TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - ஜவாஹிருல்லா (ராமநாதபுரம்)

Go down

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - ஜவாஹிருல்லா (ராமநாதபுரம்) Empty என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - ஜவாஹிருல்லா (ராமநாதபுரம்)

Post by Tamil Sat Mar 05, 2016 3:13 pm

2011 சட்டசபைத் தேர்தல் நேரம். அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த மனிதநேய மக்கள் கட்சிக்கு இரட்டை மெழுகுவத்தி சின்னம் ஒதுக்கப்பட்டது. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற அ.தி.மு.க-வினர், ‘‘இரட்டை இலையும் இரட்டை மெழுகுவத்தியும் ஒன்றுதான். எனவே, இரட்டை மெழுகுவத்திக்கு ஓட்டு போடுங்கள்’’ என பிரசாரம் செய்தனர். இரட்டை மெழுகுவத்தி ஒளிர்ந்தது. எம்.எல்.ஏ ஆன ஜவாஹிருல்லா ராமநாதபுரத்தை ஒளிர வைத்தாரா? என்ன செய்தார் எம்.எல்.ஏ.?
[You must be registered and logged in to see this image.]
ராமநாதபுரம் தொகுதி, நீண்ட கடற்கரையைக் கொண்டது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை என 3 நகராட்சிகள் மற்றும் மண்டபம், திருப்புல்லாணி ஆகிய 2 ஒன்றியங்கள் ஆகியவை ராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் முதன்மையாக இடம்பெற்றிருப்பது, ராமநாதபுரம் மாவட்டம். வானம் பார்த்த பூமி. இந்தப் பகுதியில் கிடைக்கும் வளங்களை மையமாகவைத்து பெரிய அளவில் தொழிற்சாலைகளைக் கொண்டு வரவில்லை. எனவே, வேலைவாய்ப்புகளும் குறைவு. உள்ளூரில் வேலைவாய்ப்புகள் இல்லாததால், இந்தத் தொகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள், வெளிநாடுகளுக்குப் பிழைக்கப்போயிருக் கிறார்கள். இந்த நிலையில்தான், ‘ராமநாதபுரத்தில் தொழிற்சாலைகளைக் கொண்டுவருவேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார் ஜவாஹிருல்லா. எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றால், ‘ராமநாதபுரத்திலேயே தங்கிப் பணியாற்றுவேன்’ என்றும் உறுதி அளித்தார். ஆனால் இப்போது, எம்.எல்.ஏ-வின் செயல்பாடு குறித்துக் கேட்டால், அவர் இந்தத் தொகுதியின் ‘விசிட்டிங் புரொஃபஸர்’ என்று கிண்டலாகச் சொல்கிறார்கள், அவருக்காக வாக்குச் சேகரித்த கம்யூனிஸ்ட் தோழர்கள்.
[You must be registered and logged in to see this image.]
‘‘முந்தைய தி.மு.க ஆட்சியின்போது, ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க பணிகள் நடந்தன. ஆனால், மருத்துவக் கல்லூரி திடீரென சிவகங்கைக்குச் சென்றது. ‘மருத்துவக் கல்லூரியை ராமநாதபுரத்துக்குக் கொண்டு வருவேன்’ என ஜவாஹிருல்லா சொன்னார். ஆனால், அதுபற்றிய பேச்சுமூச்சே இதுவரை இல்லை. மீனவர்கள் நிரம்பிய இந்த மாவட்டத்தில், மத்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியைக் கொண்டு வருவதற்குக்கூட அவர் முயற்சி செய்யவில்லை. ராமேஸ்வரம் கோயில், ஏர்வாடி தர்ஹா, தனுஷ்கோடி, பாம்பன் பாலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘சுற்றுலாத் திட்டம்’ ஒன்றை உருவாக்கி இருக்கலாம். அது, தொகுதியின் வளர்ச்சிக்கு உதவியிருக்கும். ஆனால், அதை இவர் செய்யவில்லை. இந்த மாவட்டத்தின் தலைநகராகவும் இருக்கும் ராமநாதபுரத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றுகூட இல்லை. அதைக் கொண்டு வருவதற்கான முயற்சியை இவர் செய்யவில்லை’’ என்று குறைகளை அடுக்குகிறார்கள் பி.ஜே.பி-யினர்.
மீனவர் தரப்பிடம் பேசினோம். ‘‘இலங்கை கடற்படையினர் எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துகிறார்கள். சிறைப்பிடிப்பு, படகுகள் பறிமுதல் என வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். ‘ராமேஸ்வரத்தில் அரசுக் கல்லூரி கொண்டு வருவேன்’ என ஜவாஹிருல்லா வாக்குறுதி அளித்தார். இந்த மாவட்டத்தில் 3 அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதில், ஒன்றுகூட ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் அமையவில்லை. தாக்குதலுக்கு உள்ளாகும் எங்களுக்கு சிகிச்சை அளிக்க இங்குள்ள மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை. மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு நிகராக ராமேஸ்வரம் மருத்துவமனையை மாற்றுவதாகச் சொன்னார். ஆனால், செய்யவில்லை. இங்கே, முதலுதவி மட்டுமே செய்யப்படுகிறது. மேல் சிகிச்சைக்கு 55 கி.மீ தூரத்தில் உள்ள ராமநாதபுரத்துக்குத்தான் போக வேண்டும்’’ என்று கலங்கினார்கள் மீனவ மக்கள்.
[You must be registered and logged in to see this image.]
‘‘காசிக்கு நிகராக, ராமேஸ்வரத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு, தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால் நகரில்  திறந்தவெளியில் கழிவுநீர் ஓடுகிறது. தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக அக்னி தீர்த்தத்தில் கலக்கிறது. இதனால் புனிதத்தலம், நோய் பரப்பும் தலமாக மாறியுள்ளது. கோயிலைச் சுற்றிலும் கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் இல்லை. ரதவீதிகளில் பக்தர்கள் செல்ல இரண்டு பேட்டரி கார்கள் மட்டுமே ஓடுகின்றன. ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்களுக்கு இது போதவில்லை. ராமேஸ்வரத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கு 150, 100 என நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை எல்லாம் எம்.எல்.ஏ கண்டுகொள்ள வில்லை’’ என்றார்கள் ராமேஸ்வரம் நகர மக்கள்.
[You must be registered and logged in to see this image.]
‘‘தேர்தல் பிரசாரத்தின்போது, ‘கீழக்கரையைக் குப்பை இல்லா நகராக மாற்றுவேன்’ என உறுதிய ளித்தார் ஜவாஹிருல்லா. அதை அவர் நிறைவேற்றவில்லை. வீதிகள்தோறும் குப்பைகள், போக்குவரத்து நெருக்கடி, ஊருக்குள் வர மறுக்கும் நீண்ட தூரப் பேருந்துகள் என கீழக்கரை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது’’ என்கிறார்கள் கீழக்கரைவாசிகள்.
[You must be registered and logged in to see this image.]
இப்படி நெகட்டிவ் பக்கங்கள் இருந்தபோதிலும், ஜவாஹிருல்லாவின் செயல்பாடுகள் பற்றி பாசிட்டிவ் விஷயங்கள் பலவற்றையும் தொகுதி மக்கள் குறிப்பிட்டார்கள். “ராமநாத புரத்தில் வாடகை வீடு ஒன்றை எம்.எல்.ஏ பிடித்துவைத்துள்ளார். தொகுதிக்கு வந்தால், அங்குதான் அவர் தங்குகிறார். அங்கிருந்ததான், தொகுதிக்குள் விசிட் போகிறார். அப்துல் கலாம் அடக்கம் செய்யப் பட்ட பேக்கரும்பு கிராமத்தில் பஸ் பயணிகள் நிறுத்தக் கூடம் ஒன்றைக் கட்டித் தந்துள்ளார். கச்சத்தீவு மீட்கப்பட சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஜவாஹிருல்லா வழக்குத் தொடர்ந்தார். ராமநாதபுரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்ததைக் கண்டித்து சென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதாகியிருக்கிறார். ராமேஸ்வரம், பாம்பன், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மீனவர்களின் பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை, இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத் தினருக்கு அரசு வேலை, கடல் அட்டை மீதான தடை நீக்க வேண்டும், டீசல் மானியம் உயர்த்தி வழங்க வேண்டும், கடல் அரிப்பு பகுதிகளில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்’’  என்றார்கள்.

- இரா.மோகன், சே.சின்னதுரை, நா.ராஜமுருகன்
படங்கள்: உ.பாண்டி



எம்.எல்.ஏ. அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி?
[You must be registered and logged in to see this image.]
ராமநாதபுரம் மாவட்ட நூலகம் அருகே எம்.எல்.ஏ அலுவலகம் உள்ளது. இங்கு, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் உதவியாளர் ஒருவர் இருக்கிறார். இவரிடம் அளிக்கப்படும் மனுக்கள் எம்.எல்.ஏ-வின் பரிந்துரை கடிதங்களுடன் உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பிரச்னையின் தன்மையைப் பொறுத்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நாம் அங்கு சென்றிருந்தபோது, மண்டபம் பேரூராட்சி கவுன்சிலரான ரமேஷ் தனது வார்டில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் கழிப்பிட வசதி குறித்த கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார். அதனை பரிசீலனை செய்த எம்.எல்.ஏ., தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் கழிப்பிடம் கட்ட அனுமதி அளித்தார்.

ரியாக்‌ஷன் என்ன?


ஜவாஹிருல்லாவை நேரில் சந்தித்தோம். ‘‘தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன், வேதாளை ஆகிய இடங்களில் மீன்பிடி இறங்குதளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என சட்டசபையில் பேசியிருக்கிறேன். எனது கோரிக்கையை ஏற்று மருத்துவக் கல்லூரிக்கு நிகராக தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், இதற்காக பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்ய முடிவு செய்திருந்த 9 கோடி ரூபாயை அரசே ஏற்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். அது ஏற்கப்பட்டு பாதாளச் சாக்கடைத் திட்டம் ராமநாதபுரம் நகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 128 ஆம்புலன்ஸ் எல்லா சமூகத்தினருக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஆம்புலன்ஸ்களும், அதில் எனது தொகுதியில் மட்டும் 8 ஆம்புலன்ஸ்களும் இயக்கப்படுகின்றன. ‘கீழக்கரையை தனி தாலுக்கா ஆக்குவேன்’ எனச் சொன்ன வாக்குறுதியும் செயல்வடிவம் பெற்றது. சட்டப்பேரவையில் மீனவர் பிரச்னைகளைத் தொடர்ந்து பேசியிருக்கிறேன். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.21 கோடியில் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகள், 1.02 கோடியில் அங்கன்வாடி கட்டடங்கள், உத்திரகோசமங்கை கோயிலுக்கு 60 லட்சம் செலவில் நடைமேடை, சேதுக்கரையில் பக்தர்கள் வசதிக்காக உடை மாற்றும் அறை ஆகியவற்றை ஏற்படுத்தியிருக்கிறேன். நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.17.5 கோடியில் சாலைகள், கீழக்கரையில் ரூ.20 லட்சம் செலவில் குப்பை மேலாண்மைத் திட்டத்துக்கான கிடங்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் என நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தொழிற்சாலைகள், போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தனி உட்கோட்டம் போன்றவை நிறைவேற்றப்படாத பணிகளாக உள்ளன’’ என்றார்.

ப்ளஸ்... மைனஸ்!

 
[You must be registered and logged in to see this image.]
தொகுதி நிதியின் மூலம் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கான அடிப்படை வசதிகள், சமுதாயக் கூடங்கள், நிழற்குடைகள் அமைத்துத் தந்திருப்பது; இந்தப் பணிகளுக்கான தொகையில் கமிஷன் பெறாதது; எளிதில் தொடர்புகொள்ள முடிவது; 
5 மீனவர்களுக்கு இலங்கையில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராக நடந்த போராட்டம் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றது ஆகியவை இவரது ப்ளஸ்.

பிரச்னைகளின்போது ஒரு தரப்பினருக்கு ஆதரவாக இருப்பது; தொகுதியில் நடக்கும் விழாக்கள், திருமணங்கள் போன்றவற்றில் பங்கேற்காதது; தொகுதியின் வளர்ச்சி குறித்து அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்காதது; திட்டப்பணிகளில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டு கொள்ளாதது இவரது மிகப் பெரிய மைனஸ்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum