TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புறக்கணித்த ஜெ. – வேதனையில் தலைவர்கள்!

Go down

புறக்கணித்த ஜெ. – வேதனையில் தலைவர்கள்! Empty புறக்கணித்த ஜெ. – வேதனையில் தலைவர்கள்!

Post by Tamil Sun Apr 10, 2016 7:32 am

புறக்கணித்த ஜெ. – வேதனையில் தலைவர்கள்!
வேதனை
தவிப்பில் வாசன்… வெறுப்பில் வேல்முருகன்… சோகத்தில் சேதுராமன்…
தனிக்கட்சி தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க-வை சாஃப்ட் கார்னரில் வைத்திருந்த ஜி.கே.வாசன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே அ.தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்துவந்த வேல்முருகன் ஆகியோருக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள் வேறு கூட்டணிக்குப் போகலாமா, அ.தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியல் திருத்தங்களுக்காகக் காத்திருக்கலாமா என்று குழப்பத்தில் தவிக்கின்றனர்.
காத்திருந்து… காத்திருந்து…
த.மா.கா ஆரம்பித்தபோதே இதன் பின்னணியில் ஆளும் கட்சியின் கைங்கர்யம் இருந்ததாகச் செய்திகள் வெளியாகின. எனவே, கூட்டணிக்காக அ.தி.மு.க தலைமையின் அழைப்புக்காகக் காத்துக் கிடந்தார் வாசன்.
அ.தி.மு.க-விடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திய வாசன், 25 தொகுதிகள்வரை எதிர்பார்த்தாராம். கூட்டணி பேரம் நடந்து கொண்டிருந்த நிலையில், த.மா.கா-வுக்கு தென்னந்தோப்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. வாசனின் தனிச் சின்னம், அதிக தொகுதிகள் என்பதை ஜெ. ஏற்க மறுத்துவிட்டார். அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன், வாசன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஞானதேசிகன், ஞானசேகரன் ஆகிய மூவரும், அ.தி.மு.க கூட்டணியில்தான் சேர வேண்டும் என்பதில், பிடிவாதமாக இருக்கிறார்களாம்.
புறக்கணித்த ஜெ. – வேதனையில் தலைவர்கள்! %E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF
‘‘இரட்டை இலை சின்னமாக இருந்தாலும் பரவாயில்லை; கொடுப்பதைக் கொடுக்கட்டும். நாம் சந்திக்கும் முதல் தேர்தல் இது’’ என, வாசனிடம் அ.தி.மு.க ஆதரவு தலைவர்கள்  வற்புறுத்தி வருகிறார்களாம். தி.மு.க-விலிருந்து வாசனுக்குக் காய் நகர்த்தினாலும் அவர் தி.மு.க பக்கம் போக வேண்டாம் என நினைத்திருந்தார். இப்போதோ நெருக்கடியில் இருக்கிறார் வாசன். மக்கள் நலக் கூட்டணி இரண்டாம் கட்ட இலக்காக இருந்தாலும் அது நமக்குப் பலனளிக்குமா என்றும் யோசனையில் இருக்கிறாராம். வாசன் உடன் இருக்கும் முக்கியத் தலைகளே அணி மாற வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கழட்டிவிடப்பட்ட கொங்கு!
பெஸ்ட் ராமசாமியின் கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கடந்த 2011-ல் தி.மு.க கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தமுறை அ.தி.மு.க கூட்டணியில் 3 சீட் கிடைத்தாலும் பரவாயில்லை என நினைத்தாராம் பெஸ்ட் ராமசாமி. கோவையில் மாநாடு எல்லாம் நடத்தினார். ஆனாலும், ஒன்றும் இல்லை என கதவடைத்துவிட்டது கார்டன். இதேபோல் இவருடன் ஒன்றாக இருந்து ‘ஈகோ’ பிரச்னையால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை ஈஸ்வரன் தொடங்கினார். அவருக்குப் பின் நாகராஜ், கொங்கு நாடு ஜனநாயகக் கட்சி என்று கட்சி ஆரம்பித்தார். தனியரசுவுக்கு அ.தி.மு.க-வில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டல கட்சிகள் சிதறிப் போயுள்ள நிலையில் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இருப்பதால், ராமசாமிக்கும், ஈஸ்வரனுக்கும் தாரைவார்த்துக் கொடுக்க முடியாது எனக் கறார் காட்டியதாம் கார்டன்.
கழுத்தறுத்த அ.தி.மு.க.!
கடந்த சில வாரங்களுக்கு முன் வேல்முருகனை சந்தித்த ஜெயலலிதா, உங்கள் செல்வாக்குத் தெரியும் என உறுதியளித்தாராம். இதனை அடுத்துப் பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருந்தவேளையில் ஐந்து, நான்கு, இரண்டு என தொகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்திருக்கிறது. நெய்வேலி தொகுதி மட்டும் வழங்கினால் வெற்றி உறுதி என நினைத்திருந்த வேளையில், வேட்பாளர் பட்டியலில் தொகுதி ஒதுக்கீடு இல்லாததால், நம்பவைத்து கழுத்தறுத்துட் டாங்கய்யா என வேல்முருகன் புலம்பியிருக்கிறார். சென்னையில் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, வாக்கெடுப்பு நடத்தினார். அதில் பெரும்பாலான நிர்வாகிகள் தி.மு.க-வுக்குப் போகவேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்தார்களாம். வேல்முருகன் எப்படியாவது தேர்தலில் நின்று அ.தி.மு.க-வை வீழ்த்த வேண்டும். நெய்வேலியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறாராம்.
வெயிட்டிங் லிஸ்ட்!
ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த கதிரவன், ஜெயலலிதாவிடம் ஐந்து தொகுதிகளைக் கேட்டாராம். ஆனால், ஃபார்வர்டு பிளாக் கட்சி இரண்டாகப் பிரிந்து இருக்கிறது என்பதால், முதல்வர் யோசித்தாராம். திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளையாவது தாருங்கள் என்று கேட்டு ஜெ.-வின் அறிவிப்புக்காகக் காத்திருந்தார் கதிரவன். மதுரை கிழக்குத் தொகுதியைத் தர ஜெ. தயாராக இருந்தாராம். ஆனால், உசிலம்பட்டிதான் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் கதிரவன். அதேநேரத்தில் தி.மு.க-வுடன் அவர் பேச்சுவார்த்தையைத் தொடங்கியதாக கார்டனுக்குத் தகவல்கள் போக, கதிரவன் வெயிட்டிங் லிஸ்ட்டுக்குப் போனார்.
இன்னமும் நம்பிக்கை!
2001 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் ஜான் பாண்டியன். சிறையில் இருந்தவர் சில வருடங்களுக்கு முன் விடுதலையானார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தபோது, சட்டமன்றத் தேர்தலில் தருகிறோம் என உறுதியளித்ததாம் கார்டன் வட்டாரம். கடந்த 2-ம் தேதி ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய ஜான் பாண்டியன், கிருஷ்ணராயபுரம், துறையூர், சங்கரன்கோயில், ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், நிலக்கோட்டை, பரமக்குடி உள்ளிட்ட 10 தனித்தொகுதிகளையும் நன்னிலம், முசிறி, நாங்குனேரி, ராஜபாளையம் உள்பட ஆறு பொதுத்தொகுதிகளையும் கேட்டிருக்கிறார். ஒரு சீட்டுதான் தரமுடியும் எனச் சொல்லப்பட்டதாம். கடுப்பான ஜான் பாண்டியன், அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். கடைசியில் வாசுதேவநல்லூர் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாராம்.
செல்வாக்கு சரிந்ததா?
சரத்குமார் கூட்டணியை விட்டுப் போனபோது, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனர் டாக்டர் சேதுராமன், ‘‘தென்மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு நாங்கள் இருக்கிறோம். அ.தி.மு.க அணியில் நீடிப்போம்” என அறிவித்தார். “5 முதல் 8 தொகுதிகளை
அ.தி.மு.க-விடம் கேட்டுள்ளோம். 5 இடங்கள் கிடைக்கும்” என்றார். ஆனால், ஒன்றுகூடக் கிடைக்கவில்லை. காரணம் சேதுராமன் குடும்பத்தில் அண்ணன் – தம்பிக்குள்ளேயே பிரச்னை அதிகமாக உள்ளதாம். அதுமட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் டாக்டர் சேதுராமனுக்கு செல்வாக்கு சரிந்துள்ளதாம். இதனாலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவருக்கு வழங்க இருந்த ஒரு சீட் ஆதரவு தெரிவிக்கப்போன முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனர் நடிகர் கருணாஸுக்குத்  கொடுக்கப்பட்டதாம்.

பாராட்டு விழாவும் பலனில்லை!
புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி, அரக்கோணம் எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் அரக்கோணம் தொகுதியைக் கேட்டார். ஆனால், அவருக்கு மதுராந்தகம் தொகுதியை ஜெ. ஒதுக்கினாராம். ஜெகன்மூர்த்தி இதை ஏற்காததால், அவருக்குப் பதில்
செ.கு.தமிழரசனுக்குக் கொடுத்துவிட்டார்கள். இதனால் ஜெகன்மூர்த்தி என்ன செய்வதெனத் தெரியாமல் தவிப்பில் இருக்கிறார்.

ஸ்ரீதர் வாண்டையாருக்கு மன்னார்குடி வகையறாக்கள் உறவு முறை என்பதால், ஆரம்பகாலத்தில் இருந்தே அ.தி.மு.க ஆதரவாளராக இருந்தார். சில மனச் சங்கடங்களால் தி.மு.க அணிக்குப் போனவர், மீண்டும் அ.தி.மு.க அணியில் ஐக்கியமானார். காவிரி பிரச்னைக்காக ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா நடத்தி, “தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அம்மாதான்” எனப் பாராட்டினார். அப்படிப்பட்ட ஸ்ரீதர் வாண்டையார், தனக்கு ஒரு சீட்டாவது கிடைக்கும் என நினைத்திருந்தார். இல்லையென்றாலும் பரவாயில்லை இனி தி.மு.க கூட்டணிக்குப் போகமுடியாது என்கிற நினைப்பில் இருக்கிறாராம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ப.சிதம்பரத்தை புறக்கணித்த மதுரை பத்திரிகையாளர்கள்
» டி.எம்.எஸ் இன் மரணச் சடங்கை புறக்கணித்த திரையுலகம்!
» பிரிட்டிஷ் ஆட்சியில் கூட நன்றாக இருந்தோம்: வேதனையில் தியாகிகள்
» என்னைப் பற்றிய வதந்திகளால் மனம் வேதனையில் துவள்கிறது – மனோரமா
»  புறக்கணித்த தமிழகம்: வாழ்வளித்த கர்நாடகம் : ஆசிய கபடியில் தங்கம் வென்ற வீரர் உருக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum