TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புலிகளின் தலைவர் வாழ்கிறாரா..? அதிர்ச்சி தகவலுடன் கலம் மக்ரே.

Go down

புலிகளின் தலைவர் வாழ்கிறாரா..? அதிர்ச்சி தகவலுடன் கலம் மக்ரே. Empty புலிகளின் தலைவர் வாழ்கிறாரா..? அதிர்ச்சி தகவலுடன் கலம் மக்ரே.

Post by அருள் Tue Mar 17, 2015 9:22 pm

புலிகளின் தலைவர் வாழ்கிறாரா..? அதிர்ச்சி தகவலுடன் கலம் மக்ரே.
March 17, 2015
புலிகளின் தலைவர் வாழ்கிறாரா..? அதிர்ச்சி தகவலுடன் கலம் மக்ரே. 10919042_871878826202572_4317232486618748111_n
போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டதாக “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’ என்ற ஆவணப்படம் மட்டுமே இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பின் உறுதியான ஆதரமாகத் திகழ்கிறது. நீண்ட முயற்சிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே.
இலங்கை அரசு தனது எதிரியாகப் பிரகடனப்படுத்திய கலம் மக்ரே அதே ஆவணப்படத்தைச் சிங்கள மொழியில் வெளியிட்டிருந்தார். காலனியத்திற்குப் பின்னான இலங்கையின் அரசியல் தலைமைகள் செய்யது துணியாத செயல் இது.
ஊடகவியலாளர் என்ற தனது எல்லைக் கோடுகளுக்கு அப்பால், உலக சமூகத்தின் மீது பற்றுக்கொண்ட கலம் மக்ரே சாமானியச் சிங்கள மக்களுக்குத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து சொல்லப்படாமல் இதுவரை தடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.
ஒற்றைப் பரிமாணச் சிந்தனைக்குள் மூடிவைக்கப்பட்டுள்ள சிங்கள சமூகத்தை ஏமாற்றிச் சுரண்டுவதற்காக சிங்கள அதிகாரவர்க்கம் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை அவர்கள் மத்தியில் வளர்க்கிறது.
இன்றைய மைத்திரிபால சிரிசேன அரசு உட்பட இலங்கையின் அனைத்து அரசுகளுமே பேரினவாதத்தை ஆட்சி அதிகாரத்தைக் கையகப்படுத்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளன.
இனவெறிக்கு அப்பால் சிங்கள மக்களிடம் உண்மையை சொல்ல விரும்பும் யாரும் இலங்கை அதிகாரவர்க்கத்தால் அனுமதிக்கப்படுவதில்லை.
கொழும்பில் மேடை போட்டு தமிழீழம் வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேசுவதற்கு அனுமதிக்கும் சிங்களப் பேரினவாத அரசு, தமிழர்களின் பிரச்சனைகளைச் சிங்கள மக்களுக்குச் சொல்ல முற்பட்ட ரவிராஜ் போன்றவர்களை படுகொலை செய்திருக்கிறது.
சிங்கள ஊடகங்களிடன் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளைச் சொல்ல முற்படும் போராட்டங்களும் ஆவணங்களும் இருட்டடிப்புச் செய்யப்படும் அதே வேளை, தமிழ் நாட்டிலிருந்தும் புலம் பெயர் நாடுகளிலிருந்தும் ‘ LTTE தலைவர் பிரபாகரன்’ என்று முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன..
சாமானியச் சிங்கள மக்களுக்கு மறைக்கப்படும் தமிழினப் படுகொலை தொடர்பான உண்மைகள் அவர்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். கலம் மக்ரே இன் சிங்கள ஆவணப்படம் அதற்கான முதல் முயற்சியாகக் கருதப்படலாம்.
சிங்கள ஆவணப்படம் குறித்தான உரையாடலை கலம் மக்ரேயிடம் ஆரம்பித்த போது அது பல்வேறு அரசியல் விடையங்களூடாக விரிந்து சென்றது.
‘No Fire Zone’ ஆவணப்படம் தயாரித்தமைக்கான காரணத்தைக் கலம் மக்ரேயிடம் கேட்ட போது, வன்னிப் படுகொலைகள் தொடர்பான ஆவணம் மட்டுமல்ல ஈராக்கில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் உட்படப் பல்வேறு ஆவணங்களை இயக்கியதாகக் கூறும் மக்ரே அந்த அடிப்படையிலேயே தன்னை சனல் 4 தொடர்பு கொண்டதாகக் கூறுகிறார்.
ஆவணப்படத்தின் முதலாவது பகுதியை வெளியிட்ட பின்னர் இலங்கை அரசு தன்னை புலிகளிடம் பணம் வாங்கியதாகக் குற்றம் சுமத்திய போது மேலும் ஆதாரங்களை வெளியிடவேண்டிய தேவை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும் புலிகளது போர்க்குற்றங்களையும் வெளிப்படுத்திய போதும் இலங்கை அரசு தன்னைப் புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டது என்கிறார்.
ஊடகவியலாளர் என்ற எல்லைக்குள் தான் அரசியல் கருத்து ஒன்றை முன்வைக்க முடியாது என்று கூறிய கலம் மக்ரே சில முக்கியமான கருத்துக்களை வெளியிட்டார்.
சுயநிர்ணைய உரிமை என்பது தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என ஐக்கிய நாடுகள் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. சுய நிர்ணைய உரிமையை வழங்கக் கோரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக தமிழீழத்திற்கான போராட்டத்தை நடத்தியமை இயக்கங்களின் தவறாயினும், சுய நிர்ணைய உரிமைக்காக தொடர்ந்தும் தமிழ்ப் பேசும் மக்கள் போராடுவதில் தவறானதா என்ற கேள்விக்கு தான் ஒரு உலகக் குடிமகன் என்ற அடிப்படையில் பதிலளிப்பதாகக் குறிப்பிட்டார்.
ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் தமிழர்கள் சுய நிர்ணைய உரிமைக்கு உரித்துடையவர்களே என்று வெளிப்படையாகக் கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் வாழ்கிறாரா என்று கேட்ட போது தான் அப்படி எண்ணவில்லை என்றார்.
போர்க்குற்ற ஆதாரங்கள் கிடைக்கும் ஒவ்வொரு தடவையும் அவை எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து என்ற தகவல்களுக்கு அப்பால் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே தமது அணுகுமுறையாக இருந்தது என்கிறார். தடைய அறிவியல் முறைமையைப் பயன்படுத்தி விசாரணை நடத்தியே முடிவிற்கு வந்தாகக் குறிப்பிடுகிறார்.
பிரபாகரன் போர்க்களத்தில் கொல்லப்பட்டாரா எனக் கேட்ட போது ஆதாரங்கள் அப்படி அமைந்திருக்கவில்லை என்றார்.
சில ஆதாரங்களின் அடிப்படையில், அவரது சூட்டுக் காயங்களின் தன்மையை ஆராயும் போது, குறிப்பாக தடயவியல் விசாரணையின் அடிப்படையில் மிக அருகிலிருந்து அவருடைய தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.
அவர் அருகிலிருந்தே சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. ஆதாரங்களின் அடிப்படையில் அவர் அருகிலிருந்தே சுட்டுக்கொல்லப்பட்டார் எனறு கூறப்படலாமாயினும் அது நிறுவப்படவில்லை என்றார்.
உலகத்தின் பல்வேறு நாடுகள் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கஷ்மீரில் மக்கள் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுகிறார்கள்,
இந்தியாவில் மாவோயிஸ்டுக்கள் போராடுகிறார்கள், பிலிப்பைன்சில் கம்யூனிஸ்டுக்கள் நாட்டின் ஒரு பகுதியையே கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கையில் மட்டும் இந்த அழிப்பு நடத்தப்பட்டதற்கான காரணம் தொடர்பாகக் கேட்டகப்பட்டது.
முதலாவதாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை முதலாவது காரணமாகக் குறிப்பிட்டார். தவிர, ஊழல் மலிந்த சர்வாதிகார அரசை வைத்துக் இலகுவாக படுகொலைகளை நடத்த முடிந்தது என்றார். புலிகளின் தமது தவறுகளால் உலகத்தின் மத்தியிலிருந்து அன்னியப் பட்டிருந்தனர்.
அதன் காரணமாக உலகம் முழுவதும், யாராக இருந்தாலும் புலிகளை அழிப்பதிற்கு ஆதரவு வழங்கும் நிலையிலேயே இருந்தனர். இவை அனைத்தும் இணைந்த காரணங்களே புலிகளின் அழிப்பிற்குக் காரணம் என்றார்.
இலங்கை அரசு தமிழ் அடையாளத்தை அழிப்பதிலேயே குறியாக இருந்தது என்று மக்ரே தனது நேர்காணலில் பல பகுதிகளில் குறிப்பிடுகிறார். ஐ.நா விசாரணை தொடர்ந்தும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். மேற்கு நாடுகள் மட்டுமல்ல, சீனா, ஈரான் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் கூட யுத்தத்திற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கின என்றார்.
இத ஓரு இணையச் செய்தி
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியில் புலிகளின் தலைவர் இருந்தாராம்??
»  புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் குடும்பத்தினருக்கும் நடந்தது என்ன? -
» புலிகளின் தலைவர் தம்பிகள், தப்பாகப் படமெடுப்போமா?
» புலிகளின் தலைவர் பிரபாகரன் பூமியில் எங்கோ இருக்கின்றார்! வைகோ உறுதி
» விடுதலைப் புலிகளின் தலைவரின் தாய்க்கு சிங்கள தலைவர் அஞ்சலி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum