தான கட்டம் என்று சுதாரிக்க வேண்டும். உதாரணமாக…
[You must be registered and logged in to see this image.] குறிப்பிட்ட ஓர் இடத்தில் தொடர்வலி ஏற்படுவது
[You must be registered and logged in to see this image.] அன்றாட வேலைகள் செய்வதில் சிரமம் ஏற்படும் அளவுக்கு வலி உண்டாவது
[You must be registered and logged in to see this image.] ரத்த வாந்தி
[You must be registered and logged in to see this image.] 12 மணி நேரத்தில் 20 தடவைக்கு மேல் வாந்தி
[You must be registered and logged in to see this image.] மிக அதிக காய்ச்சல்
[You must be registered and logged in to see this image.] தார் நிறத்தில் (கருமையான) மலம் கழிப்பது
[You must be registered and logged in to see this image.] மிகமோசமான துர்நாற்றத்துடன் கூடிய மலம்
[You must be registered and logged in to see this image.] ஒருநாளில் 10 தடவைக்கு மேல் மலம் கழிப்பது உள்ளிட்ட இன்னும் பல.
இந்த அறிகுறிகள் தென்பட்டால், பித்தப்பை கற்கள் தொடங்கி வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்வரை அதற்குக் காரணமாக இருக்கலாம். எனவே, காலம் கடத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். தாமதம் செய்யும் ஒவ்வொரு மணித்துளியிலும், வயிற்றுக்குள் ஆபத்து வளர்ந்துகொண்டே இருக்கும்… எச்சரிக்கை.
வயிற்றுவலி தரும் சில அபாய எச்சரிக்கை!
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] பித்தப்பை கற்கள்
[You must be registered and logged in to see this image.] பித்தக்குழாய் கற்கள்
[You must be registered and logged in to see this image.] நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னைகள்
[You must be registered and logged in to see this image.] தொடர் கணைய அழற்சி
[You must be registered and logged in to see this image.] பெருங்குடல் அழற்சி
[You must be registered and logged in to see this image.] சிறுகுடல் சுருக்கம்
[You must be registered and logged in to see this image.] வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்
[You must be registered and logged in to see this image.] வயிற்றுப் புண் (அல்சர்)
குடல் வால்… என வயிற்றுவலிக்கான காரணப் பட்டியல் மிக நீண்டது. அதாவது, வயிற்றில் உள்ள பல உறுப்புகளில் எது பாதிக்கப்பட்டாலும் வயிற்றில் வலி வரலாம்.
சோதனை முறைகள்! 
[You must be registered and logged in to see this image.] சாதாரண ரத்தப் பரிசோதனை
[You must be registered and logged in to see this image.] சாதாரண சிறுநீர் பரி சோதனை
[You must be registered and logged in to see this image.]
 அல்ட்ரா சவுண்ட் பரி சோதனை
[You must be registered and logged in to see this image.] வாய்வழியாக டியூப் செலுத்தி மேற்கொள்ளப்படும் எண்டோஸ்கோபி (Endoscopy) பரிசோதனை
[You must be registered and logged in to see this image.] ஆசனவாய் வழியாக டியூப் செலுத்தி மேற்
[You must be registered and logged in to see this image.] கொள்ளப்படும் கொலனோஸ் கோபி (Colonoscopy) பரிசோதனை
[You must be registered and logged in to see this image.] சி.டி ஸ்கேன்
[You must be registered and logged in to see this image.] எம்.ஆர்.ஐ
[You must be registered and logged in to see this image.] காம்ப்ளிகேட்டட் ரத்த பரிசோதனை உள்ளிட்ட இன்னும் பல சோதனை முறைகள் உள்ளன.
இவற்றில் முதல் மூன்று சோதனை முறைகளிலேயே 99% சதவிகிதம் வயிற்றுவலிக் கான காரணம் கண்டறியப் பட்டுவிடும். அறுதியிட்டுச் சொல்ல முடியாத அந்த 1% காரணத்தை, மற்ற சோதனை முறைகள் மூலமாகவே கண்டுபிடிக்க முடியும்.
சிகிச்சை முறைகள்!
நோயின் வீரியத்தைப் பொறுத்து மாத்திரை, மருந்துகள் தொடங்கி பல நவீன சிகிச்சைகள் வரை அளிக்கப்படுகின்றன. 25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஓபன் அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டு வந்தது. ஆனால், வாய்வழியாக டியூப் கொண்டு செய்யப்படும் எண்டோஸ்கோபி (Endoscopy), வயிற்றுப்பகுதியில் மிகச் சிறிய துவாரம்போட்டு மேற்கொள்ளப்படும் லேபரோஸ்கோபி (Laparoscopy) என இன்று எவ்வளவோ தொழில்நுட்ப வசதிகள் மருத்துவத்தில் வந்துவிட்டன. வயிற்றில் வலி என்று உணர்ந்த பிறகு, ‘இன்னும் ரெண்டு நாள் பார்த்துட்டு அப்புறம் டாக்டர்கிட்ட போகலாம்’ என்று காலம் தாழ்த்தாமல், உடனடியாக சிகிச்சைக்கு விரையும் போது பாதிப்புகளும் அந்தளவுக்குத் தவிர்க்கப்படும்.
தற்காப்பு நடவடிக்கைகள்!
[You must be registered and logged in to see this image.]
 ஒரே சத்து நிறைந்த உணவை தொடர்ந்து எடுத்துக்கொள்வதை தவிர்த்து, சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறி, கீரை, பழங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, நம் பகுதியில் விளையும் பழங்களும், சீஸனல் பழங்களும் மிகவும் சிறந்தவை.
[You must be registered and logged in to see this image.] தேவைக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
[You must be registered and logged in to see this image.] தேவையான உடற்பயிற்சி அவசியம்.
[You must be registered and logged in to see this image.] தினமும் இரண்டு லிட்டர் சிறுநீர் கழிக்கும் அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
 பிரசவத்துக்குப் பிறகும் பெண்கள் தங்கள் எடை விஷயத் தில் கூடுதல் அக்கறையோடு இருக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.] குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பின்பற்ற வேண்டும்.
தெற்கு ஆசியர்களுக்கு சாதாரணமாகவே வயிற்றுப் பகுதியில் எடைபோடும் தன்மை கூடுதலாக இருப்பதால், அதைக் கட்டுக்குள் வைத்திருக்கும் விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கம், மது, புகை, துரித உணவுகள் தவிர்ப்பது போன்றவை வயிற்றுக்கு அரணாக அமையும் பழக்கவழக்கங்கள்.
[You must be registered and logged in to see this image.]
உடலின் மிக முக்கியப் பகுதி யான வயிற்றின் ஆரோக்கியம் என்பது, உயிருக்கான கவசம்!’’
– விளக்கங்களுடன் விழிப்பு உணர்வும் தந்து நிறைவு செய்தார், டாக்டர் ரவீந்திரன் குமரன்.



எச்சரிக்கைகள்!
[You must be registered and logged in to see this image.] சில சமயங்களில் வயிற்று வலியோடு நெஞ்சு எரிச்சலும் இருக்கும். மனஉளைச்சல், அதிகமாக காரம் சாப்பிடுவது போன்றவை இதை ஏற்படுத்தலாம்.

[You must be registered and logged in to see this image.] உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு பித்தப்பை கற்கள் முக்கியக் காரணமாக இருக்கலாம்.
[You must be registered and logged in to see this image.] பசி இல்லாத தன்மை மற்றும் மாதக்கணக்கில் நீடிக்கும் வயிற்றுவலிக்கு புற்றுநோய் காரணமாக இருக்கக்கூடும். மேலும், மலக்குடலில் ஏற்படும் புற்றுநோய் காரணமாக வயிற்றுவலி, மலத்தில் ரத்தம் வெளியேறுதல் மற்றும் வயிற்றுப் பெருக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
[You must be registered and logged in to see this image.] சர்க்கரை நோய் உள்ளிட்ட வேறு ஏதேனும் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வரக்கூடிய வயிற்றுவலியின் காரணமும், பாதிப்பின் தன்மையும் அதிகமாக இருக்கக்கூடும். அதனால் உடனடி சிகிச்சை முக்கியம்.
குழந்தைகள், வயோதிகர்கள்… எக்ஸ்ட்ரா கேர் ப்ளீஸ்!
[You must be registered and logged in to see this image.]
தொடர் வயிற்றுவலி + வாந்தி + பேதி அதிகமாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ‘குடும்ப டாக்டர்/தெரிந்த டாக்டர் ஊர்ல இல்லை, நாளைக்குதான் வருவார்’ என்பது போன்ற அசட்டுக் காரணங்கள் கூடாது. சாதாரண ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்டு வயிற்றுவலியால் துடித்த குழந்தைகள், உரிய நேரத்தில் சிகிச்சை கொடுக்கப்படாததால் இறந்த சம்பவங்கள் உள்ளன. அதேபோல, சர்க்கரை நோயாளிகளின் வயிற்றுவலிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாதபோது, உயிரிழப்புவரை அழைத்துச் செல்லக்கூடும். குழந்தைகள், பெரியவர்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
[You must be registered and logged in to see this link.]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum