TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


லைக்கா மொபைல்' சுபாஸ்கரன் திடீரென ராஜபக்ஸ எதிரியானதன் இரகசியம்!

Go down

லைக்கா மொபைல்' சுபாஸ்கரன் திடீரென ராஜபக்ஸ எதிரியானதன் இரகசியம்! Empty லைக்கா மொபைல்' சுபாஸ்கரன் திடீரென ராஜபக்ஸ எதிரியானதன் இரகசியம்!

Post by அருள் Mon Nov 03, 2014 3:25 pm

லைக்கா மொபைல்' சுபாஸ்கரன் திடீரென ராஜபக்ஸ எதிரியானதன் இரகசியம்!
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பாவில் பிரபலம் பெற்றுள்ள தொலைத்தொடர்பு நிறுவனமாகிய 'லைக்கா மொபைல்' நிறுவனத் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா இதுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வர்த்தக பங்காளி நண்பராக பிரசித்தம் பெற்றிருந்தார்.
லைக்கா மொபைல்' சுபாஸ்கரன் திடீரென ராஜபக்ஸ எதிரியானதன் இரகசியம்! 1505511_598053000299851_6340360422715461855_n
கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பு மாநாட்டிற்கு பிரதான அனுசரணையாளராக லைக்கா மொபைல் நிறுவனமே விளங்கியது. புலம்பெயர் தமிழர் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பது சுபாஸ்கரன் அல்லிராஜாவின் 'லைக்கா மொபைல் நிறுவனமாகும்.
'லைக்கா மொபைல்' நிறுவனத்தின் இவ் உதவியால் ராஜபக்ஸ அரசாங்கம் அவர்களுக்கு பிரதியுபகாரம் செய்து லைக்கா ஃப்ளை என்ற சுற்றுலா மற்றும் விமான பயணச்சீட்டு விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு ஸ்ரீலங்கா எயார்வேஸ் நிறுவன அதிகாரம் பெற்ற பிரதிநிதி பதவியும் வழங்கியுள்ளது. லைக்கா நிறுவனத்தின் பங்காளிகளாக ராஜபக்ஸக்கள் சிலர் இருப்பதாக
உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ஸக்கள் மற்றும் லைக்கா நிறுவன உறவுகளை இணைப்பது முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய பிரதி தபால் அமைச்சர் சனத் ஜயசூரிய என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனத் ஜயசூரிய லண்டனுக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு தருணமும் அவருக்கு உணவு தங்குமிடம் உள்ளிட்ட 'வேறு' வசதிகளையும் செய்து கொடுப்பது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பது முழு லண்டனும் அறிந்த விடயமாகும்.
இவ்வருடம் ஜுன் மாதம் சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் அவரது நண்பர்கள் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்கொப்டரில் முல்லைதீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து லைக்கா மொபைல் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள 'ஞானம் அறக்கட்டளை' நிகழ்வுகளில் பங்கேற்றார்.
ஞானம் அறக்கட்டளையின் தலைவராக ரூம் ஜவுபர் என்ற சுற்றுலா சபையின் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளையின் தொடர்பாடல் சட்டத்தணியான செவ்வேல் என்பவர் ஜனாதிபதியின் வடக்கு பகுதி இணைப்பளராவார். சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு அரசாங்கத்துடன் அண்மையில் ஏற்பட்ட உறவு தொடர்பில் நாம் இந்த தகவல்களை
வெளியிடுகிறோம்.
சுபாஸ்கரன் அல்லிராஜா தென்னிந்திய திரைப்படத்துறையில் காலடி வைத்திருப்பது அது பணப்புதையல் இடம் என்பதாலாகும். இவர்களின் முதலாவது தயாரிப்பு திரைப்படம் 'கத்தி' ஆகும். கத்தி படத்தை தென்னிந்திய திரையரங்குகளில் வெளியிட பல தரப்பிலும் இருந்து எதிர்ப்பு ஏற்பட காரணம் சுபாஸ்கரன் அல்லிராஜா மஹிந்த ராஜபக்ஸவுடன் வைத்துள்ள தொடர்பாகும். இறுதியில் லைக்கா வெளியீடு என்ற பெயர் அகற்றப்பட்ட பின்னரே கத்தி படத்தை திரையிட அனுமதி அளிக்கப்பட்டது.
இளைய தளபதி விஜய் நடித்த கத்தி படம் வெளியாகி பொக்ஸ் ஒப்பீஸில் வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் தென்னிந்திய திரைப்பட துறைமீது சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு அளவில்லா நாட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ராஜபக்ஸ உறவும் தொடர்பும் அதற்கு தடையாக உள்ளது.
அதனால் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த சுபாஸ்கரன் அல்லிராஜா 'நானும் ஒரு சுத்த தமிழன்தான்' என்று கூறினார். 'எனக்கு மஹிந்தவுடன் எந்த தொடர்பும் கிடையாது. அவரது பணம் என்னிடம் இல்லை. எனக்கு எதற்கு அவரது பணம். இந்த படத்திற்கு எனது இரண்டுநாள் வருமானம் போதும். என்னை நம்புங்கள்.
இலங்கையைவிட தமிழ்நாடு எனக்கு முக்கியம்.' என்று சுபாஸ்கரன்
அல்லிராஜா குறிப்பிட்டார். ஆனால் அவரது நடிப்பிற்கு தமிழ்நாடு செயற்பாட்டாளர்கள் செவிசாய்க்கவில்லை.
அதன்பின் சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றுமொரு விளையாட்டை திட்டமிட்டார். கத்தி திரைப்பட வெற்றிக்கு பங்களிப்பு செய்த நடிகர் நடிகைகள் (சனத் ஜயசூரிய உள்ளிட்ட) அனைவருக்கும் மாலைத்தீவில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து உபசாரத்திற்கு சென்று லண்டன் திரும்பிய வேளை சுபாஸ்கரன் உள்ளிட்ட குழுவை இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளை வைத்து கைது செய்தமையே அதுவாகும்.
அதற்கு அவர் பயன்படுத்திய உபாயம் கொழும்பு நோக்கிவரும் ஸ்ரீலங்கன் விமானத்தில் வர்த்தக பிரிவு ஆசனத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டு கலகம் ஏற்படுத்தியமையாகும். சுபாஸ்கரன் உள்ளிட்டவர்களை விமான நிலையத்தில் தடுத்துவைத்து பின் விமானம் லண்டன் நோக்கிச் சென்து.
லைக்கா நிறுவனத்திற்குச் சொந்தமான 'ஆதவன் ரிவி' 'ஆதவன் செய்தி' இணையத்தில் இந்த செய்தி விசேட செய்தியாக உலகம் முழக்க பரப்பப்பட்டது. அவர்களுக்கு ஆதரவான இணையத்தளங்களில் இந்த செய்தியை பரப்பி சுபாஸ்கரன் அல்லிராஜா ராஜபக்ஸவிற்கு எதிரியானார்.
ஐரோப்பாவில் புலிகள் இயக்கத் தடையை நீக்கிக் கொள்ள சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கிய பங்களிப்பு காரணமாக அவரும் அவரது நணபர் பிரேமநாதன் சிவசாமி ஆகியோர் இலங்கை பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. அதன்பின் பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரக மத்தியஸ்தத்தில் இவர்கள் நான்கு மணித்தியாலங்களின் பின் விடுதலை செய்யப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு செயற்பாட்டாளர்களை மாடுகளாக்கி சுபாஸ்கரன் அல்லிராஜாவை வீரனாக்கி 'நானும் ஒரு சுத்தத் தமிழன்தான்' என்று கூறி அப்பாவி தென்னிந்திய திரைப்பட ரசிகர்களிடம் இருந்து பணக்கொள்ளை அடித்து லைக்கா மொபைல் சுபாஸ்கரன் வெட்கமற்ற முயற்சிகளில் ஈடுபட்;டு வருகிறார் என்பதை நாம் பொறுப்புடன் கூறிக் கொள்கிறோம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» லைக்கா மொபைல் - இராஜபக்ச தொடர்பு - டேவிட் கமெரூன் உடனடி விசாரணை
» பிரான்சில் லைக்கா தொலைபேசி அட்டை மற்றும் லைக்கா சுவரொட்டிகள் எரித்து போரட்டம்!
» சிறீலங்காவின் சுற்றுலாத் துறைக்கு பெருவருவாயை ஈட்டிக்கொடுக்கும் அல்லிராஜா சுபாஸ்கரன்
» நம்பர் மாறாமல் சுலபமாக உங்களுக்கு பிடிக்காத மொபைல் நிறுவனத்திடமிருந்து வேறொரு மொபைல் நிறுவனத்திற்கு மாற....
» ஆளும் தரப்பின் முரண்பாடுகளை சுமூகமாக்க பஸில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில்-

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum