TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புதிய டிஜிட்டல் சாதனங்களின் அணி வகுப்பு 2015

Go down

புதிய டிஜிட்டல் சாதனங்களின் அணி வகுப்பு 2015  Empty புதிய டிஜிட்டல் சாதனங்களின் அணி வகுப்பு 2015

Post by busybee4u Tue Jan 20, 2015 4:25 pm

LXGUC4e.jpg

ஆண்டுதோறும், புதிய டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் செய்திடும் “நுகர்வோர் டிஜிட்டல் சாதனங்கள்” (Consumer Electronics Show) உலக அளவில் நடைபெறுவதுண்டு. இந்த ஆண்டு, சென்ற வாரத்தில், அமெரிக்காவில், லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது. உலகில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் உட்பட, இதில் கலந்து கொண்டு தங்களின் புதிய சாதனங்களை அறிமுகம் செய்தனர். நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தேவைகளின் அடிப்படையில் புதிய சாதனங்கள் அமைந்திருந்தன. தேவைகளுக்கான தீர்வுகளாய் அவை இருந்தது மட்டுமின்றி, நம் வாழ்க்கையின் அடுத்த முன்னேறிய நிலைகளை அவை காட்டுவதாய் அமைந்திருந்தன.


இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சி, முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிக ஆரவாரமும், மின் மினுப்பும் கொண்டு கலகலத்தது. இவ்வளவுதான் என்று வரையறுத்துக் கூற முடியாத அளவிலான வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், சின்ன கிராமங்களுக்கும் மேலான அளவில் அமைந்த நிறுவனங்களின் காட்சிக் கூடாரங்கள், வாடிக்கையாளர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளம்பரங்கள், காட்சிகள் என அனைத்து வகைகளிலும் சிறப்பாக இருந்தது. சென்ற ஆண்டுகளிலும் இதே ஆரவாரம் இருந்தாலும், காட்சிக்கு அளிக்கப்பட்ட சாதனங்கள் தந்த நிறைவு மனதளவில் நிலைக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு காட்டப்பட்ட சாதனங்கள், நம் எதிர்காலத்தில் இவை எல்லாம் நம் உடன் வந்து வாழ்க்கையை எளிதாக்கப் போகின்றன என்ற உறுதியைத் தந்தன. அந்த வகையில் வாழ்க்கைக்குத தேவையான சாதனங்கள் தந்த செய்திகளைக் காணலாம்.



உடல்நலம் பேணும் சாதனங்கள்:


2015 ஆம் ஆண்டில் நாம் நம் கரங்களிலேயே நம் உடல்நிலையைக் காட்டும், அதனைப் பேணிப் பாதுகாக்கும் சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்தும் சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. ஏற்கனவே, உடல்நிலை காட்டும் கை வளையங்கள் (fitness bands), செறி திறன் கொண்ட கடிகாரங்கள் (smart watches) புழக்கத்தில் உள்ளன. இவற்றில் கூடுதல் வசதிகளுடன் கூடியவற்றை இந்த கண்காட்சியில் காண முடிந்தது. இவற்றுடன், புதியதாக, செவித்திறன் குறைந்தவர்களுக்கான சாதனங்களை முதன் முதலாகக் காண முடிந்தது. இவை புளுடூத் உதவியுடன் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பி.சி.களுடன் இணைந்து கொள்ளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. குழந்தைகளின் உடல் சூட்டினைக் காட்ட கரங்களின் துணையின்றி பயன்படுத்தக் கூடிய சாதனங்கள், எந்த அளவிற்கு சூரிய ஒளியில் இன்னும் குழந்தைகளைக் காட்டலாம் என்ற மானிட்டர், நம்மை விளையாட வைத்து நம் முதுகின் வளையும் தன்மையைச் சரிப் படுத்தும் சாதனம் என இந்த சாதனங்களின் வரிசை நீள்கிறது.



சுற்றுப் புறச் சூழ்நிலை மற்றும் புவிப் பசுமை காத்தல்:

நம் அலுவலகம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் சாதனங்களுக்கு, இயற்கையிலிருந்து சக்தியைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட சாதனங்கள் பல அறிமுகமாயுள்ளன. சூரிய ஒளியிலிருந்து மின் சக்தி தயாரித்து வழங்கக் கூடிய பாக்கெட் அளவிலான சாதனங்கள் வந்துள்ளன. 9-0 நிமிடங்கள் சூரிய ஒளியில் இதனை வைத்து எடுத்தால், நம் மொபைல் போன் நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடிய மின் சக்தியினைத் தருகிறது. ஐபோனை வைத்து எடுத்துச் செல்லும் ஷெல் ஒன்றில், இத்தகைய சோலார் தொழில் நுட்பம் இணைத்துத் தரப்பட்டு, போனுக்கான மின் சக்தி தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்த வகையில் பெரிய சாதனங்களும் உள்ளன. எலக்ட்ரிக் சக்தியில் மட்டுமே ஓடும் ஸ்போர்ட்ஸ் யுடிலிடி கார் மாடல் ஒன்று அனைவரையும் கவர்வதாக உள்ளது.இதன் கதவுகள் திறக்கும் தொழில் நுட்பம் இதுவரை நாம் காணாத ஒன்றாகும். தற்போதைய மோட்டார் சைக்கிள்களுக்கு எலக்ட்ரிக் சக்தியை வழங்கி இயக்கவைக்கும் சாதனம் ஒன்று பழமையையும் புதுமையையும் இணைக்கும் வாகன சாதனமாக இருந்தது. என்.எப்.சி. தொழில் நுட்பம் இணைந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாவிகள், அசைவிலேயே ஸ்கூட்டர்களை ஸ்டார்ட் செய்தன.


தொழில் நுட்பத்தைக் குழந்தைகள் கற்க சாதனங்கள்:


அறிவியலையும், தொழில் நுட்பத்தினையும் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக் கொள்ள, கற்பனைத் திறனையும் தொழில் நுட்பத்தையும் கலந்து உருவாக்கப்பட்ட பல சாதனங்கள், இந்த கண்காட்சியின் சிறப்பான அம்சங்களாக இருந்தன. சிறுவர்கள் அறிவியல், கணக்கு மற்றும் தொழில் நுட்பக் கூறுகளைக் கற்றுக் கொள்ள இவை உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் புரோகிராமிங் அடிப்படையைக் கற்றுத் தரும் சிறிய இயந்திர மனிதர்களையும் இந்த கண்காட்சி அறிமுகப்படுத்தியது. Ozobot என்னும் சாதனம், டிராயிங், டிசைன் மற்றும் வண்ண காட்சிகளைப் பயன்படுத்தி குழந்தைகள் ரோபாடிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் வழிகளைக் கற்றுக் கொள்ள உதவுகிறது.


பல தொழில் நுட்ப திட்டங்கள்:


பல நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்ப திட்டங்களை விளக்கமாக அளித்தன. இவற்றில் முப்பரிமாண அச்சுப் பொறிகள் ஏராளமாய் இருந்தன. இதே அடிப்படையில் அறிமுகமான Scio scanner என்னும் சாதனத்தை மக்கள் பயன்படுத்தி, உணவுப் பண்டங்களையும், மருந்துகளையும் ஸ்கேன் செய்து, அவற்றின் ஊட்டச்சத்து விகிதம் மற்றும் மருந்துகளில் உள்ள இரசாயனக் கலப்பினையும் கண்டறியலாம்.

இந்த ஆண்டு Eureka Park என்று அழைக்கப்பட்ட வளாகத்தில், 300 நிறுவனங்களுக்கு மேல் இடம் பெற்றிருந்தன. சென்ற ஆண்டில் இதில் 200 நிறுவனங்களே இடம் பெற்றிருந்தன. இவை பொதுமக்களுக்கான பொதுவான பல சாதனங்களைக் காட்சிக்குக் கொண்டிருந்தன. இங்கு காட்சி வைக்கப்பட்டிருந்த சில சாதனங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவற்றைக் காட்டியுள்ள நிறுவனங்களும் குறிப்பிடத்தக்கவையே. அந்த வகையில் கீழே தரப்பட்டுள்ள சாதனங்கள் முக்கியமானவை ஆகும்.



மைக்ரோசாப்ட்:


இந்த ஆண்டு கண்காட்சியை மைக்ரோசாப்ட் நிறுவனம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. அதன் நோக்கியா 215 போன் இதில் அனைவரையும் கவர்ந்தது. மலிவான விலையில் அமைந்த இன்டர்நெட் ரெடி மொபைல் போன் இது. வரிகள் ஏதும் இல்லாமல் இதன் அடிப்படை விலை 29 டாலர். இதில் பேஸ்புக், மெசஞ்சர், பிங் தேடல் வசதி, ட்விட்டர் மற்றும் ஆப்பரா மினி பிரவுசர் ஆகியவை பதியப்பட்டு தரப்படுகின்றன. 2.4 அங்குல QVGA எல்.சி.டி. திரை, 8 எம்.பி. ராம் நினைவகம், புளுடூத் மற்றும் எப்.எம். ரேடியோ ஆகியவை மற்ற வசதிகள். இதன் முன்புறக் கேமரா 0.3 மெகா பிக்ஸெல் சென்சார் கொண்டு அமைக்கப்பட்டதாக உள்ளது.

அசைவுகளைப் பயன்படுத்தி மொபைல் போன்களை இயக்குவது இன்றைக்கு பரவலாகப் பல போன்களில் இயங்கி வருகிறது. இதில் ஒரு படி முன்னேறிய தொழில் நுட்பம் கொண்டதாக, எல்லிப்டிக் லேப்ஸ் என்ற நிறுவனம் போன் ஒன்றைக் காட்டியுள்ளது. இதில் "Multi Layer Interaction" என்ற தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் முன்னால், எவ்வளவு தூரத்தில், எதனை நோக்கி, அதனைப் பயன்படுத்துபவர் விரல் உள்ளது என்ற அடிப்படையில் போன் இயங்குகிறது. எடுத்துக் காட்டாக, ஸ்மார்ட் போன் ஒன்றில், விடீயோ ஒன்றைக் கவனிக்கும்போது, நாம் நம் கரத்தினைக் கொண்டு சென்றால், கட்டுப்பாட்டிற்கான பட்டன்கள் காட்டப்படுகின்றன. இதன் மூலம், வீடியோ இன்னும் எவ்வளவு நேரம் இயங்கும் என்பதை அறியலாம். திரைத் தோற்றத்தைத் தெளிவாக வைத்துக் கொண்டே, வீடியோவினை முன்புறமாகவும், பின்புறமாகவும் வேகமாக இயக்கலாம்.


ஏசர் நிறுவனத்தின் புதிய கம்ப்யூட்டர்:

இது போன்ற கண்காட்சிகளை, ஏசர் நிறுவனம் எப்போதும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும். முதன் முதலாக 15.6 அங்குல திரை கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டரை இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. Chromebook 15 என இது பெயரிடப்பட்டுள்ளது. Intel Core i3 அல்லது Intel Celeron ப்ராசசர்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் திரை முழுமையான எச்.டி. டிஸ்பிளே, 1920x1080 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டதாக உள்ளது. குறைவான விலைக்கு வேண்டும் என்றால், ரெசல்யூசன் சற்று குறைவாகக் கொண்ட லேப்டாப் கிடைக்கிறது. ராம் மெமரியும் 2 மற்றும் 4 ஜி.பி. கொண்டதாக இரு மாடல்கள் உள்ளன. இதன் விலை 250 டாலர்.
busybee4u
busybee4u
உதய நிலா
உதய நிலா

Posts : 4
Join date : 06/03/2014
Location : coimbatore

http://www.busybee4u.tk

Back to top Go down

Back to top

- Similar topics
» ப்ளாஷ் இல்லாமல் துல்லியமாக படம் எடுக்கும் புதிய டிஜிட்டல் கேமரா!
» உஷாரய்யா உஷாரு தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள்
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம்!!
» மாணவர்கள் நலன் கருதி 10, 12-வது வகுப்பு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை அமல்
» 1 முதல் 8ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் கிடையாது : 9, 10ம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட பாடங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum